புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2015

துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: சவாலாக களமிறங்கிய ஜெய்ஸ் அல் இஸ்லாம் அமைப்பு

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஜெய்ஸ் அல் இஸ்லாம் என்ற அமைப்பு களமிறங்கியுள்ளது.
சிரியாவில் சுமார் 25 ஆயிரம் பேருடன் இந்த இயக்கம் உருவாகியுள்ளது, தங்களை இஸ்லாமிய மார்க்கத்தின் இராணுவம் என கூறிக்கொள்ளும் இவர்கள், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள், பிற மதத்தவர்களையோ அல்லது, பிற நாட்டு பிணையக் கைதிகளையோ பிடித்து, ஆரஞ்சு வண்ண ஆடை உடுத்தச் செய்து, கழுத்தறுத்து கொலை செய்வது வழக்கம்.
அதற்கு பதிலடியாக ஜெய்ஸ் அல்-இஸ்லாம் அமைப்பு தீவிரவாதிகளால், ஐ.எஸ் தீவிரவாதிகள் சிலர்

முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலை வெறிச்செயலால் சிரியாவில் முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின்

காணாமல் போனவர்கள் தொடர்பில் செப்ரெம்பரில் ஐ.நா சபையில் வெளியிடப்படும்; அரசு அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டில் 250ற்கும் குறைவான விடுதலைப்புலி உறுப்பினர்களே இன்னமும் உள்ளனர் என பிரதி வெளிவிவகார அமைச்சர்

மெதமுலன கூட்டத்தில் சு.க முன்னாள் எம்.பிக்கள் 20 பேரே பங்கேற்பு அமைச்சர்கள் பங்குபற்றாமை ஏமாற்றம்


மெதமுலனவில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என மஹிந்த

மக்கள் ஆணையைப் பற்றி பேசும் உரிமை மஹிந்தவுக்கு கிடையாது * தோல்வி கண்ட ஒருவர் அரசியலில் ஒதுங்கியிருக்க வேண்டும்கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்து


* பதவிக்காக மஹிந்த மீண்டும் இனவாதத்தை பயன்படுத்துவார்
* சுதந்திரக் கட்சியிலும் இவருக்கு இடம் கிடையாது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்படி வந்தாலும் அவர் தோல்வியடைவது உறுதி. இறுதித் தோல்வியை அவருக்கு தெரியப்படுத்த காத்திருக்கிறோமென கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கோபா அமெரிக்க கால்பந்து: இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆர்ஜன்டினா


பரகுவேக்கு எதிரான கோபா அமெரிக்க கால்பந்து அரையிறுதி போட்டியில், ஆர்ஜன்டினா 6-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
44-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடை பெற்று வருகிறது. ஏற்க னவே இதன் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் பெரு அணியை தோற் கடித்து இறுதி போட் டிக்கு முன்னேறியுள்ளது சிலி.

சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து


 சென்னை மற்றும் சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இட்டார்சி

1 ஜூலை, 2015

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தில்இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை-

இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை-புங்குடுதீவு 11ம் வட்டாரத்தில்


ஆனால் ஊர்காவற்றுறைக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் அனுமதி வழங்கவில்லை. அதனை பொருட்படுத்தாமல் அவர் மாட்டை இறைச்சியாக்கிவிட்டார். இந்த விடயம் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரை கைது செய்த பொலிசார் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்தனர். கடந்த சில தினங்களாகவே அவர் மனச்சஞ்சலத்துடன் காணப்பட்டதாகவும், நீதிமன்றத்திற்கு செல்வதற்கு பயத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வித்தியின் தலைமையில் முன்னாள் போராளிகள் தேர்தலில்?

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், ஜனநாயகக்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை,தேசிய கட்சிகள் தமது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு மட்டக்களப்பு, வன்னி பிராந்தியம் குறித்து இன்னும் முடிவில்லை, யாழ் அம்பாறை மாவட்டங்கள் பற்றி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுவிட்டன.. சுரேஸ்

:-:
யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான ஆ

ஜெனீவாவில் எதிரொலித்த ஈழக் கதறல்கள்! இறுதி விசாரணையின் பின் இலங்கையில் என்ன நடக்கும்?

சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசின் மீதான பிடி நாளுக்குநாள் இறுகிக்கொண்டே செல்கிறது என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ

தமிழர்கள் பரந்துவாழும் வட -கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலும் போட்டியிடுமாறும் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு கோரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்

கிரீஸ் வங்கிகள் மூடல் – ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு

கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தேர்வு அன்ரனி ஜெயநாதன் சம்பந்தனுக்கு கடிதம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கல்வித் தகைமை உடையவர்களை நேர்மையான முறையில் தெரிவு செய்யுமாறு வட மாகாண சபையின் பிரதி

புலிகளின் சரணடைவு தொடர்பான சாட்சியங்களால் நெருக்கடி’-அவசரமாக ஜெனீவா விரைகிறது அரச உயர்மட்டக் குழு

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கு அரசாங்கத்தின் சார்பில் உயரதிகாரிகள் அடங்கிய குழுவொன்று

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகார வலு கொண்டதாக இருக்க வேண்டும்.-– இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை,தேசிய கட்சிகள் தமது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில்

புலிகளில் குடும்பத்தவர்கள் இருந்ததாக, குற்றஞ் சாட்டப்பட்ட 6 கிராமசேவை உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் குடும்பத்தவர்கள் இருந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு கிளிநொச்சியில் ஆறு கிராம சேவையாளர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழர்களின் உரிமைகளை வெல்ல ஒன்றுபட்டு வாக்களிப்பதே ஒரே வழி இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் தலைவர்


தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்து அதிக எம்.பிக்களைப் பெறுகின்ற போதுதான் புதிய அரசியல் உரிமைகளை வெல்வதற்கான அழுத்தங்களை

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை ராஜபக்~ ஆட்சிகால சந்தேக நபர்களை உடன் கைது செய்யவும்


ந~;டஈடு தேவையில்லை தண்டனையே வழங்க வேண்டும்
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி கோரிக்கை

மயில்வாகனம் மதனராசா

அமரர் மயில்வாகனம் மதனராசா
(மதன்)
பிறப்பு : 1 செப்ரெம்பர் 1965 — இறப்பு : 29 யூன் 2014
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் மதனராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு ஒளிவிளக்கு ஒளியிழந்த நாள்............என் வாழ்க்கை இருளில் மூழ்கிய நாள்
ஆண்டொன்றென்ன ஆயிரம் நாள்
தான் போனாலென்ன
உம் நினைவு எம்மை விட்டகலாது!
மதரா நீங்கள் எங்கு சென்றீர்கள்?
கட்டியவள் துணையின்றி தவிக்க
பிள்ளைகளோ பாசத்தால் தவிக்க
சென்ற இடம் தான் எங்கே?
மதரா, நீங்கள் வாழ்ந்த இடங்களையும்
நடந்த சாலைகளையும் நினைக்கையில்
எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கண்கள் குளமாகின்றன
நதிகளும் தோற்கின்றன கண்ணீரின் வரவைக்கண்டு
மதரா நீங்கள் இறக்கவில்லை.
உங்கள் நினைவால் நாம் தான்
தினம் தினம் இறக்கின்றோம்
இறந்து கொண்டே இருக்கின்றோம்!
நீங்கள் இல்லாமல் வாழும்
வாழ்வு ஒரு வாழ்வா?
இது ஒரு வாழ்க்கை தானா?
மதரா எங்களைவிட்டு பிரிந்திட்டாயோ
என்று நினைத்திட எங்கள் உள்ளம்
ஏற்க மறுக்கிறது மனமும் தவிக்கிறது
நீங்காத உம் நினைவுகளும்
இருந்து வாழ்ந்த காலங்களும்
சிறகடித்துப் பறந்ததுவே!
உங்கள் சிரித்த முகமும்
சீரான பேச்சும் எப்போது காண்போம்?
மதரா! விழிகள் எப்போதும் தேடுகின்றனவே
என்று காண்போமென!!
என் மனமும் ஏங்குகிறதே!!!
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து
எல்லோர்க்கும் நாணயமாய் நடந்தீர்!
நல்லவராய் வாழ்ந்து
நல்லவராகவே எங்களைத்
தவிக்கவிட்டுச் சென்றதேனோ?
உங்கள் திருமுகம் எப்போது காண்போம்
கதறுகிறோம் துடிக்கின்றோம்
உங்கள் நினைவு நிழலாக என்றும் தொடரும்...
அன்பு மனைவி கேமா

அப்பா......
அப்பா எங்கள் வாழ்வில்
எத்தனை உறவுகள் வந்தாலும்
உங்ளுக்கு நிகர் யாரும் இல்லை!
அப்பா என்றழைக்க இவ்வுலகில்
எங்களுக்கு யாரும் இல்லையே!!
எங்களைத் தவிக்க விட்டு
திடீரென எங்கே சென்றீர்கள்?
அப்பா நாங்கள் கதறுவது
காதில் கேட்கவில்லையா
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தை
எதையிட்டு நிரப்புவோம்
காலமெல்லாம் நீங்கள் எம்முடன்
இருப்பீர்கள் என நம்பியிருந்தோம்
எல்லாம் ஒரு நொடியில் கலைந்து விட்டதே!!
எங்கு பார்த்தாலும் உங்கள்
முகம் தான் தெரிகிறது
உங்கள் பிரிவால் துடிக்கிறோம் அப்பா
நித்தமும் உங்களைத் தேடுகிறோம்
நீங்கள் இல்லாத பூமியில்
நிம்மதி தான் எமக்கேது!
எங்கள் மூவரையும் உள்ளங்கையில்
வைத்துத் தாங்கினீர்கள்!
கேட்டதெல்லாம் வாங்கித் தந்து
சந்தோஷமும் அடைந்தீர்கள்!
அப்பா எங்களுக்கு நீங்கள் எந்தக்
குறையும் வைக்கவில்லையே!
பாசமுள்ள அப்பாவே கடைசிவரை
எங்களுக்காய் ஓடி ஓடி உழைத்தீர்களே!
இளைப்பாறுதல் தர இறைவன்
உங்களை அழைத்து விட்டாரோ?
உங்கள் நினைவுகள் எங்கள்
கண்களை குளமாக்குகின்றன!
அப்பா நாங்கள் மூவரும் கதறுகிறோம்
கடைசிவரை கண்மணிபோல் பார்த்துவிட்டு
ஒருவார்த்தை கூடச்சொல்லாமல்
எங்களைவிட்டுச் சென்றுவிட்டீர்களே?
எங்களைப் பிரிய மனமும் வந்ததோ!
உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு பிள்ளைகள் சம்ஜா, விதுஷா, மதுஷா
எமது குடும்பத்தின் சிகரமாயிருந்த அன்புக் கணவர், தந்தை அவர்களின் துயரச்செய்தி கேட்டு எமது இல்லத்திற்கு வந்தும், மரணச்சடங்கில் கலந்துகொண்டும், தொலைபேசியில் எமது துயரைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல் அளித்தும், தமது சொந்த வேலைகளைக் கருத்தில் கொள்ளாமல் சகல உதவிகளையும் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும், இன்று வரை எங்களை கரிசனையோடு விசாரித்து வரும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்
கேமா(மனைவி), பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கேமா — பிரித்தானியா
தொலைபேசி:+442036380315
செல்லிடப்பேசி:+447940501132
நிர்மலன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447735245709

மஹிந்தவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்: திணறும் நிதி மோசடி விசாரணை பிரிவினர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகை ஏழாகிறது


யாழ்.மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல்கள்

வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் சந்திப்பு


வெளிநாடுகளுக்கான இலங்கைத்தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர், வடமாகாண அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

30 ஜூன், 2015

இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது


நயினை தேர்த் திருவிழா இன்று

 
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூ­ணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு ஆரம்பமானது.

ரெய்னா, ஜடேஜா, பிராவோவுக்கு தடை?


news
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் மீது லலித் மோடி குற்றம் சாட்டியதால் அவர்கள் தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
 
ஆனால் அவர்கள் தொடர்ந்து விளையாட எந்த வித தடையும் இல்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று மாலையே எம்எல்ஏவாக பதவியேற்கிறார் ஜெயலலிதா



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா இன்று மாலையே எம்எல்ஏவாக ஜெயலலிதா பதவியேற்கிறார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் அவர் எம்எல்ஏவாக பதவியேற்கிறா

4,590 வாக்குகள் பெற்றார் டிராபிக் ராமசாமி




ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 30.06.2015 செவ்வாய் அன்று சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்றது.

1,51,215 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெ. வெற்றி



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று காலை 8

மகிந்த நாளை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்

மெதமுலனையில் நாளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாகவும் அதன் பின்னர் எதிர்வரும்

மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார்.

மஹிந்தவின் சூழ்ச்சி ஆரம்பம்: சுதந்திரக் கட்சியில் பிளவு?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய தரப்பினரால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கான

போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் இம்சை! - ஏஎவ்பி செய்தி சேவை

போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக

விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது

பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில்

யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்துதகவல்தொழில்நுட்ப பிரமுகர்கள்

இன்றிரவு Srilanka Telecom யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்தும் தமது சேவைகள் குறித்து வெிளக்கமளித்தல் , வாடிக்கையாளர்கள் மற்றும் யாழ்  , பல்கலைக்கழக ,வர்த்தக ,கல்வி சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் இரவு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது .

சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது-மத்திய உள்துறை அமைச்சகம்

 சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது என என மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

சுவிஸ் பேர்ன்மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழா

(ஆசிரியர்கள் கெளரவிப்பு )
சுவிஸ் பேர்ன் மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழா கூக்கடந்த சனியன்று (27.06.2015) முன்சென்புக்சே நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது  ஒன்பது தமிழ் பாடசாலைகளின் மாணவர்களினதும் பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் தொடராக நிகழ்த்தப்பட்டன.இவற்றில் அபிநயம் ,நடனங்கள்,நாடகங்கள் .பேச்சுக்கள் கவிதைகள் என் பல்வேறுபட்ட மாசங்களா அடங்கி இருந்தன . மண்டபம் நிறைந்த இந்த விழாவின் இறுதியில் மக்களின் பாராட்டை பெற்ற பட்டிமன்றமும் இடம்பெற்றது விழ ஒழுங்குகளை

29 ஜூன், 2015

சுவிஸில் 26ஆவது வீரமக்கள் தினம்.



தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையின் ஏறபாட்டில் எதிர்வரும் 05.07.2015 ஞாயிறன்று மதியம் 2.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின்

முதல் மெட்ரோ ரெயிலை சென்னையை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

 I


ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்

இத்தாலி ஆற்றில் வீழ்ந்த சிறுமி! காப்பாற்றிய இலங்கையர் ஆபத்தான நிலையில்

இத்தாலியில் ஆற்றில் வீழ்ந்த சிறுமியை காப்பாற்ற சென்ற இலங்கையர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஊடகங்களுக்கு தடை விதித்தார் யாழ். அரச அதிபர்


மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் யாழ். மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று

சின்னங்களை மாற்ற விரும்பினால் மாற்றலாம்; தேர்தல் செயலகம் அறிவிப்பு

 நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதாயின் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர்

விடுதலை புலி சீருடை ; கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்


விடுதலைப்புலிகளின் சீருடை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 125 ஆசனங்கள் கிடைக்கும்: உளவுத்துறை அறிக்கை.தமிழர் தரப்பின் ஆதரவு தேவைப்படும் நிலைகூட வரலாம்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 125 நாடாளுமன்ற ஆசனங்களை  பெற்றுக்கொள்ளும் என புதிய உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது நாடாளுமன்றம் செல்வார்?



எதிர்வரும் பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளித்தலைவர் ஒருவர் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்ய மாட்டோம்: சட்டமா அதிபர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர்,

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம் ஜெயலலிதாவின் ஆட்சியில் முடிவுற்ற பிரபலமான திட்டம் நிறைவு


தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடக்கி வைத்தார். 
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக, ஆலந்தூரில் இருந்து முதல் மெட்ரோ ரயில்

பிரதமர் வேட்பாளாராக மஹிந்த போட்டி. பி.பி.சி


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான

தனியாக போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

இம்முறை பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

36 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவியளித்து வரும் நடிகர் சிவகுமார்!

சென்னையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது .

விஷாலை மனதில் வைத்து இளம் நடிகர்களுக்கு நடிகை ராதிகா அறிவுரை!

ல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இளைய தலைமுறை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நடிகை ராதிகா பங்கேற்ற சினிமா விழாவில் பேசினார்.
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா நடித்துள்ள  ‘உயிரே உயிரே

நாளை மறுவாக்குப்பதிவு


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 181வது வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகி்றது.  

சிகிச்சை பெறும் எம்.எஸ்.விக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட இளையராஜா!




பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு

துரை ரவுடி சத்யா வெட்டிக்கொலை


மதுரை மேல அனுப்பானடியில் ரவுடி சதயா மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டான்.  சத்யாவின் உடலை

ஆம்பூரில் பதட்டம் தணிந்தது : அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு




வேலூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசாரைக்கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் 200க்கும் மேற்பட்டோர்

பல இலட்சம் பெறுமதியான பணம், பொருட்களுடன் திருட்டு கும்பல் கைது ; மானிப்பாய் பொலிஸார் அதிரடி


பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்துடன் திருட்டுக்கும்பல் ஒன்றினை இன்று காலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் ஆட்சி செய்ய மக்கள் ஒருபோதும் இடமளியார்; அஜித் பெரேரா


ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியடுவதற்கான வேட்பு மனுக்கள்

சகல கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையாளர் அழைப்பு


எதிர்வரும் யூலை மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு

மகிந்த,கோத்தா, பஸில் மற்றும் பொன்சேகா உள்ளிட்ட 42 பேர்மீது போர்க்குற்றச்சாட்டு ; ஐ.நா அறிக்கையும் தயார் நிலையில்


ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக

28 ஜூன், 2015

பிரதமராவது உறுதி! உறுப்பினர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மஹிந்த!


நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள்

மைத்திரி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வாரா பொன்சேகா?


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடுமாறு, ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் முடக்கப்படும்: வெளிவிவகார அமைச்சு


குமரன் பத்மநாதனின் சொத்துக்களை முடக்குவதற்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மைத்திரியை சுற்றியிருந்த அரசியல் முக்கியஸ்தர்கள் ஐ.தே.கவில் இணைவு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வந்த அரசியல்வாதிகள் பலர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின்
யாழில் சிறந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்யும் கையெழுத்து வேட்டை
யாழ்ப்பாணத்தில் சிறந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்வதற்கான மக்களின் விருப்புக்களை அறியும் கையெழுத்து வேட்டை இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம்
சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு! மஹிந்த அணியில் இணையும் சுசில் பிரேமஜயந்த?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 74.4 சதவீத வாக்குகள் பதிவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5

வேள்வியை நிறுத்த 90 வீதமான ஆலயங்கள் சம்மதம்


மிருக பலியிடலை நிறுத்துவதற்கு 90 வீதமான ஆலயங்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பி ரவிராஜ்கு சிலை


யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ரவிராஜ் என்பவருக்கு அவரது ஆதரவாளர்களால் சிலை ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திருத்தம் செய்யப்பட்ட நேர அட்டவணை


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையில் பரீட்சைகள் திணைக்களம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

27 ஜூன், 2015

முத்தரப்பு மோதலாக வெடிக்கும் பொதுத்தேர்தல்?


எதிர்வரும் பொதுத் தேர்தல் முத்தரப்பு மோதலாக அமையும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவு தினம் அனுஸ்டிப்பு


கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் நேற்று  அவர் கல்வி கற்ற

பொதுத் தேர்தலால் க.பொ.த உ/த பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்படலாம்

அதிகாலையில் கலைந்தது நாடாளுமன்றம்

news
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் இன்று அதிகாலை கலைக்கப்பட்டது.அதனடிப்படையில் எட்டாவது நாடாளுமன்றத்துக்குரிய பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
 

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய முன்னர் எரிக்சொல்கைமுக்கு சரண்டைவோர் பற்றிய விபரங்களை புலிகள் தமக்கு அனுப்பியதாக அவர் பெயர் விபரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


1. ஆதவன்
2 அம்பி
3அராமுதன்
4 அகிலன்

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெறும்! மைத்திரியின் இரகசிய கருத்துக்கணிப்பு


எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிப்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கூட்டணியிலே போட்டியிடுவார்: உதய கம்மன்பில உறுதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியிலே போட்டியிடுவார் என பிவிதுரு ஹெல

அனுராதபுரத்தில் கூட்டம் மஹிந்த தலைமையில் நடைபெறவுள்ளது

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர கட்சி உறுப்பினர்கள் - மஹிந்த தரப்பு அவசர சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று

புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: த.தே.கூட்டமைப்பு


புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - தேர்தல் ஆகஸ்ட் 17ல் நடைபெறும்! புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் 1ல் கூடும்


இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கிறார்.வெள்ளிக்கிழமை நள்ளிரவில்

26 ஜூன், 2015

உலககொக்கி லீக்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் சமநிலை



உலக ஆக்கி லீக் இரண்டாவது  சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 10 அணிகள்

சில்வா, மேத்யூஸ் அசத்தல்: வலுவான நிலையில் இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது.
இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி,

யாழில் இணையத்தள நிலையங்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் சைபர் குற்றங்கள் புரிவதற்கு, சைபர் கபேக்கள் அல்லது இணையத்தள நிலையங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் எனவே, சைபர்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.ஆகஸ்ட்17 இல் தேர்தல்


நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு

பிரான்ஸ் எரிவாயு தொழிற்சாலை தாக்குதலில் ஒருவர் பலி! பலர் காயம் - "பயங்கரவாத தாக்குதல்": பிரெஞ்சு அதிபர் பி.பி.சி

 
பிரான்ஸிலிருக்கும் எரிவாயு தொழிற்சாலையில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் பிரான்ஸில் இருந்து வந்துகொண்டிருக்கும் ஊடக த

விஷால் அணி தொடர்ந்த வழக்கில்: நடிகர் சங்க தேர்தலை அறிவிக்கபட்ட தேதியில் நடத்த தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு


தென் இந்திய  நடிகர் சங்க தேர்தல்  15.7.2015 அன்று வடபழனியில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சாலையில் உள்ள

அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்ட முடிவு



சிவகாசி வட்டம் கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது

வடக்கு நெற்கபேகளுக்கு இறுகுகிறது சட்டத்தின் பிடி


வடக்கில் இணையக்குற்றங்கள் (சைபர் குற்றம்) புரியும் நெற்கபேகள் இழுத்து மூடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்

யாழ்.நீதிமன்றம் தாக்குதல் : 14 பேருக்கு பிணைமுறி, ஏனையோர் தொடர் மறியலில்


யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை , சிறைச்சாலை வாகனத்தை சேதமாக்கியமை, சட்டவிரோத கூட்டம் கூடியமை

போதைக்கு எதிரான போர்


வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனமும் யாழ் மாவட்ட றோட்டறிக் கழகமும் இணைந்து போதை பாவனைக்கு எதிரான நடை பவணி ஒன்றை

ஓரினச்சேர்க்கையால் \'எயிட்ஸ்\' நோய் அதிகரிப்பு


ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன்


புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர்


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான

இலங்கையில் 2009-ம் ஆண்டு இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 78 பேர் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் 78 பேர் கிறிந்த பிரதேசத்தில் இருந்து 65 கடல் மைல்

மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

விநோதமான திருட்டு .15 கையடக்கத் தொலைபேசியுடன் தலைமறைவாகிய நபர்:

 
கையடக்கத் தொலைபேசி விற்பனை செய்யும் உரிமையாளரை ஏமாற்றி, 15 கையடக்கத் தொலைபேசிகளுடன் தலைமறைவாகிய நபரொருவரை நுவரெலியா பொலிஸார் தேடி வருகின்றனர்.

ad

ad