புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012

தென்னிந்தியத் திரைப்படத்துறையின் பலம் ஈழத்தமிழர்களின் கைகளிலும் தங்கியிருக்கின்றது: - இளையராஜா..(காணொளி)
நான் இத்தடவை கனடா வருவதற்கு இங்கு வாழும் ஈழத்தமிழ் மக்களே காரணமாக உள்ளார்கள். அவர்களை நான் என்றும் மதிக்கின்றேன். முக்கியமாக தென்னிந்தியத் திரைப்படத்துறையானது தற்காலத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக இருப்பதற்கும் அங்கு தமிழகத்தில் தயாராகும் திரைப்படங்கள் உலகளவில் வெற்றி பெறுவதற்கும் காரணமாகத் திகழ்பவர்களில் ஈழத்தமிழர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை நான் நன்கு உணர்கின்றேன்.
 

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற கருதப்படும் ஒருவரை கனேடிய குடிவரவுத்துறை அதிகாரிகள், நாடு கடத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர் கடந்த 15 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். குறித்த தமிழர், கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன், சர்வதேச தமிழர் இயக்கத்திலும் அங்கம் வகித்துள்ளார்.

நேரடியாக மோதினார்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள்! முந்துகிறார் ஒபாமா!

 செவ்வாய் இரவு இரண்டாவது முறையாக நேரடி விவாதத்தில் மோதினார்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவும் மிட் ரோம்னியியும்.
இது அத்தனை எளிதான மோதல் அல்ல. உலகிலேயே மிக முக்கியமான தேர்தலில் போட்டியிடும் இருவரின் நேரடியான, முகத்துக்கு முகம் பார்த்த மோதல். ஒன்றரை மணி நேரம் நடந்தது,
மண்டபம் முகாமில் 65 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் 32 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்ட 65 தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

19 அக்., 2012


நியாயத்திற்கு நீர் வார்க்காமல் துரோகத்திற்கு பால் வார்த்தேன் - கலைப்புலி தாணு பேச்சு!


இயக்குனர் இகோர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேன்கூடு’. திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இந்திய, இலங்கைப்படைகள் ஆகிரமிப்பு செய்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தேன்கூடு. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று
சென்னையில் அரசு கேபிள் ஒளிபரப்பு!
சென்னையில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை (20.10.2012) துவக்கி வைக்க உள்ளார்.சென்னையில் அரசு கேபிள் டிவி சேவையை துவக்குவதற்கான எம்எஸ்ஓ எனப்படும் உரிமம் பெறப்பட்டதை அடுத்து நாளை (20.10.2012) முறைப்படி துவக்கப்பட

ஆதீனத்தின் காலைப்பிடித்து நித்தி சீடர்கள் கதறல்
நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பிலிருந்து நீக்குவது என்று மதுரை ஆதீனம் முடிவெடுத்துவிட்டார்.  இதனால் அவரது உயிருக்கும், மடத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்.  இதையடுத்து அவர், மடத்தில் தங்கியிருக்கும் நித்தி சீடர்களை வெளியேற்றக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

காருக்குள் கதறி அழுத நித்தி
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டிருந்தார்.   இன்று இரவு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நித்தியானந்தாவின் நியமனத்தை நீக்கி அறிவித்தார்.
இதையடுத்து மதுரை ஆதீன மடத்திற்குள் இருந்த நித்தியின் சீடர்கள் வெளியேற்றப்பட்டனர். 
இந்த செய்தி திருவண்ணாமலையில் இருந்த நித்தியானந்தாவிற்கு தெரியவந்ததும்,  அவர் அலறி அடித்துக்கொண்டு காரில் ஏறி மதுரைக்கு விரைந்தார்.காருக்குள் அவர் கதறி அழுதார்
.

நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நித்தியானவந்தாவை நீக்கினேன் :
அருணகிரி அதிரடி பேட்டி
நித்தியானந்தாவை நீக்கம் செய்த பிறகு மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார்.நீத்தியானந்தாவை ஏன் நீக்கினீர்கள்?
நீதிமன்றத்திற்கு தலைவணங்கி இப்போதுள்ள வழக்கு சூழ்நிலை கருதி நித்தியானவந்தாவை நீக்கினேன்.

நித்தி நீக்கம் : அருணகிரிநாதர் அதிரடி அறிவிப்பு
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இன்று இரவு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.ஆதீனத்தின் வாரிசாக எம்மால் 23 .4.2012ம் நாள் நியமிக்கப்பட்டு 27.4.2012 ஆவணத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட பெங்களூர் ஆசிரம பீடாதிபதி நித்தியானந் தாவை இன்று 19.10.2012 முதல் வாரிசாக பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அறிவித்தார்.

என் உயிருக்கு ஆபத்து ; நித்தி சீடர்களை வெளியேற்றுங்கள்: மதுரை ஆதீனம் போலீசில் பரபரப்பு புகார்
மதுரை ஆதீனம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.அம்மனுவில்,  ‘’நித்தியானந்தாவை நான் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாகநியமித்தேன்.    சில காரணங்களால் நாளை நான்,  நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துகின்றனர்: யாழ். பொலிஸ்மா அதிபர் புகழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் சட்டத்தை அனுசரித்து, கடைப்பிடித்து நீதியாக நடந்து கொள்வதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

15 வயது சிறுமி மீது பாழடைந்த வீட்டுக்குள் வல்லுறவு! 19 வயது இளைஞன் கைது! யாழ்.இளவாலையில் சம்பவம்!
யாழ்ப்பாணம், இளவாலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்: திவயின
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகை திரிஷா தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்
 

நடிகை திரிஷா தந்தை கிருஷ்ணன்(68) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  கிருஷ்ணன் சென்னை ஓட்டல்களில் மானேஜராக பணியாற்றி வந்தார். திரிஷா முன்னணி நடிகையானதும் ஓட்டல் வேலையை விட்டு விடும்படி வற்புறுத்தினர். அவர் கேட்க வில்லை.
 

தீக்குளித்த கணவனை கட்டிப்பிடித்த காதல் மனைவியும் உயிரிழந்தார்
குடும்ப பிரச்னையில் தீக்குளித்த கணவனை கட்டிப்பிடித்த காதல் மனைவியும் இறந்தார். 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கமலஹாசன், 34. இவர் செஞ்சியை அடுத்த காரை பகுதியில் ஸ்டேட் பேங்கின் வாடிக்கையாளர் சேவை முகவராக பணிபுரிந்து வந்தார். 

கனேடிய அமைச்சரால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்! (பட இணைப்பு)


பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் பதவி ஏற்று 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக 60000 கனேடிய மக்களுக்கு Diamond Jubilee விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இதில் ஒன்ராறியோவைச் சேர்ந்த 14 பேருக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை வைர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


திருப்பதிக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தமிழக பக்தர்களை கெளரவிக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு பிரம்மோஸ்தவப் பாடல்களை அழகு தமிழில் வெளியிட்டுள்ளது.திருப்பதியில் பிரம்மோஸ்தவம் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திரையுலகின் மூத்த கவிஞர் வாலி எழுதிய முத்தான பத்து

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்

kannadasanகவியரசர் கண்ணதாசன் இன்றைய தமிழக மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வாழக் கூடிய கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் பெருந்தலைவர்கள் அனைவரும் போற்றி நிற்கும் மாபெரும்  கவிஞர் தனது சொந்த அனுபவங்களை வாழ்க்கையில் தான் அனுபவித்த இன்ப துன்பங்களை திரையிசைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய மாபெரும் கவிஞர். இன்றும் அவரது திரையிசைப் பாடல்களை வானொலியில், காண் ஒளியில் நாம் கேட்டும் பார்த்தும் மகிழ்கின்றோம். எமது வாழ்வில் சோதனையும் வேதனையும்  வரும் போது கவியரசரின் தத்துவப்

பாலைவனத்தில ஆடை மாற்றிய இலியானா! (வீடியோ இணைப்பு)

அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட நண்பன் திரைப்படத்தில் நடித்த இலயானாவை முன்பிருந்தே அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் திரையுலகின் மெல்லியை அழகி என சிம்ரனிற்கு நிகராகப் பெயர் பெற்றவர்.

18 அக்., 2012


சிங்கப்பூர், ஐரோப்பிய பாணியில் கொழும்பில் அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறை

சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளைப் போன்று அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறையை கொழும்பிலும், அதன் அயல் நகரங்களிலும் முன்னெடுக்க இலங்கையின் போக்குவரத்து அமைச்சு பாரிய திட்டங்களை வகுத்துள்ளது.
யுத்தம் முடிவுற்ற பின்னர் கொழும்பு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் இத்திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுவதுடன் வாகன நெரிசல் விபத்துக்கள்

துரை தயாநிதியை கைது செய்ய நவம்பர் 2-ம் தேதி வரை தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
துரை தயாநிதியை கைது செய்ய நவம்பர் 2-ம் தேதி வரை தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் ஒலிம்பஸ் கிரானைட் 

கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   
இதையடுத்து துரை தயாநிதி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால்,


கலைஞர் நேரில் ஆஜராக செசன்சு கோர்ட் சம்மன்
தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்காக, டிசம்பர் 18–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞருக்கு சம்மன் அனுப்பி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை ஆதீன பொறுப்பில் இருந்து நித்தி ராஜினாமாவா?
நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.   அவர் அடுத்த மதுரை ஆதீனம் ஆகக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்கக் கோரிக்கை
இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆதீன மடத்தின் இளைய பட்டமாக நியமனம் செய்யப்பட்ட நித்தியானந்தாவின் நியமனம் செல்லாது என்று தமிழக

16 ஆண்டாக படுக்கையில் இருக்கும் வாலிபரை காதலித்து மணந்த இளம்பெண் 
தக்கலை மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் உல்லியம். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னம்மாள். இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு  விஜயகுமார், ஜெயகுமார் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். 10-வது வயதில் விஜயகுமார், ஜெயகுமாரை மர்ம நோய் தாக்கி இருவரும் படுத்த படுக்கையானார்கள்.  


6 பேர் கொண்ட கும்பல் என்னை இணையதளத்தில் அசிங்கப்படுத்துகிறது : பாடகி சின்மயி பரபரப்பு புகார்


’சர சர சார காத்து’ பாடல் இன்னனும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.   வாகைச்சூடவா படத்தில் வரும் இந்தப்பாடலை பாடியவர் பாடகி சின்மயி.   'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கிறார்.
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது இளையராஜா குரல் கொடுக்கவில்லை; சீமான் குற்றச்சாட்டு
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார்.
திருகோணமலை மாணவர்கள் படுகொலை வழக்கு; நீதிமன்ற நடவடிக்கை குறித்து ஆராய்வு
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு  5 மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக சுருக்க முறையற்ற நீதிமன்ற நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
பெர்த் ஸ்கோர்சர்ஸ்- கொல்கத்தா போட்டி மழையால் ரத்து: தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா
சாம்பியன் லீக் தொடரில் முதல் அணியாக வெளியேறிது கொல்கத்தா அணி.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு டர்பனில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணியும் மோதின. 

பாகிஸ்தானில் வெள்ளத்தால் 455 பேர் பலி; 5 மில்லியன் பேர் இடம்பெயர்வு
பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக அடை மழை வெள்ளத்தால் 455 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த நிவாரண முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
 
காத்தான்குடி கடற்கரையில் மீண்டும் அதிசயம் :பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கின
மட்டக்களப்பு காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரையில்  இரண்டாவது நாளாகவும் பல வகையான சிறிய , பெரிய மீன்களும் ஒரு வகையான பாம்பு இனங்களும்  பெரிய ரக ஆமையொன்றும் உயிரற்ற நிலையில் கரையொதுங்கியுள்ளன.

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்ற தெரிவுக்குழு வாய்ப்பாக அமையும் : ஹக்கீம்
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமென எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லொச்செனிடம் தெரிவித்தார்.


இராணுவத்தளங்களை அமைக்க சீனா உதவி : த.தே.கூ.கவலை
வடபகுதியில் நிரந்தரமாக இராணுவத்தளங்களை நிறுவுவதற்கு சீனா உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளது.
மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதற்கு காரணம் கூறும் விலங்கியல் துறைத் தலைவர்
மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி ஒதுங்கிய சம்பவமானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வு என கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைத்தலைவர் கலாநிதி பெ.வினோபாவா தெரிவிக்கின்றார். 

பிரித்தானியா, கனடா நாடுகளில் இருந்து செல்லும் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்கும் இலங்கை உளவுத்துறை
பிரித்தானியா மற்றும் கனடாவில் இருந்து இலங்கைக்கு தமது அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை இலங்கை அரச புலனாய்வு துறை ஒட்டுக்கேட்கிறதாக தகவல்கள் கசிந்துள்ளன.
புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுபவர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் உரையாடுபவர்கள் தொடர்பாக இந்த நகர்வினை அது முடுக்கி விட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி! நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு
தமக்கு எதிரான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க கோரிய டக்ளஸ் தேவானந்தா மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

சரத் பொன்சேகாவின் பேரணியில் பங்கேற்றதால், மூவர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையில் இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டமைக்காகவே ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஐதேக வின்  பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, பி.தேவரப்பெரும மற்றும் ஏ.அபேசிங்க ஆகியோரே தற்காலிகமாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் பணக்கார நாடு சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் சென்ற ஆண்டு முதல் தனியாரின் சொத்து விகிதம் 13 சதவீதமாகக் குறைந்திருந்தது.
ஆனாலும் கூட, உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நாடாக சுவிட்சர்லாந்து விளங்குவதாக கிரெடிட் சுவிஸ் வெளியிட்ட வருடாந்திர உலகளாவிய சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது.
சுவிஸ் ஃபிராங்கின் மதிப்பு உயர்ந்திருந்ததால் நாட்டின் சொத்து மதிப்பும் உயர்

இலங்கை இராணுவப் புலனாய்வுக்கா(முக)ரரிடம் சிக்குண்ட சில பெண்களின் உண்மைச் சம்பவங்கள

இலங்கை இராணுவப் புலனாய்வுக்கா(முக)ரரிடம் சிக்குண்ட சில பெண்களின் உண்மைச் சம்பவங்கள்
யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில், முன்னாள் பெண் போராளிகள், பொங்குதமிழ் பெண் மாணவர் படையினர் மற்றும் விடுதலை புலிகள் ஆதரவு பெண்கள் ஆகிய பல பெண்கள்

தமிழக காவல்துறை இயலுமை குறித்து சந்தேகம்!- அமைச்சர் டக்ளஸின் சட்டத்தரணி!
சூளைமேடு கொலை வழங்கின் விசாரணையில், தமது கட்சிக்காரரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னிலையாக முடியும் என்று அமைச்சரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எனினும், தமிழக காவல்துறையின் பாதுகாப்பு இயலுமை குறித்து சந்தேகம் உள்ளதாக, சட்டத்தரணி பீ.என்


புலிகளோடு இலங்கை அரசு சமாதானம் மேற்கொண்ட காலகட்டத்தில் இருந்தே, பல உளவாளிகள் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றுவிட்டனர். என தற்போது செய்திகள் கசிந்துள்ளன.
 பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் நபர்களே, இவ்வாறு சென்று புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கை அரசுக்கு தெரிவித்து வந்தனர்.

பிரித்தானிய தமிழர் ஜீவனுக்கு கொழும்பில் நடந்தது என்ன ? உண்மைச் சம்பவம் !
ஐக்கிய ராட்சியத்தில் ஸ்காட்லனில் வசித்துவரும் ஜீவன் என்னும் இளைஞன் கொழும்பு சென்றவேளை நடந்த உண்மைச் சம்பவத்தை நாம் இங்கே தருகிறோம். 33 வயதாகும் ஜீவன் கடந்த 9ம் திகதி கொழும்புசென்றுள்ளார். 2006 ம் ஆண்டு பிரித்தானியா

30 வருடம் மட்டுமே போராட்டம் நடத்திவிட்டு ‘தமிழீழம்’ வேண்டும் என நினைப்பவர்கள் படியுங்கள் !
ஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றி 2014ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் கமென்டும் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் பிரகாரம் 305 ஆ
இறகுபந்து போட்டி: ஷாலினி அஜீத் 2-ம் இடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி
நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி. இறகு பந்து போட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். திருச்சியில் தரவரிசையை

மாந்தீரிக வேலைகளில் ஈடுபட்ட மூன்று பெண்கள் பொது இடத்தில் எரித்துக்கொலை 
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் துப்ரஜபூர். இங்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கடந்த 6 மாதமாக மாந்தீரிக வேலைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த

இலங்கை சிறையிலிருந்த கே.பி. விடுதலை 
2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது, கே.பி. என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்ற விடுதலைப்புலிகளின் கடைசி தளபதியும்
மிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை கொச்சைப் படுத்துகிறார் டக்லஸ்; சரவணபவன் காட்டம்


தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை டக்லஸ் தேவானந்தா கொச்சைப் படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எமது நிலத்திலிருந்து இராணுவமே வெளியேறு; யாழில் முழங்
கினர் மக்கள்
நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நல்லூர் உள்ளூராட்ச்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
மாதகல்லில் மேலும் ஒருதொகுதி மக்களை மீளக்குடியமர்த்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
வலிதென்மேற்கின் மாதகல் பகுதியில் மேலும் ஒரு தொகுதி மக்களை மீளக்குடியேற்றுவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வழக்கை விசாரிக்க வேண்டாமெனக்கோரி அமைச்சர் ரிசாட் மனு தாக்கல்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான ரிசாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க வேண்டாம் எனக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை : குமர குருபரன
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை என்பதற்கான உறுதி மொழியாகும். அவர் அரசின்
ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்: ஜே.வி.பி.

நாளை ஹைட்பார்க்கில் நடைபெறும் கூட்டத்திற்கு ஜே.வி.பிக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்தோடு ஜே.வி.பி. தனிக்கட்சி. எமக்கென்று கொள்கை உள்ளது. நாம் முடிவெடுக்கும் போது எமது கொள்கையின் அடிப்படையிலேயே முடிவெடுப்போம். எனவே, ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள
சுரேஷ் பிரேமச்சந்திரன்-மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்
மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



மனோ கணேசன்-சரத் பொன்சேகா தலைமையில் நாளை நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் நாம் கலந்து கொள்ள போவதில்லை. ஆனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து கூட்டணிகளையும், ஜனநாயக சக்திகளையும் நாம் வரவேற்கிறோம்.
அண்மை எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையும், சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியையும்,தமிழ்-முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசுக்கு எதிரான ஒரு பாரிய கூட்டணி ஏற்படும். இந்த நோக்கில் கடந்த ஜனாதிபதி

17 அக்., 2012


விராத் கோலியுடன் தமன்னா! இதுவரை வெளிவராத சீக்ரேட் புகைப்படங்கள்!

விராத் கோலியுடன் தமன்னா! இதுவரை வெளிவராத புகைப்படங்கள்!
 

விராத் 


கரினாகபூர்- சயிப் திருமணம் கோலகலமாக முடிந்தது: நடிகர்- நடிகையர் வாழ்த்து

பாலிவுட் நட்சத்திரங்களான கரீனாகபூர், சயீப்அலிகான் திருமணம் மும்பையில் இன்று கோலாகலமாக நடந்தது.
கரீனா கபூர் இந்தி நடிகர் ராஜ்கபூரின் பேத்தி ஆவார். சயீப் அலிகான் நவாப் பரம்பரையை சேர்ந்தவர்.
சயீப் அலிகான் ஏற்கனவே இந்தி நடிகை அமிரிதா சிங்கை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார்.
அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரு குழந்தைகளும் இன்று திருமணத்தில் கலந்து கொண்டனர்.
கரீனாகபூருக்கு சயீப் அலிகானுக்கும் விசேஷ ஆடை வடிவமைப்பாளர்களை வைத்து முகூர்த்த ஆடைகள் தயார் செய்யப்பட்டு இருந்தன.
அவற்றை இருவரும் உடுத்தி இருந்தார்கள். நவாப் பரம்பரை பாரம்பரியபடி இந்த திருமணம் நடந்தது.
இந்தி நடிகர்- நடிகைகள், நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
கரீனாகபூர், சயீப்அலிகான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (18ம் திகதி) மும்பையில் நடைபெற உள்ளது.
அனைத்து மொழி நடிகர், நடிகைகளும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.

விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானம் உரிய அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் மீட்டெடுக்கப்படும் என கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இரணதீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் குறித்த விமானம் மூழ்கியுள்ளது. 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம்

பிரான்ஸ் லூர்த்து மாதா தேவாலயத்தில் 68ஆவது அதிசயம்! மக்கள் வெள்ளம் (வீடியோ இணைப்பு)

பிரான்சிலுள்ள புகழ்பெற்ற லூர்த்து மாதா தேவாலயத்தில் 68 வது அதிசம் நிகழ்ந்ததாக நேற்று அந்தத் தேவாலய குருமார் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதற்காக சிறப்பு பூசையும் அந்தத்
‘‘சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததுதான், கோத்தபய இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அளிக்கக் காரணமாகி விட்டது‘சாத்தான் வேதம் ஓத வேண்டாம்’’ என்றும் ஜெயலலிதாஎச்சரித்துள்ளார்.,’’ 
 ம த்திய அரசு மீதான தன் கோபத்தையும் காட்டமாகவே

சிறைகளில் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் மீதான கொடுமைகள்: சிங்கள இணையம் தகவல்

சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மிலேச்சனத்தனமான கொடுமைகளை சிங்கள இணையம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட்

போர் நடைபெற்றபோது 300 தொண்டு அமைப்பு உளவாளிகள் தகவல் சேகரித்துள்ளனர்


வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது களநிலைமைகளை உளவு பார்ப்பதற்காகத் தமது அமைப்பு சுமார் 300 பேரை நியமித்திருந்ததாகவும் இவர்களில் 95 சதவீதமானோர்
நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர் - தமிழக அரசு அதிரடி
மதுரை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு

ad

ad