ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
19 நவ., 2019
ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் இறுதி முடிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! - கோத்தாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
மனித உரிமைகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மதிப்பளிக்க வேண்டும் என்று என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய!: மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி தனது கடமைகளை இன்று ஆரம்பிப்பார்
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ இன்று (19) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.
கோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி
னாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நானா விடுவேன் அமைச்சு கதிரையை:டக்ளஸ் ஆனால் எந்த முகத்தோடு போய் கேட்பேன் மக்கள் கூட்டமைப்போடு போய்டடங்களே
கோட்டபாய அமைச்சரவையில் அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லையென வெளிவரும் செய்திகளை ஈபிடிபி கட்சி மறுதலித்துள்ளது.
18 நவ., 2019
கோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்?
கோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்றி பேச்சுக்களை நடத்த தொடங்கியுள்ளது.
மிரடடுகின்றார் புதிய துட்டகெமுனு?
தன்னை துட்டகெமுனு மன்னனது வாரிசென அடையாளப்படுத்த முற்பட்டுள்ள கோத்தபாய எல்லாளனை வெற்றி கொண்ட பின்னர் அனுராதபுரத்தில் கட்டப்பட்ட விகாரை முன்றலில் தனது பதவியே பொறுப்பேற்றுள்ளார்.
சஜித் உட்பட எழுவர் இராஜினாமா
சஜித் பிரேமதாசவின் தோல்வியைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது அணியை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.
17 நவ., 2019
புதிய ஜனாதிபதியாக கோத்தபாய நாளை (18) அநுராதபுரத்தில் பதவியேற்பு
சிறிலங்காவின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச என்பது உறுதியாகின்றது வடக்கு கிழக்கில் சஜித்துக்கு அமோக வெற்றி இருந்தாலும் இலங்கை முழுவதுமாக தோல்வி நிலையில் உள்ளார் வடகிழக்கு தவிர்ந்த தொகுதிகளில் கோத்தபாய சஜித்தை விட பல்லாயிரக்கணக்கில் வித்தியாசம் எடுத்து வெற்றி பெறுவதால் அடுத்த ஜனாதிபதி கோத்த என்பது ஓரளவு உறுதியாகிவிட்ட்து
மொனராகலை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
சனி நவம்பர் 16, 2019
மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷ 13,754 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச 6,380 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 1,340 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
ஞாயிறு நவம்பர் 17, 2019
இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 19,061 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,940 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 1,678 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்ஞாயிறு நவம்பர் 17, 2019
திருகோணமலை மாவட்டம் தபால் மூல வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 7,871 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 5,089 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 610 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பதுளை, நுவரெலியா, களுத்துறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
பதுளை, நுவரெலியா, களுத்துறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த இடங்களில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 21,772 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 11,532 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,046 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம்
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 9,151 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 7,696 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 638 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
களுத்துறை மாவட்டம் .
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 22,586 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 9,172 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1,912 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டம்
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 9,285 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 5,835 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1,234 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)