புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012


இலங்கை தமிழர் அழிவுக்கு கருணாநிதி காரணம்! அ.தி.மு.க.செயற்குழுவில் கண்டன தீர்மானம்

சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது.இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு

இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்புதல்
இந்தியாவின் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


திமுகவில் கோஷ்டி பூசல் :
ஸ்டாலினுக்கு வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு
 மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் உருவப்படத் திறப்பு விழாவுக்கு வந்த, ஸ்டாலினை வரவேற்று, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் கோஷ்டியினர் வைத்த பேனரை, அகற்றுமாறு, வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


கமலை வாழவிடுங்கள்; அவரை சீண்டி பார்க்காதீர்கள் :  பாரதிராஜா

‘விஸ்வரூபம்’ படம் டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுவதை எதிர்க்கும் தியேட்டர் அதிபர்களுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்தார். 
இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  


யாருடனும் கூட்டணி இல்லை : ஜெயலலிதா
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடனும்

40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி :
 அதிமுக செயற்குழு கூட்டத்தின் தீர்மானம்


அ.தி.மு.க. செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது.  சென்னை அருகே உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இக்கூட்டம் நடக்கிறது.
 

சிவகாசி ஜெயலட்சுமி : 4 வழக்குகளிலும் விடுதலை
சிவகாசி ஜெயலட்சுமி நகை, பணம், மற்றும் போலீசார்களை ஏமாற்றிய நான்கு வழக்குகளில் இன்று விடுதலை ஆனார்.  மதுரை கோர்ட் அவரை விடுவித்தது.
இந்த நான்கு வழக்குகளிலும் அவர் ஏற்கனவே ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்ததால்,  2500 ரூபாய் அபராதம் மட்டும் செலுத்திவிட்டு விடுதலை ஆனார்.
"மூன்று நாடுகளைக் காத்த மொழிப்பற்று " நம்மிடம் பொய்த்து ஏன் ? நாம் பயணித்த வரலாற்றுத் தடங்களில் தடங்கல் என்ன ? என்ற சிந்தனையில் உருவாகிய காணொளி 
“உங்கள் தலைவர்களையெல்லாம் கொன்று விட்டோம், நீங்கள் இப்போது எமது அடிமைகள்”
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.



            மாவீரர் தினம் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டி ருக்கிறது இலங்கை ராணுவம். 



           26-ந் தேதியின் பிற்பகல் பொழுது. 

நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி நந்தகுமார், குற்றவாளிக் கூண்டில் நின்ற காட்டுராஜாவையும் வெட்டும்பெருமாளையும் ஒருமுறை பார்வையால் அளந்தார்.
 இந்தக் கொடுமை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் நடந்தது.

மனநலமற்ற 22 வயது மகள் தேவகியை வீட்டில் வைத்துவிட்டு வயல் வேலைக் குப் போய்விட்டார் தாய் பஞ்சவர்ணம். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார் தாய். வீடு திறந்து கிடந்தது. அறைக்குள் இருந்து மகளின் அழுகைக் குரல் வந்தது. ஓடிப்போய் பார்த்த தாயை, தள்ளிவிட்டு ஓடினான் எதிர்வீட்டு முனியம்மாவின் தம்பி குமரேசன். அறைக்குள் பாலியல் வல்லுறவால் அதிர்ச்சியடைந்து கதறிக்கொண்டி ருந்த தேவகியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பதுங்கியிருந்த குமரேசனை 27.12.12 மாலையில் கைது செய்தது போலீஸ்.


           ட்டுத் தடுமாறி, பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கிவிட்டார் அந்த இளம்பெண். ஆனால் அதற்குமேல் நடக்கவும் முடியவில்லை; நிற்கவும் முடியவில்லை. தரையில் சாய்ந்தார். 

சிறுமி புனிதா பாலியல் துன்பத்திற்குள்ளாகி கொல்லப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி பங்கேற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளான கூட்டம். 
ஆர்ப் பாட்ட இடத்தை காவல்துறையினர் இரண்டு முறை மாற்றியும் கூட ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி குறையவில்லை. அத்துடன், கொலையான புனிதாவின் தாயை சந்தித்து தி.முக.



          ""ஹலோ தலைவரே... 2013ஆம் வருடத்தை தமிழக மக்கள் ரொம்ப நம்பிக்கையோடு எதிர்பார்த்துக்கிட்டி ருக்காங்க. ஏன்னா, 2012 ரொம்ப சோதனையா அமைஞ்சிடிச்சி.''

முழு எதிர்ப்பில் கமல்! ஜாம்பாவான்களின் ஆதரவு!


கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசாக முழு வீச்சில் தயாராகிக்கொண்டு வருகிறது. விஸ்வரூபம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் தொலைக்காட்சி

நான் அரசியலுக்கு வந்தால்... கலைஞர் மேடையில் ரஜினி கொளுத்திய வெடி! 

        சமீபகாலமாகவே தான் அரசியலுக்கு வருவது பற்றியும், இதுவரைக்கும் அரசியலுக்கு வராதது பற்றியும் ரஜினி பொது விழாக்களில் பேசி பரபரப்பைக் கிளப்பி வருகிறார். தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் அவர் சந்தித்தது முதல் இந்த பரபரப்பு பற்றிக் கொண்டது. 
ஒருவேளை உணவுக்காக ஏங்கி நிற்போர் பிரான்சில் அதிகரிப்பு
பசிக்கு உணவளிக்கும் பிரெஞ்சு பொதுநல அமைப்பு ஒன்று பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசும் பொதுமக்களும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

30 டிச., 2012


தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற மதுரை ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி தலைமையில், 100 பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர். இந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறியுள்ளதாவது,

நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் மாணவியின் உடல் வந்து இறங்கியபோது அங்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரச் தலைவர் சோனியா காந்தி ஆகியோர், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இதனையடுத்து அம்மாணவியின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு நடைபெற்ற மதச்சடங்குகளுக்கு பின்னர் மாணவியின் உடல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவாராகா செக்டார் 24 ல் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் கே.பி. என்.சிங்,மேற்கு டெல்லி எம்.பி. மஹாபால் மிஸ்ரா,டெல்லி பா.ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இறுதிச்சடங்கு நடைபெற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடயே மாணவியின் மறைவுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.டெல்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.முக்கிய ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,

ad

ad