புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2011






கைதான போது கணவர், மகனிடம் கண்ணீர் விட்டு அழுத கனிமொழி!

தி.மு.க. அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்து தந்தையின் இலக்கிய புலமையையும் கற்று தேர்ந்து கொண்டவர் கனிமொழி. 

பொழுது விடிந்தது முதல் இரவில் துயில் கொள்ளும் நேரம் வரை கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் பேச்சுகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, எழுதுவது என்று எத்தனையோ பணிகளுடன் எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருப்பார். 

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அவரை தடுமாற வைத்தன. நேற்று கைது செய்யப்பட்டதும் அவரை நிலைகுலைய வைத்து விட்டது. மிகப்பெரிய வக்கீல், அரசியல் பின்புலம் ஆகியவற்றால் வழக்குகளை சந்திக்கலாம். 

ஜெயிலுக்கு போகாமல் இருக்க முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற துளியளவு நம்பிக்கையுடன் டெல்லி பிரம்மபுத்திரா இல்லத்தில் நேற்று காலையில் துயிலெழுந்தார். 

தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், சுகவனம், ஜெயதுரை, ஆதிசங்கர், ஹெலன்டேவிட்சன், ரித்தீஷ், கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, வசந்தி ஸ்டான்லி, தங்கவேலு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, இவர்களை தவிர விசுவாசமிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்தில் குவிந்து இருந்தனர். 

கோர்ட்டு முடிவு எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தில் இருந்த கனிமொழிக்கு அனைவரும் தைரியம் கொடுத்தனர். காலை 10 மணிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு கனிமொழி சென்றார். தி.மு.க. எம்.பி.க்களும் கோர்ட்டிற்கு வந்து இருந்தனர். 

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, சரத்குமாரின் மனைவி ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். காலை 11 மணி, 12.30 மணி என்று தீர்ப்பு சொல்லும் நேரம் அடிக்கடி தள்ளிகொண்டே போனதால் திக்...திக் மனதோடு ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மணித்துளியாக நகர்த்தி கொண்டிருந்தார்கள். 

பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சைனி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தனது உத்தரவை படித்ததும் கனிமொழி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது.அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் ஆறுதல் படுத்தினார்கள். 

ஜெயிலுக்கு அழைத்து செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டதும் சென்னை மாநகராட்சி 95-வது வார்டு கவுன்சிலர் துரை கோர்ட்டு அறையிலேயே ஒ வென்று கதறி அழுது விட்டார். அதைப்பார்த்ததும் மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. 

துயரத்தில் ஆழ்ந்து இருந்த கனிமொழி அதை அடக்கி கொண்டு துக்கம் தாளாமல் அழுத துரையை தேற்றினார். மாலை 3 மணியளவில் கனிமொழியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள “லாக்-அப்” அறைக்கு அழைத்து செல்வதற்காக சுற்றியிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பெண் போலீசார் கனி மொழியை லாக்-அப் அறைக்கு அழைத்து சென்றனர். கையை தட்டினால் ஏவலுக்கு எத்தனையோ போலீசார் வந்து நிற்பதையும் பாதுகாப்பு அரணாக சுற்றி நிற்பதையும் சிறுவயது முதல் பார்த்து பழக்கப்பட்ட கனிமொழியின் கைகளை பிடித்து பெண் போலீசார் அழைத்து சென்றதை பார்த்து அவரால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. 

கலங்கியப் கண்களுடன் லாக்-அப்புக்கு நடந்தார். அவரை தொடர்ந்து கணவர் அரவிந்தனும் வந்தார். எத்தனையோ அரசியல் களங்களுக்கு மனைவியை அனுப்பி வைத்து மகிழும் அரவிந்தனும் மனைவி ஜெயிலுக்கு செல்வதை பார்த்து நொறுங்கி போனார். 

லாக்-அப் அறைக்குள் செல்வதற்கு முன்பு கனிமொழி கணவரை கட்டித் தழுவினார். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் கண்ணீர் விட்டனர். 

கனிமொழியின் தோளில் தட்டி அரவிந்தன் தேற்றினார். லாக்-அப் அறைக்குள் சென்றதும் அவரால் துயரத்தை அடக்க முடியவில்லை. பெருகிவந்த கண்ணீரை துடைத்தபடியே சிலநிமிடங்களை கழித்தார். 

அடுத்த 10 நிமிடத்தில் கணவர் அரவிந்தனை சந்திக்க வேண்டும் என்று கனிமொழி முறையிட்டார். அவரது செல்போன் நம்பரையும் போலீசாரிடம் கொடுத்தார். 

அவரது தவிப்பை புரிந்த போலீசார் உதவ முயன்றனர். ஆனால் நீதிபதியின் உத்தரவால் எல்லோரும் வெளியே சென்று விட்டனர். போலீசாரால் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

தமிழக பத்திரிகையாளர்களும் அரவிந்தனை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடிய வில்லை. இறுதியில் தி.மு.க. பிரமுகர் பாலகுரு என்பவர் மூலம் அரவிந்தனை தொடர்பு கொண்டனர். 

அவர் உடனடியாக விரைந்து வந்தார். கனிமொழியுடன் லாக்-அப் அறையில் சுமார் 20 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார். அப்போது மகன் ஆதித்யாவை பார்க்க ஆசைப்படுவதாக கூறினார். 

உடனே ஆதித்யாவை அழைத்து வந்தனர். மகன் ஆதித்யாவின் கைகளை பிடித்து வருடியபடி அவரிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். 

தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஆதித்யாவை தைரியமாக இருக்கும்படி வாஞ்சையுடன் தடவிகொடுத்தார். 

மாலை 4.30 மணிக்கு போலீசார் ஒரு வேனில் ராசாவையும், சரத்குமாரையும் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு பெண் போலீசார் மற்றொரு வேனில் கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். 

இது நான் எதிர்பார்த்தது தான் என்று கனிமொழி ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு கூறினார். ஆனால் ஜெயிலுக்குள் நுழைந்ததும் அவரது முகமே மாறிவிட்டது. இறுகிய முகத்துடன் ஜெயிலுக்குள் சென்றா

காங்கிரஸ்- திமுக உறவில் முறிவா?

First Published : 21 May 2011 03:39:56 AM IST

Last Updated : 21 May 2011 05:27:14 AM IST
சென்னை, மே 20: காங்கிரஸ் கட்சியுடனான உறவு பற்றி பொதுக்குழு கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி தில்லியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருணாநிதியின் சி.ஐ.டி.நகர் வீட்டில் திமுக நிர்வாகிகள் ஆலோசித்தனர். பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி: கனிமொழியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நீதிமன்ற விவகாரமாகும். அதில் நான் ஒன்றும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
 தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு: இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன். அது என்ன முடிவு என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
 காங்கிரஸýடன் திமுக உறவு: எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது. திமுக என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவும் எடுக்க முடியாது. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தைத் தேவைப்படும்போது கூட்டுவோம் என்றார் கருணாநிதி.
 உங்கள் மனம் என்ன பாடுபடும்? "கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?' என்று நிருபர் கேட்டார். "உங்களுக்கு ஒரு மகள் இருந்து - அவர் செய்யாத குற்றத்திற்காக - இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில்தான் என் மனம் இருக்கிறது' என்றார் கருணாநிதி.
 தில்லிக்கு போகவில்லை: இப்போதைக்கு தில்லிக்கு நான் போகவில்லை என்றும் கருணாநிதி கூறினார்.உணவு  உண்டு குடும்பத்தாரோடு
ரஜினி மகிழ்ச்சியாக இருக்கிறார்

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு,  கடந்த 13-ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

/TD>
அங்கு தீவிர சிகிச்சை பிரிவுவில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  ஜினியின் உடலநிலை  இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்று ராமச்சந்திரா மருத்துவவமனை  நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 உணவு உண்டு குடும்பத்தாரோடு ரஜினி மகிழ்ச்சியாக இருப்பதாவகவும்,   மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

                                                                                       நிர்வாணமாக    டிக்கிறார் ஐஸ்வர்யா ராய்!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்க உள்ளார். ஹீரோயின் என்ற பெயரில் பிரபல இயக்குநர் மதுர் பந்தர்கர் இயக்கும் படத்தில்தான் அம்மணியை முழுமையாக தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு வயது சற்று தெரிந்தாலும் அழகும், நளினமும் குறையவில்லை. இருந்தாலும் ஏஜ் பேக்டர் பயம் ஐஸ்வர்யாவை தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. கரீனா, கத்ரீனா, தீபிகா, பிரியங்கா, சோனம் கபூர், சோனாக்ஷி என நீண்டு செல்கிறது பாலிவுட்டின் சின்ன சிட்டுகளின் பட்டியல். இவர்களுடன் போட்டாப் போட்டி போட மாஜி உலக அழகி அந்தஸ்து மட்டும் போதாது, அதுவும் வயது ஏறிக் கொண்டே போகும் போது…! எனவே தான் தனது புதிய படத்தில் ஐஸ்வர்யா அதிரடியாக நிர்வாணமாக தோன்ற சம்மதித்திருப்பதாக பாலிவுட் வட்டாரம் சலசலக்கிறது.
முன்னதாக இந்தப் படத்திற்கு தேசிய விருது புகழ் இயக்குநர் மதுர் பந்தர்கர் கரீனா கபூரைத்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தார். ஆனால் நிர்வாண காட்சியா… அய்யய்யோ என்னால முடியாது… என கரீனா கபூர் ஓட்டம் பிடித்ததால், ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். முதலில் நிர்வாண காட்சியில் நடிக்க தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க சம்மதித்துள்ளார்.
அப்படியென்ன கதை? அங்கேதான் விவகாரமே இருக்கிறது. ஹீரோயின் என்ற தலைப்பு கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பது பற்றிதான்.  ஏற்கனவே இதுபோன்ற கதையம்சங்களுடன் ஒருசில படங்கள் வெளியான போதிலும், அவற்றிலெல்லாம் இலைமறை காயாகத்தான் இதுபோன்ற அந்தரங்க காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் முதன் முதலாக இந்த படத்தில்தான் திரையுலகின் மறுமுகம் தெரியப் போகிறது என்பது கூடுதல் தகவல்.
கதைக்கு பொருத்தமாகத்தான் நிர்வாண காட்சிகள் இருக்கும்; எதையும் மிகைப்படுத்தி காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கும் டைரக்டர் மதுர் பந்தர்கருக்கு கண்டிப்பாக திரைத்துறையில் இருந்தே எதிர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் எதிர்த்தால் என்ன… ரசிகர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பார்களே… கலையுலகின் அழகுச்சிலையை நிர்வாணமாக காட்டுவதற்கு!!




கனிமொழி, ராசா நீதிமன்றத்தில் ஆஜர்; ராசாத்தி அம்மாள் கண்ணீர்

First Published : 21 May 2011 01:21:04 PM IST

புதுதில்லி, மே.21: தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
நீதிமன்றத்துக்கு வந்த ராசாத்தி அம்மாள், கனிமொழியைப் பார்த்து கண்கலங்கினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைது செய்யப்பட்டார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் 'கூட்டு சதியாளர்' என துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நேற்று நிராகரித்து உத்தரவிட்டார். அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியும் உத்தரவு பிறப்பித்தார்.
2ஜி அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டது.
விசாரணையை அடுத்து முதல் குற்றப்பத்திரிகையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சிபிஐ தனது துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
அதில் 2ஜி அலைக்கற்றையை விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கீடு செய்ததில் பயனடைந்ததாகக் கூறப்படும் ஷாகித் பல்வாவுக்குச் சொந்தமான டிபி ரியாலிட்டி நிறுவனம், குசேகாவ்ன் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி நிதி அளித்தது தெரியவந்தது.
இதனடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாள், 20 சதவீத பங்குதாரரான கனிமொழி, 20 சதவீத பங்குதாரரான கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகிய மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
ஊழல் குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ளும்போதும் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் அளித்தால், கலைஞர் தொலைக்காட்சியின் ஊழியர்களின் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தார்.
திகார் சிறையில் 150 சதுர அடி (15-க்கு 10) அறையில் கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார்.
அந்த அறையில் ஏ.சி. உள்ளிட்ட வசதிகள் கிடையாது. தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட வசதி அவருக்கு அளிக்கப்படும். செய்தித்தாள்களும் அவருக்கு வழங்கப்படும் . இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி புரிந்து, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட மாதுரி குப்தா, தில்லியில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சோனு பஞ்சாபன், தில்லியில் கவுன்சிலர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாரதா ஜெயின் ஆகியோர் கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை எண் 6-ல் ஏற்கெனவே உள்ளனர்.
கனிமொழியுடன் கைது செய்யப்பட்ட கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத் குமார், சிறை எண் 4-ல் அடைக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் சிக்கியுள்ள சுரேஷ் கல்மாடி, நால்கோ முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அபய் குமார் ஆகியோரும் சிறை எண் 4-ல் தான் உள்ளனர்.

இதே வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரும் திகார் சிறையில்தான் உள்ளனர்.
                                                       நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 21 மே 2011, 01:41.01 AM GMT ]
கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர்   நெடியவனை  இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவன் கடந்த இருபதாம் திகதி நோர்வேயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தது தொடர்பான விசாரணைகள் தற்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிலையில் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இலங்கையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பவர் என்று  அரசாங்கம் தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளது.
மேலும் நெடியவன் கைது செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பான அனைத்து விபரங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறும் அரசாங்கம் நோர்வேயிடம் வேண்டிக்கொண்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் நெடியவன் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாளுகின்றது.கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா!
[ சனிக்கிழமை, 21 மே 2011, 03:40.05 AM GMT ]
ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, கடந்த 18-ம் தேதி பேரெழுச்சியுடன் சென்னையில் நினைவுகூர்ந்தனர் தமிழின உணர்வாளர்கள். எம்.ஜி.ஆர். நகர் சந்தை அருகே, பெரியார் தி.க. நடத்திய பொதுக் கூட்டத்துக்கு 5,000-க்கும் அதிகமான இன உணர்வாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சிங்கள அரசின் மீது இனப் படுகொலைக் குற்றச்சாட்டு வலுத்​துள்ளதை அடுத்து, இரத்தக் கறை படிந்த அந்தக் கொடும் கரங்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முயல்கிறது. ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க உதவி செய்வதாக, கண் துடைப்பு நாடகம் ஆடுகிறது.
தமிழ் மக்களுக்கான பட்ஜெட் போட முடியாத, தமிழர்​களின் நிலத்தை சிங்களர்கள் பறிப்பதைத் தடுக்க முடியாத, பொலிஸ் அதிகாரம் இல்லாத, உலகத்திலேயே விசித்திர​மான ஒரு மாகாண அரசு முறையை ஈழத் தமிழர்கள் மீது இலங்கை திணிக்க இருக்கிறது. அதற்கு உதவியாக இப்போதும் இந்தியா துணை நிற்கிறது.
இதைத் தடுக்க இந்தியக் குடிமகன் எனும் முறையில், நமக்கு உரிமை உண்டு. நம்முடைய உரிமையை ஏற்க மறுத்தால், 'நாங்கள் ஏன் இந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும்?  எனக் கேட்கும் நிலை வரும்! என்றார் ஆவேசமாக.
பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, திம்பு பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் இயக்கம்​போலவே, அனைத்துப் போராளி இயக்கங்களும், ஈழ தேசிய இனம், தமிழீழத் தாயகம், தன்னாட்சி என்​பதை வலியுறுத்தின. அதற்குக் காரணம், அப்போது தமிழகத்தில் இருந்த ஆன்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன் ஆகியோர்தான் என நினைத்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது இந்திய அரசு.
தமிழகமே திரண்டெழுந்து எதிர்த்தவுடன், அப்படியே பின்வாங்கியது டெல்லி. ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீன்டும் இழைக்கப்படும் துரோகத்தை எதிர்த்து, தமிழகத்தில் அதே எழுச்சி வர வேண்டும். வட நாட்டில் இனத்தின் உரிமைக்காகக்கூட இல்லை, கௌரவம் பாதிக்கப்பட்டதற்காக ரயிலை எரிக்கிறார்கள். நாம் எரிக்க வேண்டியது இல்லை, மறித்தாலே போதும்'' என்றார் சீறலாக!
கடைசியாக மைக் பிடித்த வைகோ, 2009 மே மாதம் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், சாத்தூர் அருகே ஒரு கிராமத்தில் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, ஈழத்தில் இருந்து கடல் புலிகளின் தளபதி சூசை என்னுடன் தொடர்புகொண்டு பேசினார்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னதும் கோபப்பட்டார். 'அண்ணா, இங்க எங்கட சனம் செத்துக்கிடக்கு. எங்கு பாத்தாலும் பிணக் குவியல்கள். பிஞ்சுப் பிள்ளையள், பெண்கள், வயோதிகர்கள்னு ஆயிரம் ஆயிரமாய் ரத்தக் காயங்களுடன் கிடக்கிறாங்கள். அவங்கட காயத்தில புழுக்கள் நெளியுதண்ணே. இந்தியா​விலிருந்து எம்.பி-க்களை அனுப்பி இதை வந்து பார்க்கச் சொல்லுங்கண்ணே..என சூசை சொன்னதை மேற்கொண்டு என்னால் கேட்க முடியவில்லை.
ஈழத் தமிழர்களை அழிக்க யுத்தம் நடத்தத் திட்டமிட்டுக் கொடுத்தது, சோனியா உத்தரவின் பேரில் இந்திய அரசுதானே!  எல்லாவற்றையும் செய்துவிட்டு, இன்று இனப் படுகொலைக் குற்றத்தைச் செய்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக கூட்டறிக்கை விடுகிறார்களே டெல்லியில்!
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது நின்றுவிட்டதாக அப்பட்டமாகப் பொய்யை அவிழ்த்து​ விடுகிறார்கள். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நான்கு மீனவ சகோதரிகள் தாலி அறுத்த சோகம் முடிந்து 16 நாள்கூட ஆகவில்லை. என்ன தைரியம் வேண்டும் இப்படிச் சொல்வதற்கு?
கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவன் அந்தோனிராஜ், கடைசியாக அவன் மனைவியிடம் விடைபெறும்போது, நான் உயிரோடு திரும்ப வேண்டுமானால், இன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஜெயிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டிக்கொள் எனச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அந்த மீனவ சகோதரி இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, நான் ஆடிப்போனேன்.
சில பதவிகளுக்காக, முன்னாள் முதல்வர் நாடகம் ஆடினார். திட்டமிட்டே, கருணாநிதிக்கு சில துண்டுகளைப் போட்டார்கள். சில மந்திரி பதவிகளுக்காக தீராப் பழியை, தீராத துன்பத்தைத் தேடித் தந்துவிட்டீர்கள். இதனால், அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறீர்கள்.
டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூளுரைத்த கருணாநிதியின் போர்க் குரல் எங்கே? ஜனநாயகத்தை நிலைநாட்ட, முழங்கிய அந்த வீரம் எங்கே? தி.மு.க-வின் அந்த உணர்ச்சி எங்கே? சில பதவிகளுக்காக, நான் -  என் குடும்பம் நல்லா இருந்தாப் போதும் என்று நினைத்தீர்களே! இன்று நடப்பது என்ன?
போயஸ் கார்டனுக்கு சோனியாவின் வாழ்த்துச் செய்தி உடனே போகிறது. முதலமைச்சருக்கு, பிரதமர் வாழ்த்துச் சொல்லலாம். சோனியா எதற்கு வாழ்த்து சொல்கிறார்? காரியம் முடிந்ததும் கருணாநிதியைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். ஜெயலலிதாவை உள்ளே இழுக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், கொலைபாதகச் செயலைச் செய்த ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது பற்றி கேட்​கிறார்கள்.
செய்தியாளரின் கேள்வியிலும் தன்னுடைய பதிலிலும் இந்தப் பிரச்னை அடங்கிவிடாது. அது சர்வதேசப் பிரச்னை! என கருணாநிதி சொல்கிறார்.
ஈழப் பிரச்னையில் மத்திய சர்க்கார்தான் தலையிட வேண்டும் என கீறல் விழுந்த ரெக்கார்டைப்போல கருணாநிதி சொல்லி வந்ததை, இன்றைய முதலமைச்சரும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டு விவகாரமும் வெளிநாட்டு விவகாரம் ஆகிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன் என்று முடித்தார் கோபமாக!
நன்றி - ஜூனியர் விகடன்
சர்வதேச இலக்காகும் புலிகளின் வலைப்பின்னலும் ஐ.நா. அறிக்கையும்!
[ சனிக்கிழமை, 21 மே 2011, 02:12.15 AM GMT ]
நெடியவன் எனப்படுகின்ற பேரின்பநாயகம் சிவபரன் நோர்வேயில் உத்தியோகபூர்வமாக பிறிதொரு நாட்டால் விசாரிக்கப்பட்டதன் பின்னர் பல தகவல்கள் புலிகளின் புலம்பெயர்ந்த வலையமைப்புக்கள் சிக்கலிற்குள் கொண்டு வரப்படுகின்றன என்று தெரிவித்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
இந்த இடத்தில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக்குற்ற அறிக்கையில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள புலிகள் தொடர்பாக இடம்பெற்ற “வேண்டத்தகாத” நான்கு குறிப்புக்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.
ஏனென்றால் புலிகள் மீது நடவடிக்கை எடுக்க முனைப்புக் காட்டும் கனடா, சுவிற்சலாந்து போன்றவற்றின் அதிகாரிகள் மட்டத்திலானவர்கள் கூட இப்போது “ஐ.நா.வின் அறிக்கையை” வரவேற்கிறோம் என்ற சொன்னதில் மேற்குறிப்பிட்ட நான்கு பரிந்துரைகளுமே முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
அந்த நான்கு குறிப்புக்களும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களை எழுந்தமானத்திற்கு கண்டித்திருப்பதோடு மேற்குலக நாடுகளை புலிகளின் விடயத்தில் அவதானமானச் செயற்படச் சொல்லியும் பரிந்துரைத்திருக்கிறது.
விடுதலைப்புலிகள் தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் இப்போது தங்களின் நோக்கத்திற்காகப் பணம் சேர்ப்பதற்காக “மாபியா” பாணியிலான பதாள உலகக் கோஷ்டியின் நடவடிக்கைகளை ஒத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது புலிகளை ஒரு குற்றவலைப் பின்னல் அமைப்பாக அது பரிந்துரைத்துரைத்துள்ளதைக் காட்டுகிறது.
மேலும் இந்த மேற்கு நாடுகளில் வியாபார நிறுவனங்களை நடத்துதல், அமைப்புக்கள், ஆலயங்கள் மூலம் வருமாணத்தைப் பெறுதல் என்பனவும் நடைபெறுகிறது என்பதையும் பகிரங்கப்படுத்தி, அந்த நாடுகள் இதனைக் கவணித்து தற்போது நடைபெற்றுவரும் மேற்படி நிதி சேகரிப்பையும், விடுதலைப்புலிகளின் சொத்துக்களையும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சமுகத்திற்குப் போய் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ஐ.நா.வின் அறிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் காவற்துறையும் விடுதலைப்புலிகள் தற்போது பணச்சேகரிப்பிற்காக சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாடுகளிற்கு அனுப்புதல், கடணட்டை மோசடி செய்தல், பயமுறுத்திப் பணம் சேர்த்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள் எனவும், தங்களது ஊடகங்களை இந்தப் பணச் சேர்ப்பிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதே காலத்தில் அறிவித்தது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் ஐரோப்பாவில் தமிழர்கள் வாழும் நாடுகள் ஏறத்தாள அனைத்துமே இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அடங்குகின்றன. எனவே இந்த இரண்டு அறிக்கைகளும் மிகவும் சூட்சுமமானவை.
இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளை விசாரிக்க நியமித்த குழு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களை குறிவைத்து எந்தவித தயக்கமுன்றி “பாதள உலகக்குழுகள்” பாணியில் அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது ஐ.நா.வின் குழுவிற்கு தேவையான தகவல்களை நாடுகள் பரிமாறியிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
இந்த நிலையில் இப்போதைய நெதர்லாந்து விசாரணையும், நோர்வே சென்று நெடியவனை விசாரிக்குமளவிற்கு நீளும் கரங்களும் ஒரு உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளன.
அதாவது இந்த விவகாரத்தில் பல நாடுகளின் காவல்துறையும், உளவுப்படைகளும் ஒன்றாகப் பணியாற்றுகின்றன. அதன் மூலம் பிரிட்டன், நோர்வே, நெதர்லாந்து, ஜேர்மனி, கனடா, சுவிஸ், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் புலிகளின் வலையமைப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் முக்கியமான பரிந்துரையான “மீதமுள்ள புலிகளின் சொத்துக்களை ஈழத் தமிழர்களிற்கு சேர்க்கவும்” என்பது திட்டமிட்ட ரீதியில் புலிகளின் வலைப்பின்னல்கள் முடக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இதனைத் தான் முள்ளிவாய்க்கால் இரண்டாம் நினைவுநாளில் நோர்வேயில் இடம்பெற்ற விசாரணையும் எடுத்துக் காட்டுகிறது.


நாடு கடந்த தமிழீழ அரசின் தேசிய துக்க நாள்  ஜெனீவா  தொகுப்பு மே  18

20 மே, 2011










சிங்கப்பூர் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரட்னத்தை ஐ.எம்.எவ் தலைவராக நியமிக்க வேண்டும்!

Published on May 20, 2011-11:19 pm   ·   No Comments
சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நாணய நிதியத்தின்  (International Monetary Fund) தலைவராக நியமிக்க வேண்டும் என ஆசிய பசுபிக் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடப்பிடமாக கொண்ட தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங் நியமித்துள்ளார்.
அந்நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவராகவும் பொருளாதார நிபுணராகவும் உள்ள  சண்முகரட்னம் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் ( Monetary Authority of Singapore-MAS) தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில், இந்தப் பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தெற்காசிய நாடுகளிலிருந்து எழுந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருகின்றனர்.  இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதித்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.
தற்போது தர்மன் சண்முகரத்தினம் சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினராக உள்ளார்.
ஆனால் உலகின் முன்னணி பொருளியியல் வல்லூனர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி அமைச்சர்கள் என பலரும் இப்பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தியா தென்னாபிரிக்க போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்த பதவியை பெறுவதற்கு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் ஐ எம் எப்பின் தலைமைப் பதவியை எளிதாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சில ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டனர். ஜெர்மனி அதிபர் அங்கெலா மெர்க்கல் ஐரோப்பியர் தலைவராக வேணடும் என்பதை வலியுறுத்துவதில் முன்னணியில் இருக்கிறார். யுரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஐரோப்பா சர்வதேச நாணயநிதியத்தை எதிர்பார்த்து இருக்கிறது என ஐரோப்பிய தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பதவி ஐரோப்பிய நாடு ஒன்றிற்கே வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் இம்முறை இப்பதவிக்கு தென்னாபிரிக்கா, இந்தியா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் போட்டி எழுந்துள்ளது.
இஸ்ரேல் மத்திய வங்கி ஆளுநர் ஸ்ரான்லி பிஷெர், எகிப்து முதலீட்டுச்சபை நிறைவேற்று பணிப்பாளர் முகமட் எல் எரின், ஜேர்மன் முன்னாள் நிதியமைச்சர் ஸ்ரெயின் புருஷ், பிரித்தானிய முன்னாள் தலைமை அமைச்சர் கொர்டன் பிரவுண், முன்னாள் ஜேர்மன் மத்திய வங்கி தலைவர் அலெக்ஸ் வெபர், இந்திய தலைமை அமைச்சரின் பொருளாதார ஆலோசகர் மொன்டெக் சிங், முன்னாள் துருக்கி பொருளாதார அமைச்சர் கெமல் டெர்விஷ், பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்ரினா லார்டே, முன்னாள் தென்னாபிரிக்க நிதி அமைச்சர் ற்ரெவொர் மானுவெல், மெக்சிக்கோ மத்திய வங்கி ஆளுநர் ஒகஸ்டின் கார்டென் உட்பட பலரும் இப்பதவிக்காக போட்டியிட உள்ளனர்.
இந்த உலகத்தலைவர்களுடன் சிங்கப்பூர் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தின் பெயரும் முன்மொழியப்படுகிறது. ஆனால் இந்த பதவியை பெறும் நோக்கம் தனக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.                                                                       மிக மோசமான     குற்றவாளிகள் அடைக்கப்பட்டபகுதியில் கனிமொழி!

Published on May 20, 2011-11:40 pm   ·   No Comments
டில்லி திஹார் சிறையில் மிக மோசமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் 6ஆம் இலக்க பிரிவிலேயே விளக்கமறியல் கைதியான கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார்.
கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் மற்றொரு கைதி அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையின் 10 அடிக்கு 15 அடி அளவுள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுpறையில் கனிமொழிக்கு தொலைக்காட்சி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. தினசரி பத்திரிகைகளும் வழங்கப்படும் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.                                                 

சென்னை மரினா     கடற்கரையில் நடை பெற்ற முள்ளி வாய்க்கள் நினைவு -திரண்ட பெண்கள் கூட்டம் ..!video

Short URL: http://www.ethirinews.com/?p=6905
நாடுகடந்த  அரசில்  விலகியவர்களிர்க்கான   தேர்தல் -    ந ,க ,த ,அ ,    அறிவிப்பு ..!

ஈழ முரசு விக்கி லீக்ஸ் என்ற மாய தொடரை ஆரம்பித்து நாடு கடந்த அரசின் மீது  தமது தனி  நபர் தாக்குதல்களை நடத்தி வருவது இங்கே சுட்டி கட்டதக்கது .
நாடு கடந்த அரசின் பிரதமரை தெரியாது திண்டாடும் பதிவு ..!படித்தால் சிரிப்பு வரும் ..!

உலக போரியல் வரலாற்றின் முன்னோடிகளாகவும் ஊடக யாம்பவாங்கலாகவும்
தம்மை தாமே அறிவித்து கொள்ளும் பதிவு என்ற தேசவிரோத இணையம்
தமிழ் மக்களினால் அங்கீகாரம் வழங்க பட்டு அவர்களின் ஆணையுடன் யனநாயக வழியில்
தெரிவு செய்ய பட்ட நாடு கடந்த அரசின் பிரதமரை தமக்கு யார் என தெரியாது என கூறி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது .
இந்த நெடியவன் நோர்வேயில பாடசாலை ஒன்றில் சுத்தம் செய்யும் தொழில் ஈடுபட்டுள்ளாரம் என பதிவு காரர் கூறுகின்றனர் .
அப்படியானால் அடக்குமுறைக்கு உட்பட்டு அசிங்க பட்டு வாழும் மக்களின் கண்ணீரையும் துயர் தோய்ந்த அவர்களது இருண்ட வாழ்விற்கு விடுதலை வாங்கி தர ஏன்இந்த நெடியவன் ஐயா பகிரங்க வேலை திட்டத்தில் ஈடுபடவில்லை ..?
இதனை அறியாது பதிவு கார ராசாக்களே நீங்கள் தமிழ் தேசிய அரசியல் பேசுவது சீர்கேடிதனம் .
உங்கள் இன்றைய நிலை உருத்திர குமாரினையும் அந்த நாடு கடந்த ஆரசினையும் இல்லாதொழித்து
தமிழ் நெட் சேரமான் என அலையும் ஜெயாவும் திருசெல்வமும் நோர்வே முரளியும் பதிவியில் இருந்து மக்களை ஆழ வேண்டும் என்ற நப்பாசையில் இவ்விதமான செயல் பாடுகளில் ஈடு பட்டுள்ளீர்கள் .
தொடர்ந்து திட்டமிட்டபட்டு உங்கள் இந்த நாசகார வேலைகள் செய்ய முற்பட்டால் ஜேர்மன் கிளை பொறுப்பாளரின் தற்போதைய அடாவடி தொடர்பாக எமக்கு பல மக்கள் நேரடி முறைப்பாடு செய்துள்ளார்கள் .
அதை நாம் வெளியிட்டால் நீங்கள் கம்பிசிறைக்குள் உள்ளாக நேரிடும் அதனை விரும்பின் தொடர்ந்து உங்கள் ஊழிகூத்துக்களை நடத்துங்கள் .
Short URL: http://www.ethirinews.com/?p=6853
இலங்கை செல்ல வேண்டாம்! நெதர்லாந்து எச்சரிக்கை









E-mailஅச்சிடுகPDF
நெதர்லாந்துப் பிரஜைகள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என நெதர்லாந்து வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

நெதர்லாந்தில் கோடைக் கால விடுமுறை நெருங்கி விட்டது.

நெதர்லாந்து நாட்டவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்கின்றமைக்கு தயார் ஆகின்றனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்கின்றமைக்கு பாதுகாப்பான நாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற நாடுகள் எவை? என்கிற விபரப் பட்டியல் ஒன்றை நெதர்லாந்து வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டு உள்ளது.

இதிலேயே இலங்கை செல்ல வேண்டாம் என்று எச்சரித்து உள்ளது. 
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இரு வருடங்கள் ஆகி விட்ட போதிலும் புலி ஆதரவாளர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றனர், இலங்கையில் புதிய தாக்குதல்கள் இனி மேல் நடக்காது என்று உத்தரவாதம் தர முடியாது என்று இவ்வெச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.                                
மஹிந்தருடன் வெசாக் கொண்டாடிய மனிஷா கொய்ராலா!

E-mailஅச்சிடுகPDF
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெறுகின்ற சர்வதேச பௌத்த திரைப்பட விழாவில் கலந்து கொள்கின்றமைக்கு இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான மனிஷா கொய்ராலா வருகை தந்து உள்ளார்.

இலங்கைக்கான இவரின் முதலாவது விஜயம் இதுவே. இவர் வெசாக் பண்டிகை தினத்தில் தானசாலை ஒன்றுக்கு சென்று உணவும் சாப்பிட்டு உள்ளார். இவர் நேபாள நாட்டில் பிறந்தவர். ஒரு பௌத்த சமயி ஆவார்.
புங்குடுதீவு புனித சவீரியார் ஆலய வருடாந்தத் திருவிழா 
காலம் கணித்தறிய முடியாத பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென் கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534இல் போர்த்துக்கல் அரசனால் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையானது அவர்களின்
வாழ்க்கையினை இறைவன் பக்கம் திருப்பியது. 1545 இல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரத கிறிஸ்தவர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இதனால் அச்சமூகத்தினரில் பலர் தமது தாயகத்தை விட்டு வெளியேறி பலதீவுகளில் குடியேறினர்.

இவர்களில் பலர் புங்குடுதீவின் தென்கீழ் முனையிலும் குடியேறினர். இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் இந்து ஆலயங்கள் மத்தியில் நடுநாயகமாக விளங்கும் புனித சவேரியாரின் ஆலயமாகும். இவ்வாலயத்தின் வரலாறு நூறு வருடங்களுக்கு மேற்பட்டதாகும். ஆரம்பகால கட்டத்தில் சிறு ஆலயமாக உருவெடுத்து தற்பொழுது பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது. அந்நாளில் இந்தியாவில் கிறிஸ்தவ மக்களுக்கெதிரான போராட்டத்தில் பரத குல மக்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.

இக் கொடுமைகளை தாங்கமுடியாத மக்கள் தாயகத்தை விட்டு வெளியேறி கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கி இலங்கை வடபுலத்தில் உள்ள தீவுகளில் குடியேறினர்.  இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தரையிறங்கி தென்பகுதியில் குடியமர்ந்தனர். புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனைப்படி இறைவாழ்வு வாழ அவர்கள் தவறவில்லை. அவர்களின் ஜீவனோபாயமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு சிறப்புற வாழ்ந்தனர்.

இக் காலகட்டத்தில் தமது தொழில் நிமித்தம் கரையோரமாகச் சென்ற போது பேழை ஒன்று கரையில் ஒதுங்கி இருப்பதைக் கண்டு மகிழ்வுடன் அதை எடுத்துக் கொண்டு தம் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டனர். போகும் வழியில் தங்கள் பாதை மாறித் தீவின் மத்தியை அடைந்தார்கள்.
ஒரு ஆலமரம் பற்றை, புதர்கள் உள்ளகாடாக இருந்த படியினால் ஆலமரத்தின் கீழ் இளைப்பாறினார்கள்.

தாங்கள் பாதை மாறி வந்ததை உணர்ந்த அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர ஆயத்தமாகி பேழையைத் தூக்கினார்கள். அவர்களால் அதை அசைக்க முடியவில்லை. அதனால் அவர்களுக்கு ஆச்சரியம் மேலிடவே உடனே பேழையை உடைத்தனர். அதனுள் புதுப்பொலிவுடன் ஜோதியாய் ஒளிவீசும் புனித சவேரியாரின் திருச்சுரூபம் இருக்கக் கண்டு மெய்சிலிர்த்தது.  உடனே முழங்கால் படியிட்டுச் சுரூபத்தை வணங்கினர். பின் பேழையை ஆலமரத்தின் கீழே விட்டுவிட்டு வீடு சென்று சகலருக்கும் இச் செய்தியை அறிவித்தனர்.

பின்பு புனித பிரான்சிஸ் சவேரியார் தம்மை திருமறைக்கு திருப்பியதுமல்லாமல் கடல் கடந்த நாட்டிலும் தங்களுக்கு பாதுகாவலராக இருந்தார். இவரது திருச்சுரூபம் பெற்றதால் பரதகுல மக்கள் மகிழ்ந்ததுடன் தமது நன்றிப் பெருக்காகப் புனிதர்களுக்கு ஆலயம் அமைத்து வணங்கி வருகின்றனர். புனிதரின் திருச்சுரூபம் கிடைக்கப்பெற்றுப் பிரதிஸ்னம் அமைந்துள்ள அத்தினத்தையே வருடம் தோறும் வைகாசி மாதம் 20 ஆம் திகதி புனிதருக்கு விழா எடுக்கின்றனர்.

தற்பொழுது மக்கள் மீளக்குடியேறிய பின் சகல பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும் ஆலய புனரமைப்புப் பணிகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. ஆலயத்தின் சிறப்பைக் கேள்வியுற்ற வடமாகாண ஆயர் அதிமேதகு ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயகம் அங்கு விஜயம் மேற்கொண்டு ஆலயத்தைப் பார்வையிட்டுச் சென்றார்.  ஆலயத்திற்கு நிரந்தரப் பரங்குத் தந்தையாக அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரை நியமித்தார்.

அவர் பல வழிகளிலும் பங்கு மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றி வருவதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் முயற்சி எடுத்து பாடசாலை முன்பள்ளி, கணினி வகுப்புகள், தையல் வகுப்புகள் ஆகிய துறைகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவித்து சேவையாற்றி வருகிறார்.
அத்துடன் தோமஸ் சவுந்தரநாயகம் கணினிப் பாடசாலை மேதகு ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயகத்தினாலே ஆரம்பித்து வைக்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

கோவிலின் கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தி முன்போர்ட்டிக்கோ, மணிக்கூட்டுக் கோபுரம் ஆகிய வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகிறது.  இத்துடன் கோவிலின் வருடாந்தத் திருவிழா அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் 11.05.2011 புதன்கிழமை புனிதரின் நவநாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று வெள்ளிக்கிழமை கூட்டுத்திருப்பலியுடனும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருச்சுரூப பவனியுடனும் அவரின் ஆசியுடன் திருவிழா இனிதே முடிவெய்தும். கொழும்பில் வாழும் பங்கு மக்கள் அனைவரும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளை புனிதவியாகுல அன்னையின் ஆலயத்தில் 21.05.2011 மாலை 5 மணிக்கு சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
யோ.றிட்சார் டோமினிக்

ad

ad