புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012

பிரான்ஸ் வர்டமான் பிரதேசத்தில் இருந்தே பரிதியைக் கொல்லச் சொல்லி கட்டளை வந்தது எனச் சந்தேகிக்கிறது பிரெஞ்சுப் பொலிஸ் 
 இதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரவு பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் றீகன் என்று அழைக்கப்படும் பரிதியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்

ஈழத் தமிழர் பிரச்சினையில் செயல்பட்டால்தான் அரசுக்கு ஆதரவு : கருணாநிதி

BBC TAMIL
ஈழத் தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புக்களை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

பரிதியின் படுகொலையில் பிரான்சுக்கான சிறிலங்காத் தூதரகம்! அம்பலத்துக்கு வந்த சிறிலங்காவின் எல்லைதாண்டிய அரச பயங்கரவாதம்
படுகொலைக்கு உள்ளாகியிருந்த பிரான்ஸ்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்களது படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில், பிரான்சுக்கான சிறிலங்காவின் தூதரகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் செயற்பட்டுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

இலங்கை குறித்த தமது நடவடிக்கைகள் பெருமிதமாக உள்ளது!- அமெரிக்கா
சர்வதேச ரீதியில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது எனவும் அவ் வகையில் இலங்கை குறித்த  தமது நடவடிக்கைகள் பெருமிதமாக உள்ளளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குவைத்தில் தகாத உறவு வைத்திருந்த இலங்கைப் பெண்-இந்திய சாரதி கைது
குவைத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் இலங்கைப் பெண்ணொருவர் இந்திய சாரதியொருவருடன் தகாத உறவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் பரிதி அவர்களின் கொலையாளிகளுக்கு ஐம்பதுனாயிரம் யூரோக்களை சிங்கள அரசு சன்மானமாக வழங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரெஞ்சுக் காவல்துறையினரால் Villeneuve-Saint-Georgesல் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாரிஸ் லாச்சப்பல் (பரிஸ் – 18) பகுதியில்

eelamboys .net  thax


விடுதலைப்புலி தளபதி பரிதி கொலை: பிரான்ஸ் போலீஸ் பிடித்த Ménilmontant இலங்கை நபர்!

விடுதலைப் புலிகள் பரிதி கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்பதை பிரான்ஸ் போலீஸ் உறுதி செய்துள்ளது DCRI (Direction Centrale du Renseignement Intérieur). இந்த இருவரும் தற்போது பிரான்ஸ் போலீஸால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது.
பிரான்ஸ் போலீஸ் DCRI பிரிவை தொடர்பு கொண்டபோது செய்தி தொடர்பாளர் Noella Andrade, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். “இருவரில் ஒருவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். பரிதி சார்ந்த அமைப்பை சேர்ந்தவர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொருவர் விசாரணை செய்யப்படுகிறார்”


துப்பாக்கி – சினிமா விமர்சனம்

துப்பாக்கி படம் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளை எகிர வைத்திருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு ஸ்கெப்டிசத்தையும் கூடவே உருவாக்கியிருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் 

 7ஆம் அறிவில் கதை நன்றாக இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டது, அதன் பின் ஒரு அவரசரமாய் இந்த துப்பாக்கியை ஆரம்பித்தது இதெல்லாம் பார்த்தபோது ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்தது.

யாழில் இளம் பிச்சைக்காரி ஒருவரின் மர்மம்: நடப்பது என்ன ஒரு ரிப்போர்ட் ! thx athirvu


யாழில் உள்ள திருநெல்வேலிச் சந்தையில் காலை முதல் மாலைவரை பிச்சை எடுக்கும் ஒரு இளம் பிச்சைக்காரி இருக்கிறார். இவரைப் பார்த்து வியக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். காரணம நல்ல இளமையாக இருக்கும் இவருக்கு வயது 20

தனுசின் மகன் யாத்ரா மற்றும் பிரபல பாடகர் யேசுதாசின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாசும் சபரிமலைக்கு சென்றனர். 
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் அங்கு கூட்டம்
ஏ.டி.பி. உலக டென்னிஸ்: பூபதி-போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி
ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டியில் இந்திய இரட்டையரான மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவினார்கள்.

வடமாகாண உதைபந்தாட்டம் யாழ்.மாவட்ட அணி சம்பியன்


இலங்கை விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் வட மாகாண விளையாட்டுத்திணை களம் வட மாகாண மாவட்டங்களுக்கு ,இடையே நடத்திய தெரிவு செய்யப்பட்ட 21 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் ஏமாற்றப்பட்ட மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம்
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்படி குடும்பத்துக்கு சாதகமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து
ஜயலத் எம்.பி.யை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி
மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

ஐந்து கைதிகளை காணவில்லை
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னர் சிறையிலிருந்த ஐந்து கைதிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போன சிறைக் கைதிகளில் நால்வர் குற்றவாளிகள் எனவும் ஒருவர் சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்டு கொல்லப்பட்டார்களா 27 பேர்? - வெலிக்கடை சிறைக் கொடூரம்! அமைச்சர் ஒருவரும் உடந்தையாம்
வெலிக்கடச் சிறை மீண்டும் ரத்தத்தால் நனைந்துள்ளது! குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 ஈழத் தமிழ் கைதிகள், 1983 ஜூலையில் வெலிக்கட சிறைச்சாலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கறுப்புக் கலவரத்துக்குப் பிறகு, கடந்த 9-ம் தேதி மீண்டும் ஒரு கோரச் சம்பவம்.

பரிதி படுகொலை விவகாரம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது! விசாரணை திருப்பம்!
கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ்-தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதியின் படுகொலைத் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பிரென்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

5வது ஒருநாள் இலங்கை 123/8 மழையால் ஆட்டம் பாதிப்பு

நியூசிலாந்து அணியுடனான 5வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 28.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் கனமழையால் பாதிக்கப்பட்டது.

ad

ad