தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று நடந்த நமக்காக நாம் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்