புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2019

இன்று  கறுப்பு  ஜூலை நாள்  .என்  ஆருயிர்  நண்பர் சுரேஷ்குமார் வெலிக்கடையில் கொல்லப்படட தினம் இன்று
வேலணை மத்திய கல்லூரியில்  என் வகுப்பு தோழனாக  இருந்த  திறமை மிக்க  நண்பன்  காசிப்பிள்ளை (ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை )  சுரேஷ்குமார் (அன்பன் ) வெலிக்கடை  சிறையில் அநியாயமாக  கொல்லப்படட நாள் .என்  வாழ்வில் மறக்க முடியாத  ஆருயிர் நண்பனை  இழந்த கறுப்பு  நாள் ,அன்பன்  என்றும் உன்  நினைவோடு  பிரார்த்திக்கிறேன் 

22 ஜூலை, 2019

கன்னியா விவகாரம்!! -பௌத்ததிற்கு எதிராக மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு-

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து மாவட்ட மேல் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர்ந்த நிலையில் முக்கிக கட்டளை வழங்கப்பட்டது.

ஒரு வாரத்துக்குள் தீர்வு - மீண்டும் வாக்குறுதி

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் நிதி மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காண்பதாக, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்

21 ஜூலை, 2019

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் ஆர். கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த

ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவுக்கு விஜயம்


ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது

முதுகெலும்பில் பட்ட தோட்டா: திரும்பி இதயத்தை தாக்கியது!! -மருத்துவ அறிக்கையில் தகவல்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கிதாலேயே அவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது என்று சட்ட மருத்துவ

சிறீதரனை கோமாளியாக்க நோயாளர் காசு?

ரணில் வெறுமனே வந்துசென்ற நிகழ்ச்சியான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு நோயாளர்களது மருத்துவ தேவைக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிதி செலவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்பு

இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இலங்கையில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

மனோகணேசன்-பிள்ளையான் கூட்டு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை சூத்திரதாயான பிள்ளையானை மனோகணேசன் சந்தித்துள்ளமை கடுமையான விவாதங்களிற்குள்ளாகியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது

சிறிலங்கா காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்!

அடுத்த மாதம் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனை அழைக்கவில்லை! - மனோ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சூட்டில் உயிரிழந்தவர் கொடிகாமம் இளைஞன்

மானிப்பாய் – இணுவில் வீதியில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன், கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை, இன்று அதிகாலை 3 மணியளவில்,.

ஆவா குழு மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழு உறுப்பினர்கள் மீது- நேற்றிரவு 8.40 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.
சுவிசில் பிரபல வீடியோ நிறுவன தமிழருக்கு எதிராக கொலை வழக்கு ஆரம்பம்


சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில்

20 ஜூலை, 2019

சிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்படுகிறது – சிறிதரன்

சிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்காது – செல்வம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே

பிரபாவின் நிழலைக்கூட காணாதவர்கள் இப்போ அதிகம் பேசுகிறார்கள்! – மாவை

தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, என்னால் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி

2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஏஎப்சி சம்பியன்ஷிப் தொடர்களுக்கான தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டமாக 40 அணிகள் இடம்பெறவுள்ள மோதலில் எச் குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பை

இ.தொ.கா. கூட்டணியில் த.மு.கூ இ​ணையாது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது தொழிலாளர் தேசிய சங்கமோ இணையாது. அதற்கான தேவை எதுவும் எமக்கு கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

ad

ad