புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


கேணல் பரிதி அவர்களின் வித்துடல்  (26.11.2012) திங்கட்கிழமை காலை  Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட புனித விதைகுழியில் பெருமளவான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் விதைக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் வித்துடல் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது பெருமெண்ணிக்கையான மக்கள் உணர்வு பொங்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்தியதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் வித்துடல் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.
தொடர்ந்து, இவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வோம் என அங்கு உறுதி எடுக்கப்பட்ட அதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் 27.11.2012 செவ்வாய்க்கிழமை Viparis – Villepinte Hall 8 – Parc des Expositions (RER B)  என்ற முகவரியில் 12.35 மணிக்கு இடம்பெறும் மாவீர்தினத்தில் அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவுபெற்றது.



மாவீரர் நாள் நிகழ்வுகள் 2012 மலேசியா‏

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தெரிவு செய்யப்பட்ட ஓர் இடத்தில் தமிழீழ நேரத்திற்கமைய மாவீரர்களுக்கான ஈகைச்சுடரேற்றல் மற்றும் வீரவணக்க நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன, வெகு சிறப்பாக நடைபெற்ற இன் நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர்,
 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது.


மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்
மாவீரர் தினத்தில் இடிந்தகரையில் நடந்த இளையவர் எழுச்சி மாநாடு பந்தலில் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தில் உதயகுமார் அண்ணனின் மாவீரர் தின உரை 27-11-12

புலியூரில் மாவீரர் தின அஞ்சலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர், புலியூரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த 1983 முதல் 1986-ம் ஆண்டு வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. டேராடூனில் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற புலிகளின்



தோப்புக்கொல்லை முகாமில் மாவீரர் தினம்
 -nakeeran

தியாக சுடர் ஏற்றிய பெண் போராளியின் அம்மா
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை ஈதிழியர் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.
 
 நவம்பர் 27 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம். இந்த நாளை உலகத் தமிழர்கள் ஈழப் போராளிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.


          


மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தின
வவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்; மக்கள் அச்சத்தில்
வவுனியாவில் தீபமேற்றியவர்களை இராணுவமும் புலனாய்வும் துருவித் துருவி பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கசிப்பு தயாரித்த இலங்கையர்கள் இருவர் சவூதியில் மரணம்

சவூதி அரேபியாவின் அல் கொபார் நகரில் வீடொன்றில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் இருவர், கசிப்பு தயாரித்த போது அதிலிருந்து வெளியான விஷவாயுவினால் மரணமடைந்துள்ளனர்.


புலிகளை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பியது துரோகமாகும்: ராம் ஜெத்மலானி


மிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பிவைத்தமை துரோகச் செயலாகும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வுகளுக்கு பாலியலை இலஞ்சமாக கேட்கும் அதிகாரிகள்


சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு உயர் பதவிகளை வழங்க, அதிகாரிகள் பாலியலை இலஞ்சமாக கேட்கும் நிலை

நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள் அறிக்கை



• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப் பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்!

நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள்


லண்டன் மாநகரம் அதிர்ந்தது ! மாவீரர் தினத்தில் பல்லாயிரம் மக்கள் !


லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர் . காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை

சரவணபவன் எம்.பி, உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது யாழ். பல்கலையில் வைத்து படையினர் தாக்குதல
யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டில் யாழ். பல்கலைக்கழக விடுதிகள்! ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதிகள் யாவற்றையும் முற்றாக இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்த எக்ஸ்செல் மாவீரர் தின நிகழ்வு - ஜேர்மனிய நிகழ்வுகள்
லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தேசத்தின் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்திய யாழ்.மக்கள்
பாரிய இராணுவ அடக்குமுறைகளுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையில் தமீழிழ மாவீரர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாப்பட்டுள்ளன.

ஈழ மண்ணின் மறவர்களுக்கு கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக மக்கள் அஞ்சலி
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஒழங்கமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக உறவுகளாலும் மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தாயகத்தினை கண்முன் நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள்!
தமிழீழத் தாயகத்தினை கண்முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகளுக்கு மத்தியில் பிரான்சில் மாவீர் நாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். மாணவர்களால் சிங்கள பாதுகாப்பு படை விடுதிகளிலிருந்து விரட்டியடிப்பு! உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் மாணவர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என்பதோடு உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது செய்மதி அண்டவெளிக்கு அனுப்பப்பட்டது
இந்த தகவலை குறித்த செய்மதி செயற்றிட்டத்தில் தலைமை நிறைவேற்று அதிகாரி விஜித் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் சட் 2 இன்று மாலை இலங்கை நேரப்படி 4 :00 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது

27 நவ., 2012



மாவீரர்நாள் அறிக்கை – 2012. – தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். 27-11-2012.

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே.

இன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் தேசியநாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே எமது விடுதலை இயக்கத்தின் முதல்மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாள். எமது விடுதலைவானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள் பனிக்க மலர்தூவிச் சுடரேற்றி வழிபடும் திருநாள்.
உயிர் வாழும் ஆசையிலிருந்து பிறக்கும் அச்சமே மனிதர்களைக் கோழைகளாக மாற்றி விடுகிறது. ஆனால் வீரர்களின் நெஞ்சமெங்கும் கனன்று எரியும் விடுதலைத்தீயினால், அச்சமே அவர்களிடமிருந்து அச்சப்பட்டு ஓடிவிடுகிறது. அதனாலேயே நஞ்சைக் கழுத்தில் அணிந்து கொண்டு, உயிரைத் துச்சமென மதித்துப் போராடிய அம்மாவீரர்கள் சாவையும் வென்று, நம்மண்ணினதும் நம்மினத்தினதும் வரலாறாகி நிலைத்து விட்டார்கள்.

விடுதலை என்பது ஒவ்வோர் உயிரினதும் பிறப்புரிமையாகும். இந்தப் பூவுலகிலுள்ள உயிரினங்கள் எல்லாவற்றினதும் வாழ்க்கையின் அடிநாதம் விடுதலை என்ற ஒற்றைச் சொல்லிலேயே பொதிந்திருக்கிறது. தமிழீழ மக்களாகிய நாங்களும் இவ்வுலகம் முன்னெப்போதும் சந்தித்திராத கொடுந்துயரங்களையும் கடும் இழப்புக்களையும் தாங்கி எமது தாயக விடுதலைக்காகவே பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றோம்.

நாம் உலகின் தொன்மை வாய்ந்த, ஆதி மொழியொன்றுக்குச் சொந்தமானவர்கள். பழம்பெருமை வாய்ந்த கலை பண்பாட்டு விழுமியங்களுக்கும், இலக்கியங்களுக்கும், அறிவியலுக்கும், நவீன உலகுக்கே முன்னுதாரணமான நாகரிகத்துக்கும் சொந்தமானவர்கள். நாம் அமைதியையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரு இனத்தவராகவே வாழ்ந்தோம். தொடர்ந்தும் அங்ஙனமே வாழ விரும்பினோம். ஆனால் ஆட்டுக்குட்டியின் உயிருக்கும் கருணை காட்ட வேண்டிப் போராடிய புத்த பெருமானின் போதனையைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் எம்மை அமைதியாக வாழ விடவில்லை. எம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை. மனிதகுலம் முழுமையுமே தலைகுனியும் வண்ணம் ஆற்றொணாக் கொடுமைகளை எமக்கு இழைத்தார்கள். எமது அப்பாவி மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குழந்தைகள், பெண்கள் உட்படத் தமிழர் என அடையாளங் கண்ட அனைவரையும் கொன்றொழித்தார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழரின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டன. குடியேற்றங்கள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரியமான வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுத் திட்டமிட்ட முறையிற் சிங்களவர் குடியேற்றப்பட்டனர்.

ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதற்கான எமது அமைதி முயற்சிகள் அனைத்தையும் சிங்களத் தலைமைகள் நிராகரித்தார்கள். ஒப்பந்தங்களைக் கிழித்துக் காற்றிலே பறக்க விட்டார்கள். எமது அறவழிப் போராட்டங்களை வன்முறையால் அடக்கினார்கள். போரை எம்மீது திணித்தார்கள். எம்மக்களின் அழுகுரலைக் கேட்கவும் அவலங்களைத் தீர்க்கவும் யாருமே முன்வராத நிலையில், சிங்கள அரசை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் எம்முன்னே இருக்கவில்லை.

நாம் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைப் போராளிகள். எமது விடுதலைப் போராட்டத்துக்கு எமது மக்களிடமிருந்து மட்டுமே எமக்கு உதவி கிட்டியது. சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புப்படை பாரிய படைபலத்துடனும் அளவற்ற ஆயுதபலத்துடனும் மூர்க்கத்துடன் நகர்ந்து வந்தது. அப்படையைக் குறைந்த அளவிலான படைவலுவோடு நாம் எதிர்கொள்ள வேண்டி வந்தபோது அதற்கேற்ற வகையிலேயே எமது போர்க்கள உத்திகளை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எதிரியிடம் இல்லாத புதியதொரு பலத்துடன் போர்முனைக்குச் செல்லும் படையணியே போர்க்களத்தை வெற்றி கொள்ள முடியும். சாவுக்கு அஞ்சாத வீரமறவர்களின் மனத்துணிவும் அர்ப்பணிப்புமே எமது எதிரியிடம் இல்லாத பெரும்பலமாக எம்மிடம் இருந்தது.

ஒடுக்கப்பட்ட எமதினத்தின் பலமானதொரு ஆயுதமாகவே தற்கொடைப் போராளிகள் உருவாக்கம் பெற்றார்கள். அவர்கள் எதிரியிடமிருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் எமதினத்தின் தற்காப்புக் கேடயங்களாகவே தம்மை உருவாக்கிக் கொண்டார்கள். அவர்களின் போராட்ட வடிவத்தை எதிர்கொள்ளும் திராணியற்ற சிறிலங்கா அரசானது பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்குலகம் தொடுத்திருந்த போரிற் தானும் ஓடிச்சென்று அணிசேர்ந்து கொண்டு உலகத்தின் கண்களுக்கு நம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது. நாம் சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவே நீண்ட காலமாகப் போராடுகிறோம். நாம் பயங்கரவாதிகள் அல்லர். நாம் யாருக்கும் அச்சுறுத்தல் விடுப்பவர்களோ யாருக்கும் எதிரானவர்களோ அல்லர். நாம் நமது இனத்தின் விடுதலைக்காக மட்டுமே போராடுகிறோம்.

தமிழீழம் விடுதலை அடைந்து சுதந்திர நாடாகி உலக அரங்கிற் சிறிலங்காவுடனும் உலகநாடுகள் அனைத்துடனும் கைகோர்த்து நிற்கவே விரும்புகிறது. எமது மக்களும் சுதந்திரத் தமிழீழநாட்டின் மக்களாக இந்தத் தீவிற் சிங்களவர்களோடும் மற்றைய இனத்தவரோடும் உலகமக்கள் அனைவரோடும் நட்புடன் ஒன்றுகூடி அமைதியாக வாழ்வதையே விரும்புகிறார்கள். இதை இந்தத் தருணத்தில் நாம் உலகத்துக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எம்மினிய மக்களே,

முள்ளிவாய்க்காலின் பின்னே மூன்றரை ஆண்டுகள் கழிந்தோடி விட்டன. பாரம்பரியமாகத் தொன்றுதொட்டு நாம் வாழ்ந்த வாழ்விடங்களை, எமது மரபுவழித் தாயக நிலங்களை எம்மக்களிடமிருந்து பறித்து, அவற்றைக் கையகப்படுத்தி, வரலாற்றையே மாற்றும் முயற்சியிற் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. சிங்களக் குடியேற்றங்களும், படை முகாம்களும், அரசமரத்தைக் காணுமிடமெங்கும் விகாரைகளும், சிங்கள இராணுவத்தினருக்குத் தமிழ்ப் பிரதேசங்களிற் குடியிருப்புக்களும் என நமது அன்னைமண் அன்றாடம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. பொருளாதார வகையில் நன்மை கிட்டக் கூடிய நம்மக்களின் பாரம்பரியமான வாழ்விடங்களை ஆக்கிரமித்து விட்டு, மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்களைக் காட்டுப் பகுதிகளிலும் வனாந்தரங்களிலும் சிங்களஅரசு குடியேற்றி வருகிறது.

இது தவிரவும் தமிழீழப் பகுதியெங்கணும் ஆங்காங்கே பரவலாக எமது மக்களின் பல ஏக்கர் கணக்கிலான வாழ்விடங்களை ஆக்கிரமித்துப் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழீழப்பகுதி முழுமையுமே ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கான சிங்களப்படையினர் அங்கே காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அனைத்துத் தமிழ்மக்களும் படையினரின் முழுமையான கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர். படையினரின் பிரசன்னத்தைக் குறைத்துக் காட்டுவதற்காகவும் புலனாய்வு நோக்கங் கருதியும் தமிழீழப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான படையினர் தற்போது சீருடை தரிக்காமற் சாதாரண உடையிலேயே நடமாடுகின்றனர்.

இவை அனைத்துக்கும் மேலாக நிர்வாக அலகுகளை மாற்றித் தமிழ்ப் பிரதேசங்களையே இல்லாதாக்கும் திட்டங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழீழப் பகுதியைச் சூழ்ந்துள்ள கடல்மடியிற் தொழில் செய்வதையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த எமது உறவுகளின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் எல்லாம் சிங்களவர்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழீழப் பகுதிகளின் பெரும்பாலான வர்த்தக முயற்சிகள் யாவும் சிங்களவர்களாற் கைப்பற்றப்பட்டுள்ளன.

இனவழிப்பின் ஓர் அங்கமாகச் சிங்கள இராணுவத்தினரும் சிங்களத் தொழிலாளர்களும் தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டுத் திருமணம் செய்கின்றனர். பதின்வயதுத் தமிழ்ச் சிறுவர்களைப் போதைப்பாவனை மற்றும் பாலியல் ஒழுக்கக் கேடுகளை நோக்கிச் சிங்களப் படையினர் வழிநடத்துகின்றனர். இளைஞர்களை இலக்கு வைத்து அவர்களைப் பண்பாட்டுச் சீரழிவுகளுக்குட்படுத்தித் தமிழ் இளையோரிடமுள்ள நாட்டுப்பற்றை இல்லாதொழிக்கப் பேரினவாத அரசு திட்டமிட்டுச் செயலாற்றுகிறது.

இவையனைத்தும் சிங்கள அரசாற் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிற் சர்வதேச சமுகமோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் பாராமுகமாக வாய்மூடி மௌனமாக இருக்கின்றது. விடுதலை வேண்டிப் போராடிய எங்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தினார்கள். சிங்கள அரசுக்குத் துணையாகத் தமது நாடுகளில் எமதமைப்புக்குத் தடை விதித்தார்கள். சிங்கள அரசுக்கு ஆயுதங்களையும் பில்லியன் கணக்கிற் கடனுதவிகளையும் வழங்கி எம்மனைவரையும் கையறு நிலைக்குத் தள்ளினார்கள். இவ்வாறாக எமது விடுதலைப் போராட்டத்தைப் பின்னடைய வைத்த உலகநாடுகள் இந்த மூன்றரை ஆண்டுகளில் அவல நிலையிலுள்ள எமது மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுக்கவோ அவர்கள் தத்தமது வாழ்விடங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவோ எந்த முயற்சியையும் செய்யவில்லை. மனித உரிமைகள் பற்றிப் பேசுவோரெல்லாம் சிங்கள அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டிய பிறகும் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு இந்த உலகத்திடமிருந்து இன்னும் நீதி கிடைக்கவில்லை.

தன்னாட்சி உரிமை கோரிப் பல்லாண்டுகளாகப் போராடிவரும் எமது மக்கள் அதற்குக் குறைவான எந்தத் தீர்வையும் ஏற்கத் தயாராக இல்லை. தாம் இன்னலிற் சிக்கியுள்ள இன்றைய நிலையைப் பயன்படுத்தி அரைகுறைத் தீர்வொன்றை யாராவது தமது தலையிற் திணிப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. தங்களுக்கான தீர்வைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். தாங்கள் விரும்பும் நீதியான ஒரு தீர்வையே இந்த உலகம் தமக்குத் தர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
உலகம் எமது மக்களின் நியாயமான விருப்புக்களையும் அவர்களின் கனத்த மௌனத்தின் பின்னுள்ள அர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். தமிழ்மக்கள் படும் துயரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும். தொடர்ந்தும் அவர்களுக்கான நீதி மறுக்கப்படுமேயானால் அவர்கள் தங்கள் மௌனத்தைக் கலைத்துத் தங்களுடைய வழியில் விடுதலையை வென்றெடுக்க முற்படுவார்கள். அதன் பின்னர் அவர்களது நியாயங்களைப் புரிந்து கொண்டு அம்மக்களே தமது வழியில் விடுதலையை வென்றெடுக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய தார்மீகக் கடமையும் பொறுப்பும் உலக நாடுகளுக்கு உள்ளது.

இவ்விடத்தில் எமது மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை உலகம் அறியச் செய்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும் ஊடகங்களுக்கும் எமது விடுதலைக்காகக் குரல் கொடுத்துவரும் வெளிநாட்டவர் அனைவருக்கும் எமது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பார்ந்த எமது நண்பர்களே இளையோரே,சிங்களப் பேரினவாத அரசு நம்மீது ஏவிவிட்டுள்ள சதிச்செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு நாம் வெறுமனே கைகட்டிக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க நாம் நமது ஆற்றலைப் பெருக்க வேண்டும். தமிழரின் தாயகத்தைப் பறித்தெடுத்துத் தமது நாட்டை முன்னேற்றி விடலாம் என்று சிங்களப் பேரினவாதிகள் மனப்பால் குடிக்கின்றனர்.

தமிழர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தித் தமது அடிவருடிகளாக்கி அவர்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று கனவு காணும் சிங்கள அரசியற் தலைமைகளுக்குத் தமிழர்கள் தமது இலட்சிய உறுதியை உணர்த்த வேண்டும். அதற்குத் தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் நம்முன்னே உள்ள அனைத்து வழிகளிலும் தளராது தொடர்ந்தும் போராட வேண்டும். உலகம் எமது குரலுக்குச் செவிசாய்த்து எமது விடுதலைக்கு உதவும் காலம் விரைவில் வரும். அதுநாள் வரை நாம் எமது போராட்டத்தின் நியாயங்களை உலகத்தின் மனசாட்சியை உலுப்பும் வண்ணம் ஓயாது உரத்துக் கூற வேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் துயரங்களையும் எண்ணி எம்மால் முடியுமா என்று நாம் கலங்க வேண்டியதில்லை. துணிவும் தன்னம்பிக்கையும் அறிவுத்திறனும் இருந்தால் எப்படியான நிலைமையையும் எமக்குச் சாதகமாக மாற்றி எம்மாற் போராட முடியும். அதனையே அடக்குமுறையிலிருந்து விடுபடப் போராடி விடுதலை பெற்ற நாடுகளின் போராட்ட வரலாறுகள் நம்பிக்கை தரும் முன்னுதாரணங்களாகி நம்முன்னே உணர்த்தி நிற்கின்றன.
எம் உயிரினும் மேலான உறவுகளே,
தனது கைக்கூலிகளான தமிழர்கள் சிலரை வைத்துச் சிங்கள அரசாற் திட்டமிட்டு நடாத்தப்படும் சதிவலைகளுக்குள் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருந்து எமது இலக்கை வென்றெடுக்க எமக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறோம்.

காலம் இடும் கட்டளையை ஏற்று, மாவீரர்கள் நடந்த வழியிற் தொடர்ந்து போராடுவதன் மூலமே நாம் நமது விடுதலையை வென்றெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். மாவீரர் நாளாகிய இன்று எமது மக்களையும் மாவீரர்களையும் மனங்களில் நிறுத்தி எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலின்படி எமது விடுதலையை வென்றெடுக்கும்வரை அனைவரும் சேர்ந்து அயர்வின்றி உழைப்போம் தளராது போராடுவோம் என்று உறுதி கூறுவோம்.

‘ <3  புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் <3’
மாவீரர்நாள் அறிக்கை – 2012. – தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். 27-11-2012.

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே.

இன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் த
ேசியநாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே எமது விடுதலை இயக்கத்தின் முதல்மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாள். எமது விடுதலைவானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள்
.
பார்முலா 1 கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் வெட்டல் சாம்பியன்-இளம் வயதில் ஹாட்ரிக் சாதனை

பார்முலா 1 கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் வெட்டல் சாம்பியன்-இளம் வயதில் ஹாட்ரிக் சாதனை

இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதன் கடைசி சுற்றான பிரேசில் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார்பந்தயம் சாபாவ்லோ நகரில் நடந்தது.

இங்கிலாந்து  9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி  மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

போபண்ணா & சுப்ரியா திருமணம்
டென்னிஸ் நட்சத்திரம் ரோகன் போபண்ணா & சுப்ரியா திருமணம் நேற்று காலை பாரம்பரிய முறைப்படி நடந்தது.

ராம்ஜெத்மலானிக்கு பாஜக  நோட்டீஸ் வழங்கியது
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று புதிய சி.பி.ஐ. தலைவர் நியமனத்தில் மத்திய அரசு தவறு செய்யவில்லை என்றும் கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான

தாக்கியதாக புகார்!  பிரபல கவர்ச்சி நடிகையை தேடுகிறது போலீஸ்!
 

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் சினிமா தியேட்டரில் கார் நிறுத்துவதில் 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடிகை புவனேஸ்வரி மற்றும் ஆதரவாளர்கள் தியேட்டரை சூறையாடி, போலீசாரை தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஜெயலலிதா வீட்டு முன்பு எம்எல்ஏ முற்றுகை
அதிமுக அமைச்சர் மாதாவரம் மூர்த்தியை பதவி விலக்கக்கோரி, அம்பத்தூர் எம்எல்ஏ வேதாச்சலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டனில் குவிந்தனர். அவர்கள் தங்கள்

மாவீரர் நாள் : திருமாவளவன் உரையாற்றுகிறார்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் அறிவிக்கப்பட்ட நவம்பர் -27 மாவீரர் நாள் நிகழ்வுகளை, ஒவ்வோர் ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

ஈழ தமிழர்களுக்கு எல்லாளன் படையின் வேண்டுகோள்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எல்லாளன் படை ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில்,
’’எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக


விசாரணைக்கு வருமாறு சிறிதரன் எம்.பி. க்கு அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனை விசாரணக்கு வருமாறு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

13வது திருத்தத்தை ரத்துச்செய்ய முயன்றால் தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டி வரும்!- ஸ்ரீ.மு.கா. ஜனாதிபதிக்கு கடிதம்
அரசியலமைப்பிலிருந்து 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் தீர்க்கமான முடிவுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் என்று தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம்

நாகப்பட்டணம் கடற்கரைக்கு மர்மமாக வந்து மறைந்த விசைப்படகில் வந்த 50 பேர் யார்!
நாகப்பட்டணம் கடற்கரைக்கு ஒரு மர்மமான விசைப்படகு கரை தட்டி நின்றுள்ளது. அதில் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் மாயமாகி விட்டனர்

தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளன!
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டிய வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகின்றன.
பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி : ஹக்கீம்
நீதியமைச்சிற்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள 195 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கொழும்பு-12 இல் அமைந்துள்ள இலங்கை சட்டமன்றத்தின் கேட்போர் கூடத்தில்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் : படையினரால் அகற்றப்பட்டன
கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வர்த்தக பீடத்தை சுற்றியுள்ள சுவர்களில் இன்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் தின சுவரொட்டிகள் படையினரால் அகற்றப்பட்டன.
கிரேண்ட்பாஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சற்றுமுன்னர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மூவரும் நஞ்சருந்தி பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தீர்வின்றேல் சாகும் வரை போராட்டம் : செல்வம் எம்.பி.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு விரைவில் உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஜனவரியில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

பொலிஸார் என கூறி தமிழ் வியாபாரி வீட்டில் கொள்ளை
பொலிஸார் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட 7 பேர் அடங்கிய குழு கிரேண்ட்பாஸ் டிமேல் தொடர்மாடி தொகுதியில் உள்ள தமிழ் வியாபாரியொருவரின் வீட்டில் சுமார் 40 பவுண் நகை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.


சவூதியில் சிறைவாசம் அனுபவித்த 60 பேர் நாடு திரும்பினர்
சவூதி அரேபியாவில் நிர்கதி நிலைக்குள்ளாகியும் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்த 60 தமிழ் , முஸ்லிம் ,சிங்கள இளைஞர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
 


மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், பதுளை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் சித்ததா நகரிலுள்ள சிறையில் 2 முதல் 7 மாதம் வரை சிறைவாசம் அனுபவித்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மூன்றாவது தடவையாக திருமணம் செய்து உள்ளார்.
இத்திருமணம் கல்கிசையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று காலை மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றது.
விரல் விட்டு எண்ணக் கூடிய தொகையினரே திருமணத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
ஊடகங்களுக்குக்கூட அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கவில்லை.
மணமகள் மலீகா. எல்லோரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய விடயம் என்னவென்றால் இவர் மூன்றாவதாக தெரிவு செய்து உள்ள மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண் என்பதுதான். மலீகா ஒரு நடிகையும் ஆவார்.

முதலிரவு அன்றே தம்பதியரிடையில் கடும் சண்டை 


யாழ். தென்மராட்சிப் பகுதியில் நடந்த கலியாண வீட்டில் அன்று இரவே புதுமணத்தம்பதியரிடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. கடந்த வாரம் தென்மராட்சிப் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்று இரவே தம்பதிகள் முட்டி மோதிக் கொண்டனர்.

காதலர்களின் சில்மிச கூடாரங்களாக மாறிவரும் வெள்ளவத்தை கடற்கரை!


எனினும் காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் அட்டகாசத்தினால் கரையோரங்களுக்கு நிம்மதியாக பொழுதைக் கழிக்க வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகிறார்கள்.
வெள்ளவத்தை தமிழர்கள் பெருமளவாக வாழும் பகுதி. அங்கு அழகிய கரையோரங்கள் அப்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

26 நவ., 2012




களமும் காதலும்(மாவீரர் 5ம் நாள்)
( அ.பகீரதன்)

அம்மி மிதிக்கும் வயதில்
விம்மி வெடித்தீர் 
கும்மி அடிக்கும் பருவத்தில்

குப்பி கடித்தீர்

கல்வி கற்கும் வயதில்
சொல்லி அடித்தீர்
செல்வி கலையும் பருவத்தில்
வேள்வி வளர்த்தீர்


முத்தங்கள் தொடுக்கும் வயதில்
யுத்தங்கள் தொடுத்தீர்
அர்த்தங்கள் புரியும் பருவத்தில்
அனர்த்தங்கள் தடுத்தீர்

பெண்ணைக் காதலிப்பதே
பேருவகை என அவன் நினைக்க
மண்ணைக் காதலிக்கும்
மகத்துவத்தை போதித்தீர்

இடுப்புவலி அடுப்புவழி தொடரும்பழி
அதுவே பெண்ணென அவன் நினைக்க
கரும்புலி கருணைமொழி காக்கும்விழி
அதுவே பெண்ணென நிரூபித்தீர்

அடிமைப்பூ அழுமூஞ்சி அருளிக்கொட்டை
அதுவே பெண்ணென அவன் நினைக்க
விடுதலைப்புலி உரிமைக்குரல் சயனற்வில்லை
அதுவே பெண்ணென சாதித்தீர்


வெள்ளியும் செவ்வாயும்
விரதமிருந்த பெண்டீர்-எமக்காய்
கொள்ளியும் கொலையும் எடுத்தீரே
எண்ணியும் வணங்கியும் உமைவாழ்த்துறோம்

ஈழத்து நிலமெல்லாம் நீ
பூவாய் மலரும்
தாயகத்து தாயிடத்தே நீ
சேயாய் வளரும்



அன்புடன், அ.பகீரதன்

www.pageerathan.blogspot.ca



அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் இலங்கைக்கான நெருக்கடிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.


மாஜி திமுக அமைச்சர் செல்வராஜ் மரணம்
முன்னாள் தி.மு.க.அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சமயநல்லூர் செல்வராஜ்.

நடிகை சுபா திடீர் மரணம்

அண்மையில் வெளியான "மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்த நடிகை சுபா புட்டேலா (21) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

2வது டெஸ்ட்: தோல்வி முகத்தில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது.
சீரற்ற காலநிலையால் ஆறு பேர் உயிரிழப்பு
தென்பகுதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நீரில் மூழ்கி நான்கு பேரும் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி இருவரும் உயிரிழந்துள்ளதாக அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
 

58 வெடிகள் முழங்க சென்னையில் தமிழீழத் தேசியத் தலைவரின் 58வது பிறந்தநாள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 58வது பிறந்த நாளை சென்னையில் மாணவர்கள் சிலர் நள்ளிரவு 12:00 மணிக்கு கேக் வெட்டிக் கொண்டாட்டியுள்ளனர்.

அரசாங்கம் இழுத்தடித்தால் சர்வதேச ரீதியில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சாத்வீகப் போராட்டம்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசியல் தந்திரோபாயங்களைக் கையாள உள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்தியா,

இராணுவத்திலிருந்து 6 தமிழ் யுவதிகள் விலகியுள்ளனர்: இராணுவ பேச்சாளர்
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட 109 தமிழ் யுவதிகளில் 6 பேர் சுய விருப்பத்தின்பேரில் விலகிச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.


போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படையினரை நிலைநிறுத்தியுள்ளதும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் தலையீடுகள் இருப்பதும் சர்வதேச அளவில் இலங்கைக்கு கடும் நெருக்கடியான விவகாரமாகி வருகிறது.
போர் முடிந்த பின்னர் கணிசமானளவு படையினரை வடக்கில் இருந்து குறைத்து விட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொள்ளும் அதேவேளை இனிமேலும் படைக்குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

25 நவ., 2012

முஸ்லிம் காங்கிரஸ் யாரின் கைப்பொம்மையாக உள்ளது?: அப்துல் மஜீத்
திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற
பஸ்-லொறி மோதி விபத்து: ஆறு பேர் வைத்தியசாலையில்.விரேசரி 
காங்கேசன்துறைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும்: சுவராம் மனித உரிமை கழகம் வேண்டுகோள்
தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா.ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 50,00​0 பேர் திரண்ட வீரபாண்டி ஆறுமுகம் இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் கண்ணீர்!

 
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 அன்று காலமானார். வீரபாண்டி ஆறுமுகம் உடல் அவரின் சொந்த ஊர் சேலம் பூலாவரிக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க அழகிரி, முரசொலி செல்வம், எ.வ.வேலு, சுப்புலட்சுமி ஜகதீஷன்,

மலர் வளையத்துடன்  சுவிஸ் விடுதலைப்  புலிகளின் பணியாளர்கள்  
கேணல் பரிதியின் வித்துடலுக்கு மக்கள் இறுதி வணக்கம்
பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் வித்துடல் மக்களின் இறுதி வணக்கத்திற்காக காலை 10:00 மணியளவில் வாத்திய முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டது.

24 நவ., 2012



கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு 24.11.2012

சிங்கள அரசின் எல்லை தாண்டிய நயவஞ்சகச் சதியால் 08.11.2012 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தளபதி கேணல் பரிதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வும் வித்துடல் விதைப்பும் எதிர்வரும் சனிக்கிழமை 24.11.2012 அன்று  நடைபெறும் என்பதை  அறியத்தருகின்றோம் .
மும்பை டெஸ்ட் போட்டியில் புஜாரா- அஸ்வின் பொறுப்பான ஆட்டம்: இந்தியா 266 ரன்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.  இந்த டெஸ்டில் இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக

India 266/6 (90.0 ov)
England
India won the toss and elected to bat
Stumps - Day 1
India 1st inningsRB4s6sSR
View dismissalG Gambhirlbw b Anderson
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : கிளார்க் இரட்டைச்சதம்தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அணித் தலைவர் மைக்கல் கிளார்கின் இரட்டைச்சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும்: மு.க.ஸ்டாலின்
வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ய எடியூரப்பா திடீர் முடிவு!
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்தார். அடுத்த மாதம் 10ம் தேதி தான் தலைவராக பொறுப்பேற்க உள்ள கர்நாடக ஜனதா கட்சியின் அறிமுக விழா நடைபெறும் என அறிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு தமிழக பொலிஸார் கோரிக்கை
சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982ல் விடுதலைப் புலிகளுக்கும், புளொட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றில் சிபிசிஐடி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான இரகசிய அறிக்கை: அடுத்தது என்ன?
ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான இரகசிய அறிக்கை தொடர்பில் அடுத்தது என்ன என்ற கருத்துக்களமும் கலந்துரையாடலும் நேற்று மாலை கனடிய தமிழர் பேரவை ஏற்பாட்டில் ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

ad

ad