புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,

வடசென்னை தொகுதியில் அ தி மு க வுக்கே வெற்றி வாய்ப்பு -நக்கீரன் சர்வே 
              தேர்தல் கருத்தாய்வு என போகும்போதெல்லாம், மக்கள் விதம்விதமான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். சாதாரணவர்கள், பாமரர்கள், வெளியுலகம் அறியாதவர்கள் என பொதுவாகக் கருதப்படும் மக்கள், ஆட்சியைப் பற்றியும் ஆட்சி யாளர்களைப் பற்றியும் பட்டென கருத்துகளை எடுத்துவைத்தார்கள். பல்வேறு தரப்பட்ட மக்களும் கூறிய கருத்துகளில் இருந்து கிடைத்துள்ள முடிவுகள், சிலருக்கு ஆச்சர்யமாகவும் சிலருக்கு அதிர்ச்சி யளிப்பதாகவும் இருக்கலாம். எல்லா தேர்தல்களிலும், மக்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டிவரும் நக்கீரன், இந்த முறையும் தன் சீரிய பணியில் இறங்கியுள்ளது. வழக்கம்போல, வாசக எஜமானர் களாகிய நீங்களும் வரவேற்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். 

2014 மக்களவைத் தேர்தல் கருத்தாய்வை, வடசென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து தொடங்கியிருக்கிறோம். 

தொகுதிக்குள் போவதற்கு முன், தொகுதியைப் பற்றி கொஞ்சம்...!


வடசென்னை என அழைக்கப்பட்டாலும், பூர்வீக சென்னையே இந்தப் பகுதிதான். துறைமுகம், அனல்மின் நிலையங்கள், அசோக் லேலண்டு, எம்.எஃப்.எல்., எம்.ஆர்.எஃப்., சி.பி.சி.எல்., விம்கோ என பெரும் பெரும் தொழிற்சாலைகள்  வரவர, தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியாக மாறிப் போனது. 

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வாசகம், வடசென்னைக்கு சிறிதும் பொருந்தாது. வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மணலிப்புதுநகர், சின்னசேக்காடு பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகபட்சமாக 10 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், தென்சென்னை, மத்திய சென்னையிலோ நிலமதிப்பு 50 மடங்கு அதிகரித்துள்ளது. வடசென்னையின் வளர்ச்சிக்கு பளிச்சிடும் உதாரணம் இது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தி.மு.க. மட்டும் இங்கு 10 முறை வெற்றி பெற்றுள்ளது. குமரி மாவட்டத்துக்காரரான நாஞ்சில் மனோகரன், தி.மு.க. சார்பில் 67, 71 தேர்தல்களில் வெற்றிபெற்றார். பிறகு, அதே மனோகரன், அ.தி.மு.க. சார்பில் இங்கு நின்றபோது, தி.மு.க.வின் ஆசைத்தம்பி அவரைத் தோற்கடித்தார். இதேபோல, 1980-ல் தி.மு.க. எம்,பி.ஆன ஜி.லட்சு மணன், காங்கிரசுக்குத் தாவி, மீண்டும் போட்டியிட்ட போது, திமுகவின் என்.வி.என். சோமுவிடம் தோற்றுப்போனார். 1989-ல் சோமுவைத் தோற்கடித்து எம்.பி.யான தா. பாண்டியன், ராஜீவ் கொல்லப்பட்ட 91-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்றார். அடுத்து நடந்தது சுவாரஸ்யம், மூன்றாவது முறையாக ’கை’ சின்னத்தில் போட்டியிட்ட தா.பா., என்.வி.என். சோமுவிடம் தோற்றுப்போனார். கடந்த தேர்தலில், தத்துவமேதை எனப்படும் டி.கே. சீனிவாசனின் மகன், டி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க. சார்பில் நிற்க, அவரிடமும்  தோற்றுப் போனார் தா.பா. 98, 99, 2004, 2009 எனத் தொடர்கிறது, தி.மு.க.வின் வெற்றி.


ஹாட்ரிக் வெற்றி வெற்ற தி.மு.க.வின் செ.குப்புசாமியிடம், 2004 தேர்தலில் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியார் (பா.ஜ.க.) தோற்றுப்போனார்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து பி.சீனிவாசன் என்பவர் மட்டுமே வடசென்னை யில் வெற்றி பெற்றுள்ளார். சோஷலிஸ்ட் கட்சியில் நின்று இத்தொகுதியின் முதல் எம்.பி.ஆன எஸ்.சி.சி. அந்தோணிபிள்ளை, 1967-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தது, வரலாறு. 

இப்போது வடசென்னை மக்களவைத் தொகுதியில் என்ன நிலவரம்? 

ஆர்வத்தோடு களமிறங்கிய நம்மைச் சூழ்ந்துகொண்ட மக்கள் -குறிப்பாக பெண்கள், ’""ரேஷன் ஃபாரம் ஃபில் பண்ண வந்திருக்காங்கப்பா, முதியோர், விதவை பென்ஷனுக்கு புதுசா ரசீது குடுக்க வந்திருக்காங் களாம்''’என்று பலவித எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினார்கள்.

போகுமிடங்களில் எல்லாம், நல்ல குடிநீர் கிடைப்பதில்லை, சுவாச நோய்களை உண்டாக்கும் காற்றுமாசுபாடு, மோசமான சாலைகளால் அன்றாடம் நிகழும் மரண விபத்துகள், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை முக்கிய பிரச்சினைகளாக மக்கள் சொல்கிறார்கள்.  

சென்னையில் மின்சாரப் பிரச்சினை இல்லைனு சொன்னாலும், வடசென்னையில இரவு, பகல் கணக்கில்லாமல் அடிக்கடி மின்தடை. முறை யான பராமரிப்பு இல்லாததால், மழைக்காலத்தில் மின்கசிவு ஏற்பட்டு, அப்பாவி ஏழை மக்கள் பலியாகுறது சர்வசாதாரணம். வடசென்னை முழுக்க நிலத்தடி நீர் படுமோசம். பல இடங்கள்ல குடிநீர்ல சாக்கடை கலந்துதான் வருது. இதனால, தனியார் விக்கிற 2ரூபாய், 6 ரூபாய் தண்ணீ, 35 ரூபாய் கேன் தண்ணீ வாங்கிதான் சமைக்கவேண்டியிருக்கு. இலவச லாரித் தண்ணிக்கு எல்லா இடத்திலயும் குடத்துக்கு 50 காசு கொடுக்கணும்கிறது கட்டாயம். வடசென்னையில எங்கயாவது ஒரு நல்ல சாலையப் பாத்துடமுடியாது. பல இடங்கள்ல கழிவுநீர் ஓடிக்கிட்டே இருக்கும். ""திருவொற்றியூர் நெடுஞ்சாலை அகலப்படுத்துறது, சென்னை- எண்ணூர் துறைமுக இணைப்புச்சாலை பணிகளை முடுக்கிவிடாததால், தினமும் விபத்துகள் நடக்குது. திருவொற்றியூர் மாட்டுமந்தை ரயில்வே மேம்பாலம் உறுதிமொழியா மட்டுமே இருக்கு. அஞ்சு முறை டெண்டர் விட்டும் இந்தப் பணி தொடங்குறதுக்கான அறிகுறியே தெரியல. இதனால், மணலி பகுதியிலுள்ள தொழிற்சாலைகள்ல விபத்து ஏற்பட்டு உயிராபத்து ஏற்படுறவங்கள, ஸ்டான்லி மருத்துவமனைக்கோ, தண்டையார்பேட்டையில இருக்கிற அப்பல்லோ மருத்துவமனைக்கோ ஆம்புலன்சுல வந்தாலும், பல நேரங்கள்ல உயிரைக் காப்பாத்த முடியாமப் போவது பெரும் கொடுமை. 


இங்க இருக்கிற பெரும் தொழிற்சாலைகளால் காற்று மாசுபாடு உண்டாகுது. குறிப்பா, மழை, குளிர் காலங்கள்ல காத்துலயே துகள்களாகவே மாசுகள் மிதக்கும். இதனால, ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நாள்ல கடுமையா அவதிப்பட்டு மருத்துவமனைகளில் குவியறதை ஒவ்வொரு வருசமும் பாக்கமுடியும். மணலி பகுதியில மாசுபாட்டை ஆய்வுசெய்றதுக்கு ஒரு கருவியைப் பொருத்துனாங்க. அதனால ஏதாவது பலன் இருக்கானு தெரியலை. கொடுங்கையூர் குப்பைக் கூடத்தால் அதைச் சுத்தியுள்ள பெரம்பூர், திரு.வி.க. நகர் பகுதிகள்ல மனிதர்கள் வாழவே முடியாத அளவுக்கு காத்துல இருபது மடங்கு அதிகமா மாசுபாடு ஏற்பட்டுருக்குனு ஆய்வுகள் மூலமா நிரூபிச்சும் ஒரு நடவடிக்கையும் இல்லை. குப்பையில இருந்து மின்சாரம் தயாரிக்கப்போறதா வாக்குறுதி மட்டும் பல பேரு கொடுத்தாங்க. செயல்பாட்டுல ஒன்றையும் காணோம்''’என்று ஒவ்வொரு பகுதியிலும், உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய ஆனால் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளைப் பட்டியலிடு கிறார்கள், வடசென்னை மக்கள். 

"தி.மு.க.வைச் சேர்ந்த தொகுதி எம்.பி.  டி.கே.எஸ். இளங்கோவன் பற்றி தனிப்பட்ட வகையில் பொதுவாக எந்தப் புகாரும்  இல்லை. ஆனால், "தொகுதிப் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை' என்று பரவலாக சொல்லப்படும் புகாராக இருக்கிறது. எம்.பி. தொகுதி நிதியில் செய்யப்பட்ட பணி என்று இவரைக் குறிப்பிடும் பலகைகளை அரி தாகவே பார்க்க முடிந்தது. ""மேம்பாலம் போடறேன்னு சொல்லி, இவர் கொடுத்த லிஸ்ட்ல பல இடங்கள்ல மேம்பாலம் வரவே இல்லை. திருவொற்றியூர் சாலை விரிவாக்கம், கொடுங்கையூர் குப்பை போன்ற பிரச் சினைகளில் இவர் என்னதான் செய்தார்னே தெரியலை. திருவொற்றியூர்-விம்கோநகர் இடையில் ஒரு ரயில்நிலையம் அமைப்பது, திருவொற்றியூரில் மும்பை, கல்கத்தா ரயில்கள் நின்றுசெல்ல வைப்பது, கடலரிப்பால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, தூண்டில்வளைவு அமைப்பதுன்னு பல உறுதிமொழிகளை மட்டும் கொடுத்தாரு...'' என குறைகளைப் பட்டியலிடுகிறார்கள், தொகுதி வாசிகள். 

""நல்லது கெட்டது எதுவானாலும் வந்து நிப்பாங்க’’ என்று பழைய எம்.பி.க்களில் என்.வி.என்.சோமு, செ.குப்புசாமி இருவரையும் நினைவுகூர்கிறார்கள். 


இது ஒரு பக்கம் இருக்க, நடப்பு அரசியல் பற்றி மக்களின் மனக் கணக்குகள், சுவாரஸ்யமாக இருக்கின்றன.  

உடும்புப்பிடியாக, "நாங்க எப்பவுமே இந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம்'’என்று சொல்பவர்கள், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களைப் பிடிக்கவில்லை என நேர்மாறாகவும் கருத்துக் கூறினார்கள். 

வடசென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி தராதது பற்றி பரவலாகவும் ஜெயக்குமாரின் பதவியைப் பறித்தது ராயபுரத்திலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. 


வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் பா.ம.க.வுக்கு மட்டுமின்றி தி.மு.க., அ.தி.மு.க. என பல கட்சிகளுக்கும் ஆதரவு பிரிந்து  இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதேபோல, தலித் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., வி.சி.க., மார்க்சிஸ்ட் கட்சி என்ற வரிசையில் ஆதரவு காணப்படுகிறது. முஸ்லிம்களில் பாதிக்கும் மேல் தி.மு.க.வுக்கும் கணிசமானவர்கள் ம.ம.க.வுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர். வடசென்னையில் நீண்டகாலமாக இருந்துவரும் மலையாளிகள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பலத்த ஆதரவு காணப் படுகிறது. 

மத்தியில் காங்கிரசா, பா.ஜ.க.வா என்றால் காங்கிரசுக்குதான் வரவேற்பு. காங்கிரஸ் மேல இருந்தாதான் நல்லது என்று சொன்ன பலருக்கும், அதற்கான காரணம் கேட்டால், சொல்லத் தெரியவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினைக்குக் காரணம் என காங்கிரஸ் மீது குற்றம்சாட்டப்படுவதை நிராகரித்துவிட்டு, ’’பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை செலக்ஷன் பண்ணலாம்னு இருக்கோம்’’ என்றும் சில இடங்களில் குறிப்பிட்டுச் சொன்னார்கள். பா.ஜ.க.வில் மோடியையும், அத்வானியையும் சம அளவில் பிரதமர் வேட்பாளருக்கு டிக் அடிக்கிறார்கள். அதே நபர்கள், தமிழ்நாட்டில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வை டிக் செய்து திணறடித்தனர். 


அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு பற்றிக் குறிப்பிட்டு, எல்லா இடங்களிலும் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். குடிநீர், சாலை பிரச்சினைகளைத் தீர்ப்பதில், கடுமையான மந்தநிலை. எந்த கவுன்சிலரைப் பற்றியும் நல்ல கருத்தே வெளிப்படவில்லை, குறைகளும் புகார்களுமே வருகின்றன. ஆனாலும், கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சி பரவாயில்லை என கணிசமானவர்கள் மதிப்பிடுகிறார்கள். 

எம்.பி.யைப் பொறுத்தவரை, குற்றச்சாட்டு என எதுவும் இல்லை என்றாலும், ’நல்லவருதான், ஆனா வல்லவரு இல்லையே’ என்கிற பெயரே கிடைத்திருக்கிறது. 

தன்னுடைய பணிகளைப் பற்றி இளங்கோவன் என்ன சொல்கிறார்?

""நான் உறுதியளித்தபடி, வியாசர்பாடி, மூலக்கடை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம் பாலப் பணிகள் தொடங்கி, நடந்துவருகின்றன. ரெட்டை ஏரி மேம்பாலம் அமைக்க, 2011-ல் தி.மு.க. ஆட்சியில் அறிவித்தது, இப்போதுதான் பணியைத் தொடங்குகிறார்கள். சென்னை-எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தை, தொடர்ந்து கவனித்து நான் முயற்சி எடுத்ததால்தான் பூர்வாங்கப் பணி தொடங்கியிருக்கிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை அகலப்படுத்துவது வழக்குகளாலும் இடப் பிரச்சினையாலும் முடியாமல் இருக்கிறது. 

என் தொகுதி நிதியில் இருந்து, நெட்டுக்குப்பம் சுனாமி குடியிருப்புக்கு ரூ.4.5 கோடி, 10 இடங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க தலா ரூ.8 லட்சம், அம்பேத்கர் கல்லூரியில் கலையரங்கத்துக்கு ரூ.50 லட்சம் மற்றபடி சேதமடைந்த பள்ளிகள், நூலகக் கட்டிடம் என பல்வேறு திட்டங்களுக்கு 80% தொகையை ஒதுக்கி, பணிகளும் நடந்துள்ளன. புதிய மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைக்காமல் இருப்ப தாலும் நெரிசலான வடசென்னையில் பல இடங்களில் திட்டத்துக்கான இடம் கிடைக்காமல் இருப்பதாலும் மீதமுள்ள தொகையை ஒதுக்க முடியவில்லை. திருவொற்றியூரில் வடமாநில ரயில்கள் நின்று செல்லும்படி அங்கு இடத்தை அகலப்படுத்த வேண்டி யிருக்கிறது. இதற்கு, டெல்லியில் அண்மையில்தான் ஒப்புதலே தந்தனர்''’ என்று விளக்கம் அளிக்கிறார், டி.கே.எஸ். இளங்கோவன். 

வடசென்னை தொகுதியில் நாம் சந்தித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6030.

ஆண்கள் 3012, பெண்கள் 3018.

இவர்களில் இதற்கு முன்...

வாக்களித்தவர்கள் 90%

இதுவரை வாக்களிக்காதவர்கள் 10%

வரும் நாடாளுமன்றத் தேர்தலில்

வாக்களிப்போம் என்றவர்கள் 93%

வாக்களிக்கப் போவதில்லை என்றவர்கள் 7%

-நக்கீரன் சர்வே டீம்

,

பொலிவியா அதிபர் விமானத்தில் தப்பித்தாரா ஸ்னோடென். அவசரமாக தரையிறக்கி சோதனை.

அமெரிக்காவின் உளவு செயல்பாடுகள் குறித்து தகவல் வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தற்போது ரஷ்ய நாட்டின் மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியுள்ளார். இவர் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு கோரிக்கை அனுப்பி இருந்தார். இதில் பொலிவியா நாடும் ஒன்று. 
 
இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின் பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மொராலெஸ் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டார். இந்த

,

புல்லுருவிகளுக்கும் துரோகிகளுக்கும் இடமளிக்கும் கூடாரமாக தி.மு.க. மாறிவிட்டது. பரிதி இளம்வழுதி


கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார் பரிதி இளம்வழுதி! தி.மு.க. சார்பில் ஆறு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துணை சபாநாயகராகவும் செய்தித் துறை அமைச்சராகவும் பொறுப்புவகித்து, தி.மு.க-வின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பரிதி இளம்வழுதி. 1991-96 காலகட்டத்தில் தி.மு.க. சார்பில் சட்டசபைக்குச் சென்ற ஒரே உறுப்பினர், பரிதிதான். அந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களால் தினந்தோறும் தாக்கப்பட்டு, சபையில் இருந்து தூக்கி வீசப்படுவார் பரிதி. இன்று, தன்னுடைய மனவலிக்கு மருந்து தேடி, அதே அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். 

,


ஸ்காபுறோ RT சேவை சுரங்க தொடரூந்தாக மாற்றுவதில் நீடிக்கும் சிக்கல் !!
J
 ஸ்காபுறோவிற்கு சுரங்க தொடரூந்துகளே தேவை என்ற கவுன்சிலர்களின் வாதத்திற்குப் பின்னர் புதிதாக சுரங்கத் தொடரூந்து  சேவைகளை கொண்டு வர வேண்டுமானால் மேலும் அதிகமாக  $1 பில்லியன் செலவாகும் என்ற குண்டைப் போட்டுள்ளது மெட்ரோலிங்ஸ்.

மெட்ரோலிங்சின் புதிய அறிவிப்பினால் சுரங்கத தொடரூந்து சேவைகளுக்காக மாநகர அரசிடம் தொடர்ந்தும் வாதம் செய்து வந்த மைக்கேல் தோம்ப்சன் உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

,


 ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு - கென் கிருபாவா , மிட்சீ ஹன்டரா !ளியிடப்பட்டிருப்பினும் கூட ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியில் போட்டியிடும் இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவக் கூடும் எனத் தெரிகிறது. ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியில் போட்டியிடப் போகும் கென் கிருபா இகுருவி வாசகர்களுக்கு புதியவரல்ல. நம்மவர் என்பதால் அவரைப் பற்றி அதிகம் சொல்லித்தான்  தெரிய வேண்டும்  என்பதில்லை. அந்த பகுதியில் பிரபலமான ரியல் எஸ்டேட் முகவர் மட்டுமல்லாது கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர். 

.

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் !

25 வயதான லீனா மரியா பால் ஒரு மலையாள திரைப்பட நடிகை. கடந்த மே 28 அன்று தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் வைத்து அவர் கைது  செய்யப்பட்டார். தமிழகத்தில் இரு தொழிலதிபர்களை ஏமாற்றியதாக 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர் பாலாஜி என்ற சுகாஸ் சந்திரசேகர் தப்பி விட்டிருக்கிறார்.
மரியா பால் கைது
லீனா மரியா பால் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறார்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து ஒன்பது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், ஆடி ரக கார்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ரூ 19 கோடி. இத்துடன் தலா ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய உயர் ரக கைக்கடிகாரங்கள் 80-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டுக்கு முன்னாள் ராணுவத்தினர் மூவர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட பாதுகாப்புப் படை இருந்ததாம்.

.

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் !

25 வயதான லீனா மரியா பால் ஒரு மலையாள திரைப்பட நடிகை. கடந்த மே 28 அன்று தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் வைத்து அவர் கைது  செய்யப்பட்டார். தமிழகத்தில் இரு தொழிலதிபர்களை ஏமாற்றியதாக 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர் பாலாஜி என்ற சுகாஸ் சந்திரசேகர் தப்பி விட்டிருக்கிறார்.
மரியா பால் கைது
லீனா மரியா பால் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறார்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து ஒன்பது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், ஆடி ரக கார்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ரூ 19 கோடி. இத்துடன் தலா ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய உயர் ரக கைக்கடிகாரங்கள் 80-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டுக்கு முன்னாள் ராணுவத்தினர் மூவர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட பாதுகாப்புப் படை இருந்ததாம்.

,

ஸ்னோடன் : சாமியாடுகிறது அமெரிக்கா பயந்து ஓடுகிறது இந்தியா 

லகின் ஒற்றைத் துருவ வல்லரசின் தொடைகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. எட்வர்ட் ஸ்னோடன் என்ற தனி ஒரு மனிதரை எதிர்த்து உலக நாடுகளின் அரசுகளுக்கெல்லாம் மிரட்டல் அனுப்பி கொண்டிருக்கிறது அமெரிக்க ‘வல்லரசு’.
பொலிவிய அதிபர் விமானம்
திசை திருப்பப்பட்ட பொலிவிய அதிபர் விமானம்
மனித உரிமை, பேச்சுரிமை, தகவல் உரிமை என்று முழக்கங்களை வைத்து நூறு ஆண்டுகளுக்கு மேல் புனித பிரச்சாரம் செய்து வந்த அமெரிக்க போதனையின் லட்சணம் உலகெங்கும் நாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்களுக்கு எதிராக எந்த வித குற்றச் செயலும் செய்யாத ஸ்னோடனை தேடிப் பிடிக்கும் நோக்கத்தில் அடிப்படை மனித நாகரீங்கள் அனைத்தையும் மீறி

,

கே.பி, தமிழினி மற்றும் தயா மாஸ்டர் மூவரும் ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நியமனங்களுக்கென விண்ணப்பம்

எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனங்களுக்கென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதி சேகரிப்பாளரும், ஆயுதக் கொள்வனவாளருமான ‘கே.பி’ என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணித் தலைவி ‘தமிழினி’ என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் அதே அமைப்பின் முன்னாள் பேச்சாளரும், பிரச்சார அணித் தலைவருமான ‘தயா மாஸ்டர்’ என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மூவரும் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

,

முழு நாடும் சிங்கள பௌத்த நாடு என்ற ஏகாதிபத்திய கொள்கையை ஏற்று கொள்ள முடியாது - ஹெல உறுமயவுக்கு மனோ

இந்த நாடு இங்கு வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனங்களுக்கும் சொந்தமானது. இந்த அடிப்படையை

,

அதிமுகவில் இணைந்த திமுக நகர்மன்ற உறுப்பினர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ரோஸ்லின் சாரதா. தி.மு.க. பிரமுகரான இவர், தனது ஆதரவாளர்கள் சுமார் 300

,


இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை : திவ்யா
தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதலர்கள் இளவரசன் - திவ்யா பிரிந்தனர். திவ்யா தனது தாயாருடன் தான் செல்ல விரும்புவதாக சென்னை

,

காடுவெட்டி குரு மீது மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டம்
 காடுவெட்டி குரு மீது மீண்டும் பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்.

பாமக எம்.எல்.ஏ.  காடுவெட்டி ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை நேற்று ரத்து செய்யப்பட்டது.

.

விடுதலைப்போராட்டம் முடிந்து விட்டது என்று கேணல் ராம் கூறியதாக இணையங்களில் செய்தி கிடக்கிறது. இதே ராம்தான் மே 18 இற்கு பிறகு காடுகளுக்குள் இருந்து பயிற்சி எடுக்கிறோம், விரைவில் போராடுவோம் என்றும் கூறினார். 
அவர் அற்புதமான ஒரு போராளி. கேபியின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இன்று சிங்கள சித்திரவதை முகாமிலிருந்து சிங்களத்தின் தேவைக்கேற்ப பேச வேண்டிய சூழல்..

,

விடுதலைப் போராட்டத்தை மறந்து விடுங்கள்: புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுர
ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வருமாறு புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை

,

தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைக்கப்படுகிறார்! - கே.பி. வடக்கில் போட்டி: அமைச்சர் மைத்திரிபால
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இணைக்கப்படவுள்ளார். 

,

நாளை கொழும்பில்
அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. 
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் நாளை பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

,

புலிக்கொடியுடன் பிரித்தானியா கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்தவருக்கு சர்வதேச பிடியாண
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் பிரித்தானியா கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இலங்கைத்

,

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதிகாரத்தை பகிர்ந்து ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளினால் கையொப்பமிடப்பட்ட மகஜரில் ரணில் கையொப்பமிட்டார்.
13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்களிடம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளது.

.

அமைச்சர் திஸ்ஸ விதாரண இல்லாத தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது: புளொட் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சிறிதரன்
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் அமைச்சர் திஸ்ஸ விதாரண இல்லாத தெரிவுக்குழுவில் தமிழ்

.

ஏனைய மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரமே வடக்கிற்கும் வழங்க வேண்டும்: விமல்- மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர்களின் புதல்வர்கள் போட்டி
நாட்டில் ஏனைய மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்கள் மாத்திரமே வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

3 ஜூலை, 2013

"தி.மு.க.வில் 6 முறை எம்.எல்.ஏ., ஐந்து வருடம் சட்டமன்ற துணை சபாநாயகர், 5 வருடம் மந்திரி, கட்சியில் துணைப் பொதுச்செயலாளர்னு பல வாய்ப்புகளைத் தலைமை கொடுத்திருந்தும், சமீபகாலமா பரிதிக்கு கட்சிக்குள்ளேயே கசப்பான அனுபவங்கள்னு சொல்லப்படுது. அது தானே அரசியல்?''



         ""ஹலோ தலைவரே... பரபரப்பான ராஜ்யசபா தேர்தல் முடிந்த வேகத்தில்  கொடநாட்டுக்கு போயிட்டாரு ஜெ!''

""அங்கே எத்தனை  நாள் ஓய்வாம்?'' 

சுவிட்சலாந்தில் இலங்கைத் தமிழரின் கட்டாயத் திருமணத்தால்! புதிய தடை! அதிர்சியில் பெற்றார்

sinthuja1
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது.

புலிகளின் முன்னாள் தளபதிகள் ராம் மற்றும் நகுலன் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டி?


விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த தளபதிகளில் இருவரான ராம் மற்றும் நகுலன் இருவரும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் செல்லக்கூடாது! கடும் நிபந்தனைகளுடன் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானம்


வரும் ஆகஸ்ட் மாதம்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சில கட்டுப்பாடுகளுடனேயே

ராஜீவ் கொலை வழக்கு: கே.பியை விசாரிக்குமாறு மனுத் தாக்கல்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான குமரன் பத்மநாபன் என்பவரை விசாரணை செய்யுமாறு சென்னை

லண்டனில் விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் அமைச்சர் கெஹலியவின் மகனே!- ஸ்ரீலங்கா கிரிக்கெட


ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கலைஞர் மீதான அவதூறு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முரசொலி பத்திரிகையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார். 

2 ஜூலை, 2013

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இணைத்து விட முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இணைத்து விட முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுகவும், தேமுதிகவும் கோரியிருந்தன. ஒருவழியாக காங்கிரஸ் மேலிடம் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தது.

பிரபாகரனின் தீவிர ரசிகர் மரடோனா: பரபரப்புத் தகவல்

பிரபாகரனின் தீவிர ரசிகர் மரடோனா: பரபரப்புத் தகவல்

மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.சர்வதேச கால்பந்தாட்ட நட்சத்திரம் டியாகோ மரடோனா, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீவிர ரசிகர் என்ற பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தெரிவுக்குழுவில் தமிழ் பேசும் சமூகத்தினருக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது!- சி.வி.விக்னேஸ்வரன்

தெரிவுக்குழுவில் தமிழ் பேசும் சமூகத்தினருக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது!- சி.வி.விக்னேஸ்வரன்
13வது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவை

தொண்டராசிரியர் என்ற போர்வையில் 300 முஸ்லிம்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ரிசாத்தின் மோசடி

தொண்டராசிரியர் என்ற போர்வையில் 300 முஸ்லிம்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ரிசாத்தின் மோசடி
புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொண்டராசிரியர்கள் என்று சொல்லப்படும் 300 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

விளக்கம் அளிக்க வருமாறு அமெரிக்கத் தூதுவருக்கு சிறிலங்கா அழைப்பு

விளக்கம் அளிக்க வருமாறு அமெரிக்கத் தூதுவருக்கு சிறிலங்கா அழைப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்

1 ஜூலை, 2013

2014ம் ஆண்டில் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல்!- அரசியல் களத்தில் பரபரப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரும் 2014ம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக நம்பகமான தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர்
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர் என பிரபல சிங்களப் பத்திரிகையொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
ஜே.வி.பியில் இன்னுமொரு பிளவு
தென்னிலங்கையின் முன்னணி இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)  மீண்டும் பிளவுபட்டு, புதுக்கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தயா மாஸ்டருக்கு புதுப்பொறுப்பு
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் அரசாங்கம் புதுப் பொறுப்பொன்றை வழங்கியுள்ளது.

30 ஜூன், 2013

650க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம்! நடிகர் சூர்யா! Photos
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

திமுகவுடன் கூட்டணி அமையுமா? முகுல் வாஸ்னிக் பதில்!



தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, முகுல் வாஸ்னிக் முதல் முறையாக சத்தியமூர்த்திபவனுக்கு 30.06.2013
வட மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி: முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணப் பெண் நியமனம்
அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதியைக் கரம் பிடித்தார் இராணுவ வீரர்

முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
www.pungudutivuswiss.com
www.madathuveli.net
www.madathuvelimurugan.blogspot.com
யா/புங்குடுதீவு மடத்துவௌி பாலசுப்பிரமணியா் கோவில் -   

ஆரம்ப காலத்தில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவௌி. இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக காட்சிகள் 28.06.2013
  




           "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்!' -சி.பி.எம். தலைவர் ஒருவரை பற்றி இப்படித்தான் கொதித்துப் போயிருக்கிறார்கள் கேரள தமிழர்கள்.
ரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ராஜ்யசபாவுக்கான தேர்தல், தமிழக சட்டப்பேரவையின் மனுக்கள் குழு அறையில் 27-ந்தேதி நடந்தது. 
ஒன்பது மணிக்கு தேர்தல் துவங்க, 10 நிமிடத்துக்கு முன்பே தங்கள் இருக்கையில் அமர்ந்த ஏஜெண்டுகள், அறையை ஒரு நோட்டம் விட்டனர். அ.தி.மு.க.தரப்பில் மொத்தம் 10 ஏஜெண்டுகள். அவர்களில் சிலர், "யாருக்கு ஓட்டுப் போட்டோம்னு ஆத்தரைஸ்

           ""ஹலோ தலைவரே...… ராஜ்யசபா தேர்தலின்  போக்கும் முடிவுகளும் எப்படி இருக்கும்னு நம்ம நக்கீரன் ஆரம்பத்திலிருந்து  என்ன சொன்னதோ அதுதான் நடந்திருக்குது. இந்த ராஜ்யசபாவுக்காக கிடைச்ச ஆதரவு லோக் சபா  தேர்தலிலும் தொடருமாங்கிறதுதான் தமிழக அரசியலின் தற்போதை
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலய  கும்பாபிசேக நிகழ்வின் காட்சி 28.06.2013

பதவி விலகினார் மார்க்கரெட் பெஸ்ட் ; பிரகாசமாகிறது கென் கிருபா வெற்றி வாய்ப்பு 
ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியிலிருந்து ஒன்ரோறியோ சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கரெட் பெஸ்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியினைச் சேர்ந்த யாராவது ஒருவர் தினமும் பதவி விலகல் கடிதத்தினை மேலிடத்திற்கு அனுப்பி வைப்பதென்பது சமீப காலமாகவே வழக்கமாகி வருகிறது. 

Kalaignar Karunanidhi · 32,888 like this
36 minutes ago · 
  • மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுப் பெற்றதையொட்டி, தி.மு.கழகம் இலங்கைப் பிரச்சினையையே மறந்து விட்டதாகவும், கைவிட்டு விட்டதாகவும் ஒருசிலர் பேச முற்பட்டிருக்கிறார்கள்.

29 ஜூன், 2013

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலய கும்பாபிசேக நிகழ்வு ஒளி பரப்பு நாளைய தினம்  30.06.2013 அன்றுஐரோப்பிய நேரம்  இரவு 10 மணிக்குடான் யாழ் ஒளி  தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் என்பதை அறிய தருகிறோம் 
கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்கவில்லை. அப்படியே சில நாட்கள் அனாதையாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார் நிஷா. நிஷா பிறந்த ஊரே நாகூர்தான். 

அவரது அப்பா, அத்தை, பெரியப்பா என ஓர் உறவு பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதிர்ச்சியான செய்தி. பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்தனர். தன்னை சந்தித்த பத்திரிகையாளரிடம், "சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்!” என்று கதறினார். 

சினிமா ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார். ”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். 

அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. நிறைய பேர் சான்ஸ் தரேன்னு எமாத்தினாங்க, எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார். 

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன். ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். சொந்த ஊரில், பெற்ற தந்தையின் கண்முன்னே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார். 

அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். எதோ உள்ளுக்குள் உடைந்து போனது. நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. 

நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியபோது, நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணினேன். சின்ன சண்டைல குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. சென்னையில் பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. தேடிப்போன என்னை விரட்டி விட்டுட்டா. பிறகு நிஷாவும் நடிகை ஆகி எங்களை மறந்துட்டா, இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்? என்றார். சென்னையில் பல பேர் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார். 

அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீசுக்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படி ஒரு நிலைமை என்றார் ஃபிலிம்நியூஸ் ஆனந்தன். 

ஆடி அடங்கி விட்ட நிஷா பலரால் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம், காலம் ஒரு மோசமான வாத்தியார், அது அடித்து சொல்லி கொடுக்கும், முட்டி போட வைத்து கதறடிக்கும். குறைந்த பட்ச ஒழுக்கத்தை கூட கடைபிடிக்காதவர்களின் வாழ்வு இப்படி தான் இருக்கும். அதற்க்கு நடிகைகள் கூட விலக்கில்லை. பார்த்தோ, படித்தோ திருந்தி கொள்வது நல்லது.
நடிகை நிசாவின் சோகம்.எயிட்சொடு போராடும் அல்லல் 
கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்கவில்லை. அப்படியே சில நாட்கள் அனாதையாகக் கிடந்தார் நடிகை நிஷா.
விஜயகாந்த் நன்றியுடன் நடந்திருந்தால் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் :
அமைச்சர் கே.வி.இராமலிங்கம்

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேர் தற்காலிக நீக்கம் : விஜயகாந்த் அதிரடி

தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை தற்காலிகமாக  நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சி யின் தலைவர் விஜயகாந்த். 
இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதது; திமுக இயக்கம்தான்
 அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது : மு.க.ஸ்டாலின்

தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கும் விழா
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

கொழும்பில் இன்று ஒரு வழி போக்குவரத்து ஒத்திகை

மருதானை பாலம் சந்தி தொடக்கம் தொழில்நுட்பக் கல்லூரி வரை, தொழில்நுட்பக் கல்லூரி சந்தி தொடக்கம் சங்கராஜ சுற்றுவட்டம் வரை, சங்கராஜ சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம்

முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பெளத்த தேசியவாதம் அதனுடைய கொடும் பிடியை, அதன் கோரப்பல்லை

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேய் விரட்ட வந்த யுவதியை நிர்வாணமாக்கி பல நாட்களாக எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்ட முன் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் கைது

தனக்கு பிடித்திருக்கும் அசுத்த ஆவியை விரட்ட வந்த யுவதி ஒருவரை, நிரவாணமாக்கி உடல் முழுவதும் எண்ணெய்பூசி தேசிக்காய்

கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார்.

கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,

அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு!- த.தே.கூட்டமைப்பின் தீர்மானம் இன்று
அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னிறுத்தி பொதுமக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கமும், இராணுவத்தினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என
சிறுபான்மையினருக்கெதிரான பொதுபலசேனா செயற்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு பொதுபல சேனா இயக்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி கிட்டும்: தயா மாஸ்டர் ஆரூடம்
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி கிட்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் புலிகள் வைப்புச் செய்த பணத்தை பறிமுதல் செய்ய அரசாங்கம் முயற்சி
சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

வாலிபர் எரித்து கொலை! தளி-யில் மீண்டும் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் அருகாமையில் பைரமங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கோழிப்பண்ணை அருகாமையில் 35 வயது உள்ள வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர். 

நளினியை ஜூலை 29ல் ஆஜர்படுத்த சம்மன்
சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா வீட்டு முன் போராட்டம்
தேனியில் உள்ள என்.ஆர்.டி நகரில் உள்ளது இயக்குனர் பாரதிராஜாவின் வீடு. இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில்,

அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி,
பொன்னுசாமிக்கு பொறுப்பு
 




முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி ஆகியோர் 28.06.2013 வெள்ளிக்கிழமை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பொன்னுசாமியும் அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய மந்திரி இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு: ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் - வஞ்சனையின் உச்சகட்டம்: ஜெயலலிதா
பெட்ரோல் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தலைமையுடன் தொடர்பு கிடைக்கவில்லை! நிர்ப்பந்தத்தினால் ஆதரவாக வாக்களித்தோம்!-முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
வடமேல் மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டோம் அது பலனளிக்கவில்லை. இறுதியில் நிர்ப்பந்தத்தினால்
பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு! வெளிநாட்டு சதி பலிக்காது: கொலைச் சந்தேகநபர்
பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
தமிழ்நாடு, அகதி முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களுக்கு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கும் டக்ளஸ்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.வடக்கு தமிழ் மக்களுக்காக இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: வடமாகாண ஆளுனர் உத்தரவு
வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, ...
முஸ்லிம் காங்கிரஸ்-தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ்கட்சிக்கும்தமிழ்தேசியகூட்டமைப்புக்கும்இடையிலமுக்கியமானகலந்துரையாடலொன்று நேற்று இரவு 7.மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது.



பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த பெயர் பெப்சி உமா. காலஓட்டத்தில் ஜெயா தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளினியாக இடம் பெயர்ந்து சின்னத்திரை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இவர்.

இந்நிலையில்தான், ஜெயா டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் சீனியரான மதுரை சரவணராஜன் மீது "பெண் வன்கொடுமை' தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் உமா. புகாரை வாபஸ் பெறும்படி சரவணராஜன் குடும்பமே வந்து கெஞ்சிய நிலையிலும் உமா மறுத்துவிட... அன்றிரவே ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டில் வைத்து சரவணராஜனை கைது செய்து ரிமாண்டும் செய்துவிட்டனர் கிண்டி மகளிர் போலீசார்.

தன்னுடைய "டிரேட்' மார்க் சிரிப்பை தொலைத்து கோபக்கனலுடன் உமா புகார் தரும்படி என்னதான் நடந்தது? தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசினோம்.

""சமீபகாலமாகவே சரவணராஜன் நடத்தி வருகிற "ஆல்பம்' புரோகிராமை தலைமை விரும்பவில்லை. பல முறை மறைமுகமாக இதை நிறுத்தும்படி சரவணராஜனிடம் சொல்லிப் பார்த்துள்ளனர். அவர் கேட்பதாகத் தெரியவில்லை. மேலும் ஜோதிடம் உள்ளிட்ட சில "ஸ்லாட்'கள் இப்போதைக்கு தேவையில்லை என்று காலி செய்த ரபிபெர்னார்ட்தான் இதையும் செய்கிறார் என்று அவரிடமே வம்புக்குப் போயிருக்கிறார் சரவணராஜன். தலைமை நிருபராக இருந்து கடந்த 23-ந்தேதி பணிநீக்கம் செய்யப்பட்ட ரமணி பற்றியும், சரவணராஜன் பற்றியும் "என்னை மதிப்பதில்லை' என்று ரபி, கம்ப்ளைண்ட் செய்திருந்தாராம். இப்படி தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த நிலையில்தான் சரவணராஜனிடம், அடுத்த புரோகிராம் பற்றி வம்படியாக தொடர்ந்து பெப்சி உமா நச்சரிப்பு செய்து கொண்டிருந்தார். இதனால் வெறுப்பான சரவணராஜன் தன் அறைக்கு அவரை வரவழைத்து திட்டிய தோடு, ஓப்பனாகவும் பொதுவில் திட்ட ஆரம்பித்துவிட்டார். எஸ்.எம்.எஸ். மூலமும் ஏடாகூட மாய் திட்டிவிட்டார். அதுதான் உமா கொடுத்த வன்கொடுமை புகாருக்கு ஆதாரமான எஸ்.எம். எஸ். ஆக மாறிவிட்டது'' என்கின்றனர்.

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ""ஆதம்பாக்கம் அட்ரஸ்லயிருக்கற சரவண ராஜனை அரெஸ்ட் பண்ணி ரிமாண்டு காட்டணும்னு மட்டும்தான் எங்களுக்குத் தகவல். யாரு புகார் கொடுத்தாங்க, என்ன நடந்ததுங்கறது எதுவுமே தெரியாது. எல்லாமே ஆகாய மார்க்கமா டிராவல் பண்ண மாதிரிதான்.... கிண்டி ஆல் வுமன் போலீசுக்கு மட்டுமில்ல, அங்க கோர்ட் டியூட்டி பார்க் கற போலீசுக்குக் கூட இதப்பத்தி தகவல் ஏதும் தெரியாது... ஹை-லெவல் டீலிங் சார்'' என்றனர். ஆல்வுமன் மற்றும் கோர்ட் டியூட்டி போலீசாரிட மும் பேசினோம். அவர்களும் இதையேதான் ஒப்பித்தார்கள்.

""எக்ஸ் மாணவரணி மாநிலச் செயலாளரும் எம்.பி. வேட்பாளரா இருந்து காலி செய்யப்பட்டவருமான சரவணப் பெருமாளுக்கும், தலைமை நிருபர் ரமணிக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. ரமணியும் சரவணராஜனும் ரொம்ப க்ளோஸ். இப்படி பல "யு' டர்ன் விவகாரங்களும் இப்ப நிர்வாகத்துக்கு பவர்ல வந்திருக்கிற சசி குரூப்புக்கு தெரிய வரவேதான் அவங்க ஜெ.கிட்ட சொல்லி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்திட்டாங்க. ஏற்கனவே ஜெ. கலந்துகிட்ட டெல்லி புரோகிராமை "அவுட் ஆஃப் ஃபோகஸ்'சா காட்டியும் திருச்சி பசு தானத்தை கவரேஜ் பண்ணாம விட்டு விட்டதும் ஜெ.வோட டென்ஷனை அதிகமாக்கியிருந்தது. ஆக எல்லாமும் மொத்தமா சேர்ந்துட்டது தான் இப்படியான ரிசல்ட்டாயிடுச்சு'' என்கின்றனர் நம்மிடம் பேசிய ஜெயா டி.வி.யில் உள்ள சிலரே...


பெப்சி உமாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""என்னுடைய நிகழ்ச்சியை கிண்டல் செய்தும், தகாத, அருவருக்கத்தக்க வார்த்தைகளில் என்னை திட்டியும், விமர்சனம் செய்தும்

ad

ad