-
18 ஜன., 2014
வலுவான நிலையில் இலங்கை அணி
இலங்கை - பாகிஸ்தான் அணிக்கிடையியே இடம்பெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை அணி 2வது நாள் ஆட்டத்தை நேற்று 5 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தொடர்ந்தது. அணித் தலைவர் மெத்திவ்சுடன் இணைந்து ஆடிய விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன 35 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார்.
2013 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாக மரியான்பட பாடல்களை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தாண்டு நடந்த சிறந்தவைகள் மற்றும், மறக்க இயலாத முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவது வழக்கமே. அந்தவகையில் பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது 2013ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படும் வாய்ப்பு?
2014ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதற்காக ஆடுகளங்களை தயார்படுத்துமாறு ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம்
அரசின் இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவா பொறிக்குள் தப்புமா? |
இலங்கை அரசு ஜெனி வாவில் 25ஆவது மனித உரிமைகள் மாநாட்டை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறது. தனக்கெதிராக மார்ச்சில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படும் பிரேரணையை |
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னரின் வாரிசு வேலூரில் மரணம்
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கரின் 3 வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்துள்ளார்.
வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த பிருதிவிராஜ் அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு
ஏப்ரல் மாதத்தில் யாழிற்கு புகையிரத சேவை; இந்திய துணைத்தூதுவர்
வடக்கின் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி இன்று காலை 10 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இக் கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும்
அமெரிக்கா- இலங்கைக்கு இடையில் பனிப் போர்: ஜெனீவாவில் யோசனை நிறைவேறுவது நிச்சயம்
ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என தெரியவருகிறது.அமெரிக்காவின் யோசனை தொடர்பான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் 28ம் திகதி
அமெரிக்க போர்க் குற்ற நிபுணர் ஸ்டீவன் ராப்பின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்டீவன் ராப், ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளது.மன்னார், யாழப்பாண பேராயர்கள் மற்றும் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலிச் சாட்சிகளை ராப் ஏற்றுக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இல்லாவிட்டாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அனந்தி சசிதரனது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)