ஜெனீவ வரை ஒலித்த பிரச்சினையால் பூஸாவில் தடுப்புக் காவலில் தர்மபுரத்தில் கைதான தாய்18 நாள்கள் வைத்திருக்க உத்தரவு: அவரது 13 வயது மகள் விடுவிப்பு
கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பூஸா சிறைக்கு அனுப்ப உள்ள தாகப் பொலிஸார் நேற்று கிளிநொச்சி பதில் நீதிவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியத்திடம் தெரிவித்தனர்.