புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012

வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு,  தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது.

இலண்டனில் மாபெரும் உலகத்தமிழர் மாநாடு: தமிழ் மக்களின் ஆதரவினை வேண்டி நிற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை
சிங்கள பேரினவாத அரசுகளால் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை' மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி பிரித்தானியாவில் மகாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது தீர்ப்பாயம்.

பிரிவார்களா? இணைவார்களா? எப்போது முடியும் வைகோ, நாஞ்சில் சம்பத் விவகாரம்!


வைகோ, நாஞ்சில் சம்பத் பிரிவார்களா? இணைவார்களா? என கடந்த ஒன்னரை மாதங்களாக நடக்கும் இந்த கசமுசாவின் முடிவு எப்போது என காத்திருக்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் ஏற்பட ஐ.நா. சபை முயற்சி எடுக்க வேண்டும்: கலைஞர் பேட்டி
தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-டெசோ மாநாட்டு தீர்மானங்களையும், தி.மு.க.வின் கருத்துக்களும் அடங்கிய விரிவான மனுவை `ரத்தம் வழியில் இதயத் துடிப்பு' என்ற தலைப்பில் ஐ.நா. மன்றத்தில் மு.க.ஸ்டாலின்,

சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டது: கலைஞ

இலங்கையில் ஆளும் சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டுள்ளது என்று திமுக தலைவகலைஞர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி: ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார். 

அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா-மிட்ரோம்னி இறுதிகட்ட பிரசாரம்
அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள்


பாரிஸ் ஓபன் டென்னிஸ் : பூபதி-போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஓபன் டென்னிஸ் : பூபதி-போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு 
முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிஎன்பி பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மகேஷ் பூபதி-  ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்த ஜோடி, போலந்தின் மரியுஸ்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது. இப்போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மும்பை ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது.டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில்
றக்பியில் சீனாவை வீழ்த்தி இலங்கை சம்பியன்
சிங்கப்பூரில் நடைபெற்ற அணிக்கு 7பேர் கொண்ட றக்பி போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இப்போட்டியில் இலங்கையணி சீனாவை எதிர் கொண்டு 25-5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டு கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
 
அழகியாக நமீதா தெரிவானதற்கு நடிகைகள் எதிர்ப்பு
ஜப்பான் நாட்டின் டோக்கியோ ரி.வி. நமீதாவின் புகைப்படத்தை வைத்து இந்திய அழகியாகத் தெரிவு செய்திருப்பதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஹொலிவூட்டின் பிரபல நடிகைகள் கருத்துத் தெரிவிக்கையில்,அழகி என்றால் அதற்கென்று சில முக்கிய அம்சங்கள்
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களைக் கடத்திய இருவர் கைது
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களை கடத்திச் செல்ல முற்பட்ட பொரளை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.மாலைத் தீவுக்குச் செல்வதற்காக வந்த இவர்களது பையில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு
 இவ் ஆண்டுக்கான கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக கனடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் டொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் ‘நௌ’ சஞ்சிகை, ‘ரொரன்ரோவில் சிறந்தது’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.



இந்நிலையில், 2012ன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரியப்பட்டுள்ளார். அவருக்கான அவ் விருதை 'நவ்' சஞ்சிகை வழங்கி கௌரவித்துள்ளது.

கனடாவில் தமிழ் மாணவி மாயம்!
கனடாவில் தமிழ் மாணவி ஒருவர் காணாமற் போயுள்ளார்.
ஸ்காபரோ நகரில் வசிக்கும் 16 வயதான காயத்திரி வைத்திலிங்கம் என்ற மாணவியே நேற்று முன்தினம் காணாமற் போயுள்ளார். 
 

 
இது குறித்து டொரொண்டோ பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செல்வம் எம்.பி.யின் மைத்துனர் கொலை: சந்தேக நபர் கைது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புறக்கோட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

3 நவ., 2012


செட்டியார் தெருவில் பதற்றம்
 
ம்பு செட்டியார் தெருவில் நகை விற்பனைத் தரகராக தொழில்புரிந்து வந்த சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து செட்டியார் தெருவில் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்

கதறி அழுத சின்மயி


கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’. நந்தனம் படத்திற்கு இசையமைக்க மலையாள இசையமைப்பாளாரான கோபி சந்தர் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் ஷியாமளன்.
சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர் தான் இசையமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களுக்காகவே ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந்தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின்மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக பாடல் பாடும் போது அழுதுகொண்டே பாடினாராம்.
இது என்ன வலியோ’ என்ற பாடல் வரிகளை கோபி சந்தரின் இசையுடன் சேர்த்து பாடும் போது உண்டான தாக்கத்தால் கதறி அழுதாராம் சின்மயி.

அன்புள்ள சின்மயிக்கு 

முதல் பக்கம்...

அன்புள்ள சின்மயிக்கு
வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
LIVE IN TRT TAMIL OLI RDAIO -PON-SUNTHARALINGAM
TONIGHT  22.00
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கினால் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.
தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவாசல் உடைப்பு, 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
 
முள்ளிவாய்க்காலில் பாரிய ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்கள் மீட்புமுல்லைத் தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கொன்றிலிருந்து ஆயுதங்கள் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் தோண்டி எடுக்கப்பட்டன.
தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க வேண்டும் : மல்வத்தை மகாநாயக்க தேரர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதுடன் தமிழ் மக்களுக்கும் நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்தை மகாநாயக்க தேரரிடம் நல்லாசி பெறச் சென்றபேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதியின் குத வாயிலில் இருந்து ஒலியெழுப்பிய தொலைபேசி
கைதியொருவரின் குத வாயிலில் இருந்து கையடக்க தொலைபேசிகள் ஒலியெழுப்பியதையடுத்து, பொலிஸார் குறித்த சந்தேக நபரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை வவுனியா நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: டிலான் பெரேரா
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்னோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில உயரத்துல இருக்கிற வைரமுத்துவை கீழே இறக்கி விடுங்க!  அமீர் பேச்சு!
ருத்ரன் இயக்கும் ‘வெற்றிச்செல்வன்’ பட இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பாலா, அமீர், சீனு ராமசாமி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டனர்.இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள ’மதன் கார்க்கி’ பேசும்போது பாடல் வரிகள்ள இருந்த இலக்கியச் சுவையை சொல்ல, மகிழ்ந்து போன அமீர் வழக்கத்துக்கு

டிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:–‘‘நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, அவருடைய 58–வது பிறந்த நாளான

20 ஆயிரம் பேர் குவிந்தனர் : பரமக்குடியில் பெரும் பதட்டம்
பரமக்குடியில் 30ம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் போது சிவக்குமார், மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றன. இதனை முன்னிட்டு அங்கு 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர். 

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு பிரான்ஸ் நாட்டு விருது


டிகை ஐஸ்வர்யாராய்க்கு கலை சேவையை பாராட்டி பிரான்ஸ் நாட்டு சார்பில் மும்பையில் நடந்த அவரது பிறந்த நாள் விழாவில் விருது வழங்கப்பட்டது.

2 நவ., 2012


கொழும்பு புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றின் குளியலறைக்குள் இருந்து 67 வயதான பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த சண்முகவேல் அம்பிகாவதி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

82 வயது தாயை அனாதையாக கட்டிலோடு
நடுரோட்டில் போட்டுவிட்டு போன மகன்கள்


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கண்டிகா கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கையா மனைவி சுப்பம்மா (வயது 82). இவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். ரங்கையா மரணம் அடைந்ததையொட்டி சுப்பம்மா தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு! இந்தியா வலியுறுத்த
இக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளதாவது:
ஜெனிவாவில் நடந்து வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மறுஆய்வு கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மீளாய்வு கூட்டத்தொடரில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்ப
பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

மீண்டுமொரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கும் இலங்கை அரசு
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. 

நஞ்சுக்கொடி அறுந்ததால் தாயும் குழந்தையும் மரணம்: துணுக்காயில் சம்பவம
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரை குழந்தையைப் பிரசவிப்பதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை நஞ்சுக்கொடி அறுந்தமையால் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர்- ஓயாத ஆரவாரமும் சர்ச்சையும்


சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.
ஐ.நா.‌துணைப்பொதுச் செயலரிடம் டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை ஒப்படைத்தார் ஸ்டாலின் 
சென்னையில் கடந்த ஆக.12-ம் தேதி  தி.மு.க. சார்பில் கலைஞர் ‌த‌லைமையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மான நகல்கள் ஐ.நா.பொதுச்செயலரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. 


வேண்டாய்யா வேட்டி! எடுய்யா பேண்டை! சட்டசபைக்கு ஸ்டைலாக வந்த எம்.எல்.ஏ., 

மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை தந்தது. தொடர்ந்து மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்களுக்கு இலங்கை ஒப்புதல் : ஜெனீவா கூட்டத்தில் சமரசிங்கே

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அப்போது நடந்த படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே விசாரணை நடத்த தவறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.



           து, ஒருநாளில் நடந்த திடீர் நிகழ்வல்ல என்கிறது அ.தி.மு.க. மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வட்டாரம். விரிவாக விசாரித்தோம்.

1 நவ., 2012

பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக தீவகம் வேலணையைச் சேர்ந்த பிரியந்தன் (starmedia இன் இயக்குனர்) என்பவருக்கு வவுனியா வலயக்கல்வி பணிமனை விருது 
வடமாகாணத்தில் நடைபெற்ற மனநலதினத்தை முன்னிட்டு குறும்படபோட்டியில் வெற்றிபெற்ற  பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் , ஆலய திருப்பணி வேலைகள் ,யாவும் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றன
இத் திருப்பணி வேலைகளுக்காக ,புலம் பெயர்ந்து வாழும் எமது ஊர் உறவுகள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருவதாக அறிய முடிகின்றது .இப் பெரும் திருப்பணிக்கு தங்களால் வழங்குகின்ற பேருதவியை .முன்னிட்டு .அனைத்து உறவுகளுக்கும் .எமது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .. நன்றியுடன் . ஆலய அறங்காவலர்களும்


அனலைதீவு இந்து மயானம் புனரமைக்கப்பட்டுள்ளது.  22-7-2012 அன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இப்பணிகளை அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா திறம்பட நடாத்தி முடித்திருக்கிறது. அத்துடன் ஊரின் வளர்ச்சிக்கு இவ் ஒன்றியம் மகத்தான சேவையை வழங்கிவருது குறிப்பிடத்தக்கது. (படங்கள் )

மண்டைதீவுப் பிரதேசத்திற்கு விரைவில் மின்சாரம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  இப்பகுதிக்கு மின்சாரம்
விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக மின்கம்பங்கள் நடப்பெற்று மின்கம்பிகள்
பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றது.
 2013 ஆண்டு பங்குனி மாதம் மட்டில் குறிகட்டுவான் நயினாதீவுக்கான பாதை சேவை ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பாக்க படுகின்றது . நிர்மானபணிகள் .இரு இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றது .
தண்ணீர்ப் போத்தலால் சிறீதரனைத் தாக்க முயற்சித்தார் சந்திரகுமார்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சம்பவம்
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாருக்கும் இடையில் காரசாரமான விவாதத்தினையடுத்து தண்ணீர்ப் போத்தலால் சிறீதரனைத் தாக்க முயற்சித்தார் சந்திரகுமார்.பதிலுக்கு சிறீதரன் உங்களிடம் மட்டுமா தண்ணீர் போத்தல் இருக்கிறது நீர் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என அவர் பதிலளித்தார். 

ஐ.நா.வில் இலங்கையின் நியாயங்களை வெளிப்படுத்தும் தூதுக்குழு : (நேரலை ஒளிபரப்ப
ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவையின் அனைத்துல ஆவர்த்தன பரிசீலனையில் இலங்கை தற்போது தன்பக்க கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கின்றது. 

முன்னாள் பெண் போராளியின் பேட்டி கவலை தருகின்றது!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்
கொடுக்கும் பதிலடி .நன்றி 
ஆனந்த விகடனில் வெளியாகிய “நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் ஒரு பாலியல் தொழிலாளி’’ என்ற தலைப்பில் தமிழ்வின் இணையத்தளத்தில் வந்திருக்கும் முன்னாள் போராளியின் பேட்டியை வாசித்து நாம் கவலை அடைந்துள்ளோம்.
விடுதலைப்புலிகளில் அனுபவம் மிக்க படையில் இருந்த ஒரு முதல்நிலையில் இருக்கக்கூடிய போராளி தன் துன்பங்களையோ கஸ்டங்களையோ இங்கு இருக்கக்கூடிய பா.உறுப்பினர்களிடமோ
விகடனில் வந்த இந்த கட்டுரையை முழுதாக பிரசுரிக்க எமக்கு விருப்பம் இல்லை.இணையத்தை பார்வையிடுவோர் தொகை கூடும் என்பதற்காக இந்த விபசாரத்தை நாங்கள் செய்ய விரும்பவில்லை    நன்றி
 விகடன் 
நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! - ஒரு பெண் புலியின் வாக்குமூலம்! இது உண்மைக் கதை

வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.

தமிழகத்தையே உலுக்கிய கோவை குழந்தைகள் கொலை வழக்கு! குற்றவாளிக்கு தூக்கு! கோவை கோர்ட் தீர்ப்பு!


கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். 

முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 48 பேர் இன்று விடுவிப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளில் 48பேர் முழுமையான புனர்வாழ்வுக்குப் பின் இன்று புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 7 பெண்கள்

சீனத் தயாரிப்பான ஆட்லறிகள் புலிகளுக்கு எவ்வாறு கிடைத்தன? இலங்கை இராணுவம் அதிர்ச்சி
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்லறிகள் சீனத் தயாரிப்புக்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து  இலங்கை இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
நீலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்லறிகளை இலங்கை இராணுவத்தினர் நேற்று மீட்டுள்ளனர்.
ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: கே.பி.முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.இந்திய மத்திய புலனாய்வு, அதிகாரிகள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
 23 வயதுடைய தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் 23 வயதுடைய தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.மூன்று பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளதோடு ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளைஇ கடந்த மாதம் கண்டி போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழுந்தைகள் பிறந்த நிலையில் சில நாட்களின் பின் ஒரு குழந்தை இறந்தது. இந்நிலையில் நேற்றும் கண்டியில் ஒரு தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசை, ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசாக மாற்ற அரசு தீர்மானித்து செயல்படுகிறது: மனோ கணேசன்
இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகும். பெயரில் இருக்கும், ஜனநாயகமும், சோசலிசமும் நாட்டுக்குள்ளே கிடையாது. ஆனால், நாட்டில் ஜனநாயகத்திற்கும், சோஷலிசத்திற்கும் பதிலாக சிங்களமும், பெளத்தமும் நடைமுறையில் தலைவிரித்தாடுவது எல்லோருக்கும் தெரியும். இந்த நடைமுறை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்கிறது. அதுதான், ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசு என்பதாகும். முழுநாட்டையும்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை சமர்ப்பிப்பு
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்று சபாநாயகர் சமல் ராஜபக்~விடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரேரணையை அமைச்சர்களான அருந்திக்க பெர்னாண்டோ, லசந்த அழகியவண்ண மற்றும் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரினால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இக் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ளவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கவும் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள 118 பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அரசாங்கம் கையெழுத்துகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
செல்வம் எம்.பி.யின் உறவினர் காணவில்லையென முறைப்பாடுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் ஒருவரை கடந்த 30 ஆம் திகதி முதல் காணவில்லை என காணாமல் போனவரது மனைவி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டுள்ளார்.
தனது மனைவியின் சகோதரரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் (வயது-60) என்பவரே காணமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நீதிமன்றம் விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 27.10.2012 அன்று செய்தியாளரை அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விஜயகாந்த் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.

நக்கீரனுக்கு எதிராக மதுரை ஆதினம் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!
துரை ஆதினத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நக்கீரன் முதல் முதலில் அம்பலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தன்னைப் பற்றி நக்கீரன் எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்று ஒரு சிவில் வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
 முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.
 சீனாவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.



(Official Announcement) இளையராஜாவின் ரொறான்ரோ இன்னிசை நிகழ்ச்சி தள்ளி வைப்பு!

 வருகிற நவம்பர் 3ஆம் தேதி ரொறான்ரோவில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. இப்போது அந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களான டிரினிடி ஈவண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘தென்னிந்தியாவில் கடுமையான புயல் மழை என்று வானிலை மோசமாக இருக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
FULL SCORE CARD-இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக் சதமடித்தார். அவர் 112 ரன்களுடன் களத்தில் உள்ளார்
இந்திய "ஏ' அணியுடனான பயிற்சி ஆட்டத்தின் 2ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணிக்கு, இந்திய ஏ அணியின் ஸ்கோரை எட்ட இன்னும் 83 ரன்கள் தேவைப்படுகின்றன.மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் நாள் முடிவில் 9

நீலம் புயல் : திருச்செந்தூர், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
 மாற்றுப்பாதையில் இயக்கம் 
'நீலம்' புயல் - கடந்த 3 நாட்களாக மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிசேகம் -காணொளி 
m
கோத்தாவிடம் கேள்விகளால் வேள்வி செய்த ரஞ்சன் மத்தாய்
13 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து அண்மையில் டில்லி சென்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் எனத் தெரியவருகிறது.
கடந்தவாரம் புதுடில்லி சென்ற கோத்தபாய அங்கு உயர்மட்ட இந்திய அதிகாரிகளுடன், பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுகளை நடத்தியிருந்தார்.
யாழில் நடைபெறும் வேலைத்திட்டங்களுக்கு இராணுவமும் பொலிஸாரும் ஒத்துழைப்பு தருகின்றனராம்; புகழாரம் சூட்டுகிறார் அரச அதிபர்
2012ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 26 மாணவர்களுக்கு பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் எம்முடன் இணைந்தே செயற்படுகின்றனர்
இராணுவத்தினரை சகோதரர்களாகப் பார்க்கிறார்களாம் தமிழர்கள்; கஷ்டப்பட்டு கண்டு பிடித்தார் முதல்வர்
நடப்பாண்டில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
ஒரு காலத்தில் தமிழர்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த சூழல் மாறி இன்று எம்முடன் இணைந்த சகோதாரர்களாக ஒன்றிப் பிணைந்து வாழும் காலம் உருவாகி விட்டது என யாழ். மாநகர சபை முதல்வர்
வடக்கில் தொடர்ந்து அடை மழை தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்
வடக்கில் அடை மழை தொடர்வதனால் தாழ்ந்த நிலப் பகுதிகள் வெள்ளத்தினால் மூடப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றக் கிராமங்கள் பலவற்றில் குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்ததனாலும் காற்றினால் கூரைகள் பறந்து, கூரை விரிப்புகள் காற்றினால் அள்ளிச் செல்லப்பட்டதனாலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு அருகில் உள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன. 
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள்
இன்று நள்ளிரவு முதல் வானொலி பண்பலைகளில் மாற்றம்
இன்று நள்ளிரவு தொடக்கம அனைத்து வானொலி பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் மாற்றப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ஆணைக்குழு தெரிவிக்கையில்,45 வரையான பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளின் அதிர்வெண்களை மாற்றி அமைப்பதுடன் மேற்படி 45 பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் 87.5 தொடக்கம் 108 வரையான மெஹா ஹேட்ஸ் வீச்சில் ஒலிபரப்பு செய்யப்படும்.
உடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யவும் : ஜனாதிபதி உத்தரவு
நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மூன்று சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.கடந்த நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக அதிகரித்த மழை வெள்ளம் ஏற்பட்டதனால் இக்குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலக்கேணிகுளம் மற்றும் பாலக்கட்டு குளம் என்பனவும் திருகோணமலை வடக்கில் உள்ள வெகட்வெற்றிவேவ என்னும் குளமுமே உடைப்பெடுத்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குளங்கள் மிகவும் அண்மையில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்
அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை அரசாங்கம் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
நிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று மூழ்கி விபத்துக்குள்ளாகியது. 

இதில் 22 பேர் பயணித்த நிலையில் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான ஒற்றை டி20 போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக தாமதித்து ஆரம்பித்திருந்தது.

வன்னியை ஆண்ட கடைசி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு தினமான இன்று புதன்கிழமை நினைவு தினம் மக்களின் வெளிநடப்புக்கு மத்தியியல் இடம்பெற்றது.
நகரசபை தலைவர் ஐ.கனகையா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர் மாலை மாலை அணிவித்தனர். 
மீன்பிடி தொழிலுக்காகச் சென்று கடலில் சுமார் 62 நாட்கள் தத்தளித்த ஐந்து மீனவர்கள் நேற்று முல்லைத்தீவு கடற்பரப்பின் நாயாறு பகுதியில் கரை திரும்பியுள்ளனர்.
 டந்த எட்டாம் மாதம் நீர்கொழும்பு கடற்பரப்பின் ஊடாக  ஐந்து மீனவர்களும் கடலுக்குச் சென்றுள்ளனர். 
றித்த படகு 62 நாட்களுக்குப் பின் கரையொதுங்கியுள்ளதுடன் ஐந்து மீனவர்களும் உயிருடன் கரை
ஐக்கிய நாடுகள் சபையில் வியாழக்கிழமை இலங்கை சூழல் குறித்து மூன்றரை மணி நேர விவாதம் நடக்கும்மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 ஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்தது ஏன்?
ராஜீவ் கொலை! கருணாநிதி விசாரிக்கப்படாதது ஏன்? தலைமை விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு!
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள இவ்வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்தது என் என்பது குறித்து அவரிடம்


யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.
சமூகத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் புரட்சிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாறி விடுகின்றன. அப்படியானதொரு புதுமையான சமுதாய மாற்றத்தையும் சமூகவியல் பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.

ad

ad