புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012


தனது கணவர் ஏன் இறந்தார் என்பத குறித்து, பாடகி நித்யஸ்ரீயின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது போலீஸ். “கணவர் ஆற்றில் குதித்த விபரம் அறிந்தவுடன் நானும் அடையாறு பாலத்துக்கு ஓடிச் சென்றேன். அங்கே அப்போது அவரது உடல் கிடைத்திராத காரணத்தால், எப்படியும் அவர் உயிரோடு வருவார் என்று நம்பி…திரும்பி விட்டேன்” என்று அவர் தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 ஆனால், நித்யஸ்ரீ வீடு திரும்பியபின், அவரது கணவர் மகாதேவன் இறந்து விட்டதாக தகவல் வந்து சேர்ந்ததாக சொல்கிறது, அவரது வாக்குமூலம். “தன் தாயார் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த மகாதேவன், அவர் இறந்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்” என்பதே வாக்குமூலம்

மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது கனவிலும் கூட நடக்காது! யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்க
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மாணவர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

பந்தல் சேதமாக்கப்பட்ட போதிலும்,அடக்குமுறைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பின் உண்ணாவிரதம் ஆரம்பம்
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் அப்பாவி பொதுமக்களை காரணமின்றி கைது செய்து, தடுத்து வைத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

ஐரோப்பாவிற்கு விஜயம் செய்ய உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்வார் எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கும் வரையில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்


கனடாபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பூவரசம்பொழுது  புகைப்படங்கள் கீழே அழுத்தவும் 
நாசா விண்வெளி மறுப்பு:அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆய்வு மையம் இதை மறுத்துள்ளது.
எரிமலை சீற்றம், சூரிய காந்த புயல், கோள்களின் மோதல், விண்கற்களின் தாக்குதல், சுனாமி உள்ளிட்ட பல காரணங்களால், உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.ஆனால், மேற்கண்ட சம்பவங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் தான் உலகம் அழியும்.


புனேவில் நடந்த முதல் "டுவென்டி-20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்து அணியை 5 விக்‌கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 2 "டுவென்டி-20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என இங்கிலந்து வென்றது. இரு அணிகள் பங்கேற்கும் முதல் "டுவென்டி-20 போட்டி புனேவில் இன்று நடக்கிற

 T3 வீதித் தொடருந்தின் இரண்டாவது பகுதி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Porte D'Ivry முதல்  Potre de la Chapelle வரை 14,5 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யயும் இந்த T3 வீதித் தொடருந்து பிரபல அரசியல்வாதிகளின் பயணத்தோடு இன்றைய தனது முதற் பயணத்தைத் தொடங்கியது. 

இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைகளுடன் இணைந்து இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினர், இரகசிய கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நஹான் சிறப்புப்படை பயிற்சி நிலையத்திலேயே இந்தப் போர்ப்பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதிக்கு புத்தர் சிலையொன்றைக் அன்பளிப்பு செய்ததுடன், இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவினால் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று உறுதியளித்தார். ஐந்து நாள்

வெள்ளத்தில் மிதக்கிறது மட்டக்களப்பு ; உயிரிழப்பு 22ஆக உயர்வு

நாட்டில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் வெள்ளம், மண்சரிவு, மரம் முறிவு ஆகியவற்றில் சிக்கி நேற்று மாலை வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் வாள் வெட்டுக்கு இலக்கு
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி

 

மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில்

20 டிச., 2012


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை (படங்கள்)

thx nakeeran

England 157/6 (20/20 ov)
India 158/5 (17.5/20 ov)
India won by 5 wickets (with 13 balls remaining)

வடமராட்சி கிழக்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குறித்த சிறுமி குறித்த சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் தமது பெற்றோருக்கு சிறுமி அறிவிக்கவில்லை.


தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி
மின்விளக்கை அணைப்பதற்காக முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்!
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும்  விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம்  இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
கணவர் மகாதேவன் தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்ததும் நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். 

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாகிறார். அகமதாபாத்தின் புறநகர் பகுதியான மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதல்- மந்திரி மோ
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களை பாரதீய ஜனதா கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. து. பா.ஜனதாவின் இந்த வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் கட்காரி நன்றி தெரிவித்துள்ளார்.


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை!
சென்னை கோட்டூர்புரம் அடையாறு பாலத்திற்கு விலை உயர்ந்த ஆடம்பரமான கார் ஒன்று இன்று (20.12.2012) மதியம் 12.45 மணி அளவில் வந்தது. அந்த கார் திடீரென அடையாறு பாலத்தில் நின்றது. 


மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி
குஜராத் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்த-ன் வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. இதில் காலை முதலே பாஜக முன்னிலை பெற்றிருந்தது.

பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்றிய பெண்மணி

வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐவரை பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கெக்கிராவ ஆண்டியாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ பலாகல பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சென்ற ஜீப் வண்டி நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்.எம். நிலந்தி ரத்நாயக்க (35 வயது) என்ற ஒரு குழந்தையின் தாய் குறித்த நபர்களை காப்பாற்றியுள்ளார்.
மேற்படி அதிகாரிகள் நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.



குஜராத்: 107 தொகுதிகளில் பாஜக முன்னிலை
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் கடந்த 13 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (19.12.2012) காலை தொடங்கியது.
பாஜக 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கோசுபாய் பட்டேல் தொடங்கிய குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 



இமாச்சலப் பிரதேசத்தில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
முதல்வர் பிரேம்குமார் துமல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்த-ல் 74.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 
இலங்கை கஅரசின் உயரிய விருதான கலாபூஷணம்  பட்டமளிப்பின் பின்னர் மயில்வாகனத்துடன் (எழுத்தாளர் ஒலிபரப்பாளர் ஊடகவியலாளர் ) என் இனிய நண்பர் தம்பியையா தேவதாஸ் -சிவ-சந்திரபாலன் 

லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !


தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்தக் கோரிக்கை
இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வரும் அடைமழையை அடுத்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால்  மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.இதனைக் கருத்தில் கொண்டு தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்துமாறு ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் இந்தக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற காலநிலை : புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் கேர்ணல் ரணவீர தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.இதேவேளை, மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி வட பகுதி உட்பட நாட்டிலுள்ள பிரதான இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் ஜெனரல் பிக்ரம்சிங், அங்கு புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப்போராளியான தமிழினி உட்பட ஏனைய முன்னாள் புலிப் போராளிகளையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலாபம் முன்னேஸ்வரம் குளம் உடைப்பெடுத்ததால் அப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் வள்ளங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு மதுபான சாலைகளையும், கள்ளு விற்பனை நிலையத்தையும் உடன் அகற்றக்கோரி மன்னாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

பனங்கட்டுக்கோட்டு மீனவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7 கிராம மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி பிக்ரம் சிங், இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேவிபி தலைவர் உயிருடன் எரிக்கப்பட்டது பற்றி ஒரு சாட்சியம்.


சிறிலங்கா இராணுவத்தின் மீதான குற்றப்பட்டியல் தமிழர்கள் மீதான வன்முறை என்பதோடு மட்டும் மட்டுப்படுத்திவிட முடியாது.
சிறிலங்காவிற்கு வெளியே, ஐ.நா.அமைதி

ஸ்.பி.பியே சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலோ, இன்னும் வளர்ந்து வெற்றி பெறாத இசையமைப்பாளர்கள் என்றாலோ 'ஐம்பதாயிரம் கொடுங்க. அது போதும்' என்று இன்முகத்தோடு பெற்றுக் கொள்கிறாராம். ஆனால் ஹரிகரன், பிரசன்னா, மது பாலகிருஷ்ணன் போன்ற முன்னணி பாடகர்கள் யாரும் இவ்வித சலுகைகளை அளிப்பதே இல்லை. அவர்களுக்கென தனி ரேட் இருக்கிறது. அதை அவர்கள் குறைப்பதும் இல்லை. 
சின்ன பட்ஜெட் படங்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஒரே சம்பளத்தை கேட்டு வாங்குகிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.
இன்று 19.12.12 கோபாலகிருஷ்ணன் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் கொலை செய்யபட்டுள்ளார்


சாதிவெறியின் இன்னொரு உக்கிரம்.
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யபட்ட
தலித் இளைஞன் கோபாலகிருஷ்ணன்.
சாதிவெறியின் இன்னொரு உக்கிரம். 
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யபட்ட 
தலித் இளைஞன் கோபாலகிருஷ்ணன்.

கடலூர் மாவட்டம் சேத்தியார் தோப்பு சென்னிநத்தம் சார்ந்த கோபாலகிருஷ்ணன் (தலித் இளைஞன் )அதே மாவட்டத்தை சார்ந்த பரதூர் சாவடி சார்ந்த கவிதா (வன்னியர் பெண்மணி )ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருவரும் படித்து வந்து இருகின்றனர் .இருவருக்குள் காதல் மலர்ந்தது . நான்கு நாட்களுக்கு முன்னாடி கவிதா தன் வீட்டுக்கு செல்ல பேருந்து வராததால் கோபால் கிறிஷ்ணனின் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு விடும்படி கேட்டுள்ளது .கோபால கிருஷ்ணனும் வீட்டிற்கு அழைத்து சென்று இருக்கிறான் .வீட்டில் இருத்த அவளின் பாட்டி என்ன சாதி என்று கேட்டு இருக்கிறார் அவன் தலித் என்று சொன்ன உடனே அடித்து இருக்கிறார் அவளின் பாட்டி .நான்கு நாள் ஆகியும் அவன் காணவில்லை இன்று 19.12.12 தேடிபார்த்தால் கழுத்து அறுக்கப்பட்டு கோபாலகிருஷ்ணன் கொலை செய்யபட்டுள்ளார் .

19 டிச., 2012


பாரிசில் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவில் மாபெரும் அமைதிப் பேரணி! (காணொளி இணைப்பு)

அன்றையதினம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்  பரிதி அவர்களின் நினைவு சுமந்த பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது.கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட

கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு. கள்ள காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை 11 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவி.மும்பையில் பரபரப்பு.

மும்பையில் கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தனது கணவரை ஆள் வைத்து கொன்று உடலை 11 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்று அனுமதித்துள்ளார்கள் 
பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100 பெண்களில் 21 பெண்களுக்கு என்ன நடந்தது ? 30 பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய் ! அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்ன நடந்தது ? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை வழங்கிய இரகசியத் தகவல் ! இந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் ! 

இராணுவத்தினர் தமிழ் பெண்கள் 100 பேரை தாம் தமது படையணியில் இணைத்திருப்பதாக திடீர் என்று அறிவித்த விடையம் யாவரும் அறிந்ததே.
கொழும்பு – பதுளை இரவுநேர தபால் ரயில் ஒஹிய பகுதியில் தடம்புரண்டுள்ளது நுவரெலிய- பதுளை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது . இலங்கையில் கடந்த சில தினங்களாக கடும் சீரற்ற காலநிலை காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஜெனரல் யாழ் விஜயம்: பாக் உளவுத்துறை இயங்குவது தொடர்பாக ஆராய்வாரா இந்திய இராணுவத் தளபதி, ஜெனரல் பகரம் சிங் இன்று கொழும்பு செல்லவிருக்கிறார். இன்று முதல் 22ம் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று

இலங்கை இராணுவத்தின் தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கைது!


சிறீலங்கா படையினரின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சென்னை பல்லாவரம் பகுதியில் இருந்த ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கியூபிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்

புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா முயன்றது - இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ!


போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக
இந்த வருட இறுதி உதைபந்தாட்ட தர வரிசை பட்டியலில் எதிர்பாராத திருப்பங்கள்  வந்துள்ளன பிரேசில் பிரான்ஸ் உருகுவே போன்ற நாடுகள் பாரிய பின்னடைவை   கண்டுள்ளன . சுவிஸ் பாரிய முன்னேற்றத்தை கண்டு 12 ஆம் இடத்தை அடைந்துள்ளது இதோ புதிய தர வரிசை 

1.ஸ்பெயின்
2.ஜெர்மனி
3.ஆர்ஜெந்தீனா
4.இத்தாலி
5.கொலொம்பியா
6.இங்கிலாந்து
7.போர்த்துக்கல்
8.ஹோலந்து
9.ரஷ்யா

நீர்ப்பறவை. திரை விமர்சனம்


நடிகர்        : விஷ்ணு, சுனைனா
இயக்குனர் :சீனு ராமசாமி
இசை        :என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு :பாலசுப்பிரமணியன்
மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பறவை. 

நகரத்தில் இருந்து தனது மனைவியுடன் அம்மாவைப் பார்க்க வரும் மகன், அங்கு இருக்கும் தங்களது பழைய வீட்டை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு வாங்கலாம் என அம்மாவிடம் கூறுகிறான். ஆனால் வீட்டை விற்கமுடியாது என அவனுடைய

புளுபிலிமை விட மோசமான படங்களை காட்டும் சுஹாசினிக்கு மன்சூரலிகான் கண்டனம்.

சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவில் ஆபாச படங்கள் திரையிடப்படுவதாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Mysterious objects believed to have fallen from sky at Quebec-New Brunswick border

கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரன்ஸ்விக் எல்லைப்பகுதியில் இந்த வாரம் வானிலிருந்து வீழ்ந்த இரண்டு உலோகப் பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிவதில் கனடிய இராணுவம் தீவரமாக உள்ளது.

பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரக வாசிகள் வந்திறங்குவதாக, ‘வந்திறங்கியதை என் ரெண்டு கண்ணால் பார்த்ததாக’ அவ்வப்போது வதந்திகள் கிளம்பும். மாயன் மக்கள் வாழ்ந்த மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் கடந்த 1,ம் தேதி ஏராளமான பறக்கும் தட்டுகள் தரையிறங்குவதாக புரளி பரவியது. அழியப் போகும் உலகத்தில் இருந்து மக்களை மீட்டுக்கொண்டு வேற்றுக்கிரகத்துக்கு அவை பறக்கப்போகின்றன. 
மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் பேரழிவை சந்திக்கப் போகிறது.. டிசம்பர் 21,ம் தேதியோடு உலகம் அழியப் போகிறது’’ , உலகம் முழுவதும் இதுதான் தற்போதைய பரபரப்பு பேச்சு. அந்த சம்பவத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதா

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அதாவது டிசம்பர் மாத இறுதி சனிக்கிழமை அன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும்.
உலகத்தின் அழிவு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் ஏற்படும் என கூறிவருகின்ற போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது என புவியியலாளர் லலித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

மு.க.அழகிரி இப்போதுதான் இயல் புக்குத் திரும்பி இருக்கிறார். மகனுக்கு முன்ஜாமீன் கிடைத்து விட்ட சந்தோஷம், அவரைப் பழைய அதே அழகிரி யாகவே மாற்றிவிட்டது!
 'நீங்க கட்டுன வீட்டில் வாழ்றேன், நீங்க வாங்கிக் கொடுத்த காரை யூஸ் பண்றேன். நீங்க அனுபவித்த சிறை வாழ்க்கையையும் நான் அனுபவித்துப் பார்க்க வேண்டாமா?’ - கிரானைட் வழக்கில் தன் மகனுக்கு எப்படியாவது முன் ஜாமீன் கிடைத்துவிடாதா என


 நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
டில்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா



"சன், "டிவி' கலாநிதியின் முகத்திரையை, சில நாட்களில், கிழித்து எறிந்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்,'' என, "சன் பிக்சர்ஸ்' முன்னாள் செயல் அலுவலர் சக்சேனா தெரிவித்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், "சன்' குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர், அய்யப்பன் புகார் கொடுத்த போது, உடன் வந்திருந்த, "சன் பிக்சர்ஸ்' முன்னாள் நிர்வாக இயக்குனர், சக்சேனா அளித்த பேட்டி: சன், "டிவி' நெர்வொர்க்

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி 
------------------------------------------------------------------------

'' புதிதாக ஜெயலலிதா பதவி ஏற்ற பின்பு தான் ஈழத்து அகதிகள் நிம்மதி பேரு மூச்சு விடுகிறார்கள். சுமார் 190ஈழ த்தவர் போரியல் படிக்க ஒழுங்கு பன்னபடுள்ளது நிவாரண நிதியை ஆயிரமா க்கி தருகிறார்கள் கலைஞர் ஆட்சியில் 400 ரூப மட்டுமே அதாவது நாளைக்கு 13 ரூபாதான்.சத்யராஜ் சூர்யா கருணாஸ் விஜய் போன்ற நடிகர்கள் எமக்கு நேரடியாக உதவி செய்கிறார்கள்.பல கல்லூரிகள் இலவசமாக படிக்க இடம் தந்துள்ளார்கள்  முதல்வருக்கு நன்றி .இப்படி கூறிகிறார் ஈழநேரூ . சொல்வதெல்லாம் உண்மை சி தொலைக்காட்சியின் உண்மை விளக்கம் தரும் நிகழ்ச்சி .நன்றி சி டீவீ க்கும் நிர்மலா அக்காவுக்கும் 

100 பேரை கொன்று குவித்த  ரவுடி சுட்டுக்கொலை

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான்.

உக்ரைன் : கடுங்குளிரால் 37 பேர் பலி
உக்ரைன் நாட்டில், கடுங்குளிரால், 37 பேர் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடான உக்ரைனில், தற்போது மைனஸ், 17 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்படுகிறது.

இலங்கையில் சிவப்பு மழை.இந்தியாவில் மஞ்சள் மழை.பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்
அண்மை நாட்களாக இலங்கையில் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்துள்ளதோடு  மட்டுமன்றி வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் பூமியை நோக்கி விழுந்து வருகின்றன.

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் பலவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு அவசியமாக தேவைப்படும் பொருட்களை உடனுக்குடன் வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சித்தாண்டி, வந்தாறுமூலை, ஐயங்கேணி, தளவாய், ஏறாவூர்,கொம்மாதுறை,


நாட்டில் எந்தவொரு காரணத்திலேனும் டீசலின் விலை அதிகரிக்கப்படுமாயின், உத்தேச பேருந்து கட்டண மீளாய்வை பெற்றுக்கொள்ளாது சேவையிலிருந்து விலகப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம். Top News 
[Tuesday, 2012-12-18 17:12:29]
News Service
கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார்.

“நீதானே என் பொன்வசந்தம்” - திரைவிமர்சனம்!


மின்னலே, வி.தா.வா போன்ற முந்தைய ஹிட்டுகளால் கவுதம் மேனனின் காதல் படங்கள் என்றாலே கள் குடித்த நரியாகி திரிவார்கள் இளசுகள். அவர்கள் அத்தனை பேரையும் ஊளையிட வைத்திருக்கிறது நீ.எ.பொ.வ திரைப்படம்.
எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ்மக்களின் விருப்பமாகும் என்று தெரிவித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் இனப் படுகொலையை முன்னின்று நடாத்திய இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப் படைகளாவே பார்க்கப்படுகின்றது. 


ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக ஸ்ரீதேவி, சரஸ்வதி, ஷர்மிளா... என்ற மூன்று பெண்களை திருமணம் முடித்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தினார்....ரகசியமாக காதல் லீலை புரிந்த ரயில்வே அதிகாரி கைது... சென்னையில் பரபரப்பு................!!

சென்னையைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக மூன்று பெண்களை மணந்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது அம்பலமாகி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.அங்குள்ள எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவமணி. 44 வயதான இவர் ரயில்வேயில் அதிகாரியாக இருக்கிறாராம்.

சிவமணிக்கு பெண் பழக்கம் அதிகம் இருந்துள்ளது. காம இச்சை கொண்டு அலைந்த அவர் அடுத்தடுத்து 3 பெண்களை மணந்து, குழந்தைகளையும் கொடுத்து குடும்பமும் நடத்தி கைதாகியுள்ளார்.

சிவமணி முறைப்படி முதலில் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ஸ்ரீதேவி. இவருக்கு வயது 35. நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

ஸ்ரீதேவியுடன் குடும்பம் நடத்தி வந்த சிவமணி திடீரென 2 வருடங்களுக்கு முன்பு மாயமாகி விட்டார். இதனால் திடுக்கிட்டுத் தவித்துப் போன ஸ்ரீதேவி அவரைத் தேடாத இடம் இல்லை, போகாத இடமி்ல்லை. ஆனாலும் காணவில்லை சிவமணி.

இதையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஸ்ரீதேவி. அவர்களும் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையி்ல்தான் சிவமணியின் காதல் லீலைகள் குறித்துப் போலீஸாருக்குத் தெரிய வந்தது. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.

ஸ்ரீதேவியுடன் குடும்பம் நடத்திய நிலையிலேயே சரஸ்வதி என்ற 30 வயதுப் பெண்ணுடனும் குடும்பம் நடத்தி வந்துள்ளார் சிவமணி. இதன் மூலம் 2 குழந்தைகளும் பிறந்துள்ளன. சரஸ்வதியை விசாரித்தபோது சிவமணி தனது கணவர் என்று கூறியுள்ளார். ரேஷன் கார்டையும் தூக்கிக் காட்டியுள்ளார்.

சரஸ்வதி வீட்டுக்கு சிவமணி வந்தால் கோழியை அமுக்குவது போல பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். ஆனால் சிவமணி வராமலேயே எஸ் ஆகி விட்டார். இருப்பினும் போலீஸார் விடாமல் தீவிரமாக வலை வீசியதில் சின்மயா நகரில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது.

சின்மயா நகர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் அது துணை நடிகை ஷர்மிளாவின் வீடு என்று தெரிந்தது. அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருபவர். அவருக்கு 18 வயதில் மகள் இருக்கிறார் - ஆனால் அப்பா சிவமணி அல்ல. ஷர்மிளாவை கல்யாணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார் சிவமணி.

ஷர்மிளா ராஜபாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களில் தலை காட்டியுள்ளார். தற்போது கூட படப்பிடிப்புக்காக திருச்சி போயிருந்தார். கூடவே சிவமணியும் போயிருந்தார். இருவரும் ஜோடியாக திருச்சியிலிருந்து திரும்பியபோது போலீஸார் காத்திருந்து மடக்கிப் பிடித்தனர்.

ஸ்ரீதேவி புகாரின் பேரில் சிவமணியை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரை கோர்ட்டுக்குக் கூட்டி வந்தபோது அங்கு நின்றிருந்த ஸ்ரீதேவியும், சரஸ்வதியும், சிவமணியை சரமாரியாக திட்டி சாபமிட்டனர். ஆனாலும் சளைக்காத சிவமணி, இவர்கள் இருவருடனும் சேர்ந்து வாழத் தயார் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக ஸ்ரீதேவி, சரஸ்வதி, ஷர்மிளா... என்ற மூன்று பெண்களை திருமணம் முடித்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தினார்....ரகசியமாக காதல் லீலை புரிந்த ரயில்வே அதிகாரி கைது... சென்னையில் பரபரப்பு................!!

சென்னையைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக மூன்று பெண்களை மணந்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது அம்பலமாகி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.அங்குள்ள எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவமணி. 44 வயதான இவர் ரயில்வேயில் அதிகாரியாக

18 டிச., 2012


செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்


வட பகுதிக்கான ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


மின்வெட்டை எதிர்த்து அறப்போர்: சென்னையில் கருணாநிதி, குஷ்பு! காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு!

சென்னை: மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம்

ராமநாதபுரத்தில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பலியானார்கள்.
 
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சவுந்தரவள்ளி. இவர் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இன்று மாலை தங்கள்
வரதட்சணை கொடுக்காததால் 20 வயது பெண்ணை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடூரம்
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசான். விவசாயி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து ஊரைச்
கால்பந்தாட்ட வீரர் ரூனி சுவிஸ் வருகை
மாண்ட்டெனெக்ரோ அணியின் வீரர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதால் மூன்றாண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் வேன் ரூனி சுவிட்சர்லாந்துக்கு அங்குள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்தார்.
 ]
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 450 ஓட்டங்களும், இலங்கை 336 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 278 ஓட்டங்கள் எடுத்தது.

கொழும்பு புறநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒரு இலட்சாதிபதி: பொலிஸார் அதிர்ச்சி
கொழும்பின் புறநகர்ப்பகுதியான ராகம பிரதேசத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பொலிஸார், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் தொழில்நுட்ப பாவனையாளர்களை பதிவெடுக்கும் புலனாய்வாளர்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிலையங்களில தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தள பாவனையாளர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு  புலனாய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


இலங்கை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழ் பெண்கள் சுற்றுலாவுக்காக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி நள்ளிரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாமில் 16 தமிழ் பெண்கள் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர முயற்சி; படைத் தளபதியுடன் சந்திப்புக்கு ஏற்பாடு; எதிர்ப்பும் கிளம்பியது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இது தொடர்பான முயற்சிகள் குறித்து விசனங்களும் எழுப்பப்படுகின்றன. 

இரத்மலானையில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ வித்தினார் தாயும் அவரது இரு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இரத்மலானை ஹல்தேமுல்லை பகுதயிலுள்ள வீடொன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் தீ பரவியதையடுத்து தீ அணைப்புபட படையினர் ஸ்தலத்திற்குச் சென்று தீயை அணைக்க முற்பட்ட போதிலும் இந்த மூவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


புலிகளை நினைவுகூருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: ஜனாபதி

தெற்கில் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகள் நடத்தய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி. நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை.


நடிகை குஷ்பு மீதான வழக்கு : ஜனவரிக்கு ஒத்திவைப்பு
தமிழ் பெண்கள் கற்பு குறித்து ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களை இழிவு படுத்தியதாக கூறி, பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் முருகன், 2005ம் ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூர் குற்றவியல் நடுவர்

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷர்மிளா நடிகையுடன் தலைமறைவாக இருந்த காதல் மன்னன் கைது
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 40. இவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், பெரம்பூரில், ரயில்வே அதிகாரியாக வேலை பார்க்கும் கணவர் சிவமணி, 44,யை கடந்

நாடெங்கும் அடை மழை! வடக்கு கிழக்கு உட்பட பத்து மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு! 6 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் போதை கலந்த கேக்கை உண்ட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி! இலங்கைத் தமிழ் பெண் தொடர்பு
கனடா, மொன்றியலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் உளிவிழா நிகழ்ச்சியில் தமிழ் பெண் ஒருவரினால் வழங்கப்பட்ட கேக் ஐ உண்டவர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வெல்லாவெளி பிரதேசம் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதுடன் செங்கலடி, கிராண் செயலக பிரிவுகளும் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளும் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
வெல்லாவெளியின் பல பகுதிகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது

காதல் என்ற பெயரில் சீர்குலையும் சீர்கேடுகள் – யாழில் அதிர்ச்சி ரிப்போட்

யுத்தத்திற்கு பின்னர் யாழில் கலாச்சாரம் என்ற பெயருக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.
காதல் என்ற பெயரில் இளசுகள் பல சீர்கேடுகளுக்கு உட்படுகின்றனர்.

பேஸ் புக் நண்பியுடன் ஹோட்டல் அறையில் தங்கிய ஆண் மாணவர்கள்!

பேஸ் புக் மூலம் அறிமுகமான மாணவ நண்பியுடன் மொறட்டுவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கி இருந்த ஆண் மாணவர்கள் மூவர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர்.

தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது – திருச்சியில் சீமான் பேச்சு.


புலம்பெயர் புலிகள் அமைப்பின் இரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்

வெளிநாடுகளில் இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சிலவற்றின் இரகசியங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக, கோட்டபாய தெரிவுத்துள்ளார். இலங்கைக்கு

இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிற
தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா என்கிறார் நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார்.
ராமதாஸ் தலைமையில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்!



கலாநிதி மாறன் செய்த தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவித்தோம்!
அய்யப்பன், சக்சேனா பேட்டி!




நெல்லை : காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி வெட்டிக் கொலை
நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நான் செய்த மூன்று தவறுகள் : ஆ.ராசா
பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய-மந்திரி ராசா பேசினார்

ராசா குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவார் : மு.க.ஸ்டாலின்

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, 
’’தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. அந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிருபிக்க முடியாமல்,
கோத்தாவுக்கு புனர்வாழ்வு கொடுத்து பல்கலை மாணவரை விடுவியுங்கள்; எதிர்க்கட்சிகள் கண்டனம்
வெலிக்கந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள்,

வடக்கு , கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர்; புள்ளி விபரங்கள் தெரிவிப்பு
யுத்தத்திற்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என புள்ளிவிபரத் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது என தேவைநாடும் மகளீர் அமைப்பின் செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார்.

பி.பி.சி. செய்தியாளரின் ஆங்கில நூல் தமிழில் ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்; சென்னையில் நேற்றுமுன்தினம் வெளியீடு
பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதிய 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நூலாசியர் பிரான்செஸ் ஹரிசன் வெளியிட்டுள்ளார்.
 

எங்களை இங்கிருந்து சீக்கிரமாக அழைத்து சென்றுவிடுங்கள் பெற்றோரிடத்தில் குழந்தைகள் கண்ணீருடன் குமுறல்

 அம்மா அப்பா உங்களிடத்தில் இருந்து ஏன் எங்களை இவ்வாறு பிரித்து வைததிருக்கின்றனர் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. உங்களோடு இருக்கவே எங்களுக்கு ஆவலாக

ad

ad