புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2013


தடையை மீறி கலந்து கொள்வது பற்றி ஆலோசனை! தடை உத்தரவை வாங்கிய பின் திருமா பேட்டி!
தருமபுரி மாவட்டத்தில் நுழைய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டிருந்தார்
இழந்து போன உறவுகளைத் தவிர அனைத்தையும் வழங்குவோம்! நாட்டை துண்டாடாமல் நட்புடன் வாழுங்கள்!- ஜனாதிபதி
துண்டாடுவதற்கு இலங்கை ஏனைய நாடுகளைப் போன்று விசாலமான நாடல்ல. இலங்கை ஒரு சிறிய நாடு என்பதைச் சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து தமிழ் பேசும் வறிய மக்களை அகற்றும் நடவடிக்கை: கோத்தபாயவிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு
கொழும்பில் வசிக்கும் தமிழ் பேசும் வறிய மக்களின் குடியிருப்புகளை அகற்றி, அவர்களை கொழும்புக்கு வெளியே அனுப்பும் கோத்தபாய ராஜபக்ஷவின் முயற்சிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.
அரசின் தேர்தல் வியூகம்: வடக்கில் 335 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனங்கள்! 28 சிங்களவர்களும் உள்ளடக்கம்- அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு
வடமாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் 28 சிங்களவர்கள் உட்பட்ட 335 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் அவசரமாக நியமனங்களை வழங்கியுள்ளது.
97 பேருடன் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களின் படகு மூழ்கியது! 88 பேர் மீட்பு! குழந்தை ஒன்று பலி
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இலங்கையர்கள் உட்பட்ட 97 பேருடன் பயணித்த படகு விபத்துக்குள்ளானது. இதில் 88 பேர் காப்பாற்றப்பட்டனர். மீட்பாளர்களால் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

12 ஜூலை, 2013


இன்று அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற தனியார் மினி பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

இளவரசனின் பெற்றோர் உண்ணாவிரதம்
ஐகோர்ட் உத்தரவுப்படி 2 டாக்டர்களும் நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இளவரசன் உடலை ஆய்வு செய்தனர். அப்போது இளவரசன் தரப்பை சேர்ந்த

34 வழக்குளில் ஆஜராக ராமதாசுக்கு சம்மன்

மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் 25–ந் தேதி நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள பா.ம.க.வினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். மரக்காணம் அருகே சென்றபோது அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும்


எங்கே விஜயகாந்த்? சீறிய கார் - குழம்பிய போலீஸ்! அர்த்தநாரீஸ்வரரை வேண்டிக்கொண்ட கட்சியினர்!
ரிஷிவந்தியம் தொகுதிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மாயமானார் விஜயகாந்த். அரசு அதிகாரிகளும், பாதுகாப்பு வந்த போலீசாரும் என்ன செய்வதன்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

கோவில்பட்டியில் 7 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த ஹாக்கி தளம்: ஜெ., அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’தூத்துக்குடி மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். அம்மாவட்டத்திலுள்ள பெரும்பாலானோர் ஹாக்கி விளையாட்டை விரும்பி விளையாடி வருகிறார்கள்.
சென்னை மருத்துவமனையில் இளவரசனின் உடல் மறு பிரேத பரிசோதனை 
தர்மபுரி இளவரசன் கடந்த 4ம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே இறந்துகிடந்தார்.  தர்மபுரி மருத்துவ மனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  
இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் யார்?
தர்மபுரி இளவரசனின் உடல் ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து  மருத்துவர் குழுவின் அடிப்படையில் இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.கடந்த முறை பிரேத டாக்டர்கள் அல்லாமல் வேறு டாக்டர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும், அந்த டாக்டர்கள் யார் என்றும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
jvpnews_ltte.PrabhasVa2

புலிகள் தலைமையின் அதி நவீன புதிய வாகனத்தால் அரசிடம் கலக்கம்! குழப்பம்!

புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வான்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக வானின் புகைப்படங்கள். அன்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் அரிய பல வியக்க வைக்கும் தடயப் பொருட்கள் வெ

Sri Lanka 201 (48.5 ov)
India 203/9 (49.4 ov)
Sri Lanka 201 (48.5 ov)
India 161/7 (39.3 ov)

11 ஜூலை, 2013

Sri Lanka 48/1 (12.3 ov)
India
India won the toss and elected to field

http://pungudutivukalikovil.blogspot.ch/2013/07/blog-post.html
தற்போது நடைபெற்று வரும் புங்குடுதீவு காலி கோவில் மகோற்சவ விழா மற்றும் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப திறப்புவிழாவும் காட்சிகள் சில
வடமாகாணசபை தேர்தல் முதலமைச்சர் வேட்பாளர்! சில தினங்களில் அறிவிக்கப்படும்! இரா.சம்பந்தன்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அடுத்த சில தினங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க.!- சாடுகிறார் வைகோ
[விகடன் ]
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க. ஆனால், தமிழகத்திலே மாணவர்களின் கொந்தளிப்பு தங்கள் பக்கம் திரும்பியதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர்கள் அவர்கள்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல்

வட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அமையும் என்று தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன.

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உதவி

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை உபயோகக் கட்டணம் 40 இலிருந்து 100 ஆக உயர்த்த தேர்தல் நடைபெறும் 

சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலைக்கான வரிதொகையானது 40 பிராங்குகளிலிருந்து 100 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிண்ணம் யாருக்கு: இந்திய - இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
குற்றவாளி அரசியல்வாதிகள் பதவியில் நீடிக்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

வாக்களிக்கும் உரிமை பெற்ற கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆவதை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்..
சீனாவில் மண்சரிவில் 40 பேர் வரை புதையுண்டுள்ளனர்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 40 பேர் வரை புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுடெல்லிக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் வளர்ச்சியைத் தடுத்தவர்கள் த.தே.கூட்டமைப்பினர்: சந்திரகாந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களைக் குழப்பி வாக்குளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண சபையின் வளர்ச்சியைத் தடுத்ததாக மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் மேனனுக்கு கிடையாது: வாசுதேவ
13வது திருத்தத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் மேனனுக்கு கிடையாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற 16 வயது யுவதி கைது
சிறையில் தண்டனை அனுபவித்து வரும், பாதாள உலக குழுத் தலைவரான பொட்ட நவ்பர் எனக் கூறி, புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, லட்சக்கணக்கில் பணத்தை கப்பமாக பெற்று வந்த திட்டமிட்டு செயற்படும் குழுவொன்று
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கொலை முயற்சி! பிரதான சாட்சி இறந்த நிலையில் திடீர் திருப்பம்
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் கொலை முயற்சி வழக்கில் மூன்றாம் எதிரியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினத்தின் மகன் ஆதித்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.



           ர்மபுரி கலவரத்துக்குக் காரணமான காதல் தம்பதிகளான இளவரசனும் திவ்யாவும் சாதீய சக்திகளால் பிரிந்த நிலையில், இளவரசனின் மர்ம மரணம் பலத்த பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  இளவரசன் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை

10 ஜூலை, 2013

யாழில் கொள்ளையடிக்கும் நகைகளை காதலிகளுக்கு போட்டு அழகு பார்த்த ஈ.பி.டி.பி விஜயகாந்
யாழில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பியின் உறுப்பினரான சுதர்சிங் விஜயகாந்துக்கு 5 காதலிகள் இருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர்களின் களியாட்ட இடமாக ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி: மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி காதலர்களின் களியாட்ட இடமாக மாறி வருவதாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
போர்க்குற்றங்களில் இருந்து எம்மை பாதுகாக்க மகிந்த, கோத்தா உள்ளனர்! இராணுவ தளபதி பெருமிதம்
யுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் எமது இராணுவ வீரர்களுக்குப் பக்க பலமாக ஜனாதிபதி மஹிந்த
முன்னாள் பெண் போராளி தீ விபத்தில் சிக்கி மரணம்
இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தை பேரறிவாளனுக்கு தெரிவிக்க மறுப்பு
முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, தற்போது வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளனின் கருணைமனு குடியரசுத் தலைவரால்
தனது பிள்ளைகளை ஒப்படைக்குமாறு லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் சென்னை நீதிமன்றில் வழக்கு
லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது! கட்சியிலிருந்து நீக்கம்!
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கொள்ளைகள் மற்றும் கப்பங்கோரல்கள் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை இவர் முன்னின்றி வழிநடாத்தி வந்துள்ளார்.
யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
பல வர்த்தகர்களிடம் பணம் தவிர பல பவுண் நகைகளையும் இவர் பறித்து எடுத்துள்ளார். மேலும் உதவி செய்வதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையையும் இவர் நாசம் செய்துள்ளதாக
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு புதன்கிழமை (10.07.2013) முடிவடைகிறது. ஆனால் 7 பேரும் விளக்கம் அளிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். 
தேமுதிவில் இருந்து சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), தமிழழகன் (திட்டக்குடி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண் பாண்டியன் (பேராவூரணி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி (சேந்தமங்கலம்), மாஃபா பாண்டியராஜன் (விருதுநகர்) ஆகிய 7 உறுப்பினர்கள், முதல்
டி.எஸ்.பி.யை நோக்கி அரிவாள் வீச்சு! அத்வானி பாதையில் குண்டு வைத்த நபரை பிடிக்கும்போது பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை
இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கப்பல் பணியாளர்களுடன் சென்ற கப்பலொன்று சோமாலிய கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எம்.வி. அல்பெடோ என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
புத்தகயா மகா போதி விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 
மழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தென்பட்டதைத் தொடர்ந்து இன்றிரவு ரமழான் மாதம் ஆரம்பிப்பதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு மாநாடு
உதயன் பத்திரிகைக்கு எதிரான டக்ளஸின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்ட யாழ். நீதிமன்றம்
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தியில்லை!– பிரிட்டன் நீதிமன்றம்
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டனின் குடிவரவு நீதிமன்றமொன்று இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
மேனன் - மஹிந்த சந்திப்பு! கூட்டமைப்பை தெரிவுக்குழுவில் பங்கேற்க வலியுறுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

9 ஜூலை, 2013

லண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை சிங்கள வைத்தியர் மாட்டினார்!
லண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறி
இலங்கை மாணவியின் உயர்கல்விக்கு உதவிய நடிகர்  சூர்யா
தமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்கல்விக்கு தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யா உதவி செய்துள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா என்ற மாணவி பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர். அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.
அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம் கூறினார்.
ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது.
அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவிசெல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.
தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
sri Lanka 219/8 (41/41 ov)
West Indies 190/9 (41.0/41 ov, target 230)
Sri Lanka won by 39 runs (D/L method)

64 வயதான பெரியப்பா முறையான நபரொருவர் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலி பொலிசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, சிங்தோட்டை வெலிபிட்டி மோதரையைச் சேர்ந்த இந்த 14 வயது மாணவி தனது பெரியப்பாவினால் 2012ஆம் ஆண்டு முதல்

இந்தியாவின் அழுத்தங்களின் காரணமாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் செயற்படும் அரசாங்கம் மறுபுறம் நீதிமன்ற அதிகாரத்தின் மூலமாக தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கின்றது. அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசங்களிற்கும் தெரியப்படுத்துவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கையிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் ஈராண்டு கால ஆசிரியர் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள் 5.7.2013க்கு குறைந்த பட்சம் 3 மாத காலம் ஆசிரிய சேவையைப் பூர்த்தி செய்திருக்க

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நண்பகல் 12 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர்
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

மழை பெய்ததால் தடைபட்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நேற்றைய போட்டி இன்று தொடருகிறது.
தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க கம்யூனிஸ்ட்கள் முன்வர வேண்டும்!- நேபாள முன்னாள் பிரதமர்
ஈழத் தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைத்து இடதுசாரிகளும் கம்யூனிஸ்ட்களும் ஒன்றிணைய வேண்டும். மக்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று தான் இலங்கை அரசாங்கத்தை
வடமாகாண தேர்தலில் தயா மாஸ்டரோ, கேபியோ எவர் வந்தாலும் மண்ணையே கௌவுவர்!- விநாயகமூர்த்தி பா.உ.
வட மாகாணசபைத் தேர்தலில் தயா மாஸ்டரோ,  கேபியோ என எவர் போட்டியிட்டாலும் அனைவரும் மண்ணையே கௌவுவார்கள் என்றும், அவர்களது வெற்றி வாய்ப்பு நூற்றிற்கு பூச்சியமே எனவும்
சுவிஸ் பேர்ண் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு
வீரமிகு விடுதலைப் போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் நேற்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
உன்ன அழகா, கண்கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை! திவ்யாவுக்கு இளவரசன் எழுதிய கடித விபரம்!
 
 


என் அன்புக்காதலி திவ்யாவுக்கு,
நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நீ என்னை விட்டுப் பிரிந்த நாளில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம், எனக்கு

மிளகாய் பொடி தூவி ரூ. 90 லட்சம் கொள்ளை
ஓடும் பஸ்சில் ரூ.90 லட்சம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 
திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுந்தரம், சேகர், போர்‌வெல் இயந்திர
கலைஞரின் தத்துப்பிள்ளை - கனிமொழியின் தம்பி
மு.க.மணி எங்கே? : பரிதி இளம்வழுதி பரபரப்பு பேச்சு
 

 
அதிமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் வளர்மதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சரும்
புறப்பட்டுவிட்டேன்... ஜெ.வை பிரதமர் பதவியில் உட்கார வைப்பேன்...! பரிதி இளம்வழுதி பேச்சு! 
 சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 07.07.2013 அன்று அதிமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மிளகாய் பொடி தூவி ரூ. 90 லட்சம் கொள்ளை
ஓடும் பஸ்சில் ரூ.90 லட்சம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 
திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுந்தரம், சேகர், போர்‌வெல் இயந்திர உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள். இவர்கள்
இளவரசன் சாவு - நீதி விசாரணை - ஒட்டுமொத்த​ப் பின்னணிகளை​யும் விசாரிக்க வேண்டும்! - திருமாவளவன் கோரிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இளவரசன் சாவு குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர்

8 ஜூலை, 2013

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.
புலிகளிடம் சிக்கிய குழுவினர் மூன்று நாட்களாக உயிருக்கு போராட்டம்

இந்தோனேஷியாவில் மான் வேட்டைக்கு சென்ற குழுவினர், புலிகள் கூட்டத்தில் சிக்கி கொண்டு சுமார் 3 நாட்களாக மரத்திலேயே தவிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கிராம யாத்திரையில் அராஜகமாகச் செயற்பட்ட சீருடை தரித்தோர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம யாத்திரையின் தொடர்ச்சியாக உதயநகர் மேற்குப் பகுதியில் மக்கள் சந்திப்பும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண தேர்தலில் தயா மாஸ்டரோ, கேபியோ எவர் வந்தாலும் மண்ணையே கௌவுவர்!- விநாயகமூர்த்தி பா.உ.
வட மாகாணசபைத் தேர்தலில் தயா மாஸ்டரோ,  கேபியோ என எவர் போட்டியிட்டாலும் அனைவரும் மண்ணையே கௌவுவார்கள் என்றும், அவர்களது வெற்றி வாய்ப்பு நூற்றிற்கு பூச்சியமே
புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுதலை
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்ற முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஐதீர தெரிவித்தார்.

கடலூரில் கனிமொழி ஆர்ப்பாட்டம்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி கடலூரில் கனிமொழி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர்  பங்கேற்றனர்.
பாமகவை தடை செய்யவேண்டும் ; திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே மனித உரிமை பாதுகாப்புமையம் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பொன்.சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

,

DSC04841

சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி, தமிழீழம் 5 : ரேசியா 0

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வேதச உதைபந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று 7 ஜூலை 2013அன்று ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்து கொள்ளுவதற்காக தமிழீழ அணி Rateiaஅணியுடன் மோதினார்கள்

,

கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட

,



             "எங்க ரெண்டுபேரு கிட்டயும் எந்த மன வேற்றுமையும் கிடையாது... எங்கள் காதலுக்கு எதிரான சக்திகள்தான் நாங்கள் இப்போது பிரிந்து வாழக் காரணம். எப்படியும் திவ்யா என்னிடம் வருவா...' ஜூன் 29- ஜூலை 02 தேதியிட்ட நம் இதழுக்கு இப்படி

,


தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில்
 சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா

 புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம் சார்பில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநிலத்திலும், மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்

,

இளவரசன் கொலையல்ல தற்கொலையே : கடித ஆதாரம் காட்டும் அஸ்ரா கார்க்
இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை செய்துகொண்டான் என்கிறது அவரது கடிதங்கள்.

,

கமலேஸ் சர்மாவின் முடிவு ஆசியாவில் அராஜகத்துக்கு வழிவகுக்கும்: மங்கள சமரவீர
வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத இலங்கை அரசாங்கத்துக்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த வழங்கியுள்ள அனுமதி ஆசியாவில் அராஜக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

,

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டதும் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கவேண்டும்: கூட்டமைப்பு
வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்

,

மகளின் காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர்! பெண்ணின் கணவர் மீது கடும் தாக்குதல்! யாழில் சம்பவம்
மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

,

தேர்தலுக்கு முன்னரே 13வது சட்டப் பிரிவில் திருத்தம்: செய்தியாளர்களிடம் பசில் ராஜபக்ச
இலங்கையில், வடமாகாண தேர்தலுக்கு முன்னரே, 13 வது சட்டப்பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வரும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

,

லண்டன் கொஸ்கோ தமிழன் கொலைச் சம்பவம்! குற்றவாளியை அடையாளப்படுத்தினால் £50 000 சன்மானம்!
லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த மே மாதம் 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.

.

NOW NOIW NOW NOW

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக ந்கழ்வின் ஒளி பரப்பு இன்று22.00 Dan Yarl Oli TVதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 
www .dantv .tv $$$
அல்லது
www mayuren .org என்ற இணையத்துக்கு சென்று காணமுடியும்

7 ஜூலை, 2013

,

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மும்முனை கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய நான்காவது போட்டியில் இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய

,

அமெரிக்காவில் விமான விபத்து: 2 பேர் பலி, 180 பேர் காயம்

தென் கொரியா தலைநகர் சியோலிலிருந்து ஆசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு வந்தது.
தரையிறங்கிய போது அந்த விமானம் திடீரென சறுக்கி சென்று விபத்துக்குள்ளானது.
உடனே விமானத்திலிருந்து பயணிகள் கீழே அருகில் போடப்பட்டிருந்த மெத்தைகள் மீது குதித்து உயிர் தப்பினர்.
இதில் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த விபத்துக்கான காரணம்

,

ஒருங்கிணைப்பபுக் குழுவின் தலைவராக இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியாக பலம் வாய்ந்த ஒரு ஸ்தாபனமாக மாற்றியமைக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கத்தவர்களின்

,

வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டதும் இராணுவத்தினரை முகாம்களில் முடக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டுமென தமிழ்த் தேசியக்

,


திவ்யாவை பாமகவினர் பிடியில் இருந்து மீட்க வேண்டும்;
நீதிபதிகள் மீது விசாரணை செய்ய வேண்டும் : இளங்கோ

தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழக இயக்குனர் வெங்கடேசன், அகில இந்திய உறுப்பினர்

,

சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்!

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மலிவு விலை அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் எலுமிச்சை சாதம்,

,

தருமபுரி, மரக்காணம் வன்முறைகள் - நாகராஜன், இளவரசன் உயிர்ப் பலிகள் :
 திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

,


இளவரசன் இறுதிச் சடங்குக்கு திவ்யா வருவாரா?

தர்மபுரி இளவரசன் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ காட்சிகள் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இளவரசனின் பிணத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து தர்மபுரியில் பதட்டம் நிலவுகிறது.

,

புத்தகாயா விஹாரைக்கு அருகாமையில் தொடர் குண்டு வெடிப்பு: ஜனாதிபதி மஹிந்த அதிர்ச்சி
இந்தியாவின் புத்தகாயா விஹாரைக்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

,

வரதட்சணைக் கொடுமை: இலங்கை அகதி முகாமில் பெண்ணொருவர் தீக்குளித்து மரணம்
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் இலங்கை அகதிகள் முகாமில் வித்தியா என்ற இளம்பெண் தீ்க்குளித்து இறந்துள்ளார். 

,

தமிழீழத்தை பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்த நோர்வேயுடன் பேச்சுவார்தை

இலங்கையை இரண்டாக பிரித்து, தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழத்தை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் தலையீட்டின்

,


India won by 102 runs (D/L method)

,

பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்
பாதுகாப்புச் செயலாளரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ், அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

,

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாண சபைக்கு ஆளுங்கட்சியில் போட்டி?
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

,

இந்தியாவுடன் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்த கோட்டாபய திட்டம்?
பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் நெருக்கமான

,

 போதைப்பொருள் கிடைக்காமையால் யாழில்இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் போதை மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

,

யாழில் இடம்பெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70வது ஆண்டு விழா
யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

,


இளவரசன் எப்படி இறந்தார் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது: ஞானதேசிகன்
தருமபுரி இளைஞர் குறித்த விவகாரத்தில் அரசியலாக்க வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

,



அம்மாவுக்கு தெரிஞ்சா பதவிக்கு ஆபத்து! காங். உறுப்பினரை மேடையிலிருந்து கீழே இறக்கிய அதிமுக அமைச்சர்!
சென்னை முகப்பேர் மேற்கில் சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்காமல் இருந்து வந்தது. இந்த பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மதுரவாயல் சட்டமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் பீமா ராவ் மற்றும் அந்த பேருந்து நிலையம் அமைந்து இருக்கும் சென்னை மாநகர வார்டு 91′ன் மாநகர உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் ஆகியோரின் முயற்சியால் இந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு முகப்பேர் குடியிருப்போரின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டது.

ad

ad