புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2013


கொழும்பில் நைட் கிளப் வாழ்க்கை, அதிர்ச்சிப் புகைப்படங்கள்!
கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி வாழ்க்கையை காட்டுகின்ற பிந்திய ஒரு தொகைப் புகைப்படங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன. 

உதயன் விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்பத்திரிகைகள் தீக்கிரை


தாயுடன் உல்லாசமாக இருந்த உறவினரை ஸ்பேனரால் அடித்துக் கொன்ற 16 வயது சிறுவன்

சென்னை: தாயுடன் உல்லாசமாக இருந்த உறவினரைக் கொன்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்து உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(30) என்பவர் சென்னையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்டில் டிரைவராக பணியாற்றினார்.

பரிஸ் நகரில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான 3 குர்தீஷ் பெண்கள் சுட்டுக்கொலை-Photos

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்ற பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் சம்பவத்தை உறுதி செய்ததுடன், இதுகுறித்து விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்களின்



தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட கர்நாடகத்துக்கு உத்தரவிடமுடியாது! காவிரி கண்காணிப்புக்குழு கைவிரிப்புதமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடமுடியாது என நீர் திறந்துவிடக் கோரிய தமிழகத்திடம் காவிரி கண்காணிப்புக் குழு!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அணி திரளும் ஈ.பி.டி.பியின

ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நான்கு வயது குழந்தை மீதான பாலியல் வண்புணர்வு மற்றும் கொலையினை கண்டித்து இராணுவத்திற்கு எதிராக வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடாத்தினார்.
வடக்கு சுவிஸ்சில் இரண்டு இரயில்கள் மோதியது: 17 பேர் படுகாயம்
வடக்கு சுவிஸ்சில் இரண்டு ரயில் மோதியதில் 17 படுகாயமடைந்துள்ளனர்.
Rheinfall station லிருந்து 250 மீற்றர் தொலைவிற்குள் இந்த விபத்து நடந்துள்ளது.

9 ஜன., 2013


கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள். 
 
 TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென  மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது. 


மதிப்பெண் மேல் எடுத்தால் வருடம் ரூ. 3,000 உதவித்தொகை
சென்னை: தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.


தமிழரசுக் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்தும் பங்கேற்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்து , உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள 10 பேர், தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றக்கோரி, கடந்த சில தினங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

வடக்கில் தமிழ் மொழிமூல இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியுமென்றால் ஏன் தெற்கில் இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியாதென கேள்ளவியெழுப்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு வோறொரு சட்டமா எனவும் கேள்வியெழுப்பினார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போன ஒருவராகவே அரசாங்கம் கருதுகிறது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போன ஒருவராகவே அரசாங்கம் கருதுகிறது என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர்

இலங்கையில் தொடரும் அச்சுறுத்தல்கள்! பிரித்தானியப் பாராளுமன்றில் நடைபெற்ற சூடான விவாதம்
இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் தொடரும் மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றை மையமாக வைத்து பிரித்தானியப் பாராளுமன்றில் சூடான விவாதம் ஒன்று நடைபெற்றது.

கேரளா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது
தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கி இருந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றபோது தமிழக கியூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டை கண்ணால் கண்டேன்! பிரான்ஸ் தூதுவர் வாக்குமூலம்
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை எனது கண்களாலேயே நான் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்.மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சிப் பகுதியில் இருந்து நேற்று கடல்தொழிலுக்குச் சென்ற ஆறு படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த ஆறுபடகுகளில் 12 மீனவர்கள் உள்ளதாகவும், தற்போது இரண்டு படகுகள் கரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரிசானாவிற்கு மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது! இல.பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
இலங்கைப் பணிப் பெண் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  இச்செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்கிறதாம் ஜி.எல்.பீரிஸ் கவலைதெரிவிப்பு:


நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக, முறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா அரசு மீது

தாழமுக்கம் வலுவிழந்தது: காற்றுடன் மழை தொடரும்

60 கி.மீ. வேகத்தில் காற்று, கடல் கொந்தளிப்பாக இருக்கும்; மட்டு உறுகாமத்தில் கூடுதல் மழை
இலங்கைக்கு அருகே 500 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு தென்கிழக்குப் பகுதியாக நகர்ந்து வங்காள விரிகுடாவில் செயலிழந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ad

ad