புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014


7 பேரின் விடுதலை அறிவிப்பின் எதிரொலி: டெல்லியில் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது: ராஜீவ் காந்தியுடன் பலியானோரின் குடும்பத்தினர் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று குண்டுவெடிப்பில் அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா நடவடிக்கையில் சட்டமீறல் இல்லை! மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். 

ராஜபக்சவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா?- 3 பேரின் விடுதலைக்கு எதிராக அறிக்கை
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், 7 பேரின் விடுதலைக்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

21 பிப்., 2014


முடிந்தால் பாருங்கள்;எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்;இதை சவாலாக விடுக்கிறேன் : ஞானதேசிகன் பேச்சு
 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதையடுத்து குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

7 பேர்  விடுதலையை கண்டித்துஇளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம்
 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதையடுத்து குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

ன்னையில் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழா ”மன்றல் 2014” 
“மன்றல் 2014” என்னும் தமிழகத்தின் மாபெரும் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழாவினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சென்னை பெரியார் திடலில் எதிர்வரும் 23.2.2014 ஞாயிறு அன்று நடத்திடவுள்ளது.
இதுதொடர்பாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இயக்குநர் திருமகள் கூறியிருப்பதாவது,

தேர்தலில் இணைந்து பணியாற்ற அழைப்பு! ஜெயலலிதாவுடன் பண்ருட்டி வேல்முருகன் சந்திப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பு பாராளுமன்றத் தேர்தலையொட்டிதான் என்று கூறப்படுகிறது. 
வேல்முருகன், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவை திமுக தரப்பு சந்தித்தது தெரிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தரப்பும் சந்தித்தது. அப்போது தேர்தலில் தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கான பலனை நீங்கள் பெறலாம் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார். இரண்டு இடம் அல்லது கடலூர் தொகுதி மட்டுமாவது என்று கேட்டவர்களிடம், அதெற்கெல்லாம் உத்திரவாதம் கொடுக்க முடியாது, தற்போது இணைந்து பணியாற்றினால் சட்டமன்றத் தேர்தலில் அதற்கான பலனை அனுபவிக்கலாம் என்று மீண்டும் ஓ.பி.எஸ். கூறினாராம். இதையடுத்தே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசருக்கு சார்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்தது
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக மேன்முறையீடடு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று இரத்துச் செய்துள்ளது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஓய்வு பெற்ற பின் சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன்:
 பண்ருட்டி ராமச்சத்திரன்

 தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில்  இணைந்தார்.
சிகப்பு ரோஜாக்கள், நீங்கள் கேட்டவை உள்ளிட்ட
 200 தமிழ் திரைப்படங்களை டி.வி.டி.யில் வெளியிட  இடைக்கால தடை

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கே.பி.ரவிசந்திரன். இவர், சென்னை
டோனி விலகல்! அணித்தலைவரான கோஹ்லி
காயம் காரணமாக ஆசிய கிண்ண தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார்.
மனித உரிமை குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வெளிவிவகார அமைச்சருக்கு - கிரியெல்ல கடிதம்
மனித உரிமைகள் சம்பந்தமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்கள் தொடர்பாக விவாதிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு
ஜெயலலிதா முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது? - சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன்-பி.பி.சி 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, பூண்டுலோயாவில் தீவிபத்து 31 கடைகள் வீடுகள் நாசம்

நுவரெலிய பூண்டுலோயா நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில்  ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 31 வியாபாரத்தலங்
கடைகளுடனேயே வீடுகளும் அமைந்திருந்தமையால் பாரிய
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துக!- காங்கிரஸ்
இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

outh Africa 214/5 (83.0 ov)
Australia
South Africa won the toss and elected to bat
Stumps - Day 1


இலங்கை 61 ஓட்டங்களினால் வெற்றி .பங்களாதே~; அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரவின் அபார சதத்தின் உதவியால் 290 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பங்களாதே'pன் டாக்கவில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன் படி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக

விமான நிலையங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை

முழு அதிகாரமும் மத்திய அரசிடமே
விமான நிலையங்களை நிறுவுவதற்கான முழு அதிகாரம் நாட்டின் மத்திய அரசாங்கத்திடமேயுள்ளது. இலங்கை அரசியல் யாப்பில்

சமூக வலைத்தள பாவனைகளை உடனடியாக தடை செய்ய முடியாது

நன்கு ஆராய்ந்த பின்பே நடவடிக்கை

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ கினால் ஏற்படக்கூடிய பாதிப் புகளை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடு இலங்கைக்கு அவசியமென தகவல் ஊடகத்துறையமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த கட்டுப் பாட்டினை நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் எவ்வாறு செயற்படுத்தலாமென்பது குறித்து தான் ஆராயத் தொடங்கியி ருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை யமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது பேஸ்புக்கின் காரணமாக எமது நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் குறித்து அமைச்சரிடம்

'தேசத்துக்கு மகுடம்' தேசிய அபிவிருத்திக் கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் இன்று கோலாகலமாக ஆரம்பம்

~உன்னதமான சமாதானத்தின் ஊடாக வளமான தேசம்' என்ற தொனிப் பொருளில் எட்டாவது கண்காட்சி
* மூன்று மாவட்டங்களிலும் 50,000 மில்லியன்

7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவு வேதனை தருகிறது: பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியைக்

தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது 
தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்பாக பேசிய பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, சீமாந்திரா பகுதிக்கு 10

எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நடவடிக்கையின் விளைவாக 3 பேரின் விடுதலைக்கு சிக்கல்: கிருஷ்ணசாமி பேட்டி
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம்

பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது
 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயம்பாளையத்தைச்

இலங்கைக்கு சார்பான நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சம்
இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் சில நாடுகள் பிரேரணையை முன்வைக்கவுள்ளமையை அடுத்து அமெரிக்கா தமது யோசனை தொடர்பில் மீள்பரிசீலனையை மேற்கொண்டுள்ளது.

20 பிப்., 2014

மனைவியை பிரிந்தார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர்
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் மனைவியான திலக்ருக்ஷி விக்ரமசிங்க அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்தவின் பிரித்தானிய விஜயம் ரத்து
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் வெற்றி பெற மந்திர தந்திரம் செய்யும் இலங்கை
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்கும் நோக்கில், ராஜபக்ஷ அரசாங்க மந்திர தந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது!- சுப்ரமணியன் சுவாமி
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பலத்த காற்றுடன் மழை பொழியும்: வானிலை ஆய்வு மையம்

கனடாவின் ரொறன்ரோவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுகவில் இணைந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார் தேமுதிகவின் முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
கீதா குமாரசிங்க திருமணம் செய்து கொள்ளுமாறு அழைத்தால் ஏற்க மாட்டேன்!- மங்கள சமரவீர - கீதா பதில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளரான நடிகை கீதா குமாரசிங்க, தன்னை திருமணம் செய்து கொள்வதாக யோசனை முன்வைத்தால் அதனை தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கீதா குமாரசிங்க அப்படியான திருமண யோசனையை என்னிடம் முன்வைப்பாரா என்பது சந்தேகம். கீதாவுக்கும் எனக்கும் ஒரே வயது.
இலங்கையர்களை கொண்ட கொள்ளைக் குழு இத்தாலியில் கைது
எட்டு இலங்கையர்களை கொண்ட கொள்ளையில் ஈடுபடும் குழுவை இத்தாலி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இத்தாலியின் சிசிலியே மெஷினா நகரின் கெரப்னேரி பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
தமிழர் மனங்கள் போற்றும் தீர்மானங்களை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள்: சிறீதரன் எம்பி
ரஜிவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான தமிழக சட்ட சபை தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையி
நளினியின் மகள் ஹரித்திரா சென்னை வருகிறார்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர்களில் ஒருவரான முருகன் - நளினி விடுதலையாக விருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து அவர்களது மகள் ஹரித்திரா லண்டனில் இருந்து சென்னை வருகிறார்.
ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்! ஜனாதிபதி ஆட்சி?
தெலங்கானா மசோதா மக்களவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து சீமந்திரா பகுதியில் கடும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது.

7 பேரை விடுதலை செய்யக்கூடாது : பிரதமர் மன்மோகன்சிங்

பேரறிவாளன், முருகன்,நளினி, சாந்தன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை: பிரபல நடிகை எதிர்ப்பு
 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை தமிழக அரசின் முடிவுக்கு விட்டது
7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு
 முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

மன்னித்துவிடுங்கள் : ராகுல் காந்தியிடம் நளினியின் மகள் கோரிக்கை
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு
முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவிற்கு எதிர் ப்பு தெரிவித்து, மத்திய  அரசு  மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.   மத்திய அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்.  
7 பேரின் விடுதலை பற்றிய செய்தி தலைப்புக்கள் 

ஜெயலலிதா பிரிவினைவாத சக்திகளோடு துனைபொயுல்லார் கண்டிக்கத்தக்கது -காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் அசிக் கான்

முதலவரின் கோரிக்கை ஆய்வி செய்யப் படும் .காங்கிரஸ் அமைச்சர் கண்டே

கருணை மனுவை தாமதித்ததால்  தூக்கு தண்டனை ரத்தே தவிர அவர்கள் குற்றவாளிகளே என்பது உறுதி .ப.சிதம்பரம்

ஜெயலலிதாவின் அறிவிப்பு மெச்சத் தக்கது வாழ்த்த தக்கது பாராட்டத் தக்கது -வை கோ

நாட்டின் ஒரு பிரதமராய் கொலை செய்தவர்களை விடுதலை செய்வது கவலை அளிக்கிறது-பாரதீய ஜனதா தலைமை
 பரடுகிரொம் முதல்வரை.-ராதகிர்ஷ்னன் பாரதீய ஜனதா

ஜெயலலிதா முடிவு சந்தர்ப்ப வசமானது .அவர் எப்போதும் ஈழத் தமிழருக்கு எதிரானவர் .சந்திரகுமார்தே  தி மு க




தற்கொலையுண்ட இளந்தளிரின் நெஞ்சுருக்கும் உண்மைக்கதை!
அப்பாவுக்கு.....

கடந்த 05-02-2014 அன்று முகநூலின் காரணமாக குருநாகல் பாடசாலையொன்றின் சாதாரண தரத்தைச்சேர்ந்த வெனுஷா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டமைக்கான உண்மைக்காரணம் என்ன என்பதை அவரது கைப்பட

தாமதத்துக்கு தண்டனை!

ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை ஏதோ ராஜீவ் கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது

தமிழக அரசின் முடிவு: மக்களவையில் திமுக - அதிமுக வாக்குவாதம்

மிழக சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே

மத்திய அரசு ஏற்பு; காங்கிரஸ் கண்டனம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.
முதல்வர் ஜெயலலிதா பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்

மக்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும் -முரளி 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின்  அடிப்படை தேவைகளை அறிந்து உதவ வேண்டும். அப்போதே ஒற்றுமையினால் நிறைந்த இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்டசத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
பல்வகைமை மற்றும் சமத்துவத்தினால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை தேசியத்தை

சுயவிபர படத்துக்கு பதிலாக மொடல் அழகியின் படம்: காலித்த இளைஞன் நேரில் சந்தித்த பின் யுவதி தற்கொலை

பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய பகுதியில்

எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ்

பிரன்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி
முச்சதம் அடித்து முத்திரை பதித்த நியு+சிலாந்து அணித்தலைவர்; பிரன்டன் மெக்கல்லம் கூறியதாவது:- 94 ஓட்டங்களுக்குள்; 5 விக்கெட்டு களை இழந்த நிலையில், எனது ஆட்டம் அணிக்கு மிகவும் அவசிய மாக இருந்தது. நெருக்கடிக்கு மத்தி யில் சில அருமையான இணைப்பாட் டத்தை உருவாக்கினோம். அதன் பிறகு எங்களது துடுப்பாட்டம் நீண்டு கொண்டே போனது. சரிவில் இருந்து நிமிர்ந்து தொடரை கைப்பற்றியது மிகவும் திருப்தி

அ.இ.ம.கா கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டி

மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முதல் தடவையாக மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக

சிராணிக்கு எதிரான வழக்கு விசாரணை: இன்று தீர்ப்பு

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா வுக்கு எதிரான ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டை விசாரிப்பதற் காகப் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 78 (ஏ) இன் கீழ் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்

தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ் கூட்டமைப்புக்கு அருகதையில்லை

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்
நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் தவறான தகவல்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். புலிகள் அழிக்கப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் அன்று விட்ட தவறு காரணமாகவே இன்று கூட்டமைப்பு நாட்டிற்கு எதிராக சர்வதேசம் செல்கிறது. எனவேதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றர்.
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன;கூட்டமைப்பு குற்றச்சாட்டு 
வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது
கொழும்பில் காணாமல்போனோர் குறித்து ஆணைக்குழு விசாரணை தேவையில்லை; அதன் தலைவர் தெரிவிப்பு 
கொழும்பில் வைத்து கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்த காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி
வடக்கு அபிவிருத்தி குறித்து ஐ.நா. பிரதிநிதிகள் ஆளுநருடன் பேச்சு 
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான இயக்குனர் மேரி ஜமசிற்றா உள்ளிட்ட மூன்று பேர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு
சர்வதேசத்திற்கு விலை போகும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தின் மீதுமே தனிப்பட்ட கோபம் உள்ளது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையே உள்ள
 ஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை . மத்திய அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது பொருள் அல்ல. மத்திய அரசு பதில் சொன்னாலும் சொல்லா விட்டாலும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 

- ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு
ஐ.நா. அமர்வில் விசாரணைகளை கோருவதற்கு கமரூன் உரிய நடவடிக்கை! சி.வி.யிடம் பிரித்தானிய தூதுவர் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா அமர்வில் சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் எடுத்து வருவதாக வடமாகாண முதலமைச்சர்

19 பிப்., 2014


நெடுமாறன், சீமான் முதல்வருக்கு நன்றி 
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படும் செய்தி அறிந்ததும் பழ.நெடுமாறன், சீமான் சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து 7 பேரின் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

ஜெயலலிதா முடிவை நிராகரித்த உள்துறை அமைச்சகம்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால்நாங்கள் முழுமனதோடு வரவேற்போம் : திருமாவளவன்
கிருஷ்ணகிரிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

மூன்று தமிழர் விடுதலை-சந்தோசத்தை பகிர சாதிமறுப்பு திருமணம்
 

    பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உட்பட்ட தமிழர்களை விடுதலை செய்யும் அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெ வெளியிட்டார்.இது தமிழ் உணர்வாளர்கள் உட்பட்ட மனிதநேய ஆர்வலர்கள் அனைவரையும் உற்சாகப்படுதியது.
7 பேரை விடுவிக்க தி.மு.க., அ.தி.மு.க. கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவி சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
இது மெச்சத்தகுந்த மனிதாபிமான நடவடிக்கை : வைகோ
புதுடெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’ராஜீவ் காந்தி கொலை வழக்கில்

தமிழக அரசுக்கு நன்றி : வேல்முருகன் அறிக்கை
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படும் செய்தி அறிந்ததும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


7 பேரை விடுதலை செய்ய ஜெயலலிதா பரிந்துரை : மத்திய உள்துறை அமைச்சர் பதில்
ராஜீவ்காந்த் கொலை வழக்கில் பேரரிவாளன், சாந்தனு முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 23 ஆண்டு களாக சிறையில் இருந்தனர். இந்நிலையில் பேரரிவாளன். சாந்தனு மற்றும் முருகனின் கருணை மனுக்களை தாமதமாக பரிசீலித்தாக
சுவிசில் தீவிபத்தில் பலியான புங்குடுதீவு வாலிபரின் இறுதி கிரியை வியாழன்று நடைபெறவுள்ளது 

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவசோதி அவர்கள் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தீவிபத்தில் அகாலமரணம் அடைந்தார்.


தனது மகன் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் நேரில் நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
'முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை
நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கியுள்ளன
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளன.
வாக்குறுதி வழங்கிய கோத்தபாயவை மேல் நீதிமன்றில் கடுமையாக சாடிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையாவிடமும் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் வாக்குறுதி வழங்கிய பாதுகாப்புச் செயலாளர் தான் வழங்கிய
நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கியுள்ளன!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளன.
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி மூன்று பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிக்கு
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி இரண்டு பெண்கள் மற்றும் இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவரை தம்மகல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாந்தனை பார்க்க ஆசையா இருக்கு!- சகோதரி, சகோதரன், தாயார்!
இந்தியவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி,  தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை நடத்த வேண்டும் என்ற பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாமானியன் மீது சுமத்தப்பட்ட வீண் பழி இது! - ராஜீவ் படுகொலை கைதியின் வாக்குமூலம்-விகடன் 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 1970-ம் ஆண்டு பிறந்தேன். அப்பா தமிழக அரசின் வேளாண் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தார். அம்மா இல்லத்தரசி. 1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அப்சல் குரு விவகாரத்தில் விமர்சித்த பாஜக, ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனமாக இருப்பது ஏன்?: கபில் சிபில்

அப்சல் குரு விவகாரத்தில விமர்சித்த பாஜக ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனத்தை கடைபிடிப்பது ஏன் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் இன்று ராஜினாமா : முழு கடையடைப்பு : பற்றி எரிகிறது ஆந்திரா
லோக்சபாவில் நேற்று தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று தனது பதவியை ராஜினாமா
தி மு க மாநாட்டால் எ தி  மு க கூட்டணியில் மற்றம் கம்யூன்ச்டுகல் கலக்கம் 
லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது என, அரசியல் கட்சி தலைவர்கள் குழம்பியுள்ள நிலையில், தி.மு.க., மாநாடு எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்துள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்
இந்த விடுதலையை ஈழ விடுதலையின்முதல் படியாகவே பார்க்கிறேன் : சீமான்
ராஜீவ்காந்தி கொலை  வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருந்த முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோர் தூக்குத்தண்டனையில் இருந்து விடுதலை செய்யப் படுகிறார்கள்.
ஜெயலலிதா அறிவிப்பு : காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 23 வருடங்களாக சிறையில்  இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்ர், ஜெயக்குமார்,
வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் ஜெயலலிதா : திருமாவளவன்
 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
7 பேரின் விடுதலையை முதலமைச்சர் உடனடியாக அறிவித்ததை வரவேற்கிறோம் :கி.விரமணிராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
விடுதலைக்கு பின் லண்டனில் வசிக்க விரும்பும் நளினி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார்.
7 பேர் விடுதலை: ஜெயலலிதா அறிவிப்புக்கு ராமதாஸ் பாராட்டு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
இது குறிது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தமிழக அரசு அறிவிப்பு : கலைஞர் மகிழ்ச்சி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகிய 7 பேரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு
பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை : ஜெயலலிதா அறிவிப்பு
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு
ஜெயலலிதாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். இந்த சந்திப்பின்போது, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதற்கு முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்
நளினி விடுதலை : சட்டப் பேரவையில் ஜெயலலிதா முழக்கம் 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.  இந்நிலையில்  நளினிக்கு தூக்கு ரத்து ஆகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.    நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு ரத்து ஆனது.   
மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும்,  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து,  வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
வேலூர் சிறையில் உள்ள நளினியும்( முருகன் மனைவி ) விடுதலை செய்யப்படுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.   நளியுடன் சிறையில் உள்ள ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

23 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்துஇனத்தின் மானம் காத்த  முதல்வருக்கு நன்றி : இயக்குநர் சேரன்
 

திரைப்பட இயக்குநர் சேரன் தனது முகநூல் பக்கத்தில்,  ‘’மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது.. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள்... நிறைய அமைப்புகள்

நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேர் :
மத்திய அரசு பதிலளிக்காவிட்டால்
தமிழக அரசே விடுதலை செய்யும் :
ஜெயலலிதா அதிரடி 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு எடுக்கப்பட்டு, அதை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யவது பற்றி மூன்று நாட்களில் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நேற்று, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு ரத்து ஆனது.   23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்’’என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும்,  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இவர்களுடன் இதே வழக்கில் சிறையில் இருக்கும் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.  மத்திய அரசு மூன்று நாட்களில் இதற்கு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அறிவித்தார்.

சுவிஸ் தமிழ் உதைபந்தாட்டக் கழகத்துக்கு  ஆறு மாத கால தடை 

அண்மையில் சுவிஸ் தமிழ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் மைதானத்தில் வன்முறையில் ஈடுபடமைக்காக லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகம்(Young Birds .Luzern ) ஆறு மாதங்களுக்கு  தமிழரின் சுற்று போட்டிகளில் பங்குபற்ற தடை  விதித்துள்ளது சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் என அறிவிக்கப் பட்டுள்ளது

பெண்கள் உதைபந்தாட்டத்தில் கரவெட்டி விக்னேஸ்வரா சம்பியன்
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வியாழக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி
கிண்ணத்தைச் சுவீகரித்தது சென்.நியூஸ்ரார் இளைஞர் வி.க.

அராலி சில்வெஸ்ரார் இளைஞர் கழகம் இளைஞர் கழகங்களுக்கு இடையே நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரில் வெற்றி பெற்றுச் சம்பியனானது சென்.நியூ ஸ்ரார் இளைஞர் கழகம்.
தனியார் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்ட நிலையில் விடுதி ஒன்றிலிருந்து பொலிஸாரால் மீட்பு 
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் சிவபுரத்தைச் சேர்ந்த 16வயதுடைய குறித்த மாணவி தினமும்
திருகோணமலை முற்றவெளி மனித எழும்பு துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை வேண்டும் - செல்வம் எம்.பி 
திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் வெளிவந்துள்ள மனித எலும்புத்துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலை
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும்; வடமாகாண சபையில் தீர்மானம் 
வடமாகாண சபையில் காணி சுவீகரிப்பை நிறுத்துவதுடன், திட்டமிட்ட குடியேற்றமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை உள்பட 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ad

ad