புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2011


தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரி சுவிஸ் - பேர்ண் பாராளுமன்றம் முன்பாக ஒன்று கூடல்!

சுவிசர்லாந்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கோரி எதிர்வரும் சனிக்கிழமை (02.04.2011) பிற்பகல் பேர்ண் பாராளுமன்றதிற்கு முன்னால் ஒன்று கூடல் ஒன்று நடைபெற உள்ளது. 

அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இனங்களுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் அவை ஆகியன சுவிஸ் நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் 16 அமைப்புக்களுடன் இணைந்து இந்த ஒன்று கூடலை நடத்த உள்ளன.

கடந்த 26.01.2011 அன்று சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இலங்கை அகதிகள் விடயத்தில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கருகிறது. இவர்களின் இந்த கருத்து தவறானது என இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

சர்வதேச மன்னிப்புசபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்தக்குழு மற்றும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் இக் கருத்திற்கு முரண்பாடானதாக உள்ளதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இச் சட்டத் திருத்தம் எண்ணற்ற தமிழர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

எனவேதான் சுவிஸ் கூட்டாட்சித் தலைவர்களிற்கும், பாராளுமன்றத்திற்கும் இத் தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் இவ் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யும் அமைப்புக்கள் பின்வரும் கோரிக்கைகளை விடுத்துள்ளன.

• இலங்கை அரசாங்கம் அனைத்துலக போர்க் குற்ற விசாரனைக்கு அனுமதியளிக்க வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்.
• அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனைத்து அரசியல் கைதிகளின் முகாம்களிற்கும் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகள் வரை அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது என்றும் அகதிகள் தொடர்பான சட்டத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்தி சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலை சுவிஸ் தமிழரவையின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் நடத்த உள்ளன.

31 மார்., 2011


பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ளது
[ வியாழக்கிழமை, 31 மார்ச் 2011, 11:18.59 AM GMT ]
இன்டர்போல் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு கப்பலின் மூலம் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அனுப்;பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த பிரித்தானியர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
40 வயதான சண்முகசுந்தரம் காந்தஸ்கரன் என்ற இவருக்கு எதிராக ஆட்கடத்தல்,சட்டவிரோத குடியேற்றத்துக்காக ஆட்களை அனுப்பியமை, மற்றும் பயங்கரவாதம் என்ற அடிப்படையிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

30 மார்., 2011


யாழ். யுவதியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 02:03.00 PM GMT ]
யாழ். யுவதியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த மூன்று இராணுவத்தினருக்கு இன்று கொழும்பு நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில், உரும்பிராய் பிரதேசத்தைச் சோ்ந்த வேலாயுதன் ரஞ்சனி எனும் 22 வயது யுவதியைக் கடத்திப் போய் வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே மூன்று இராணுவத்தினருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக கடத்தல், வல்லுறவு, படுகொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமாஅதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
யுவதியைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு மரண  தண்டனை விதித்த நீதவான், கடத்தல் மற்றும் வல்லுறவுக்குற்றச்சாட்டுகளுக்கு புறம்பான சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளுக்கு மேன்முறையீட்டுக்கான சந்தர்ப்பமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.



இந்திய வீரர் சேவாக் மூன்றாவது ஓவரில் மட்டும் ஐந்து நான்குகளை அடித்து மொத்தமாக இருபத்தொரு ஓட்டங்கள் எடுத்து உள்ளார்.இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் நேரடிய ஆட்டத்தை கண்டு களிக்கின்றனர்

India 48/1 (5.5 ov)
Pakistan
India won the toss and elected to bat
  • India RR 8.22
  • Last 5 ovs 44/1 RR 8.80
Refresh scorecard
Current time: 15:03 local, 09:33 GMTODI career
BatsmenRunsB4s6sSRThis bowlerLast 5 ovsMatRunsHSAve
Sachin Tendulkar(rhb)8111072.720 (3b)8 (11b)45218016200*45.15
 
BowlersOMRWEcon0s4s6sThis spellMatWktsBBIEcon
*Wahab Riaz(lfm)0.50010.005000.5-0-0-118273/225.23
Umar Gul(rfm)3.0033011.0011803-0-33-0881336/425.05
Recent overs 4 4 . 4 4 5nb . | 3 . 4 1 . 4 | . . . 4 . 4 | . . 1lb . W
Last Bat V Sehwag lbw b Wahab Riaz 38 (25b 9x4 0x6) SR: 152.00
Fall of wicket: 48/1 (5.5 ov); Partnership: 48 runs, 5.5 overs, RR: 8.22 (Tendulkar 8, Sehwag 38)
Umpire reviews remaining India 1 (0 successful, 1 unsuccessful); Pakistan 2 (0 successful, 0 unsuccessful)
5.5
Wahab Riaz to Sehwag, OUT
V Sehwag lbw b Wahab Riaz 38 (25b 9x4 0x6) SR: 152.00
5.05 Taufel has given Sehwag out and
மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக நகரி : இலங்கை அதிபர்மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் திருமலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராஜபக்சேவை வரவேற்கவும், தங்குமிட வசதிகளை செய்து தரவும், தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்

17 மார்., 2011

மான் ஆட மயில் ஆட


Posted Image

8 மார்., 2011



திமுக 121 தொகுதிகளில் போட்டி: கலைஞர்


வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 121தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 63தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 30தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 தொகுதிகளிலும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். 

18 டிச., 2010

பிரபலமான ஈழத்துபணியாரமே  -பனங்காய்

7 ஜூன், 2010

நிர்வாகம் ------------ தலைவர் .இராசமாணிக்கம் ரவீந்திரன் உப தலைவர் -சதானந்தன் செயலாளர்-அரியபுத்திரன் நிமலன் உபசெயலாளர் -தர்மலிங்கம் தங்கராசா பொருளாளர் -சிறிதாஸ் நிர்வாக உறுப்பினர்கள் ------------------------------------------------------------------------------------------------- பரமு தயானந்தன் சின்னதுரை நாகலிங்கம் ஜெயபாலன் உதயன் கணபதிபிள்ளை சேனாதிராசா ------------------------------------------------------------------------------------------------ போசகர்கள் ------------------------------------------------------------------------------------------------ சுப்பையா வடிவேலு ஆறுமுகம் சிவகுமார் நாகராசா ஜெயக்குமார் --------------------------------------------------------------------------------------------------- மக்கள் தொடர்பாளர் -சிவசம்பு சந்திரபாலன்-------------------------------------------- வெளியுறவுத் தொடர்பாளர் -செல்வரத்தினம் சுரேஷ்---------------------------------- கலைத்துறை பொறுப்பாளர் -சத்தியநாதன் ராமணாதாஸ்---------------------------- விளையாட்டு துறை பொறுப்பாளர் -உதயன்-------------------------------------------- எண் பார்வையாளர் -செல்லத்தம்பி சிவகுமார்
செயற்ற்பதிவுகள் ----------------- சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய பெருவிழாக்கள் -------------------------------------------------------------------------------------------- 16.11.97-தமிழர் புனர்வாழ்வு கழக நிதிக்காக பொன்.சுந்தரலிங்கம் பொன்.சுபாஸ் சந்திரன் வழங்கிய ´´தமிழிசகச்சேரி ´´´ 26.08.2000கேஸ்பர ராஜ் அடிகளார் ,மு.நேமிநாதன் ,வீ.டி.இளங்கோவன் .எஸ்.எஸ்.குகநாதன் பங்கு பற்றி சிறப்பித்த ´´எழுச்சி விழா ´´ 14.04.2002 --கவிப்பேரரசு வைரமுத்து ,கவிஞர் மு.பொன்னம்பலம்,மாமனிதர் .தராக்கி டி.சிவராம்.,வீ.டி.தமிழ்மாறன் வரவில் சிறப்பு பெற்ற ´´வைரமாலை ´´ 18.04.2010-பேராசிரியர் நா.பேரின்பநாதன் பங்கு பற்றிய ´´வேரும் விழுதும் ´´ சிறிய விழாக்கள் --------------------- 12.08.2001-கவிஞர் சு..வில்வரத்தினம் அவர்களின் நூல் வெளியீடு ஜீ.சாந்த உட்பட்ட தமிழீழம் இசைக்குழுவை அனுசரித்து நடத்திய கவுரவிப்பு விழா --வெரிதாஸ் வெள்ளி விழா (பகுதி பங்களிப்பு ) அஞ்சலி /கண்டனக் கூட்டங்கள் ---------------------------------------- 09.01.2000-சாரதாம்பாள் அவர்களின் கண்டனக்கூட்டம் 25.11.2001- சர்வோதயம் திருநாவுக்கரசு அஞ்சலிகூட்டம் 08.01.2006 -தர்சினியின் கண்டனக் கூட்டம் 30.12.2006-கவிஞர் சு.வில்வரத்தினம் அஞ்சலிக் கூட்டம் சந்திப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்து ஒன்றியத்தினால் கவுரவிக்கபட்டோர் ------------------------------------------------------------------------------ பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன்(13.04.2002) .பா.அரியநேந்திரன்(07.01.2006).எஸ்.கனகசபை (30.12.2006).செல்வம் அடைக்கல நாதன்(03.09.2006) .ஜெயானந்தமூர்த்தி(03.09.2006) .செ.கஜேந்திரன்(03.12.2005) ,சி.சிறீதரன் (16.09.2010) மற்றும் சர்வோதயம் .புஸ்பமணி(21.05.2003).

ad

ad