புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014


அகில இந்திய அளவில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகள்

அகில இந்திய அளவில் பாஜக 348, காங்கிரஸ் 68, அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 33, பிஜு ஜனதா தளம் 18, தெலுங்கு தேசம் 13, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
விருதுநகர்: அதிமுக முன்னிலை: 3வது இடத்தில் வைகோ

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 65,532 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ரத்தினவேலு 39,218 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 38,981 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 5 ஆயிரம் வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார். 

எல்.கே.அத்வானி 1,18,281 வாக்குகள் முன்னிலை
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதயில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்டார். 11.30 மணி நிலவரப்படி அவர் 1,18,281 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
2 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை
காங்கிரஸ் கட்சி 40,927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2,678 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.
2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். காலை 11.12 மணி நிலவரப்படி 21,425 வாக்குகள் பெற்று அவர் 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி 19,246 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி 4,960 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 1,113 வாக்குகள் பெற்றுள்ளார்.

ராஜேஸ்வரி சண்முகம்



 வாழ்க்கை வரலாறு
அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா- பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையில் முதலில் படித்தார். பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு படிக்கும் போது நடித்த "கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் "சானா" இவரை வானொலி நாடகங்களீல் நடிக்க அழைத்தார்.

கலைக்குடும்பம்

இவரது கணவரான சி. சண்முகமும் (pungudutivu)இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும், மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே வானொலி அறிவிப்பாளர்களாக சமகாலத்தில் இருந்தவர்கள். மகள் வசந்தி வானொலி, மேடை நாடகங்களில் நடித்தவர்.

 வானொலி நிகழ்ச்சிகள்

சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி, விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். வானொலியில் 'பொதிகைத் தென்றல்' என்ற இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர்.

 மேடை நாடகங்கள்

  • சானாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்"
  • முருகையனின் ":விடியலை நோக்கி"
  • சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்"
  • சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு"

வெளி இணப்புக்கள்


மக்கள் குரலே மகேசன் குரல் : தேர்தல் முடிவுகள் குறித்து கலைஞர்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து  திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது. 

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வைகோ தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 

 விருதுநகர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளராக வைகோ போட்டியிட்டார். அதனால் இத்தொகுதி வி.ஐ.பி
களைகட்டியது அ.தி.மு.க அலுவலகம், களையிழந்தது அறிவாலயம்! (படங்கள்)நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில், தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
மேலும், ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனிலும் தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.
சில தொண்டர்கள் மொட்டையடித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
 
அதே நேரத்தில்  புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 35 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை. மாறாக படுதோல்வியை சந்தித்துள்ளது. படுதோல்வியை சந்தித்துள்ள தி.மு.க., அதன் அலுவலகமான அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சந்திரபாபுநாயுடு மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடை பெற்றது.
சீமாந்திராவில் 25 பாராளுமன்ற தொகுதியும், 175 சட்டசபை தொகுதியும் உள்ளது. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

தமிழகம் கட்சி - முன்னணி/வெற்றி நிலவரம்..
அ.தி.மு.க.37
தி.மு.க.0
ம.தி.மு.க.0
தே.மு.தி.க.0
பா.ம.க.0
பா.ஜ.க.2
வி.சி0
சி.பி.ஐ.0
சி.பி.ஐ.(எம்).0




இந்தியா -முன்னணி/வெற்றி நிலவரம்
பா.ஜ.க. கூட்டணி333
காங்கிரஸ் கூட்டணி66
மற்றவை144

தேசிய அளவில் நிலவரம்
தமிழ்நாடு நிலவரம்
கூட்டணிபோட்டியிட்டவைமுன்னிலைமுடிவு
காங்.3900
கம்யூ.1700
என். டி. ஏ3920
அதிமுக39370
டி. பி. ஏ
39
00
கூட்டணிபோட்டியிட்டவைமுன்னிலைமுடிவு
என்.டி.ஏ54233110
ஆம் ஆத்மி42440
மற்ற கட்சிகள்441860
மாற்று அணி446540
யு.பி.ஏ537580
உத்தரபிரதேச மாநிலத்தில் 67 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.நாட்டில் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு மட்டும் 80 தொகுதிகள் உள்ளன. நாட்டின் பிரதமரையே முடிவு செய்யும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேசம் கருதப்படுகிறது. இங்கு பா.ஜ.க. 67 தொகுதிகளில் முன்னிலை பெற்றள்ளது.
மேலும், சமாஜ்வாடி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது.தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்படி கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 17 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.மேலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
 

பா.ஜனதா 278 தொகுதிகளில்  முன்னிலை வகிப்பதால், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர மாநில கட்சிகளின் தயவின்றியே அக்கட்சி மத்தியில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 9,489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 9,489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
37 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வடசென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிதம்பரம், நெல்லை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மத்திய சென்னை, நாமக்கல், திருப்பூர், சேலத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
260 பாஜக முன்னிலை 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி விட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி பாஜக 271 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருவதால் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராவதும் உறுதியாகிவிட்டது.
Posted Date : 10:05 (16/05/2014)Last updated : 10:12 (16/05/2014)
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களே32 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு நிலவரம்

கடலூர்

அதிமுக 23,463 வாக்குகள்
திமுக 12,483
தேமுதிக 6781
காஙகிரஸ் 1109
இந்திய கம்யூனிஸ்ட் 501

நாகை (தனி) 

அதிமுக 25,540
திமுக 19,332
பாமக 2,578
காங்கிரஸ் 1522
இந்திய கம்யூனிஸ்ட் 6190

நெல்லை

அதிமுக 23,261
திமுக 13,593
தேமுதிக 62,54
காங்கிரஸ் 3228
ஆம் ஆத்மி 318

சிதம்பரம்

அதிமுக 22,087
விடுதலை சிறுத்தைகள் 18,063
பாமக 13,736
காங்கிரஸ் 1,364
நோட்டா 536
 தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் காலை 10 மணி முதல் வெளியாகும்           
இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.68 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 64.47 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்திய தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தரவுள்ளோம் இணைந்திருங்கள்  அபிமான வாசகர்களே 

15 மே, 2014

சுற்றுலா வந்தவர் வலித்தூண்டலில் சடலமாக மீட்பு 
யாழ். கீரிமலை வலித்தூண்டல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புலிகள் மீதான தடை நீடிப்பு .ஆட்சி மாறலாம்.அதற்கு முதல் இந்த நல்ல காரியத்தையாவது செய்து  விட வேண்டும் என்ற காங்கிரசின் எண்ணம் 
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையமாக கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்


தொலைபேசி மூலம் வந்த வினை: தாயைக் கட்டி வைத்து மகள் மீது வல்லுறவு
தொலைபேசி மூலம் ஏற்பட்ட தொடர்பால் திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணொருவர், நுவரெலியாவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம்
அதிகாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் ஆயத்த பணி துவங்கும்;காலை 8.30 மணிக்கு முதல்கட்ட நிலவரம்!
மக்களவை தேர்தலுக்காக 9 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.  நாளை மறுநாள் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு : இறுதி உரையை முடிக்காமல் தாமதப்படுத்தும் பவானிங்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக புகார் எழந்துள்ளது.  
 பெண்ணை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த கைதிக்கு அந்த பெண்ணையே நீதிபதி திருமணம் செய்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி அருகே கருத்த லாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்த ராஜ் என்பவர் மகன் சக்திவேல்(25). கட்டிட தொழி
புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா காட்சி நேரலையில் இன்று  (15.05.2014) வியாழன் ஐரோப்பிய நேரம் மதியம் 12.30 க்கு(இலங்கை நேரம் 16.00 )  காணலாம் www.sivantv.com

 நேற்றுமுன்தினம் நடைபெற்ற புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் தேர்த்திருவிழா காணொளி அங்கம் 1 
நேற்று முன்தினம்  சிறப்பாக நடைபெற்ற  புங்குடுதீவு  கண்ணகி அம்மன் கோவில் தேர்த்திருவிழா காணொளி அங்கம் 2 
பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்; பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 
பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் சகல பல்கலைக்கழக பேராசிரியர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதி  தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
news
 நைஜீரியாவில் மாணவிகளை மீஎட்க தயார் நிலையில் உலக நாடுகள்
இதற்கு உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கு உதவி
 
நைஜீரிய நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இந்தா நிலையில் அமெரிக்க கண்காணிப்பு விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராகும் மலிங்க 

 ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க மும்பை அணிக்காக விளையாடுகிறார்.

பிரபாகரனை நினைவு கூரவேண்டாம்; இந்திய பொலிஸார் அறிவுறுத்தல் 
news
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 230 ஆமைகள் தாய்லாந்து விமான நிலையத்தில் பறிமுதல்
இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு கடத்தப்பட்ட 230 விலையுயுர்ந்த ஹாமில்டன் வகை ஆமைகள் அந்நாட்டு விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.
மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். விதித்த திடீர் நிபந்தனை
பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 
12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்த ஏழை சகோதரிகள்

கடலூர் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் 12ம் வகுப்புத் தேர்வில் பள்ளியின் முதல் இரண்டு இடத்தை பிடித்தும் ஏழ்மை காரணமாக தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி முருகேசன், இவரது மனைவி ராஜலட்சுமி.இவர்களுக்கு கிருத்திகா, சரண்யா என்ற 2 மகள்கள் இருந்தனர். அக்காள் தங்கையான இருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே வகுப்பில் ஒன்றா
பாஜகவுக்கு அ  தி மு க ஆதரவளிக்கும் என் கூறிய  மலைச்சாமி  கட்சியில் இருந்து  நீக்கம்
[
முரண்பாடான கருத்து தெரிவித்த குற்றத்திற்காக அதிமுக கட்சியின் முன்னாள் எம்.பி மலைச்சாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவு திரட்டவே இலங்கை வந்தார் டேவிட் கமரூன் -ஹெஹலிய ரம்புக்வெல 
பயங்கரவாதத்தை தோற்கடித்த காரணத்தினால் சில நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பை காட்டி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை பற்றி ஆராய ஐ . நா . விசேச பிரதிநிதி விஷயம் 
ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் ரத்து செய்யுறுமா பிரிட்டன் அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு .
கோபி என்ற புலி உறுப்பினருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கைது செய்யபபட்டமைக்கும் பிரிட்டன் அதிருப்தி வெளியிட்டுள்து.
மோடி விசா விவகாரம்: அமெரிக்கா விளக்கம்
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மூண்ட இனக்கல வரங்களை முதல்வர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார்,
அதிகாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் ஆயத்த பணி துவங்கும்;
காலை 8.30 மணிக்கு முதல்கட்ட நிலவரம்!
மக்களவை தேர்தலுக்காக 9 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.  நாளை மறுநாள் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
திக்விஜய் சிங் - அம்ரிதாராய் காதலுக்கு
சங்கராச்சாரியார் எதிர்ப்பு!
 

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங். மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 10 ஆண்டு காலம் முதல்–மந்திரி பதவி வகித்தார்.

படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புலி முக்கியஸ்தர் இந்தியாவில் தஞ்சம்

காணாமல் போனதாகக் கூறப்படுவோரில் அநேகர் வெளிநாடுகளில் இருப்பது நிரூபணம்
காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்ற விடயம் எல்.ரீ.ரீ.ஈ. யின் முன்னாள் உறுப்பினர் கே. தயாபரராஜா

நிரந்தரத் தீர்வு கிடைத்ததும் நிலப்பறிப்பு, படைக்குவிப்பு என்ற பேச்சே இருக்காது

மக்களை ஏமாற்றி வரும் கூட்டமைப்பின் அரசியல் யுக்திக்கு இனி இடமில்லை
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் நில அபகரிப்பு, படைக்குவிப்பு நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா
ஹராமுடன் பேசத்தயார் - நைஜீரியா அமைச்சு 
கடத்தப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்ட நைஜீரிய பாடசாலை சிறுமிகளை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்த தயராக இருப்பதாக அந்நாட்டு விசேட
ஐ.பி.எல் இன் (40)ஆவது ஆட்டம்: சுருண்டது மும்பை 
மும்பை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐ.பி.எல் இன்  40ஆவது போட்டி தொடரில்...
புத்தரின் போதனைகளின்படி அரசாங்கம் ஆட்சி புரிகிறதா? வடமாகாண உறுப்பினர் கஜதீபன் கேள்வி
வடக்கின் சோகங்களை அனுஷ்டிக்க விடாமல், தமது வெற்றியை, பலாத்காரமாக அனுஷ்டிக்க வேண்டுமென நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பது தான் இன்றைய நாட்டின் நிலைமை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பணிகளில் சேரும் போது பல்வேறு துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி பிரான்ஸிஸ் க்ரீபீன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
1984 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையில் சித்திரவதை தடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கை போன்ற நாடுகளில் இன்னும்

ad

ad