புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013

மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! 
மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது. 
புலம்பெயர்ந்த ஈழச்சகோதரன் எழுதிய மடல்
என் அன்பான தமிழக மாணவருக்கு வணக்கம்,

உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவின் மத்தியில் இதைப்படிப்பதற்கு உங்களுக்கு நிச்சயம் நேரம் இருக்காது, ஆனாலும் ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்,


இனி, சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது!
அடுக்கடுக்கான போர்க்குற்ற ஆதாரங்களை இலங்கை அரசின் மீது அள்ளித் தெளித்த பின்னாலும், சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான கொள்கையோ, பார்வைகளோ மாறவில்லை. சர்வதேச அழுத்தங்களால் ஏதாவது நல்லது நடக்குமா என ஈழத் தமிழ்ச் சமூகம் திணறி நிற்கும் நிலையில்,

தென்னிலங்கையில் அதிற்சி! பசில் – நாமல் மோதல்! மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பம்

சர்வதேச ரீதியில் மகிந்த அரசாங்கம் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதைப் பயன்படுத்தி பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை பணயக் கைதியாக வைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்
பசில் ராஜபக்‌ஷ ஶ்ரீல.சு.க.யின் தேசிய அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து நாமல் ராஜபக்‌ஷ தனது நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது குடும்பத் தொடர்புகள் ஊடாக

இலங்கை இன்று அமெரிக்காவிற்கு பதிலளிக்கும்

தெலுங்கு பெண்ணின் தமிழர் பாசம்
news
ஈழத் தமிழர் விவகாரம் தமிழ் நாட்டை எரிமலையாகக் குமுற வைத்துள்ள நிலையில், அங்கு தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தில் தெலுங்குப் பெண் ஒருவரும் ஈடுபட்டுள்ளார். சென்னை, அடையாறில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு ஈழத் தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தில் குதித்துள்ளார்.
 
உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் 8 மாணவர்களுடன் தனி ஒரு பெண்ணாக அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.  
வவுனியா சிறையில் புலிச்சந்தேக நபர்கள் எதிர்வரும் காலங்களில் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுப்காப்பு காரணங்களை கருத்தில் கொண்டே இவர்களை வவுனியாவில் தடுத்துவைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டதுடன்  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பிள்ளைகளை விடுவியுங்கள்
எங்களுக்கு நீங்கள் தரும் எந்த உதவிகளும் வேண்டாம். காணாமல் போன எங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தந்தால் போதும் இவ்வாறு காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு மாநகரசபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடத்திய ஊடகவியலாளர்
அமெரிக்கா - கியூபா இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர் ;இந்தியா மெளனம் இலங்கை மாயம்
இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து

இலங்கையின் போர்க்குற்றம்: "இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்"- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியிட்ட காணொளி 
கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை இராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர்.

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் மரத்தில் ஏறி போராட்டம்! 
செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலையில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அங்கு போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களை கியூபிரிவு

ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியாவை ஆதரிக்க கோருகின்ற அதே வேலையில் இலங்கையில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச தன்னிச்சையான விசாரணையை வ-யுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்களுக்கு இன்றைய தீர்வு தனி ஈழம் நாடு உருவாவது மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு தனி

போராட்டக் களத்தில் நிற்கும் என் மாணவத் தம்பிகளே..தங்கைகளே..
மாணவ சக்தி மகத்தானது என்பதைதான் வரலாறு அழுத்தமாக போதிக்கிறது. வெடித்தெழுந்த புரட்சிகளின் தொடக்கம் துளிர்த்த தோட்டங்களாக கல்லூரியின் வகுப்பறைகள்

புதுவை: உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு - புதிய அமைப்பு
வரும் திங்கட்கிழமை ( 18.3.2013 ) தமிழக கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.  தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு என்ற புதிய அமைப்பினர் இதனை அறிவித்தனர்.


எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது:
 உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களிடையே சிம்பு பேச்சு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக

1. விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும். 
2. கடன் தொல்லையால் தற்கொலை செய்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 
3. சாகுபடி செய்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், வறட்சியால் பாசனத்துக்கு வழியில்லாமல் போன நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். 
4. விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் 

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வைகோ தலைமையில் மதிமுக தொண்டர்கள் விருதுநகரில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் விருதுநகரில் இன்று காலை துவங்கியது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த போராட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தை மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா துவக்கி வைத்தார். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவடைகிறது.
 வைகோ தலைமையில் மதிமுக தொண்டர்கள் விருதுநகரில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். 
விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும்.
2. கடன் தொல்லையால் தற்கொலை செய்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 
தமிழ் நடிகனின் முன்மாதிரி  -சிம்பு மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேரடி விசயம் 
அதிர அதிர அடியெடுத்து வையுங்கள்.
அனைத்தும் வசப்படும்.
---------------------------------------
பாராட்டுக்களை கூறியே ஆகவேண்டும். மத்திய அரசு கூடுதலாகவே மிரட்டும். கண் வைக்கம். சம்பாதிக்கும் பணத்திற்க கணக்கு கேட்கிறேன் பேர்வழி என்று சண்டித்தனம் செய்யும். குறிவைத்து பிடிக்கலாம். ஏதாவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். புதியதாக சிம்புவை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களை மிரட்டலாம். அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்குள் வருமான வரி என்று நுழைந்து மிரட்டலாம். எப்படி பார்த்லும் சிம்புவிற்கு இழப்புதான். கஷ்டம்தான். அது தெரிந்திருக்கலாம். இப்படி பலதையும் யோசிக்காமல் வந்திருக்கமாட்டார். அவரின் துணிந்த இந்த ‘மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு” என்ற முடிவை பாராட்டத்தான் வேண்டும்.

இன்னும் பலர் இப்படி வந்தாலும்...
மாணவர்களின் போராட்டம் மாணவர் போராட்டமாகவே நீடிக்க வேண்டும்.


14 மார்., 2013


ஈழகாவியம் பாடுவதற்காக இலங்கை வருகிறார் வைரமுத்து!

 மூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து. வைரமுத்துவின்

பாலச்சந்திரனை விட இளவயது சிறுவன் கொலை ! வீடியோ 

war-crime-2 by dm_507388fc0b6e9




இறுதிக்கட்டப் போரில், இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்களை இராணுவம் எவ்வாறு கொன்றது ? திடுக்கிடும் புது ஆதாரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. லண்டன் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இக் காணொளி வெளியிடப்படவுள்ளது
அல்-காய்தாவின் ‘அதி பயங்கர தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அப்தெல்ஹமீட் அபு சையத், கொல்லப்பட்டிருக்கலாம் என அறிவித்துள்ளது பிரான்ஸ் ராணுவம். 
அல்-காய்தாவின் ஆபிரிக்க தளபதியான இவர், மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்தும் யுத்
தத்தின்போது கொல்லப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால்,

பாடசாலை சீருடையில் மாணவி இளைஞரோடு கைதானார் 
யாழில் இளைஞன் ஒருவருடன் வீட்டில் தங்கியிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் குறித்த இளைஞரும் கோப்பாய் பொலிசாரால் இன்று காலை கைது


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மணிவண்ணன் அவரது மகன் நடிகர் ரகுவண்ணனுக்கு ஈழத் தமிழ்ப் பெண்ணை மணமுடிக்க உள்ளார்.

இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 
இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருச்சி :  ரயில் முன்பு தண்டவாளத்தில் மாணவர்கள் தலை வைத்து ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

மன்னார்குடி பாலிடெக்னிக் மாணவர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )
 ராஜபக்சே மீது போற்குற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், வகுப்பு புறக்கணிப்பு, உருவ பொம்மை எரிப்பு, போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
மன்னார்குடி செருமங்கலம் சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக் மாணவர்கள் தொடர் பல்வேறு கோரிக்கைகளுடன் தொடர் உண்ணாவரதம் தொடங்கியுள்ளனர்.

ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு :
புதுக்கோட்டை மாணவர்கள் ஆவேசம் ( படங்கள் )
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

ராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் 
இலங்கையில் தமிழர்கள் மீது போர்க்குற்றம் புரிந்த இரக்கமற்ற ராஜபக்சேவின் இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  நாளை ( 15.3.2013 ) காலை 10மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.   லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கண்டன உரையாற்றுகிறார்.

ஈழத் தமிழ் மக்களுக்காக  இன்று மதுரை குலுங்கிய காட்சி காணீர் .. 
குலுங்க…குலுங்க.. 
ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி.. 







          லங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இந்திய பிரதமரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.



          "ஊரு உலகத்துல நடக்காததா? என்னமோ பெரிசா தப்பு பண்ணிட்ட மாதிரில்ல.. வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறீங்க.. ஒழுங்கு மரியாதையா போயிடுங்க.. ஆசிரியர்கள் நாங்கள்லாம் ஒண்ணு சேர்ந்தா.. அப்புறம் நடக்கிறதே வேற.' ’’



      

          மாணவர்கள் மத்தியில் வெடிக்க ஆரம்பித்திருக்கும் ஈழ ஆதரவுப் போராட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் தகிக்கவைக்கும் அளவிற்கு உருவெடுத்து வருகிறது..



          "இலங்கையில் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்து' என்று உலகத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் குரல்கள் கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில்,  ஐ.நா. மனித உரிமை கவுன்சிலி
      ""ஹலோ தலைவரே... இப்ப தமிழகம் முழுக்க ஒரே போர்க் குரலாக் கேட்குது பார்த் தீங்களா?''’

""ஆமாம். இலங்கைக்கு எதிரா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கணும்ன்னு ஒரு பக்கம் தமிழுணர்வாளர்கள் போர்க்குரல் எழுப் பிக்கொண்டிருந்த நேரத்தில், இப்ப இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம்


சிறந்த விமானநிலையங்களாக 3 இந்திய விமானநிலையங்கள் தேர்வு
 
2012-ம் ஆண்டில் உலகிலேயே மிகச்சிறந்த 5 விமானநிலையங்களுள் ஒன்றாக, தரமான விமான சேவையின் மூலம் வருடத்துக்கு 25 முதல் 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் 2-

உலகம் முழுவதும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான புதிய பாப்பாண்டவராக ஜார்ஜ் மரியோ பொர்கோகிலியோ தேர்வு செய்யப்பட்டார்.
இவர் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர். இந்த அறிவிப்பையடுத்து வாடிகன் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இரண்டு வருடமாக , 2011 ஏப்ரலில் இருந்து தொடர்ச்சியாக ஐ. நா அறிக்கையூடாக அமெரிக்காவின் நகர்வினையும், ‘போர்க்குற்ற’ சொல்லாடலின் அரசியலையும் அந்த சொல்லாடலை மறுத்து ’இனப்படுகொலை’யே எனச் சொல்லவேண்டும் என்று நாங்கள் முன்வைத்தோம். ராஜபக்சேவினை தண்டிப்பது என்பதை விட தமிழீழ விடுதலையை மையப்படுத்தும் விவாதம் வேண்டும் என்று 2011 ஜூலை மாதம் முன்வைத்த போது கடும் அவதூற்றிற்கு உள்ளாகினோம்.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான இன்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.
தோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு ...
சற்று முன் : கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் -நேரடி காட்சிகள் இவை 
மாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி -9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற தம்பிகள். வாழ்த்துங்கள் உறவுகளே..


 காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங்கங்களே..
காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங்கங்களே..
"இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேர
இனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வரைவு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்,ஊரதீவு பாணா விடை சிவன் ஆலயம் என்பன  புனருத்தாரணம் செய்யப்படுகிறது படங்கள் இணைக்கப் பட்டுள்ளன 

தாயகத்தின் போர்க்கால சூழ்நிலையை அடுத்து பாரிய அழிவுகளை சந்தித்த புங்குடுதீவு ஆலயங்கள் சீரமைக்கப் பட்டு மீண்டும் கும்பாபிசேஷங்கள் செய்யப் பட்டு வருகின்றன .இந்த வரிசையில் மடத்துவெளி முருகன் ஆலயமும் சுவிஸ் வாழ் மடத்துவெளி ஊரதீவு மக்களின் கூட்டு முயற்சியில்
புதிய ராஜகோபுரம் அமைக்கப் பட்டு வருவதோடு ஆலயம் முற்று முழுதாக திருத்தி அமைக்கப் பட்டு  முடிவுறும் நிலையில் காணப் படுகிறது .பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி நவீனமுறையில் இந்த ஆலயம் கும்பாபிசெகாத் துக்கு தயாராகி வரும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் தேங்கி உள்ளன.இது வரை பங்களிப்பு செய்யாதவர்கள் மற்ற நாடுகளில் இருந்து கூட இதற்கு உதவிடுமாறு அன்போடு அழைக்கின்றோம் .இந்த ஆலய திருப்பணி வேலைகளை கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ள சமூக சேவையாளர் அ .சண்முகநாதன் (கண்ணாடி )அவர்களே நேரடியாக பார்வையிட்டு கவனித்து வருகிறார் ஊரதீவு பானாவிடை சிவன் ஆலயமும் முற்று முழு தாக மேலும் சீரமைக்கப்டுகிறது .சுவிசில் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை )

                                          எனது கண்ணீர் அஞ்சலி 
                                                          சசிபாரதி 
                                  முன்னாள் ஈழநாடு ஆசிரியபீடம் 
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் ஈழநாடு நிருபராக  இருந்த போது  மதிப்புக்குரிய சசி பாரதி அவர்களை எப்போதாவது காரியாலயத்தில் கண்டு ஓரளவு புன்முறுவல் பழக்கம்  தான் . இருந்தாலும் இவரது எழுத்துக்களை மொண்டிருகிறேன்.பெரும்பாலான காலம் இவர் ஒப்பு நோக்குனராகவும் சஞ்சிகை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.எனது இளமைக் காலத்தில் எல்லா ஞாயிறு பதிப்புகளும் எம்மை கவர்ந்திழுக்கும் .ஆனாலும் ஈழநாடு மட்டுமே கவர்ச்சி இல்லாது சினிமா இல்லாது வண்ணக் கலவைகள் இல்லாது தமிழை மட்டுமே நம்பி வெளிவந்து எங்கள் இளமைபருவத்தை சுண்டி இழுத்த பெருமையை பெற்றது .இந்த பெருமை மிகு ஞாயிறு வாரமலரின் பிரம்மா .சசிபாரதி இவரது காலத்தில் சரிசமமாக உதவி ஆசிரியராக இருந்த  எஸ்.எஸ்.குகநாதன் அவர்களை எனது உயர்ந்த நண்பனாக கிடைத்த பேறு பெற்றாலும் இவரோடு பழகும் காலம்  அரிதாகவே  எட்டியது .யாழ்ப்பான பத்திரிக்கை உலகின் முன்னோடி இன்று எம்மிடையே இல்லை வருந்துகிறேன் உங்களோடு இணைந்து .அஞ்சலிக்கிறேன்
                                    சிவ-சந்திரபாலன் -சுவிட்சர்லாந்து 
வவுனியாவில் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நாமல் கிராமம் : அசாத் சாலி


வவுனியாவில் நாமல் கிராமம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் கைகலப்பு : திருச்சி பரபரப்பு ( படங்கள் )
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 


சட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். Photos

சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
சென்னை மேற்கு தாம்பரம் அருகே இன்று (13.03.2013) அதிகாலை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 துரோகிகள் விலகி போனதால் எங்கள் கட்சி அழிந்துவிடாது: பிரேமலதா

 
தே.மு.தி.க. மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, விலைவாசி உயர்வை கண்டித்தும், பூரண மதுவிலக்கு கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 4 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,  தலைமன்னார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள் ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்குத் தொடங்கியது தலைவலி
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில்  நேற்று இடம்பெற்ற பொதுவிவாதத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளனர். 
கொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ மேஜர்
தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார். 

13 மார்., 2013


ஐ.நாவுக்கு தகவல் வழங்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பது ஐ.நாவின் கடமை! நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டு
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கும் மக்களின் பாதுகாப்பை இலங்கையில் உறுதிப்படுத்துவது ஐக்கிய நாடுகளின் சபையினது தலையாய கடமையாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை
‘‘மூணு பிள்ளைகளப் பெத்தும் இப்பிடி அனாதியா கிடந்து அவதிப்படுறேன்... இருக்கனா, போயிட்டேனான்னு கூட எதுவும் வந்து பாக்கமாட்டேங்குது. என் பொணத்துக்கும் நானேதான் கொள்ளி வச்சுக்கணும் போலருக்கு... - கண்கள் கலங்க சகுந்தலா சொன்ன இந்த வார்த்தைகளுக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் மட்டுமே சொல்லமுடிந்தது. தனிமைத் துயரால் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்து வந்த அந்தத் தாய், சுடுகாட்டுக்குச் சென்று, உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே கொள்ளி வைத்துக்கொண்டார்.

இதயமுள்ள மனிதர்களின் உயிரைப் பிடித்து உலுக்குகிறது சகுந்தலாவின் மரணம். பெற்று, வளர்த்து, ஆளாக்கி சமூகத்தில் உலவவிடும் பெற்றோரை, முதுமையில் தள்ளிவைத்து தனிமையில் தவிக்கவிடும்


இலங்கைக்கு எதிராக செயற்பட்ட எவரும் நாடு திரும்ப முடியாது!?

 
piyasriஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது. இந்தியாவில் தேவையென்றால் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கூட்டு முயற்சியே ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களாகும். எனவே இதனை அடியோடு நிராகரித்து 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஒழித்து, வடமாகாண சபை தேர்தலை அரசு நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் விவகாரம

 
20130311_140232-1 (2)சுவிசில் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டமும் மனுக் கையளிப்பும் திங்கட்கிழமை பிற்பகல் ஜெனீவா நகரில்

ஜெனீவா சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழக்கும் அபாயம்!

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான இரகசியத் திட்டம் ஒன்று அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஜெனிவாவில் இருந்து

'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்' ஐ.நா மனித உரிமைச் சபையில் நா.க.த. அரசு வெளியிட்ட கையேடு
இலங்கை தொடர்பில் சுதந்திரமானதொரு அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு தரப்புக்களிடம் இருந்தும் வலுத்து வரும் நிலையில் 'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்: தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் ' எனும்

12 மார்., 2013


இசைப்பிரியா தொடர்பில் கருத்து! இராணுவத்தினரின் சாபக்கேடு ரணிலை சும்மாவிடாது!- பஷில்
இராணுவத்தினரின் சாபக்கேடு ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே விட்டுவிடாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.

வேலை நிறுத்தம் வெற்றி! இனிமேலாவது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்!- கருணாநி
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகக் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய வெற்றிகரமான

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக ஜெனீவாவில் 62 இலங்கையர்கள்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் மகிந்த தலைமையிலான இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 62  இலங்கைப் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
சங்கக்காரா, டில்ஷன் சதத்தால் டிரா செய்தது இலங்கை
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 570 ஓட்டங்கள் எடுத்து "டிக்ளேர்" செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 638 ஓட்டங்கள் எடுத்தது.
உலகளவில் சுற்றுலாத்துறையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முதலிடம்
உலகப் பொருளாதார அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று உலக அளவில் சுவிட்சர்லாந்து சுற்றுலாத் துறையில் முதலிடம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவால் முதல் நிலை வீராங்கனையாக களமிறங்குகிறார்.
நாளை நடைபெறும் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் சாய்னா, தரநிலையில் 40-வது இடத்தில் உள்ள ஃப்ரான்ஸ் வீராங்கனை சஷினா விக்னேஸ்வரனுடன்(தமிழ் பெண்மணி ) மோதுகிறார். இருவரும் இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு ஒரு போட்டியில் விளையாடியுள்ளனர். அதில் சாய்னாவே வெற்றி பெற்றுள்ளார்.


புதிய கட்சி தொடங்குகிறார் சரத் பொன்சேகா
 
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா,  புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார்.  இதற்காக தேர்தல் துறையினரிடம் தேவையான ஆவணங்களை இன்று பொன்சேகா சமர்ப்பித்தார்.  

அஸ்லான் ஷா ஆக்கி : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

22–வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்று போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்க்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் 'போத்ரா' என்பவரிடம் ரூ. 65 லட்சம் கடன் பெற்று இருந்தார். கடனை திருப்பி செலுத்தும் வகையில் 2

தனியார் வகுப்பிற்குச் சென்றுவிட்டு தமது வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நான்கு மாணவிகள் முச்சக்கர வண்டியில் சென்ற மூன்று பேரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் பலாங்கொடை பிரதேசத்திற்குட்பட்ட பெட்டிகல எனும் இடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.


காதலியான பேராசிரியரை கடத்திய மாணவன்: நாகர்கோவில் அருகே பரபரப்பு
நாகர்கோவிலில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியரை மாணவர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை தமிழர் பிரச்சனை: பாராளுமன்றத்தில் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்றம் இன்று கூடியதும் சபாநாயகர் மீராகுமார், முன்னாள் உறுப்பினர் வீரென்ஷா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார். அதை தொடர்ந்து இலங்கை

டெசோ அமைப்பின் பொது வேலைநிறுத்தம்: திருச்சியில் கே.என்.நேரு உட்பட 500 பேர் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி,


இலங்கைப் பிரச்சனை! புதுக்கோட்டை
கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்!
இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். தனி தமிழ் ஈழம் அமைய ஐ.நா மன்றம் ஈழத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர் குற்றவாளியான ராஜபக்சேவை தண்டிக்க ஐ.நா. அவையில் இந்தியா தீர்மான
அழகிரியின் கோட்டையான மதுரையில் பந்த் படு தோல்வி  ஆதாரம் புதியதலைமுறை 

சென்னை அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் வீரமணி திருமாவளவன் கைதாகினர் 
போக்குவரத்து தொழில் சங்கங்கள் பெரும்பாலும் எ.தி.மு.க அணியை சேர்ந்தவை என்பதால் பொஇக்குவரது வழமை போல நடக்கின்றன 
டெசோ போராட்டங்கள் பிசுபிசுத்தன.அரச ஏற்பாட்டில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட காவல் துறை பேரூந்துகளில் சாலை மறியலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான வர்கள் உடனடியாகவே கைதவதால் போரட்ட்நகல் பெரிதாக  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை 
மதுரை அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் 300 பேர் போராட்டம் ஆ னால் சுமார் 30 000 மாணவர்கள் அதரவாக  குவிந்துள்ளனர் 

கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஐதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து அவர் பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் திகதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்தின் பிரபல
மாணவர்களின் எரிமலை வெடித்து விட்டது!
*************************************************************
இன்று பின்வரும் இடங்களில் மாணவர் போராட்டங்கள் 
ஆக் ரோஷத்துடன் ஆரம்பம் ஆகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன..!
மாணவர் சக்தி மகத்தான சக்தி!

இதோ பின்வரும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் வெடித்துவிட்டன.அவையாவன..

(1)மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்
(2)காரைக்குடி அழகப்பா கல்லூரி..
(3) காரைக்குடி ஆனந்தா கல்லூரி..
(4)சென்னை லயோலா கல்லூரி 2000 மானவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடக்கி விட்டனர்.
(5)கும்பகோணக் கல்லூரி ஒன்றில் இருந்து2000 மாணவர்கள் போராட்டத்தை தொடக்கி விட்டனர்.
(6)திருச்சி தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் காலவரை அற்ற உண்ணா நோன்பை
(7)மதுரை..பெரம்பலூர் ஆத்தூர் சாலையில்(எசனை,கடகால்)மாணவர்கள் சாலைமறியலை தொடங்கியுள்ளனர்.
(8)கும்பகோணம் பூம்புகார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
(9)பாளையங் கோட்டை செயின்ட்.சேவியர் கல்லூரி மாணவர்களும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும் அழகல்லோரிகளின் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வரவுள்ளன என்பதுடன் நாளையும் பல மாணவர்களின் போராட்டங்கள் வெடிக்கவுள்ளன.என்பது குறிப்பிடத் தக்கது.

தீர்மானத்தின் மீது வரும் 21ம் தேதி வாக்கெடுப்புநடைபெற உள்ளது
ஜெனீவாவில் .நாமனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலின்22வது கூட்டம் தொடங்கியது அக்கூட்டத்தொடரில் கடந்தவாரம்
இலங்கைக்கு எதிராகஅமெரிக்கா மீண்டும்

24 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த; வலி. வடக்குக் காணிகளை நிரந்தரமாகப் பறிக்க முடிவு
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குறித்த 24 கிராமசேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நலன்புரி நிலையங்களிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

யாழ்ப்பாண ஊடகங்களுக்கு இல்லையாம் தெற்கு ஊடகங்களுக்கு தானாம் அனுமதி
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் முழுமையாக செய்தி சேகரிப்பதற்கு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது. 
உதயன் சொல்லுவது பச்சைப்பொய்; நாங்கள் சொல்வதே உண்மை
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை சொல்வது அப்பட்டமான பொய். அதில் கூறியிருக்கும் செய்தியை நம்ப வேண்டாம் என  காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
கனேடியத் தமிழர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடும்படி அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த்தாகவும், கருவிகளை வாங்க முயற்சித்தாகவும் குற்றம்சாட்டி, கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடும் படி, அமெரிக்காவிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தத் தகவலை கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா கூட்டிய கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறிய சிறிலங்கா- இரா.துரைரத்தினம்.thx thinakathir

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைக்க உள்ள பிரேரணையின் நகல் கடந்த வியாழக்கிழமை மாலை அமெரிக்காவினால் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான கூட்டம் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 21ஆம் இலக்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அம்மையாருக்கு அது புரியாவிட்டால் அங்கே யாராவது இலக்கியம் தெரிந்தவர்கள் இருப்பார்களானால் கேட்டுத் தெளிவு பெறலாம் : கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தஞ்சையில் பாராட்டு விழா நடைபெற்று - விவசாயிகள் எல்லாம் மன நிறைவோடு  விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்துள்ளார்கள்

இந்தியாவின் ஆலோசனை : இலங்கை நிராகரிப்பு
அமெரிக்காவுடன் பேச்சுநடத்த வேண்டும் என்ற இந்தியாவின் ஆலோசனையை இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி அணித் தலைவர் ரஹீமின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 8 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியது.


மட்டக்களப்பு, செங்கலடியில் 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் ஒன்றரை வயது குழந்தையுடன் தனது மனைவி பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் செல்வதை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஐயங்கேணியைச் சேர்ந்த ஜோசப் கிங்ஸ்லி அன்டனி என்ற இந்நபர் தேசிய மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச

மட்டக்களப்பு, காரைதீவில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சாயி பஜனையில் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த 65 வயதுடைய சீவரெட்னம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி போராட்டக்காரர்கள் இன்று கடல் வழியாக படகுகளில் சென்று முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை காரணிகளுக்காக இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்தக் கூடாது என்று பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அமர்வுகள் நடாத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை வகிக்கும் நாடுகளுக்கே பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென அவர்

ஐ.நா. மனித உரிமை அவையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை  ஏற்றுக் கொள்ள மறுத்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற உண்மையை ஐ.நா. ஏற்க வேண்டுமென்று கோரியும் தமிழீழ மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோரிக்கைளை முன்வைத்து, சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அய்க்கப் (AICUF) அரங்கில் 8.3.2013 அன்று காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர். 

உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
1. திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு

ad

ad