பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2020

இணக்க அரசியலை ஒருபோதும் ஏற்கேன்! ஊடக செய்திக்கு தவராசா மறுப்பு

Jaffna Editor

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று வெளியான விசமத்தனமான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட செயற்பாடே ஆகும்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா.