புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012


யாழ்.பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதையும் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து ஜெனிவா ஜக்கிய நாடுகள் சபையின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-kavanayiirppswiss%20(2).jpgயாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் மீது சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினர் தாக்குதலை நடத்தி பல மாணவர்களை படுகாயங்களுக்கு உட்படுத்தியதோடு

புங்குடுதீவைச் சேர்ந்த யாழ் பல்கலை கழக ஒன்றிய செயலாளர் தர்சனந் பரமலிங்கம் கைது 

பெற்றோல் குண்டை வீசியதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது - மாணவர்கள் மத்தியில் கடும் அச்சம்(2ஆம் இணைப்பு)க.ஜனமேயன்(கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்), தர்சானந்(கலைப்பீட மாணவன்,யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர்), சுதர்சன்(மருத்துவபீட மாணவன்), பரந்தாமன் விஞ்ஞான பீட மாணவன்) ஆகிய நான்கு மாணவர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியிலும் சுவிஸ் பணக்காரர்களிடம் குவிகிறது பணம்
ஐரோப்பா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இக்கால கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் மட்டும் பணக்காரர்களிடம் மேலும் மேலும் பணம் குவிகிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்று முதல் முந்நூறு பணக்காரர்களின் சொத்து மதிப்பு 512 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.

பாலஸ்தீனத்தைப் போன்று தமிழ் ஈழத்தையும் ஐ.நா. ஒரு நாள் அங்கீகரிக்கும்: வைகோ
பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. மன்றத்தில் தனிநாடு என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அதுபோலவே, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தையும் ஐ.நா. மன்றம் அங்கீகரிக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்
யாழ். பல்கலைகழக மாணவர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியதை கண்டித்தும் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்தும் எதிர்வரும் 10ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது


 
ஈ.பி.டிபியின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்கள் ஆர்ப்பாட்டம்!
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவதாகத் தெரிவித்து ஈ.பி.டிபியின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

1 டிச., 2012



  • தயவுசெய்து கல்யாணம் பண்ணி தொலைங்க பாதிரிமார்களே!

என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்

பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.
பாதிரியார் ராஜரத்தினம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிளாரன்சுமேரி பாட “ரதியின் கீதம்” என்ற ஆல்பம் தயாரித்தார். அந்த ஆல்பம் கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதனால் இருவரது சந்திப்பும் தினமும் நடக்க தொடங்கியது. அவரை சந்திக்க ஜோசப்கல்லூரிக்கு பிளாரன்சுமேரி செல்வது உண்டு. அவரும் தினமும் விரும்பி அழைப்பது உண்டு.
இந்தநிலையில்தான் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி பிளாரன்சுமேரி கற்பு பறிபோனதாக கூறப்படும் நாள். வழக்கமாக இருவரும் சந்திக்கும் அதே கல்லூரி அறையில் தான் கற்பு பறிபோனதாக பிளாரன்சு மேரி கூறியுள்ளார்.
பாதிரியார் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் அவருக்கு தலைகனக்க தொடங்கியது. மயங்கி விழுந்தார். சிலமணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. நடக்க கூடாதது நடந்து விட்டதாக அறிந்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்ததாக பிளாரன்சுமேரி கூறியுள்ளார். சிலநாள் கழித்து அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். வயிறு சற்று பெரிதாக இருப்பதை அறிந்தார். உடனே நம்பதகுந்த பெண் டாக்டர் ஒருவர் உதவியை நாடினார். கர்ப்பம் அடைந்து இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.தயவுசெய்து கல்யாணம் பண்ணி தொலைங்க பாதிரிமார்களே!

    என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்

    பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.

ரவி கருணாநாயக்கவின் கருத்தால் சபையில் நேற்று பெரும் அமளிதுமளி, மூன்று தடவைகள் ஒத்திவைப்பு

சபாபீடத்திலிருந்து அஸ்வர் எம்.பி. விடுத்த உத்தரவு தவறென உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம்
வெளிவிவகார அமைச்சின் குழுநிலை விவாதத்தில்

பிரதம நீதியரசருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

* ஆட்டோ சாரதிகள் பேரணி
* நாட்டை துண்டாடும் சதியை முறியடிக்குமாறு பலத்த கோ'ம்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஆட்டோ சாரதிகள் நேற்று கொழும்பில் பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை

பிரதமரின் மகனுக்கு பாராளுமன்றத்தில் இடம்?


பிரதமர் தி.மு. ஜயரத்ன மருத்துவ விடுமுறையில் இருப்பதால் பாராளுமன்றத்தில் அவருக்கு பதிலாக அவரது மகன் அனுராத ஜயரத்ன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.



ஒரு தலைக்காதல் விவகாரம்: மன்னாரில் கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரின் அதிரடி நடிவடிக்கையினால் மீட்பு

மன்னாரில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலைக்கு முன் வைத்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் பின்னர் மாலை 2.30 மணியளவில் மன்னார்


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி : பங்களாதேஷ் அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி ஏழு விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.


மன்னாரில் பாடசாலை சீருடையுடன் மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்
மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் இன்று மதியம் சிகப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற 4 இளைஞர்களினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சந்தித்த மூன்று விழாக்கள்: ஜெயலலிதா உரை 
தமிழக சட்டப்பேரவையின் வைரவிழா பேரவை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.  இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.


என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாரதி,பிரபு உடல்கள்
மதுரை மருத்துவமனையில்!
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆல்வின் சுதன். இவர் கடந்த மாதம் 27-ந்தேதி வேம்பத்தூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது படுகொலை செய்யப்பட்டார்.
பல தேசிய தலைவர்களை உருவாக்கியது
தமிழக சட்டமன்றம்: பிரணாப் முகர்ஜி உரை
தமிழக சட்டப்பேரவை வைரவிழா இன்று சென்னை கோட்டையில் நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை :
’’தமிழக சட்டசபை பழம்பெருமை கொண்டது. இங்கே

சர்வதேச நிலைப்பாடுகள், ஐ.நா. அறிக்கைகளை பரிசீலிக்காது அவற்றை நிராகரிப்பது நாட்டுக்கு பாதகமானது : சம்பந்தன் எம்.பி.

இலங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் நிலைப்பாடுகளையும் ஐ.நா.வின் அறிக்கைகளையும் எந்தவித பரிசீலனைக்கும் உட்படுத்தாதவகையில் அவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதானது


புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச ஆதரவு!– சுனந்த தேசப்பிரிய
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் என்று அழைக்கப்படும் அமைச்சர் விமல் வீரவன்ச, 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்யக் கோருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலரது விளக்கமறியல் நீடிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் என்று கூறப்படுபவரை எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இன்று காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
இவர் கடந்த 1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி பஞ்சாப்பின் ஜீலம் பகுதியில் பிறந்தார்.


கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்: அமெரிக்க நீதிமன்றத்தில் மகிந்தவை விடாது துரத்தும் வழக்கு
வத்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

30 நவ., 2012





சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கப்போவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக தேசிய வானிலைத் துறையான மீட்டியோ சுவிஸ் தெரிவித்தது.
இன்று காலை லாசேன், ஃபிரிபோர்க் உட்பட தெற்கு ஆல்ப்ஸ் பகுதியில் பனி அதிகமாக பெய்யும் என்பதால் பனிப்புயல் வீசக்கூடும்.
இந்தப் பனிப்புயலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சுவிட்சர்லாந்து தயாராகி
சட்டப்பேரவை வைரவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
தமிழக சட்டப்பேரவையின் வைரவிழா வெள்ளிக்கிழமை (30 நவம்பர் 2012) மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி

காவிரி நதி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரண

காவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, கர்நாடகா முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை ப யனளிக்காதது குறித்து தமிழக அரசு

இலங்கையின் என்னதான் நடக்கிறது ? சிங்கள் மாணவர்கள் யாழ் மாணவர்களுக்கு ஆதரவு !

இதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக் கழகத்திலும் சிங்கள மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ் பல்கலைக் கழக மாணவர் மீது கை வையாதே !, மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து ! போன்ற சுலோகங்களுடன்

கன்னடன் தண்ணீர் மறுப்பின் மின்சாரம் எதற்கு ? மின்சாரத்தை தடுப்பது உறுதி என்றார் ?சீமான்

காவிரி நீரை தர மறுத்தால் கர்நாடகாவிற்கு மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்: சீமான்
ஓசூர்: கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தர மறுத்தால், தமிழகத்தில் இருந்து அளிக்கப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று

தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு: தமிழக அரசியல் தலைவர்கள்-விவசாய அமைப்புகள் கண்டனம்


ஏற்கனவே குறுவை சாகுபடியை இழந்த தமிழக விவசாயிகள், கருகி வரும் சம்பா பயிர்களையாவது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கர்நாடகம் கைவிரித்துவிட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீர்ப்பறவை பாடல் வரிகள் மாற்றம்: கவிஞர் வைரமுத்து அறிக்கை

இதையடுத்து பாடலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மதிப்புக்குரிய கிறிஸ்தவ அன்பர்கள் சிலரின் வேண்டுக்கோளுக்கு இணங்க ‘நீர்ப் பறவை’ பாடல்களில் அவர்கள் குறிப்பிட்ட

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் தங்கள் உறவுகளுக்கு அவசர அழைப்பு !


பன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள்

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
கடைசி நாளான வியாழக்கிழமை தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய இலங்கை அணி கடைசி வேளையில் (செஷன்) 195 ரன்களில் சுருண்டது.


தேமுதிக அவைத்தலைவர் கைது



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  அவதூறாக பேசிய வழக்கில் சேலம்‌ மாவட்ட தே.மு.தி.க., அவைத்தலைவரை இன்

திமுகவை தமிழக அரசு மதிக்காததால் சட்டப்பேரவை வைர விழாவை புறக்கணிப்போம் : கலைஞர்

தமிழக சட்டப்பேரவை வைரவிழா நாளை நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார். இந்த வைரவிழா ஏற்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ள தி.மு.க. தலைவர் கலைஞர், அந்த வை


என் கணவர் சாக நான் விரும்பவில்லை: குழந்தையுடன் நானே தற்கொலை செய்து கொள்கிறேன்- தற்கொலை செய்த இளம்பெண் எழுதி வைத்த பரபரப்பு கடிதம்
கணவன்- மனைவி இடையே தகராறு - மகேஷ்வரி தனது 11 மாத பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கூதாம்பியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). அவினாசியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மகேஸ்வரி (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 11 மாதத்தில் பெண் குழந்தை
ஓடும் ரெயிலில் 13 கிலோ நகை கொள்ளை: மும்பை கொள்ளையர்கள் கைவரிசை- பரபரப்பு தகவல்கள்
கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஈரோடு அருகே ரெயில் வந்தபோது நகை வைத்திருந்த சூட்கேசுகளின் பாதுகாப்பு சங்கிலியை துண்டித்து
பாலிவுட்டின் முன்னாள் பிரபல கதாநாயகியான மனிஷா கொய்ராலா
உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பம்பாய், உயிரே, இந்தியன் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று
விக்கிலீக்' இணையதளம் அதிபராக ஜூலியன் அசாங்கே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்
அமெரிக்காவின் தூதகரம் இடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இருவர் தம்மை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 
.புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 

மூன்றரை வருடங்களின் பின்னர்  ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்..
கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.

இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
.
பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை தொடங்கவுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, நேற்று புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே


அவுஸ்திரேலிய அணி முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் ஓய்வு


அவுஸ்திரேலியா கிரிக்கெட் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிராக பேர்த்தில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், தாம் ஓய்வு பெற

பாராளுமன்றத் தெரிவுக்குழு எந்தவொரு வெளிச் சக்திகளுக்கும் பதில் கூறும் கடப்பாடுடையதல்ல

வெளியிலிருந்து வரும் உத்தரவுகள் செல்லுபடியற்றதாகும்
அமைச்சர் நிமலின் சிறப்புரிமை மீறல் பிரச்சினைக்கு சபாநாயகர் சமல் பதில்

பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையை விசாரணை செய்ய நிமித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று சபாநாயகருக்கு பதில் கூறும் கடப்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது. அது வேறு எந்தவெளிச் சக்திகளுக்கும்
நிறுவனங்களுக்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒருமாத அவகாசம்

பாராளுமன்றமே கால நீடிப்பு செய்யலாம் - அமைச்சரவை பேச்சாளர்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒரு மாத கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லையை நீடிப்பது குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்குமென பதில்
பொலிஸார் மூர்க்கம் .ரணகளமானது பல்கலைக்கழகம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிமீது கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் நேற்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இராணுவத்தினரும்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களையே விரட்டினோம்
பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். மாணவர்களைத் தடுக்க
வலம்புரிச் செய்தியாளர் மீது படையினர் தாக்குதல்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செய்தி சேகரிக்கச் சென்ற வலம்புரியின் செய்தியாளர் உதயராசா சாளின் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், வலம்புரிச் செய்தியாளர் எஸ்.இராஜேஸ்கரன் அங்கிருந்து படையினரால் விரட்டப்பட்டார்
ராஜீவ் கொலை சூத்திரதாரிகளை மத்திய அரசு விட்டு வைத்துள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

29 நவ., 2012

இராணுவம் காவல்துறையால் அத்து மீறி உடைக்கப்பட்ட பல்கலை கழக ஒன்றிய செயலாளரின் அறை (புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்ஹை சேர்ந்தபரமலிங்கம் தர்சானந்)
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீரெலோ காரியாலயத்தின் மீது இன்று அதிகாலை 3.35 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

ஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.
இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில்

ஜெயலலிதா -ஷெட்டர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டு பெறுவதற்காக கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க ஜெயலலிதா இன்று (29.11.2012) மதியம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடக முதல் அமைச்சரிடம் பேச பெங்களூரு செல்கிறேன்: ஜெயலலிதா
 
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டு பெறுவதற்காக கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க ஜெயலலிதா இன்று (29.11.2012) மதியம் பெங்களூரு புறப்பட்டு
 ஆனந்த விகடன
விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து-
''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''  இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:

“மாவீரர் தந்த பலத்தோடு அயராதுதொடர்ந்து முன்னெடுப்பொம்”- நியூயோக்கில் மாவீரர் நாளில் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை
'தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் களமாடிக் காவியமாகிவிட்ட நமது தேசத்தின் வீரப்புதல்வரை மனதிருத்தி நாம் வணங்கும் நாள்" அமெரக்காவின் நியூயோக்கில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாளில்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வு 2012
தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் 27ம் திகதி காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல்லில் 2012 இன் தேசிய மாவீரர் நாள்

சென்னை மாவீரர் நாள் நிகழ்வு: வைகோ, பழ.நெடுமாற​ன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா , புகழேந்தி தங்கராசு, வேளச்சேரி மணிமாறன் உரை
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த போராளிகளை நினைவுகூரும் நாளான மாவீரர் நாள் 2012 நவம்பர் 27 அன்று சென்னை தியாகராயார் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திமுக ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பிரபாகரம்" - "உலகின் புதிய உயிரோடை"!

ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!

தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
 அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்பு
ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் 6 விக்கெட்டை வைத்துக்கொண்டு 316 ரன் எடுக்க வேண்டியுள்ளதால் நியூசிலாந்து அணி வெற்றி தொடரை 1-1 என சமன் செய்ய வாய்ப்புள்ளது
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி 25-ந்தேதி கொழும்பில்

1983 முதல் 2012 ஜுன் வரை 98 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுரேஷ் எம்.பி. தகவல்

1983 ஆம் ஆண்டு முதல் 2012 ஜுன் 29 ஆம் திகதி வரையில் 98 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களை எட்டுகின்ற நிலையில் இதுவரையிலும் விடுவிக்கப்படாத 810
13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது : ஹக்கீம்
அமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றோர் கூறிவருவதைப் போல, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளா தெனவும் அவர்களது நிலைப்பாட்டிற்கு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரித்து வாக்கு! திருமா அறிவிப்பு!
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு. அதற்காக வணிகர்

28 நவ., 2012



தே.மு.தி.க எம்.எல் ஏ கைது!
மறியல் செய்த 36 தொண்டர்களும் கைது! 


 சேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கமுள்ள தலைவாசல் பஸ் ஸ்டாண்டில், கடந்த ஞாயிற்று கிழமையன்று இரவு அ.தி.மு.க., அரசைக் கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், கண்டன பொதுக்கூட்டம்  நடந்தது.
நக்கீரன் 
தம்பிக்கு பிறந்தநாள்! - சீன, ஜப்பான் எழுத்துருக்களை கோர்ட் வேர்ட் ஆக பயன்படுத்த நினைத்த பிரபாகரன்! புதிய தகவல்களுடன் கே.எஸ்.ராதாகிருஸ்ணன்
 நவம்பர்-26! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 58-வது பிறந்தநாள். நவம்பர் 27 தமிழீழத்தின் மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் பிரபாகரனின் பிறந்த நாளும், தமிழர்களின் தாயக விடுதலைக்கான களப்பணியில் உயிர் கொடை கொடுத்த போராளிகளை நினைவுகூரும்

புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்: திவயின
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்.தேவி புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: 6 பேர் பலி
கொழும்பிலிருந்து ஓமந்தை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்துடன், முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாந்திரீக கிரியைகளில் பங்கேற்ற 15 வயது சிறுவன் பலி
அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் நடைபெற்ற மாந்திரீக கிரியைகளில் பங்கேற்ற சிறுவன் ஒருவன் பரிபதாமாக கொல்லப்பட்டுள்ளான்.

கேணல் பரிதி அவர்களின் வித்துடல்  (26.11.2012) திங்கட்கிழமை காலை  Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட புனித விதைகுழியில் பெருமளவான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் விதைக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் வித்துடல் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது பெருமெண்ணிக்கையான மக்கள் உணர்வு பொங்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்தியதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் வித்துடல் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.
தொடர்ந்து, இவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வோம் என அங்கு உறுதி எடுக்கப்பட்ட அதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் 27.11.2012 செவ்வாய்க்கிழமை Viparis – Villepinte Hall 8 – Parc des Expositions (RER B)  என்ற முகவரியில் 12.35 மணிக்கு இடம்பெறும் மாவீர்தினத்தில் அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவுபெற்றது.



மாவீரர் நாள் நிகழ்வுகள் 2012 மலேசியா‏

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தெரிவு செய்யப்பட்ட ஓர் இடத்தில் தமிழீழ நேரத்திற்கமைய மாவீரர்களுக்கான ஈகைச்சுடரேற்றல் மற்றும் வீரவணக்க நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன, வெகு சிறப்பாக நடைபெற்ற இன் நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர்,
 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது.


மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்
மாவீரர் தினத்தில் இடிந்தகரையில் நடந்த இளையவர் எழுச்சி மாநாடு பந்தலில் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தில் உதயகுமார் அண்ணனின் மாவீரர் தின உரை 27-11-12

புலியூரில் மாவீரர் தின அஞ்சலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர், புலியூரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த 1983 முதல் 1986-ம் ஆண்டு வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. டேராடூனில் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற புலிகளின்



தோப்புக்கொல்லை முகாமில் மாவீரர் தினம்
 -nakeeran

தியாக சுடர் ஏற்றிய பெண் போராளியின் அம்மா
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை ஈதிழியர் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.
 
 நவம்பர் 27 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம். இந்த நாளை உலகத் தமிழர்கள் ஈழப் போராளிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.


          


மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தின
வவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்; மக்கள் அச்சத்தில்
வவுனியாவில் தீபமேற்றியவர்களை இராணுவமும் புலனாய்வும் துருவித் துருவி பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கசிப்பு தயாரித்த இலங்கையர்கள் இருவர் சவூதியில் மரணம்

சவூதி அரேபியாவின் அல் கொபார் நகரில் வீடொன்றில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் இருவர், கசிப்பு தயாரித்த போது அதிலிருந்து வெளியான விஷவாயுவினால் மரணமடைந்துள்ளனர்.


புலிகளை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பியது துரோகமாகும்: ராம் ஜெத்மலானி


மிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பிவைத்தமை துரோகச் செயலாகும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வுகளுக்கு பாலியலை இலஞ்சமாக கேட்கும் அதிகாரிகள்


சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு உயர் பதவிகளை வழங்க, அதிகாரிகள் பாலியலை இலஞ்சமாக கேட்கும் நிலை

நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள் அறிக்கை



• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப் பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்!

நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள்


லண்டன் மாநகரம் அதிர்ந்தது ! மாவீரர் தினத்தில் பல்லாயிரம் மக்கள் !


லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர் . காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை

சரவணபவன் எம்.பி, உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது யாழ். பல்கலையில் வைத்து படையினர் தாக்குதல
யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டில் யாழ். பல்கலைக்கழக விடுதிகள்! ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதிகள் யாவற்றையும் முற்றாக இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்த எக்ஸ்செல் மாவீரர் தின நிகழ்வு - ஜேர்மனிய நிகழ்வுகள்
லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தேசத்தின் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்திய யாழ்.மக்கள்
பாரிய இராணுவ அடக்குமுறைகளுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையில் தமீழிழ மாவீரர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாப்பட்டுள்ளன.

ஈழ மண்ணின் மறவர்களுக்கு கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக மக்கள் அஞ்சலி
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஒழங்கமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக உறவுகளாலும் மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தாயகத்தினை கண்முன் நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள்!
தமிழீழத் தாயகத்தினை கண்முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகளுக்கு மத்தியில் பிரான்சில் மாவீர் நாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். மாணவர்களால் சிங்கள பாதுகாப்பு படை விடுதிகளிலிருந்து விரட்டியடிப்பு! உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் மாணவர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என்பதோடு உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது செய்மதி அண்டவெளிக்கு அனுப்பப்பட்டது
இந்த தகவலை குறித்த செய்மதி செயற்றிட்டத்தில் தலைமை நிறைவேற்று அதிகாரி விஜித் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் சட் 2 இன்று மாலை இலங்கை நேரப்படி 4 :00 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது

ad

ad