2ஜி வழக்கில் பிரதமர் – சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி மனு விசாரணைக்கு ஏற்பு
இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கிய ராசா, இது தொடர்பாக பி.சி.சாக்கோவுக்கு விளக்கம் அனுப்பினார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி சிதம்பரம் மற்றும்
யாழில் 14 வயது சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
இளவாலை மார்சன்கூடல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் குறித்த சிறுமதியை பாலியல் தேவைக்காக குடும்பமாக இருந்து வந்துள்ளதாகவும் குறித்த சிறுமியின் பொற்றோர் செய்த முறைப்பாட்டை
கடந்த 2004-ம் ஆண்டில் மதுரையில் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராமதாசை கைது செய்ய மதுரை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அடுத்து ராமதாசை கைது செய்ய போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.
8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் சீஸன்6 போட்டி எண் 47ல் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.
கனடாவின் மிகப் பெரிய மாகாணமான ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆற்றிவரும் சேவைகள் நான் நன்கு மதிக்கின்றேன் என கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் முதல்வர் கெத்தலின் வெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த வர்த்தக மேம்பாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் சென்னை: கெவின் பீட்டர்சன்
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துடுப்பாட்டக்காரர் கெவின் பீட்டர்சன், சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் கோப்பை கைப்பற்றும் என்று ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மத்தியில் அதிபரும் ஆசிரியரும் சண்டையிட்ட சம்பவம் ஒன்று சங்கானை கல்விக் கோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,சங்கானை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற மெய்வன்மைப்போட்டிகள் வட்டக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில்
கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக ப.சி. பிளான்..சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?
கடந்த லோக்சபா தேர்தல் முடிவைக் கருத்தில் கொண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமையின் அடிப்படையிலும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிரடியாக திட்டம்
திருத்தணி மாவட்டம் கொடத்தூரில் அரசு பஸ் பா.ம.க., வினரால் வழிமறித்து எரிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக போலீசார் தெரிவித்துள்ளதாவது: கொடத்தூர்பேட்டை இருந்து பொம்நாயக்கன்பேட்டை செல்லும் அரசு பஸ்சை பா.ம.க., வினர் வழிமறித்து கல் வீசியும் கண்ணாடியை உடைத்தும் எரித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் டி.ஐ.ஜி மற்றும் திருத்தணி எஸ்.பி, ஏ.எஸ்.பி தலைமையில் முகாமிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.,வினரை இன்று இரவுக்குள் கைது செய்வோம் என்று கூறினர்,
மதிமுக நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது: வைகோ
தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்துக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
பாமக அங்கீகாரத்தை ரத்துச்செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது,
பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார்.
மரக்காணம் அருகே நடந்த வன்முறைச் சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் வட மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக அகில இந்திய தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காஞ்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜெ.குரு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வராகி கேட்டுக்கொண்டுள்ளார்,
ராமதாஸ், ஜி.கே.மணி உள்பட 6 பேரை மே 14 வரை காவலில் வைக்க திருக்கழுக்குன்றம் நீதிமன்றம் உத்தரவு
ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, குரு. கணேசன் உள்பட 6 பேர் மீது மாமல்லபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 6 பேர் மீதும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேரையும் மே 14ஆம் தேதி வரை காவலில் வைக்க திருக்கழுக்குன்றம் நீதிபதி சிவா உத்தரவிட்டுள்ளார்.
ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள்? தமிழக அரசு மீது பாமக வழக்கறிஞர் குற்றச்சாட்டுபாமக நிறுவனர் ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 186 ரன் குவித்தது. பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளைஇழந்து 171 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 53 பந்துகளில் சதம் விளாசினார்.
சரப்ஜித் சிங் மரணம்: நீதி விசாரணைக்கு உத்தரவு
பாகிஸ்தான் லாகூர் நகரில் உள்ள லாக்பத் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாகாண முதல்வர் (பொறுப்பு ) நிஜாம்சேத் கூறுகையில், சரப்ஜித் சிங் மரணம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையினை 15 நாட்களுக்குள் சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தவறான ரயில் பயணச்சீட்டைக் காட்டியதால் அமைச்சருக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தில் தவறான பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் பயணித்த அமைச்சர் தியரி குரோஸ்ஜீன்(Thierry Grosjean) என்பவர் பயணச்சீட்டு மதிப்பில் இரண்டு மடங்கை அபராதமாகச்
டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 44-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட்
கஜேந்திரகுமார் எங்கே?- மூகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் இன்று மலை 4 மணியளவில் நுழைந்த முகமூடியணிந்த மர்ம நபர்கள் நால்வர் கஜேந்திரகுமார் எங்கே எனக் கேட்டு அவரது உதவியாளரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையின் வெற்றிக் கொடி நீடிக்குமா? பஞ்சாப்புடன் நாளை மோதல்
சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர்
சாத்தூர் ராமச்சந்திரன் சரணடைய உத்தரவு ஆள் கடத்தல் வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கீழ்கோர்ட்டில் சரணடைய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தி.மு.க., முன்னாள் அமைச்சர்
யாழ், கிளிநொச்சி, மன்னார் மே தினம் கூட்டம்! கிளி. கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!
“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மேநாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும்
மாவீரர் மேஜர் கணேஷ்சின் மனைவி கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையினரால் கைது
தமிழ் நாட்டின் திருச்சியில் பயத்தின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தனது இரண்டு பிள்ளைகளுடன் கோவர்ஜன் 10, நிதுர்சன் 7
காடுவெட்டி குரு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ( படங்கள் )
பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார். திருவல்லி க்கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது போலீஸ்.
அவுஸ்திரேலியாவிலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளார்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்
அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி
இலங்கை இனப்படுகொலையை நடத்திய மஹிந்த இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது.
தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள்.
சென்னை: பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவின்போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டப் பேரவையில் நேற்று பல்வேறு கட்சியினர் பேசினர். இதற்கு பதிலளித்து
புனேவுக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணி 164 ரன்கள் சேர்ப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 42-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு புனேவில் தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி
அழகிகள் நடனம் பார்க்க வேலை பார்த்த நகை கடையில் 360 பவுன் கொள்ளையடித்த ஊழியர்
சென்னை புரசைவாக்கத்தில் 'கேரளா ஜுவல்லர்ஸ்' என்ற பிரபல நகை கடை உள்ளது. இதன் உரிமையாளர் சிபிஜோசப். இவர் தனது கடையில் உள்ள நகை கையிருப்பு அவ்வப்போது ஆய்வு செய்வது உண்டு. இப்படி ஆய்வு செய்த போது 417 பவுன்
ராமதாஸ் கைது எதிரொலி : கிருஷ்ணகிரியில் பஸ் எரிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் அரசு பேருந்தை வழிமறித்து பயணிகளை இறக்கிவிட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் அரசு பேருந்து முழுமையாக எரிந்தது. பேருந்துக்கு தீ வைத்தவர்களை பிடிக்க இன்ஸ் பெக்டர் சிவலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாமக கொடிகள் சேதம்- சாலைமறியல் செய்தவர்களிடம் டி.எஸ்.பி சமாதானம் ( படங்கள் )
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராம கூட்ரோட்டில் உள்ள பாமக கொடி கம்பத்தில் இருந்த கொடியில் அசிங்கம் ஏற்படுத்தியதாக கூறி காஞ்சிபுரம் சாலையில் அக்கிராம பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல் மும்முனி கிராமத்தில் பாமக கொடியை சேதப்படுத்தியதை கண்டித்து செய்யாறு பைபாஸ் சாலையிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் வந்தவாசி பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாமகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் வந்தவாசி சுற்றுவட்டாரப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் எஸ்பி முத்தரசி தலைமையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் வையாபுரி குடும்பத்தினருடன் ஜெயலலிதாவை சந்தித்தார்
நடிகர் வையாபுரி தனது குடும்பத்தினருடன் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயல லிதாவை சந்தித்தார். அப்போது அவர், தனது மகன் வி.ஷ்ரவன் உபநயன நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்துமாறு அழைப்பிதழ் கொடுத்து கேட்டுக்கொண்டார்.
காடுவெட்டி சென்னையில் கைது
பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார். திருவல்லிக் கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது போலீஸ்.
மாமல்லபுரம் வன்னிய சித்திரை முழுநாள் இரவு விழாவில் அனுமதித்த நேரத்திற்கு மேலாக பேசியதன் புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ராமதாசுக்கு 15 நாள் சிறை : கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார் மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்ப்பட்டார். இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.
இதையடுத்து ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங் கிக்கொண்டுள்ளனர்.
ராமதாஸ் கைது எதிரொலி : செஞ்சியில் 5 பேருந்துகள் உடைப்பு - சாலைமறியல்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்படுகிறார். காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாமகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். செஞ்சியில் 5 பேருந்துகளை அடித்து உடைத்துள்ளனர். மேலும் செஞ்சியில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 500க்கும் அதிகமான பாமகவினர் கைது
திருப்பத்தூர், நாட்டராம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, அணைக்கட்டு, வேலூர், ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் போன்ற பகுதிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக் கப்பட்டுள்ளனர்.
ராமதாசை எந்த சிறைக்கு கொண்டு செல்வது? : காவல்துறை திணறல்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.
இதையடுத்து ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவரை எந்த சிறைக்கு கொன்டு செல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. வட தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்காணோர் கைதாகி யுள்ளனர். இதனால் வடதமிழகத்தில் பதட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ராமதாசை எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் எந்த சிறைக்கு கொண்டு செல்வது என்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.
மதுரை சிறையில் ராமதாசை அடைக்க திட்டம் ? காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்படுகிறார்.
வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக இருப்பதால் தென்மாவட்டத்தில் குறிப்பாக மதுரை சிறையில் அடைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிகிறது.
தென்மாவட்டத்தில் அடைத்தால் பதட்டம் குறையும் என்று முடிவெடுத்து மதுரை சிறையில் அடைக்க விருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து கசிகிறது.
ராமதாஸ் கைதினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை பற்றிய மேலதிக செய்திகளுக்கு எம் இணைய தளத்தோடு இணைந்திருங்கள்
ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு - விபரம்!
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் வைக்கப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதற்கான வழக்கு விபரம் :
143, 188,சி.எல்.ஏ.7(1) (a) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், காவல்துறை தடையை மீறுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் மூன்று நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளிவர வாய்ப்பு உள்ளது என குறிப்பிடுகின்றனர். நாளை மே -1 என்பதால் அரசு விடுமுறை. அதனால் நாளை ஜாமீன் வாங்க முடியாது. நாளை மறுதினம் தான் பாமக வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தடைமீறு - பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு
கடந்த 25 ந்தேதி பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டம் நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது மரக்காணத்தில் பாமகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமதாஸ் கைது எதிரொலி : விழுப்புரத்தில் 144 தடை உத்தரவு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் பிறப்பித்த உத்தரவில், ராமதாஸ் கைதை தொடர்ந்து பா.ம.க.,வினர் போராட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ராமதாசுக்கு 15 நாள் சிறை : வேலூர் சிறையில் அடைக்க முடிவு
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (30.4.2013)காலை கைது செய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பொலிஸார் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை ஹோமரங்கடவல பம்புருகஸ்வௌ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
தயா மாஸ்டர் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதை கேட்டாலே மக்கள் சிரிக்கின்றனர்: ஐ.தே.க.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
பாலியல் குற்றச்சாட்டு!- காத்தான்குடி நகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றில் சரணடைந்த காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீரை எதிர்வரும் மே 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக மக்கள் நேரடியாக களம் இறங்கினால் சோவியத் ரஷ்யா போன்று இந்தியா துண்டு, துண்டாகத்தான் உடைந்து போகும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 16ம் திகதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை நடைபயணத்தை மதிமுக., பொது செயலாளர் வைகோ தொடங்கினார்.
ஆசையை வெல்ல நிர்வாண பெண்களோடு தூங்கினார் காந்தி: அமெரிக்க இணையத்தளம்
இந்திய மக்களால் கொண்டாடப்பட்டுவரும் மகாத்மா காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட்.கொம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மரக்காணம் கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பேன் என்று
சட்டப்பேரவையில் இன்று மரக்காணம் கலவரம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பாமக உறுப்பினர் குருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன தமிழக முதல்வருக்கு நன்றி! : திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட்
மு.க.அறிவுநிதி மீது மு.க.முத்து மனைவி அளித்துள்ள புகார் மனு
திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி எம்.சிவகாமசுந்தரி. இவரது மகன் மு.க.அறிவுநிதி பாடகர்/நடிகர்.
வெடிகுண்டு தாக்குதல் : சிரியா பிரதமர் உயிர் தப்பினார்
சிரிய நாட்டு பிரதமர் வேயல் அல்-ஹல்கி டமாஸ்கஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தீவிரவாதிகள் பிரதமரை நோக்கி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 3 நாடுகள் பாதுகாப்பு வழங்க முன் வந்ததாக குமரன் பத்மநாபன் என்று அழைக்கப்படும் கே.பி தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்துக்கான ஆயுதக் கொள்வனவில் பலகாலம் ஈடுபட்டிருந்த கே.பி 2009ம் ஆண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தார். தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ள அவர் அரசியல் களத்திலும் இறங்கவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியவண்ணம் உள்ளது. இதேவேளை இவ்வார இறுதியில் அவர் கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் 2008ம் ஆண்டு புலிகளுக்கு சுமார் 3 நாடுகள் பாதுகாப்பை வழங்க தயாராக இருந்ததாக கூறி புதுக் குண்டு ஒன்றைப் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் !
இரண்டு ஆபிரிக்க நாடுகளும், ஒரு ஆசிய நாடும் இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த நாடுகள் என்று அவர் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை. அக் கேள்வியையும் அவர் தவிர்த்துகொண்டுள்ளார். இருப்பினும் போர் நடைபெற்ற காலப்பகுதியான 2008ம் ஆண்டிலேயே இது நடைபெற்றதாக அவர் மேலும் விபரித்துள்ளார். அத்துடன் தாம் 2008ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை யுத்த நிறுத்தம் குறித்து வலியுறுத்தி வந்த போதும், அவர் இதனை கருத்தில் கொள்ளவில்லை என்றும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் பின்னர், யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பில் புலிகள் தன்னிடம் ஆலோசித்ததாகவும் இருப்பினும் அப்போது காலம் கடந்துவிட்டது என்றும் கே.பி மேலும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவர் குறிப்பிடும் 2008ம் ஆண்டு போர் நிறுத்தமானது கோட்டபாயவால் நெறிப்படுத்தப்பட்டது ஆகும். விடுதலைப் புலிகள் எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்காது, தமது ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையவேண்டும் என்பதே அப்போதைய இலங்கை அரசின் போர் நிறுத்தமாக அறிவிக்கப்பட்டது. அப்படி என்றால் நிபந்தனை அற்ற சரணடைவையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் அதற்கு அடிபணியவில்லையே ! அவர்கள் இறுதிவரை போராடினார்கள். தற்போது வந்து 3 நாடுகள் உதவ இருந்தது 2 நாடுகள் உதவியது என்று கூறுவது எல்லாம் தன்னை நியாயப்படுத்த அவர் கூறும் கூற்றாக அல்லவா இருக்கிற
LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 3 நாடுகள் பாதுகாப்பு வழங்க முன் வந்ததாக குமரன் பத்மநாபன் என்று அழைக்கப்படும் கே.பி தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்துக்கான ஆயுதக் கொள்வனவில் பலகாலம் ஈடுபட்டிருந்த கே.பி 2009ம் ஆண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தார். தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ள அவர் அரசியல் களத்திலும் இறங்கவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியவண்ணம் உள்ளது. இதேவேளை இவ்வார இறுதியில் அவர் கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் 2008ம் ஆண்டு புலிகளுக்கு சுமார் 3 நாடுகள் பாதுகாப்பை வழங்க தயாராக இருந்ததாக கூறி புதுக் குண்டு ஒன்றைப் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் !
வெனிசுலா செல்ல முயன்ற இலங்கை அமைச்சர் அமெரிக்க விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்
மியாமி விமான நிலையம் வழியாக வெனிசுலா செல்ல முயன்ற இலங்கை அமைச்சர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் நாட்டு ராஜ பக்சேவும் சித்திரை முழுநிலவும் ....... ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள், முசுலீம் எதிர்ப்பு இந்துமத வெறி பாசிசத்தை முன்னிறுத்தி அட்டூழியங்களை எப்படிச் செய்து வருகின்றனவோ அப்படியே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை நிறுத்தி மோடியைப் போல
செய்தித் தளங்கள் என்ற பெயரில் வலம் வரும் சில இணையத் தளங்கள் இன்று ஆபாசம் நிறைந்த காமத் தளங்களை விடக் கேவலமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. அரசியல், நாட்டு நடப்புகள், சமூக முன்னேற்றக் கட்டுரைகள், வரலாறுகள்,
300 வரையான உள்ளுர் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் உள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி உணவகம் (கன்ரீன்) என்ன நிலையில் நடக்கிறது என்று தெரியுமா? 12 சமையல் பணியாளர்கள் நியமனம் செய்யக்கூடிய இடத்தில்
கூட்டமைப்போடு இணைந்து பயணிப்போம்! தந்தை செல்வா நினைவுப் பேருரையில் ஆனந்தசங்கரி
தந்தை செல்வாநாயகத்தின் 36 ஆவது நினைவு தினமான கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின்அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபை செயற்குழு கூட்டம்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) விசேட பொதுச்சபைக் கூட்டம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தர்த்த்தன் அவர்களின்