புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2020

பரிசிலிருந்து நோயாளிகளுடன் TGV புறப்பட்டது
இன்று புதன்கிழமை முதலாவது TGV கொரோனா நோயாளிகளுடன் புறப்பட்டுள்ளது. பரிசின் வைத்தியசாலைகளின்
யாழ். பெண் கொலையுடன் தொடர்புடையவர் ரொறன்டோவில் கைது!
ஒன்ராறியோ பாடசாலைகளை மே 4 வரை மூட முடிவு
ரொறன்டோவில் ஜூன் 30 வரை நிகழ்வுகளுக்கு தடை
எனக்கு வேண்டாம்…அவர்களை காப்பாற்ற பயன்படுத்துங்க! கொரோனாவால் இறந்த 90 வயது மூதாட்டியின் முடிவு
பிரான்சில் 24 மணி நேரத்தில் 499 பேர் பலி ஜேர்மனி-சுவிட்சர்லாந் ஓடிப்போய் உதவுகிறது
ஜேர்மனி-சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள்

கொரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்? என்ன காரணம்? முழு தகவல்

வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டுவந்த நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல், கையறு நிலையில் தவிப்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
மாமா சுவிஸில் .அண்ணா கனடாவில் , சித்தப்பா பாரிஸில் , அப்பா லண்டலில்  ஹலோ என்றால் கிலோ கணக்கில் அனுப்புவாங்க என்பீர்களே ஒரு முறை ஹலோ சொல்லி அவர்களை நலம் விசாரியுங்கள் 

கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்… உயிரிழந்த நான்கு பேரின் உடல்களுடன் கப்பலில் தவிக்கும் கனேடியர்கள்

ஒரு பக்கம் ப்ளூ போன்ற தொற்று, உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள், மற்றொரு பக்கம் கொரோனா நோயாளிகள் என அச்சுறுத்தும் சூழலில் கப்பல் ஒன்றில் சிக்கித் தவிக்கிறார்கள் கனேடியர்கள் சிலர்.
இத்தாலி  ஸ்பெயின் பிரான்ஸ்  பிரித்தானியாவில்  இறந்தோரின் உடல்களைம் கூட உறவினர்  இன்றி  அரச ஊழியர்களே அடக்கம் செய்ய இடமின்றி நேரமின்றி கஷடப்படும்  அவலம் 

பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரிப்பு..! மூத்த அமைச்சர் வேதனை

பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளதாக மூத்த அமைச்சர் வேதனை
பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் இந்திய  முதல்வர்களின் வரிசையியல் எடப்படியார்  கேஜ்ரிவால், ஜெகசீவன்ரெட்டி , எடப்பாடி பழனிசாமி  என இணைகிறார்கள் போல ,அண்மைக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி  அவர்கள் மிகவும் இயல்பாக சாதாரணாமாக எளிமையாக மக்களிடம் இறங்கி   வந்து   மக்களோடு மக்களாக  பழகி வரும்  தலைக்கனமில்லாத குணம் மக்களை ஈர்த்து வருகிறது  இன்று கூட அம்மா உணவங்கங்களில்  நேரடியாக  சென்று   உணவுண்டு  ரசித்து வருகிறார் பாராட்டுக்கள் நீண்டகாலத்தின் பின்னர்  இது போன்ற முதல்வர்  தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறார் ஸ்டாப்களின் துறை முருகன் கூட பாராட்டுகிறார்கள் 
இவர்களில் பலர் வெள்ளைக்காரர் தான் என  அலட்சியப்படுத்தவும் முடியாமல்  தவிக்கிறோம்  எம்மை  ஆதரித்து  வாழ்வு தந்தவர்கள் இவர்கள் எமது இரண்டாம்  தாயநாட்டு பிரஜைகள் 
கடந்த  24  மணி நேரத்தில் கூட நாம் வாழும் நாடுகளில் எதனை பேர் செத்து  மடிகிறார்கள் என்பது  என் முகநூலில் செய்தியாக உள்ளது ஒருமுறை கவனியுங்கள் 
அன்பான உறவுகளுக்கு . சில அன்பு நெஞ்சங்கள் உள்பெட்டியில் கவலை பாடுறாங்க  நலம் விசாரிக்கின்றனர்  நன்றி ,உண்மையில் புலம்பெயர் தமிழர் தாயக தமிழருக்கு   தாராளமாக பல வகையிலும்  உதவிகொண்டு இருக்றிறார்கள் நல்ல திடடமிடல்  ஒருங்கிணைத்தல்  இல்லாமல்    சில  தவறுகள் அல்லது  முழுப்பலனை தராமல் கூட இருக்கலாம்    சில நாட்களாக  என்  மனசு கவலையில்  ஆழ்ந்துள்ளது ,  சென்ற வாரம் சுவிஸில் கொரோனாவால்  மறைந்த லோகநாதன்  என்  மனைவியின் பெரியம்மா மகன் , என்  தாய் மாமன் மக்களின் கணவன் .  என்  மனைவியின் பெரியப்பாவின் மக்களின் கணவன் .  அவரது மரணம்  நம்பமுடியாமல்  இருக்கிறது , பூதவுடலை கூட பார்க்க முடியாமல் சொந்த சகோதர்கள் நால்வரும் நாங்களுமாக  சுவிஸில்  வாழ்கிறோம் . இதே  நிலையில்  இன்னும் 5-6  தமிழர் ஐரோப்பாவில் பலியாகி விடடார்கள் .. இதைவிட எனக்கு  பெரிய கவலை தாயக தமிழ் உறவுகள்   புலம்பெயர்  தமிழரின் இந்த  உயிரா பத்தான  இக்கடடான  நிலை கண்டு பெரிதாக  கண்டுகொள்ளவில்லை  ,நலம்  விசாரிப்பதில்லை  ,   புலம்பெயர்  தமிழரின் பாதிப்பு ,பொருளாதார வீழ்ச்சி   அவர்களை கூட  தாக்கும் என்பது  கூட விளங்காமல்   தம் போக்குக்கு இயல்பாக உள்ளார்கள் நேற்று கூட என்  நண்பனும்  நல்ல  கொ டை வள்ளலுமான இம் போட்  தாஸ்  ஸ்ரீதாசின்  கொடுப்பனவு எனது ஊரில்  நடந்து கொண்டிருக்கிறது .  இதற்கு  மேல் எழுத முடியவில்லை  நன்றாக  உள்வாங்கி< சிந்திப்போருக்கு  பூரண விளக்கம்  தானாக  உருவாகும் நன்று 
தமிழர் வாழும் நாடுகளில்  மோசமாகி  வரும்  நிலையில்  உள்ளநாடுகள்  இத்தாலி பிரான்ஸ் பிரிட்டன் ஹோலந்து சுவிஸ் இப்போது சுவீடனும்  வந்துள்ளது 
அலலோயா பிலடெல்பியா  ஏசையா  தங்களோட இருக்கிறார் சா கமாட்டொம் எண்டுறாங்க நானே மதம் மாறும்  யோசனையில் இருக்கிறேன் உயிர் தப்ப 
பிரேக்கிங் நியூஸ்
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊரடங்கு நேரத்தில் ஆளும் கட்சி நோட்டீஸ் ஓட்ட அனுமதி இதுவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக அங்கீகாரம் கிடைத்துள்ளது
உங்கள் அக்கறை அன்பு  இருக்குதே அது ஒன்றே போதும் தைரியமாக  எதையும் சிந்திப்போம் நன்றி ஐயா .விழுந்து விழுந்து   ஊர் ஊர் எண்டு  உதவினோம் இப்போ  நமக்கே இந்த பிழைப்பு . சுவிசிலாவது ஒரு  பகுதி வீத  சம்பளமாவது  தர போறாங்க போல .ஆனால்  பிரித்தானியா  பிரான்ஸ் தமிழ் உறவுகளுக்கு  கஷடம்  பிரான்சில் விசா இல்லாதவங்க களவா வேலை செய்து  பிழைச்சாங்க இப்போ  அதுவுமில்லை அவங்களையும் கவனி யுங்க  ஐயா 
பிறந்த மதத்தை  விட்டு வயிற்றுப்பிழைப்புக்காக மதம் மறியோரை  ஏசையா  கொரோனாவால் சாகவிடமாடாராமே   ஐயோ  அப்பவே  மாறி இருக்கலாமே  வீணாக  அ டம் பிடிச்சு கொண்டு  திரிஞ்சுடடேனே சொல்வழி கேக்காமல் 
நாம்  சுவிஸில்  வாழ்கிறோம்  .புங்குடுதீவில் இருந்து யாரும் உதவ  முடியுமா கொரோனாவால்  எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் வேலை இன்றி வீட்டில் இருக்கிறோம்  வருமானம் இல்லை  வீட்டு வாடகை  1700 fr  மருத்துவக்கப்புறுதி 1600 fr  சாப்பாட்டுக்கு 1800 fr மின்சாரம் 200  fr  தொலைபேசி  420 fr  மொத்தமாக 5720 fr (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்ஷம்  தான் பெரிதாக இல்லை )  சும்மா வீட்டில் இருப்பதுக்கு மட்டும்  ஆடம்பர செலவுகள் இல்லாமல்  உடுப்பு  காலணி அலங்காரம் முடியலங்காரம் இன்றி மட்டுமே  தயவு செய்து  ஊரில் இருந்து  அனுப்பி  உதவினால்  நனறாக  ருக்கும் உறவுகளே 
அவர்களின் கணக்கினை  வேறாக்கி அவர்களின் பெயரில் அனுப்பவும் 

31 மார்., 2020

கொழும்பு  கம்பகா புத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளை ஊரடங்குசட் டம் தளர்த்தப்படமாடாது    மறுஅறிவித்தல் வரும்வரை தொடர்ந்திருக்கும் 

ஐரோப்பிய நாடுகளை முற்றாக முடக்கியது கொரோனா! பல மடங்காக உயரும் பலி எண்ணிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் வீரியம் பெற்று வேகமாக பரவிவருவதனால் அந்நாடுகள் பல முற்றுமுழுதாக முடங்கிப் போயிருக்கின்றன.
ஐயோ  அண்ணா  நீங்க  சொல்லுறதை நாங்க  கேட்கவா போகிறோம் சுவிஸில் ஒரு பிரபலமான ஆலயத்தில்  அப்பா  தீவட்டி பிடிச்சுக்கொண்டு   குருவுக்கு உதவி  செய்து கொண்டு ஓடி திரிவார்  மகளும் தாயும்  கோயிலுக்கு வருவாங்க  உடம்பில்  முக்கால்வாசி  தெரியும்  மக்களுக்கே அருவருப்பான  இருக்கும்  எங்க  போய்  மோத எண்டிருக்கும்  விக்கிரகத்தை பாக்கிறதா  விக்கிற மாதிரி இருக்கிறத  பாக்கிறதா கொல்லுறாங்கன்னே 
தமிழர் வாழும் நாடுகள்   - இன்று .கொரோனாவால் பாதிப்பும்  இறப்பும் இத்தாலி   101739     11591
பிரித்தானியா 22 141   1408 
நெதர்லாந்து     11570  864
ஜேர்மனி    63929    561
சுவிஸ்   15760    321
பெல்ஜியம்    11899   513
அமெரிக்கா 1 58 290  2933
கனடா  7297    67
நோர்வே 4436   32
டென்மார்க் 2577  77 
சுவீடன்   4028   146
அவுஸ்திரேலியா 
 இந்தியா   1071  29
சிங்கப்பூர் 879   3
இலங்கை     122     2
நியூசீலாந்து  589    1
:-
:-

30 மார்., 2020

கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள்  பொருட்களை  நம்பமுடியாத அளவுக்கு  லாபம்  வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும்  பின்கதவாலும்  மதில் சுவராலும்  வியாபாரம்   நன்றாகவே  செய்து சம்பாதிக்கிறார்கள் .  சமூகநலவாதிகள்  தலையிட்டு  கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில்  சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள்    மொத்தமாக  யாழ்நகர் சென்று  வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த  கொள்ளை முதலாளிகளின்  செயல் கண்டு  எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் .  முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி  பலமடங்கு விலைக்கு  விற்று சம்பாதிக்கிறார்கள் 
அமெரிக்காவில் இறப்போர் எண்ணிக்கை 1  லட்ஷம் பே ருக்குள்   கட்டுப்படுத்தி விடடாலே  கெட்டித்தனம்  என்கிறார்  டொனால்டு  ட்ரம் 
புங்குடுதீவில் இன்று  சமுர்த்தியினால்  ஒரு குடும்பத்த்துக்கு  5000  ரூபா பணமும் 5000  ரூபா பெறுமதியான பொருட்களும்  கடனாக வழங்கப்படுகின்றது 
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை:

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:
கொவிட்-19 : ஒன்ராறியோவில் மேலும் இருவர் மரணம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19  தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும்

கனடாவில் கொரோனா - அதிகாலை நிலவரம்!

கனடாவில் இன்று அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,655 ஆக அதிகரித்துள்ள
புலம்பெயர்  தமிழர்கள்   நலமுடன்  வாழ  எல்லோரும்  இணைந்து பிரார்த்திப்போம்  உறவுகளே 
கொரோனா அவசர கால  கடடமைப்பில்  தமிழகம்   சிறந்த முறையில் ஒழுங்கு படுத்துவதாக பாராட்டுக்கள் குவிகின்றன முதல்வருக்கு அரச இயந்திரத்துக்கும் நன்றி  தெரிவிக்கும் மக்கள் 
பிரான்ஸ் வாழ்   தமிழ் உறவுகளே --விசா இல்லாத எம்  சொந்தங்கள் பலர்  அனுமதியில்லாத வகையில் செய்த தங்கள் வேலையை இழந்து தவிக்கிறார்கள் வேலையின்றி  பொருளாதாரகஸ்டத்தில் இருப்பதாக  அறிகிறோம் முடிந்தளவு  உணவுக்காக  உதவி செய்யுங்கள் 

சீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை கையாண்டிருந்த பிரதான சூத்திரதாரியை சிஐடியினர் நேற்று (28) இரவு கல்கிசையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை
ஒரு கண்ணீர் மடல் 
-------------------------------
தாயகத்தமிழருக்கும்  புலம்பெயர்  தமிழருக்கும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத  ஓர்  பிணைப்பு  எப்போதும் இருந்துவருகிறது. அந்த இயல்பான  பிருத்திக்க முடியாத உறவை   அத்திவாரமிட்டு  நீரூற்றி  வளர்த்தெடுத்த  பெருமையும் தீர்க்கதரிசனமும்  தேசியத்தலைவருக்கும் அவர் கட்டிவளர்த்த அமைப்புகளுக்கு உரியது . இந்த  தேசியப்பற்றின் அடிப்படையில் தான்  தாயகத்தின் உடைத்தலை  போராட்டத்துக்கு மட்டுமல்ல  சுனாமி,,,, வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வு  பட்டினி ச்சாவு புனர்வாழ்வு என  எல்லா பக்கமும் கைகொடுத்து  நின்றார்கள் புலம்பெயர் தமிழர் . மறுபுறம் புலம்பெயர் தமிழரின் பொருளாதார வளத்தின்   நீரூற்றால் தான் தாயகத்தின் பொருளாதாரபலமும் கடடமைப்பும்  பணப்புழக்கமும் உச்சகட்ட,,த்தில் என்றும்  இருக்கிறது .அத்தோடு  மறைமுகமாக  தொழில் கல்வி புனரமைப்பு  எனவும் தொட்டு நிற்கிறது. இந்த  உள்பரிமாணம் புரியாத சிலரும் அமைப்புகளும்  அவ்வப்போது புலம்பெயர் தமிழரை   கேவலமாக   சித்தரிப்பதும் புறம்கூறலும் அரங்கேறுவது கண்கூடு . இத்தனையையும்  தாங்கி   தலைவரினதும்  அவர்வழிவந்த போராளிகளின் தியாகத்தாலும்  மட்டுமே  தாம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்ற நன்றி மறவாத்தன்மையினால்  அன்றும் இன்றும் தாயாக தொப்புள்கொடி உறவுகளோடு பின்னிபின்னணிந்து   வாழப்பழ கி  விடடார்கள் -. இப்போது மேற்குலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா  புலத்துத்தமிழரையும்  பலவிதத்திலும் பாதிக்கப்போகிறது  உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது மட்டுமல்ல அவர்களின்     அதியுன்னத  பொருளாதாரவளத்தையும்  ஆட்டுவிக்கும் .இந்த வீழ்ச்சி தாயக உறவுகளையும் பாதிக்கும்  கவலைப்படுத்தும் என்பதில் மறுப்பில்லை  ஆதலால்  ஈழத்தமிழர்கள் நாங்கள் புலத்திலும் தாயகத்திலும் ஒருவருக்கொருவர்   புறம்கூறல்  வஞ்சித்தலை  தவிர்த்து  நேசம் கொண்டு  தேசியப்பற்றோடு  தலைவனின் வழியில்  நடைபோடுவோம் . புலத்தமிழரின்  கவலை போக்க சோகம் நீக்க  பிரார்த்திப்போம்  நலம் விசாரிப்போம்  ஒன்றுபடுவோம்  செய்வோமா உறவுகளே 




$


$$$$$$

29 மார்., 2020

சுவிசசில் தற்போதுள்ள  அவசரகால  நிலை  மே   நடுப்பகுதிவரை நீடிக்கப்படலாம் என    உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்  தெரிவிக்கின்றன 

ஸ்பெயின் இளவரசி மரியா தெரஸா   கொரோனாவினால் மரணம் 
பிரிட்டன்  பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா தொறடு இருப்பதை அறிந்த  அவரது மூத்த   ஆலோசகர்  தலை தெறிக்க வெளியே ஓடும்   காட்சி  காணொளியாக உலகில்  வலம் வருகிறது 

தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை முடக்கியது இராணுவம்

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை சிறிலங்கா படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
இத்தாலியின் பரிதாபம் .எல்லோரும்  .பிரார்த்திப்போம்
கொரோனா மரணம் 10 000 ஐ தாண்டியது சனிக்கிழமை மட்டும் 889

உடுவில் சமுர்த்தி அதிகாரிக்கு கொரோனா அறிகுறி! - கிளிநொச்சியில் இருந்தும் ஒருவர் அனுமதி

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

28 மார்., 2020

கொரொனா வைரஸ் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வழிமுறை ஒன்றை பரிந்துரைத்துள்ளார்கள் :

கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.
 சீனா  தனக்கு   போட்டியாக உள்ள நாடுகளை  வஞ்சித்துவிட்ட்தா ? பெப்ரவரி 12 வரை  மனிதனுக்கு மனிதன் பரவும் வைரஸ்  என்று அறிவிக்காமல்  பரவ  விட்ட்து பெப் 12 இல் தான் உலக சுகாதார நிறுவனத்துக்கு  தகவல் கொடுத்ததது சீனா   மக்கள் சென்று  இருக்கும் நாடுகளில் தான்  சீனர்கள்  மூலம்   பரவி உள்ளது 
மோடி நண்பகல் இந்தியாவின்  பிரபலமான  சித்த , ஆயுள்வேத, யுனானி  ,வைத்தியர்களை அழைத்து  ஆலோசனை நடத்தி உள்ளார் தமிழகத்தில் இருந்தும் பலர் கலந்து கொண்டார்கள் 

ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று

கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே
சுவிஸ்  வானொலிகளில்  தமிழ் மொழியில் கொரோனா  விழிப்புணர்வு அறிவித்தல்கள்
சுவிஸில் வாகனங்கள்  வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்   ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி  வானொலிகளில்  தேவையானபோது  இடைநிறுத்தி  வாகன நெரிசல் வீதிகளின் நிலை  போன்ற அவசர  அறிவித்தல்களை  ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு  . வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும்போது  நீங்கள்  தமிழ் பாடல்களை  ஒலிநாடா இசைத்தட்டுகளில்  கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை  நிறுத்தி  உங்கள்  வானொலியை இயங்க செய்து  அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில்  இப்போது  தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி  கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற  அறிவித்தல்களை  தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும்  கூட அறிவிக்கிறார்கள் 
உலகில் 18  உல்லாசப்பயணிகளின்  கப்பல்கள்  எந்த துறைமுகத்துக்கும்   செல்ல  அனுமதி கிடைக்காமல் நடுக்கடலில் தவித்து  வருகின்றன  சிலகப்பல்களில் கொரோனா நோயாளிகள்  இருக்கிறார்கள் 

சுனில் விடுதலை! காட்டமானது ஐநா

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது.
 அன்புச்சகோதரிக்கு  இனிய பிறந்த நாள்   வாழ்த்துக்கள்  மடத்துவெளி முருகன் அருளால்  சீரும் சிறப்புடனும்  நீடூழி  வாழவேண்டுமென வாழ்த்துகிறோம் 

கொரோனாவால் திணறும் நாடுகள்… ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் இதுவரை இத்தாலியில் 50 சுகாதார பணியாளர்கள் மரணம்! வெளியான தகவல்

கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை

2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?

இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே
சுவிஸ்  நேற்று  கொரோனா இறப்பு  18  பேர் 
கொரோனா -இன்று ஐரோப்பாவில்  உச்சகட்ட தாக்கம்  மக்கள் பயத்தில் அவதி 
கவனமெடுக்கவும்  சமூகசேவைப்பணம்  வேலையில்லாதோர் கொடுப்பனவு பெறுவோர் கொரோனா காரணத்தினால் உங்கள்  சந்திப்பை தவறவிடடாலும் பாதிப்பு இருக்கும் முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் 
திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில்  சமூகசேவை பணம்  ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக  மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்  சொல்லவேண்டும் .இல்லையேல்  உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை  இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை  பணம் பெறுவோர்பயணம்  செய்த உண்மையை சொல்லாது  அச்சத்தில் உங்கள் மாதாந்த  சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால்  கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு  போக சட்டத்தில் இடமுண்டு 
அவசரகால  நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே  வெளியிடவேண்டும்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள  அவசரகால  நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே  வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள்  இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும்  சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக  வெளியிடுகிறார்கள் பிரபலமான  இணையம் ஒன்று  சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன் 

கொரோனா வைரசுக்கு பலியான 16 வயது சிறுமி

கொரோனா வைரஸ் காரணமாக 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த பிரான்சையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அறிவித்தல் ஒன்று
ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன்  பற்றிய  செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது இந்தப்பதிவை இன்னும்பல  செய்து மறுபதிவு செய்துள்ளன .சம்பந்தப்படட அனைத்து இணையங்களும் தவறு க்கு  மன்னிப்பு கேட்டு திருத்தும் கொடுக்கவேண்டும் இல்லையேல் தற்போது சுவிஸில்  உள்ள அவசரகாலசட்டத்தின் கீழ் சடடநடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக இணையங்களுக்கு அறிவித்துள்ளோம் 

கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள இத்தாலியின் சிறு நகரம்!

கனடாவில் கொரோனா காரணமாக வேலை – வருமானத்தை இழந்தவர்களுக்காக பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு

கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதம் $2,000 வழக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

27 மார்., 2020

யாழ். குடாநாட்டில் பிரதேச ரீதியாக ஊரடங்கை நீக்குவதற்கு யோசனை

கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை பிரதேச ரீதியாக வெவ்வேறு நேரங்களில் தளர்த்துவது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகத்தினால்

இலங்கையில் உள்ள சுவிஸ் மக்களை ஏற்றிவர கொழும்புக்கு பறந்த சுவிஸ் விமானங்கள்

உதயன்  நிறுவனத்திலிருந்து சரவணபவணனின்  அவசர  உதவியாக  வடமராட்சி மக்களுள்ளுக்கான  உணவு நிவாரணம்  வழங்கப்டுகிறது 

கொரோனாவால் வெளிநாடுகளில் அடுத்தடுத்து உயிரிழக்கும் இலங்கைத் தமிழர்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் வசித்து வந்த இரண்டு இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்

பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி

26 மார்., 2020

சுவிஸ் - 10714 பேர்  பாதிப்பு  161 பேர் இறப்பு  10'714 Personen sind in der Schweiz positiv getestet worden. 161 Personen sind an den Folgen einer Coronavirus-Infektion gestorben. 
இந்தியா - கொரனோ பலி   16   ஆக உயர்வு 

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடைகள் திறக்க அனுமதி

யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் தேவைகருதி உள்ளூர் பலசரக்கு கடைகள் தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது.

சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு - கூட்டமைப்பு கடும் கண்டனம்

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு நீக்கப்படாது! - காலவரையறையின்றி தொடரும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது.

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் யூன் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்பு

தற்போது கொரோனா நிலைமையால் பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்றுமாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
போராளிகளின் தியாகத்தின் கொடையில் உலகெங்கும் எந்த சக்தியாலும்  அசைக்க முடியாது வேரூன்றி இருந்த ஈழத்தமிழரின் வாழ்வை கொரோனாவின் தாக்கத்தலிருந்தும் காப்பற்ற இறைவனை வேண்டுவோம் 
காலம்சென்ற 
தமிழ்ச்செல்வி   லக்சுகன், லக்சனா ஆகியோரின் பேரனும் சத்தியபாமா பிரபாலினி தயாளினி  079 690 15 96 சந்திரகுமாரி   தரனின் மாமனாரும் 
தம்பு (தம்பர்கடைசந்தி) பாக்கியம் ,வேலாயுதம்  ஆகியோரின் பேரனும் 
 கொரோனாவுக்கு   சுவிஸ்,  இத்தாலி ,  பிரான்ஸ்  நாடுகளில் ஒவ்வொரு  தமிழர்  பலியாகி உள்ளனர் 
சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான புங்குடுதீவு தமிழர்  பலியானார்
 சுவிஸ்  செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான  புங்குடுதீவை   சேர்ந்த  சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி  பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை  ஆழ்ந்த கவலையில்   ஆழ்த்தி உள்ளது ,கடந்த புதனன்று இருமல் காய்ச்சல்  இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம்  சென்ற   இவரை 14  நாட்கள்  இவரது  அறையிலேயே  இருக்கும்படி  அறிவித்துள்ளனர் . இவருக்கு  கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது   அறையிலேயே  தனிமைப்படுத்தியமை க்கான காரணம்  தெரியவில்லை என  அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் , கொரோனா தோற்று இருப்பது  அறிந்தால்  உடனடியாக மருத்துவமனைக்கு  எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை  மேல்கொள்ளப்படல்  வழமையானது . இவரது இறப்பு  நிகழும் இறுதி நேரம் வரை  வசித்து வந்த  சிறிய அறையிலேயே  இருக்க  பணித்தமை  கேள்விக்குறியாகி உள்ளது, இவர் இத்தாலி நாட்டு  உணவகம் ஒன்றில்  வேலை  செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார்  .இவரது  வசிப்பிடத்தில் இணைப்பாக   ஒரு  பேக்கரி  இருப்பதாகவும் அதனை  மூடிவிடடார்கள் என்றும்  கூறப்படுகிறது . தோற்று  சூரிச்சில் அல்லது  வேலை இடத்தில அல்லது  பேக்கரியில்  நடந்திருக்கலாம் என  அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி )வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக   பரிசில்  வசிக்கின்றனர் ,மூன்று சகோதரர்கள்  சுவிஸ்  பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம் 
மரண அறிவித்தல்
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை  சேர்ந்தவரும்  சுவிஸ்  ஜோனா நகரில் வசித்துவந்தவருமான   சதாசிவம் லோகநாதன்  இன்று   இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின்  புத்திரனும்  கணபதிப்பிள்ளை  பராசக்தியின் மருமகனும்  சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம்  ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936

25 மார்., 2020

கொரோனா  மரணம்
இத்தாலி 6820, ஸ்பெயின் 3434, சீனா 3285, ஈரான் 2077, பிரான்ஸ் 1102, அமெ ரிக்கா 763,பிரித்தானியா ஐக்கிய அரபு ராச்சியம் ,434 நெதர்லாந்து 357,பெல்ஜியம் 178, தென்கொரியா 126,  ஜெர்மனி 181, சுவிஸ் 152,,போர்த்துக்கல் 43.நோர்வே 14,இந்தியா 10,இலங்கை 0

உலகம் . கொரோனாவுக்கு 20414  பேர்  மரணம் 
அமெரிக்காவை உலுக்கி எடுத்து சாதனை படைக்கவிருத்திக்கிறதா  கொரோனா -முன்பு  - ஈரானை   அமெரிக்காவின் திடடம் கொரோனா 
இப்போது - அமெரிக்காவை அழிக்க சீனா  வகுத்த திடடம்  தான்  கொரோனா ?  எது உண்மை ? எது  ஊகம் ?எது  வதந்தி ?

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா: மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து முடிவு

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
எம் உறவுகளுக்கு  நெறுக்கடியில்  உதவுவோம் எம்மோடு  கரம் கொடுங்கள்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும்  செயல்படுவோம் 
புலத்து புங்குடுதீவு  உறவுகளுக்கு     ஓர் அன்பான  வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால்  ஏற்பட்டுள்ள   நெருக்கடி  வேளையில்  ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற  நிலை  கண்டு  எம் மண்ணின் வயோதிப மற்றும்  , வருமானம் அற்ற உறவுகளுக்கு  அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி  வருகிறோம்  .   இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க  நிதி நெருக்கடியில் உள்ளோம்  இந்த இக்கடடான  நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம்  கருணை கூர்ந்து  எம்மோடு  தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும்   ஏற்றுக்கொள்வோம்  வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும்  செயல்படுத்துவோம்  எந்த  நாட்டில் இருந்தாலும்  தொடர்பு  கொண்டு ஆவண  செய்யுங்கள் 
அரசுக்கு ஒத்துழைப்பது , சுய கட்டுப்பாடு  ,வீட்டில் முடங்குதல், இறப்பு வீதம்,அரசுசடட நிர்வாக திறமை  என்பவற்றில்  உலகிலேயே  முன்னிடத்தில் உள்ளன  இலங்கையும் இந்தியாவும் 

சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.


26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
என்  பெரியம்மாவின் மக்கள்  சந்திராக்கா  பெரியக்கா  ,தங்கை  ராஜேஷ்  .(ஜேர்மனி)  ராஜேஷின் கணவர்  பகீ 

கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்

இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

குணமடைந்தார் மூன்றாவது நபர்


அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று

உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா

கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்

சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.

ad

ad