புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2012


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு புதிய தொலைக்காட்சி சேனல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டம் சார்பாக, அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் பொன்விழா. மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. 
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நெல்லையில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே ரத்து செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள


கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை ௭த்தரப்புக்கு வழங்குவது ௭ன்பது தொடர்பாக இன்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலொன்று மேற்கொள்ள இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மு.கா.வின் தலைவர் ரவூப்ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர் உயர்பீட உறுப்பினர்கள் ௭ன்போர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நவநீதம்பிள்ளையின் குழுவினரை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதித்தமையை கடுமையாக ௭திர்ப்பதாகவும், கண்டிப்பதாகவும் தெரிவிக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இதன் பின்னணியில் சில ஆலோசகர்களும், நாட்டுக்கு ௭திரான துரோகிகளும் இருப்பதாகக் குற்றம் சாட்டியது. 

இவர்களது வருகையால் ௭திர்காலத்தில் ஈராக், லிபியாவுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் ஏற்படுமென்றும் ஹெல உறுமய ௭ச்சரிக்கை விடுத்தது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள
ரத்மலானையில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பெயர் 'கொழும்பு சிற்றி' விமானநிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
குறித்த விமானநிலையமானது இன்று முதல் கொழும்பு சிற்றி விமான நிலையம் என அழைக்கப்படும் என விமானநிலைய முகாமையாளர் சரத் டி சில்வா தெரிவித்தார்.
பேலியகொட பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் ஐந்து வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள பலகைகளினால் அமைக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகப் பேலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயைக்

 முஸ்லீம் காங்கிரஷஇன்றுஅம்பாறையில் கூடுகிறது- மந்திரி பதவிகளை பங்கு போடுவதில் குடும்பிச்சண்டை
மத்திய அரசியல் இரண்டு முழு மந்திரி பதவியும் மூன்று அரைமந்திரி பதவிகளும், மாகாண முதல்மந்திரி பதவியும் மாகாண பிரதான இரு மந்திரிகளும் தமக்கு தர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் மகிந்த ராசபக்சவிடம் கோரியதற்கு அவர்

நீதியமைச்சில் வருவாய் இல்லை- கப்பல் துறைமுகங்கள் அமைச்சு வேண்டும்- ஹக்கீம் அடம்பிடிப்பு

தனக்கு நீதியமைச்சு தேவையில்லை என்றும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தரவேண்டும் என அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

என் அழகே எனக்கு ஆபத்தை ஏற்படுத்தியது: 4 வயது மகளுடன் தீக்குளித்த இளம்பெண் கடிதம்
நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி, திருவிடைக்கோட்டையைச் சேர்ந்தவர் தாணப்பன். இவரது மகள் ஷீபா (வயது 28). இவர் தனது 4 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் திருட்டு
யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மாந்தை மேற்கில் உருக்குலைந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இரு சடலங்கள்
மன்னார் மாவட்டத்தின், மாந்தை மேற்கு பகுதியில்  உருக்குலைந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் விபத்தில் மூவர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகக்காட்டுப்பாட்டை இழந்து ரொலிக்கொம் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

14 செப்., 2012

பிரச்சனையில் தவிக்கும் இரவு விடுதிகளின் சொர்க்க பூமியான லாசேன் நகரம்(Lausanne)
கடந்த பத்தாண்டுகளில் லாசேன் இரவு விடுதிகளின் சொர்க்கமாக மாறியதில் சில பிரச்னைகளும் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு விடுதி உரிமையாளர்களும் அதிகாரிகளும் தீர்வு தேடிவருகின்றனர்.
புகைபிடிக்கும் கூடங்களை அகற்ற வேண்டாம்: தேசிய வாக்கெடுப்பில் முடிவு
சுவிட்சர்லாந்தில் மதுபானக்கூடம் அலுவலகம், மனமகிழ் மன்றம், உணவு விடுதி போன்ற இடங்களில் புகைபிடிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள கூடங்களை நீக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்றிரவு நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 7.00  மணியளவில் நடைபெறவிருந்த குறித்த பேச்சுவார்த்தை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், அலரி மாளிகையில் அரசதரப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை நான்காம் மாடியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களினால் இயக்கப்படும் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த ‘சமகால அரசியல் நிலைமைகள்’ குறித்த செவ்வியொன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரும் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என முன்னிலை சோசலிசக்கட்சி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக இராணுவ அதிகாரிகள் இரகசியமான பேச்சுவார்த்தைக் கூட நடத்தியிருப்பதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் சொன்னதை உடனடியாக செயல்படுத்துங்கள்!- நடேசனின் கடைசி கடிதம் அம்பலம்

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்கள் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து முள்ளிவாய்க்காலில் நின்றவேளை, கடற்படைத் தளபதி சூசை அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒலிவடிவில் வெளியாகியது யாவரும் அறிந்ததே.

குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்: தற்கொலைக்கு முன் மாணவி கடிதம்!


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சினேகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பா-டெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி 23.07.2012 அன்று மாலை தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


நடுக்கடலில் 22 நாட்களாக தத்தளித்த 61 இலங்கை தமிழர்களை மீட்ட தமிழக மீனவர்கள்

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் அடைய சென்ற படகு பழுதானதால் ஒரு சிறுவர், 3 பெண்கள் என இலங்கை தமிழர்கள் 61 பேரும், 4 சிங்களவர்களும் 22 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்தனர்.

ad

ad