புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2012


தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டால் மொத்தம் 13 உறுப்பினர்கள் கிடைக்கும்.THINAKATHJIR
அண்மைக்கால தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் என அனைத்து தரப்பிற்குமே சவால் நிறைந்ததாகவே அமைந்துள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டறிக்கை!
தென் தமிழீழத்தில் சூடுபிடித்துள்ள  இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத் தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. 
கிழக்கில் நீதியான தேர்தலை உடனடியாக உறுதிப்படித்துக; அரசின் வன்முறை குறித்து சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம்
நீதியானதும், நியாயமானதுமான தேர்தலொன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கும், சட்டவிரோதமான வகையில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் உடனடி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியாருமே எதிர் பாராத வகையில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார்  
 உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரர் கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச்சை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 
சிவகாசி வெடி விபத்து குறித்து நீதி விசாரணை, அரசு மருத்துவமனை தீக்காய உயர்சிகிச்சை மையமாக உயர்வு: ஜெயலலிதா உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
விருதுநகர் மாவட்டம், முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார்  
கலாநிதி மாறன் மீதான  அமலாக்க இயக்குனரகம் விரைவில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோதமாக 550 கோடி ரூபாய் பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சகோதரரும்,
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 38 பேர் பலி: நெஞ்சை உருக்கும் கோர சம்பவம் (படங்கள்)



ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நல்லூர் பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கமைய விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்ட  ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றத்திற்கு வரத் தவறியுள்ளதால் அவரைக் கைது செய்யுமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் அகிலதாஸ் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்! வடக்கின் வசந்தம்
கொக்குவில் இந்துக் கல்லூரியில் சிங்கமாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த அதிபர் அகிலதாஸ் கொக்குவில் இந்துக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணமாக பெருமளவு பணமோசடி என கல்லூரியை விட்டு அவரை அகலச் செய்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருமலையில் தமிழ் மக்களின் மனங்களை குழப்ப அரச தரப்பு எடுத்த முயற்சி தோற்கடிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில், குறிப்பாக மூதூர் பிரதேசத்தில் அரச தரப்பினர் சூட்சுமமான முறையில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கின்ற முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலிகளை முழுமையாக தோற்கடித்து விட்டீர்களா என கோத்தபாயவிடம் போலந்து கேள்வி
போலந்துக்கான இலங்கைத் தூதரகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் தற்போது போலந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

6 செப்., 2012

பாரிஸ் நகரத்தில் பிள்ளையார் கோவில் தேர் வீதியுலா

பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் இலங்கைத் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்த்திருவிழாவில் பிள்ளையார் ரதம் ஏறி வீதி உலா வந்ததுடன் பெருமளவு பொதுமக்கள் பங்குகொண்ட மாபெரும் ஊர்வலம் ஒன்று அங்கு இடம் பெற்றது.
இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் முடிவு
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கு இன்னும் மூன்று நாள்களேயுள்ள நிலையில் தேர்தல் பிரசார நடவடிக் கைகள் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுறுத்தபடவேண்டும்.இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தேர்தல் சட்ட
16 நாட்கள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள சிறிலங்காப் படையினரின் பாரிய இராணுவ ஒத்திகை
சிறிலங்காப் படையினர் சுமார் இரண்டாயிரம் பங்கேற்கும் கூட்டு இராணுவ ஒத்திகை ஒன்று மட்டக்களப்பு வாகரையில் அடுத்த வாரமளவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனையில் தமிழரசுக் கட்சி அலுவலகம் மீது கல் வீச்சு
அம்பாறை மாவட்டம் கல்முனையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தின் மீது நள்ளிரவு இனந்தெரியாத சிலரினால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பான் கீ மூனை 20 ஆம் திகதி சந்திக்கிறார் மு.க ஸ்ராலின்; டெசோ தீர்மானங்களை கையளிப்பார்
இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்ராலின் தலைமையிலான குழுவொன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை செப்ரெம்பர்

சிவகாசி அருகே உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயரச் செய்தி கேட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளதாவது:-
 
வெடி விபத்தில் பலர் பலியானர்கள் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைத்தேன். இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின்

அதிகார வர்க்கத்தால் நிகழும் கோர விபத்துகள் : திருமாவளவன் கண்டனம்

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,
சசிகலா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் எனக்கூறி சசிகலா


திடுக்கிட வைக்கும் மர்மம்: படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரின் தந்தையார்
தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய ராஜபக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார்

இலங்கைப் படையினருக்கான பயிற்சிகள் நிறுத்தப்படமாட்டாது: இந்தியா
தமிழகத்தின் கட்சிகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சியளிப்பதை இந்தியா நிறுத்தப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சவுக்கு தெரிந்தது, நெடுமாறனுக்கு எப்படி தெரியாமல் போனது? வழக்கறிஞர் ராதாகிருஸ்ணன்
கலைஞரை தேவையில்லாமல் விமர்சிக்கிறார் பழ.நெடுமாறன்! தமிழகத்தில் தினமும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இலங்கையில் இருந்து தமிழ் எம்.பி-க்கள் வந்து போகிறார்கள். ஆனால், கலைஞர் நடத்திய மாநாட்டுக்கு மட்டும் இவர்களைப் போகக்கூடாது என்று

கிழக்கில் தமிழ் கூட்டமைப்பின் வெற்றியானது எமது போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்!
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பெறுகின்ற வெற்றியானது எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையப் போகின்றது என யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதியினர் லண்டனிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் இருந்து அகதி தஞ்சக் கோரிக்கை  நிராகரிக்கபட்டவர்கள் ஒரு தொகுதி இலங்கையர்கள் எதிர்வரும் செப்டம்பர் 19 ம் திகதி  pvt030 என்ற விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர் .

5 செப்., 2012

கதிர்காமத்தில் பெரஹரா நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார். இச்சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்



கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழர்களின் தன்மானத் தேர்தல் - வெள்ளிமல


நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கட்சி ரீதியானதல்ல. தமிழர்களின் தன்மானத் தேர்தல. முள்ளிவாய்க்காலில் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கும், ஜெனிவாவில் நமது உரிமையை வென்றெடுப்பதற்கும் நடைபெறுகின்ற தேர்தலாகும் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்
வடக்குத் தலைமைகள் மாற்றாந்தாய்ப் பிள்ளைகள்போல் எம்மை கருதுகின்றார்கள் -சி.சந்திரகாந்தன்
நாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. மாங்கேணி மக்கள் தெளிவாக இருக்கின்றனர்
கண்டியிலுள்ள தனியார் வகுப்பு ஒன்றின் கழிவறையிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் மகிந்த சோமதிலகவின் மகனான சுதிர மகிந்ததிலக என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வீ.சுரேஸ்குமார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வீ.சுரேஸ்குமாருக்கு திருகோணமலை நீதவான் யூ

4 செப்., 2012


ஈழத்தில் விரைவில் விடுதலைப் போராட்டம் வெடிக்கும்: கவிஞர் காசியானந்தன்
ஈழத்தில் மிக விரைவில் பெரிய விடுதலைப் போராட்டம் வெடிக்கும் என கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று சிறிலங்கா அரசுக்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாககொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைக்கு வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு


கள்ளக்காதலனுடன் படுக்கையில் இருந்ததை நேரில் பார்த்ததால் தீர்த்து கட்டினோம்: கைதான அண்ணி போலீசில் வாக்குமூலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கொத்தூரை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருக்கு 3 மகள்களும், சங்கர், சதீஷ் (8) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் சதீஷ்தான் கடைசி மகன். இவன் இந்த ஊரில் உள்ள பள்ளியில்


மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம்! சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை
மத்திய பிரதேசத்தில் நடக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். 

3 செப்., 2012

ராஜபக்சேக்கு கறுப்புக் கொடி காட்ட உள்ளார் வைகோ
மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‌நேரடியாக சென்று கறுப்புக் கொடி காட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்ட நபரை பார்வையிட்டார் அமைச்சர் ஹக்கீம
அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆதம்லெப்பை மர்ஜூன் என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று காலை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். 


கடந்த மாதம் அக்கரைப்பற்றில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருந்த இப்தார் வைபவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர், தனது வீட்டின் முன்னாலுள்ள பாதையில் டயர்கள் எரித்தபோது, அதனைத் தடுக்க முயன்றபோது அந்தக் குண்டர்களால் தனக்கு விரைவில் உயிர் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பில் உடனே தாம் அக்கரைப்பற்று

அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்ட நபரை பார்வையிட்டார் அமைச்சர் ஹக்கீம்
நேற்றிரவு அமைச்சர் அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆதம்லெப்பை மர்ஜூன் என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்

இலங்கையர்கள் தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டாம்: இலங்கை அரசாங்கம் பயண எச்சரிக்கை
இலங்கையர்கள் மறு அறிவித்தல் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புலிகளின் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்களை பொதுமக்கள் பார்வைக்கு விட்டுள்ள படையினர்!


தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகப்பிரமாண்டமான அளவில் கட்டமைக்கப்பட்டு வந்த நீர் மூழ்கி கப்பலின் கட்டுமானங்களையும் கப்பலை சோதனையிடுவதற்கான புலிகள் அமைத்திருந்த நீர்த்தடாகத்தையும் படையினர் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக விட்டுள்ளனர்.

யாழ்.மக்களிடம் மகிந்த ஆட்சியில் சுதந்திரம் கிடைக்கிறதா என வினவிய சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபரை வாளால் வெட்டிய கணவன்: யாழில் சம்பவம்
யாழ். ஆறுகால் மடம் பகுதியில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபர் ஒருவரை, வாளால் வெட்டிய கணவனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பா.உறுப்பினர் சி.சிறீதரனால் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம்!- 2012ல் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கு பல்வேறு திட்டங்கள்
பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம் 2012ன் கீழ் பா.உ சிறீதரனால் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் அறிவகம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பதற்கு இணங்க ஸ்ரீலங்கா சதந்திரக் கூட்டமைப்பில் கிழக்கு மாகாண சபையின் வேட்பாளர்களாக நிற்கும் சிலர் (எண்ணிக்கை குறிப்பிட விரும்பவில்லை) அவர்களே தமிழ்த் தேசியத்துக்கு வாக்களிக்க தீர்மானத்து விட்டனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சி சந்திரகாந்தன் அவர்கள் ஒரு உறுப்பினராக வரவேண்டும் என்று எண்ணுங்கள் அப்புறம் ஆப்பு யார் யாருக்கு வைக்கிறார்கள் என்று பாருங்கள்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல்கள் நடைபெறும் வரை இணைந்த மாகாணத்தை நிர்வகிக்கவென இடைக்கால நிர்வாக சபையொன்றை உருவாக்க வேண்டுமென இந்திய - இலங்கை அரசுகள் தீர்மானித்ததின் பேரில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் ஐக்கிய விடுதலைக்



வட மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கங்களாக மாறிப்போன தமிழீழ விடுதலை புலிகள் பெண் போராளிகள் மீதான பாலியல் கொடுமைகள்



பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மர்ம பெண் சஹானா கைது


சென்னையில் பயிற்சி பெறும் இலங்கை கால்பந்து வீரர்களை உடனடியாக திருப்பியனுப்ப ஜெயலலிதா உத்தரவு
இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலில் மக்களின் முடிவு தெளிவாக இருந்தால் சர்வதேசம் எம்மை கைவிடாது: இரா.சம்பந்தன்
சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருகின்றது. அவர்களின் பங்களிப்பு, ஆர்வம், செயற்பாடு மக்களின் ஜனநாயக முடிவில் தங்கியிருக்கின்றது. உங்களின் முடிவு உறுதியான தெளிவான முடிவாக இருக்குமாகவிருந்தால் அவர்கள் எம்மை ஒருபோதும்

முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகியோரின் உயிர் காப்பதில் தமிழக முதல்வர் உறுதியாக நிற்க வேண்டும்: சீமான்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகியோரின் உயிரை தூக்குக் கயிற்றில் இருந்து காக்கும் சட்டப் போராட்டத்தில் தமிழக முதல்வர் உறுதியாக நிற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை

விடுதலைப்புலிகளை திமுக ஆதரிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார் அன்பழகன்
தமிழீழ விடுதலைப்புலிகளை திமுக தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. அதேபோல எங்களை விடுதலைப் புலிகளும் ஆதரிக்கவில்லை. திமுக கொடுத்த பணத்தைக் கூட வாங்காமல் எம்.ஜி.ஆரிடம் பணத்தை வாங்கியவர்கள் புலிகள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்ல இலங்கை தீர்மானம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச் செயற்படுவது என்று இலங்கை அறிவித்துள்ளது.

இறுதிப் போரில் பங்கெடுத்த மற்றுமொரு இராணுவத் தளபதி அவுஸ்திரேலியாவில் மாரடைப்பால் மரணம்
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான இறுதிப் போரில் தீவிரமாகப் பங்கெடுத்த  இலங்கை இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார அவுஸ்திரேலியாவில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா?
"தண்ணீரைத் தெளித்துவிட்டு இது தூய்மையான இடம் என்று கூறுவதால் ஓர் இடம் தூய்மையாகி விடாது. தண்ணீரால் குற்றத்தைக் கழுவ இயலாது. மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். 

2 செப்., 2012


யாழில் தாயையும் 2வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய தம்பதியர் கைது
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரையும் அவரது 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை!- ஜி.கே. வாசன்
தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை விரைவில் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து போராட்டம் நடத்த தயாராகும் தமிழக அமைப்புகள்!
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, வரும் 21ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார் ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

குடியேற்ற அனுமதி வழங்காவிட்டால் கருணைக் கொலை செய்யுங்கள்: தமிழ் அகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதி வழங்க முடியாவிட்டால், தம்மை கருணை அடிப்படையில் கொன்று விடுமாறு இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையின் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 28 பேர் கைது! எச்சரித்து விடுதலை
தமிழக மீனவர்கள் 28 பேர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். கச்சதீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை சுற்றிவளைத்து

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மிக சுலபமாக கொள்வனவு செய்தனர்!- சவேந்திர சில்வா
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்களமயமாக்கும் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க இத்தேர்தல் நல்ல வாய்ப்பு: ஸ்ரீகாந்தா
வடக்கும் கிழக்கும் இணைந்ததுதான் தமிழரின் தாயகம்.  இதில் ஒரு சதுர அங்குல நிலத்தைக் கூட சிங்கள மயமாக்குவதற்கு நாங்கள் தயாரில்லை என்பதை நாங்கள் இந்த தேர்தலிலே எடுத்துக் காட்டவேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா

1 செப்., 2012

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள்


நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
 நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87) உடல்நலக் குறைவு காரணமாக உடுமலைப்பேட்டையில் நேற்று காலமானார்.


காளியம்மாள் வீட்டில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் படப்பிடிப்பு நடந்தபோது எடுத்த படம்

காளியம்மாள், உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவருடைய காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.  அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.


இராணுவத்திடம் சிக்கிய கிளிநொச்சி முருகன்! தீர்த்தோற்சவத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் மக்கள் விசனம்
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்த்தோற்சவம். இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற முன்னான காலங்களில் கந்தப்பெருமான் தீர்த்தம் ஆடுவதற்கு பரிவாரமூர்த்திகள் சூழ, பிரதான வீதியூடாக புறப்பட்டு கரடிப்போக்கு சந்தியில் மூன்றாம்

கிழக்கு தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் இணைவது குறித்து தீர்மானம்: ரவூப் ஹக்கீம்
கிழக்கு தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து கிழக்கில் ஆட்சி அமைக்கும் தீர்மானத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தூரன் புழல் சிறையில் அடைப்பு! தமிழக அரசின் அநீதி!- மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்!
அழுத  பிள்ளைக்கு பால் தர மறுப்பது போல் தமிழக அரசு செந்தூரனுக்கு அநீதி இழைத்துள்ளது. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றால், தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது.
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள முகாம் வாசிகள் அனைவரும் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வைத்து செந்தூரன் கடந்த 6 ம் தேதியில் இருந்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
26 நாட்கள் அவர் செய்த தொடர் பட்டினிப் போராட்டத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தவில்லை.
செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் செய்து கைதாகினர்.
பல கட்சிகள் சார இயக்கங்கள் பல போராட்டங்கள், பரப்புரைகள் செய்தன.
சென்னை மதிமுக அலுவலகத்தில் தொடர் பட்டிப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இப்படி பல வகையில் போராடியும், அரசுக்கு நேரில் சென்று மனு கொடுத்தும், இவை எதுவும் தமிழக அரசின் காதுகளுக்கு விழவில்லை.
இதற்கிடையில் பத்து நாட்களுக்கு முன் செந்தூரனின் அத்தை செந்தூரனை பார்க்க இலங்கையில் இருந்து வந்தார். அவர் செந்தூரனின் உடல் நிலையை பார்த்து கவலை அடைந்தார். செந்தூரனின் பட்டினிப் போராட்டத்தை கைவிடும்படி வேண்டினார்.
ஆனால் செந்தூரன் முடிவாக மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவரது அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது . பின்பு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் காலமானார். இப்படி ஒரு துயர நிகழ்வும் நடந்தேறியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
நேற்று செந்தூரனின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியது. அவர் மயக்க நிலையை அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சக முகாம் வாசிகள் முகாம் காவல் துறையை கேட்டுக் கொண்டதோடு செந்தூரனை தூக்கிக் கொண்டு போய் ஆய்வாளர் அறையில் போட்டனர். மாலை 5 மணிக்கு இது நடந்தது.
இதை அறிந்த மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கியூ பிரிவு காவல்துறை உயர் அதிகாரி சம்பத் குமாரிடம் செந்தூரனை காப்பாற்றுங்கள் என முறையிட்டனர். அவரும் நிச்சயம் செந்தூரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து மாலை 7 மணிக்கு அரசின் நோயாளி அவசர ஊர்தி கொண்டுவரப்பட்டது. அப்போது உயிருக்கு போராடி வந்த செந்தூரனுக்கு எந்த முதலுதவியும் செய்யப்படவில்லை. காவல்துறையும் அருகில் இருந்தபடி தேநீர் அருந்தியும், பத்திரிக்கை படித்துக் கொண்டும் அலட்சியம் காட்டினர்.
சக முகாம் வாசிகள், அதிகாரிகளை கேள்விக் கேட்க தொடங்கினர்.  அதிகாரிகள், செந்தூரனுக்கு பாதிகாப்பு வாகனம் வந்து கொண்டிருகிறது, வந்ததும் செந்தூரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் எனக் கூறினர்.
இரவு 10 மணிவரை செந்தூரனை அழைத்து செல்லவில்லை. 10 மணிக்கு மேல் செந்தூரனை அதிகாரிகள் ஒரு அவதிப்படும் மனிதனாக கூட பார்க்காமல் வாகனத்தில் ஏற்ற இழுத்துச் சென்றனர்.
சரி, அப்போதாவது மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள் என்று பார்த்தால், செந்தூரனின் தளர்ந்து போன உடல் நிலையைக்கூட கருத்தில் கொள்ளாது, அவரை பூந்தமல்லியில் உள்ள நீதிபதியின் முன் கொண்டு சென்று, செந்தூரன் தற்கொலைக்கு முயன்றார் என்று குற்றம் சாட்டி, அவரை கைது செய்தது கியூ பிரிவு காவல்துறை.
இந்நிலையில், சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் திரு வைகோ, இயக்குனர் புகழேந்தி மற்றும் பல தமிழ் உணர்வாளர்கள் செந்தூரனை காண காத்திருந்தனர். செந்தூரன் அங்கு அழைத்து வரப்படுவார் என எண்ணினர்.
நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்த அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி மட்டுமே கிடைத்தது. அப்படி ஒரு அநீதியை செய்தது தமிழக கியூ பிரிவு காவக் துறை.
செந்தூரனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்காமல், அவரை நேரே புழல் சிறையில் கொண்டு போய் அடைத்தது.
இதை மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்தால், தாய் தமிழகம் என்று நம்பி வந்த ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது.
இவ்வளவு போராட்டம் நடத்தியும், உண்ணாநிலையில் இருந்தும், பரப்புரை செய்தும், அரசுக்கு மனுக்கள் கொடுத்தும் அரசு எதற்கும் பதில் அளிக்காமல் பிடிவாதமாக செந்தூரனின் அறவழிப் போராட்டத்தை முடக்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைப்பது அராஜகத்தின் உச்சகட்டம் என மனித உரிமை ஆர்வலர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அழுத பிள்ளைக்கு பால் என்ற பழமொழி பொய்த்தது போல் செந்தூரனின் அழுகுரலை ஏற்கவே மறுத்தது தமிழக அரசு.
இப்படியானதொரு அநீதியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கும் போது, இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்த அரசு நீதி பெற்றுத் தருவோம், மறுவாழ்வு பெற்றுத் தருவோம் என்று சொல்வது வெறும் கண்துடைப்பு நாடகம் தான் என்பது தெளிவாக தெரிகிறது.

செந்தூரனின் உடல் நிலை கவலைக்கிடம்.







செந்தூரன்
உண்ணாநிலைப் போராளி.
அவரது கொள்கையிலும் நிலைப்பாட்டிலும்
சரியாகவிருக்கிறார். பாராட்டுகிறேன்.

ஈழத்தமிழர்களை முகாம்களிலும், சிறப்புமுகாம்களிலும், அடைத்துவைப்பது , அதுவும் போர் முடிந்த காலமாக கருதும், இந்நாட்களிலும் கைதியாக வைத்திருப்பது முறையா? அப்படியாயின், அவர்களைவிசாரணைக்குட்படுத்தவேண்டும், அல்லது விடுவிக்கவேண்டும்,

செந்தூரன் கைது  செய்யப்பட்டார்
திறந்த வெளி முகாமுக்கு அகதிகளை மாற்றக்கோரி செந்தூரன் என்பவர் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 
ராஜீவ் காந்தி படுகொலை! திடுக்கிடும் தகவல்களை வெளியிட போகிறார் திருச்சி வேலுச்சாமி!
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பல திடுக்கிடும் தகவல்களுடன் ஒரு புத்தகத்தை எழுதி வருகின்றார் திருச்சி வேலுச்சாமி.
பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற
பிரபாகரனின் வீட்டை பார்வையிட்ட தென்னிலங்கை பெண் தவறி விழுந்து மரணம்
 
தேசியத்தலைவர் பிரபாகரனின் வீட்டைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் அவ் வீட்டிற்குள் தவறிவிழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து
திருச்சியில் சிங்கள மாணவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! நிகழ்வின் இடைநடுவில் வெளியெறிய மாணவர்கள்
 
தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற சிங்கள மாணவர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ad

ad