புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012

ஐ.சி.சி. 20 ஓவர் பேட்டிங் தரவரிசை: விராட் கோலி 5-வது இடத்திற்கு முன்னேற்றம்
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் வாழ்நாளில் சிறந்த நிலையாக, 5-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.


ஈழத்தில் பரிதவிக்கும் விதவைகள்- அனாதை குழந்தைகளுக்கு தமிழக மக்கள் உதவ வேண்டும்: 'சங்கம் 4' விழாவில் ஜெகத் கஸ்பார் பேச்சு
`நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் "முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா?'' என்ற தலைப்பில்

பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறி

பிரதம நீதியரசர் ராணி பண்டாரநாயக்க தவறான முன்மாதிரியை காட்டியுள்ளார்

தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு*
* நீதிபதியில் நம்பிக்கை இல்லை என்று சாதாரண நபர் வெளியேற முடியுமா?
* தவறு செய்தவரை ஆர்ப்பாட்டம் நடத்தி பாதுகாக்க முடியாது

நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் நேற்றுத் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம் பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாயாத்து வழி பிரதான வீதியிலிருந்து விசேட படகுச் சேவை

மன்னார்-சங்குபிட்டி பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்துள்ளமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்த நிலையில் அங்கு கடற்படையினர் விசேட படகுச் சேவை ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.


மறைந்த நடிகர் செல்வசேகரனுக்கு கலைஞர்கள் பலரும் அஞ்சலி

நேற்று காலமான நடிகர் உபாலி செல்வசேகரனுக்கு கலைஞர்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.


முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் 313 பேர் மீண்டும் சமூகத்துடன்

 


புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். அடுத்த மாதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சுத் தாக்குதல்! குடும்ப பிரச்சினையே காரணமாம்
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:
ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள்

மாணவி மரணம்! அமைதியாக அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்! 


டில்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

www.thedipaar.com

ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும்

டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான

  



  

சர்வதேச கடல் எல்லையில், விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட பாரிய நீர் மூழ்கி
!
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கப்பல் மூலம் வருவது வழக்கம். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கை நோக்கிவரும் ஆயுதக் கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மிப்பது மிக மிகக் குறைவாகும்.

தமிழக அணி 27-15 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. 
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் தங்கக் கோப்பைக்கான 39-வது தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 27-15 என்ற புள்ளி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -5-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 
ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த
BREAKING NEWS

டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. 

பா.ஜ.க. மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் 2வது முறையாக தேர்வு
பாரதீய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு தேர்தல் பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் 28.12.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாக காலையில் செயற்குழு கூட்டமும், பிற்பகலில் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.


பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சமாளிக்க
65 புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சமாளிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தில் 65 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மன்னார் ஆயர் ராயப்பு யோசப் மீது சிஐடியினர் விசாரணை


அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம்


பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரைப் பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைத்துப் பேசிய யாழ்

ad

ad