புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2015

தமிழர்களின் உரிமைகளை வெல்ல ஒன்றுபட்டு வாக்களிப்பதே ஒரே வழி இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் தலைவர்


தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்து அதிக எம்.பிக்களைப் பெறுகின்ற போதுதான் புதிய அரசியல் உரிமைகளை வெல்வதற்கான அழுத்தங்களை

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை ராஜபக்~ ஆட்சிகால சந்தேக நபர்களை உடன் கைது செய்யவும்


ந~;டஈடு தேவையில்லை தண்டனையே வழங்க வேண்டும்
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி கோரிக்கை

மயில்வாகனம் மதனராசா

அமரர் மயில்வாகனம் மதனராசா
(மதன்)
பிறப்பு : 1 செப்ரெம்பர் 1965 — இறப்பு : 29 யூன் 2014
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் மதனராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு ஒளிவிளக்கு ஒளியிழந்த நாள்............என் வாழ்க்கை இருளில் மூழ்கிய நாள்
ஆண்டொன்றென்ன ஆயிரம் நாள்
தான் போனாலென்ன
உம் நினைவு எம்மை விட்டகலாது!
மதரா நீங்கள் எங்கு சென்றீர்கள்?
கட்டியவள் துணையின்றி தவிக்க
பிள்ளைகளோ பாசத்தால் தவிக்க
சென்ற இடம் தான் எங்கே?
மதரா, நீங்கள் வாழ்ந்த இடங்களையும்
நடந்த சாலைகளையும் நினைக்கையில்
எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கண்கள் குளமாகின்றன
நதிகளும் தோற்கின்றன கண்ணீரின் வரவைக்கண்டு
மதரா நீங்கள் இறக்கவில்லை.
உங்கள் நினைவால் நாம் தான்
தினம் தினம் இறக்கின்றோம்
இறந்து கொண்டே இருக்கின்றோம்!
நீங்கள் இல்லாமல் வாழும்
வாழ்வு ஒரு வாழ்வா?
இது ஒரு வாழ்க்கை தானா?
மதரா எங்களைவிட்டு பிரிந்திட்டாயோ
என்று நினைத்திட எங்கள் உள்ளம்
ஏற்க மறுக்கிறது மனமும் தவிக்கிறது
நீங்காத உம் நினைவுகளும்
இருந்து வாழ்ந்த காலங்களும்
சிறகடித்துப் பறந்ததுவே!
உங்கள் சிரித்த முகமும்
சீரான பேச்சும் எப்போது காண்போம்?
மதரா! விழிகள் எப்போதும் தேடுகின்றனவே
என்று காண்போமென!!
என் மனமும் ஏங்குகிறதே!!!
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து
எல்லோர்க்கும் நாணயமாய் நடந்தீர்!
நல்லவராய் வாழ்ந்து
நல்லவராகவே எங்களைத்
தவிக்கவிட்டுச் சென்றதேனோ?
உங்கள் திருமுகம் எப்போது காண்போம்
கதறுகிறோம் துடிக்கின்றோம்
உங்கள் நினைவு நிழலாக என்றும் தொடரும்...
அன்பு மனைவி கேமா

அப்பா......
அப்பா எங்கள் வாழ்வில்
எத்தனை உறவுகள் வந்தாலும்
உங்ளுக்கு நிகர் யாரும் இல்லை!
அப்பா என்றழைக்க இவ்வுலகில்
எங்களுக்கு யாரும் இல்லையே!!
எங்களைத் தவிக்க விட்டு
திடீரென எங்கே சென்றீர்கள்?
அப்பா நாங்கள் கதறுவது
காதில் கேட்கவில்லையா
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தை
எதையிட்டு நிரப்புவோம்
காலமெல்லாம் நீங்கள் எம்முடன்
இருப்பீர்கள் என நம்பியிருந்தோம்
எல்லாம் ஒரு நொடியில் கலைந்து விட்டதே!!
எங்கு பார்த்தாலும் உங்கள்
முகம் தான் தெரிகிறது
உங்கள் பிரிவால் துடிக்கிறோம் அப்பா
நித்தமும் உங்களைத் தேடுகிறோம்
நீங்கள் இல்லாத பூமியில்
நிம்மதி தான் எமக்கேது!
எங்கள் மூவரையும் உள்ளங்கையில்
வைத்துத் தாங்கினீர்கள்!
கேட்டதெல்லாம் வாங்கித் தந்து
சந்தோஷமும் அடைந்தீர்கள்!
அப்பா எங்களுக்கு நீங்கள் எந்தக்
குறையும் வைக்கவில்லையே!
பாசமுள்ள அப்பாவே கடைசிவரை
எங்களுக்காய் ஓடி ஓடி உழைத்தீர்களே!
இளைப்பாறுதல் தர இறைவன்
உங்களை அழைத்து விட்டாரோ?
உங்கள் நினைவுகள் எங்கள்
கண்களை குளமாக்குகின்றன!
அப்பா நாங்கள் மூவரும் கதறுகிறோம்
கடைசிவரை கண்மணிபோல் பார்த்துவிட்டு
ஒருவார்த்தை கூடச்சொல்லாமல்
எங்களைவிட்டுச் சென்றுவிட்டீர்களே?
எங்களைப் பிரிய மனமும் வந்ததோ!
உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு பிள்ளைகள் சம்ஜா, விதுஷா, மதுஷா
எமது குடும்பத்தின் சிகரமாயிருந்த அன்புக் கணவர், தந்தை அவர்களின் துயரச்செய்தி கேட்டு எமது இல்லத்திற்கு வந்தும், மரணச்சடங்கில் கலந்துகொண்டும், தொலைபேசியில் எமது துயரைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல் அளித்தும், தமது சொந்த வேலைகளைக் கருத்தில் கொள்ளாமல் சகல உதவிகளையும் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும், இன்று வரை எங்களை கரிசனையோடு விசாரித்து வரும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்
கேமா(மனைவி), பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கேமா — பிரித்தானியா
தொலைபேசி:+442036380315
செல்லிடப்பேசி:+447940501132
நிர்மலன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447735245709

மஹிந்தவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்: திணறும் நிதி மோசடி விசாரணை பிரிவினர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகை ஏழாகிறது


யாழ்.மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல்கள்

வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் சந்திப்பு


வெளிநாடுகளுக்கான இலங்கைத்தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர், வடமாகாண அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

30 ஜூன், 2015

இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது


நயினை தேர்த் திருவிழா இன்று

 
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூ­ணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு ஆரம்பமானது.

ரெய்னா, ஜடேஜா, பிராவோவுக்கு தடை?


news
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் மீது லலித் மோடி குற்றம் சாட்டியதால் அவர்கள் தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
 
ஆனால் அவர்கள் தொடர்ந்து விளையாட எந்த வித தடையும் இல்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று மாலையே எம்எல்ஏவாக பதவியேற்கிறார் ஜெயலலிதா



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா இன்று மாலையே எம்எல்ஏவாக ஜெயலலிதா பதவியேற்கிறார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் அவர் எம்எல்ஏவாக பதவியேற்கிறா

4,590 வாக்குகள் பெற்றார் டிராபிக் ராமசாமி




ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 30.06.2015 செவ்வாய் அன்று சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்றது.

1,51,215 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெ. வெற்றி



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று காலை 8

மகிந்த நாளை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்

மெதமுலனையில் நாளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாகவும் அதன் பின்னர் எதிர்வரும்

மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார்.

மஹிந்தவின் சூழ்ச்சி ஆரம்பம்: சுதந்திரக் கட்சியில் பிளவு?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய தரப்பினரால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கான

போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் இம்சை! - ஏஎவ்பி செய்தி சேவை

போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக

விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது

பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில்

யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்துதகவல்தொழில்நுட்ப பிரமுகர்கள்

இன்றிரவு Srilanka Telecom யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்தும் தமது சேவைகள் குறித்து வெிளக்கமளித்தல் , வாடிக்கையாளர்கள் மற்றும் யாழ்  , பல்கலைக்கழக ,வர்த்தக ,கல்வி சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் இரவு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது .

சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது-மத்திய உள்துறை அமைச்சகம்

 சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது என என மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

சுவிஸ் பேர்ன்மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழா

(ஆசிரியர்கள் கெளரவிப்பு )
சுவிஸ் பேர்ன் மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழா கூக்கடந்த சனியன்று (27.06.2015) முன்சென்புக்சே நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது  ஒன்பது தமிழ் பாடசாலைகளின் மாணவர்களினதும் பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் தொடராக நிகழ்த்தப்பட்டன.இவற்றில் அபிநயம் ,நடனங்கள்,நாடகங்கள் .பேச்சுக்கள் கவிதைகள் என் பல்வேறுபட்ட மாசங்களா அடங்கி இருந்தன . மண்டபம் நிறைந்த இந்த விழாவின் இறுதியில் மக்களின் பாராட்டை பெற்ற பட்டிமன்றமும் இடம்பெற்றது விழ ஒழுங்குகளை

ad

ad