புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2013

 த.தே.கூ இன் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று   காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்த்து ஆரம்பமானது.  
போரின் போது புலிகளின் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை!-யாழில் சரத் பொன்சேகா
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கே.ஆர் 449 வாக்குகளுடன் வெற்றி: எஸ்.தாணு 252 வாக்குகள் பெற்று தோல்வ
 
2013 2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார்.
Anna  (12)கொழும்பு வாழ் தமிழர் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடல் கொழும்பு தமிழ் சங்க கேட்போர் கூடத்தில், செப்ரெம்பர் 5ஆம் திகதி மாலை நடைபெற்றது.
கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.



விநாயக சதுர்த்தி

எதிர்வரும் ஞாயிறு( 08.09.2013) மாலை 17.30 மணியளவில் சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக சதுர்த்தி பூசை நடைபெற உள்ளது.அடியார்கள்  அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள் 

நடிகை ரோஜா உண்ணாவிரதம்
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். 
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.
வடமாகாண தடகளப் போட்டி இன்று ஆரம்பம்
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள்
பளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை தாக்க முற்பட்ட ஈபிடிபி
பளையில் நாளை சனி கிளிநொச்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாத்தவிருந்த பரப்புரைக் கூட்டத்திற்கு முன்னாயத்தப் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களை ஈபிடிபியினர் தாக்க முற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளன.

6 செப்., 2013

கோத்தபாயவின் இனவாத கருத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள் கண்டனம்
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்டு வர முயற்சிக்கப்படுவதாக கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை இரு அரசாங்க அமைச்சர்கள் கண்டித்துள்ளனர்.
வாக்களிப்பு எமது மக்களின் வரலாற்றுக் கடமையாகும்: அறிவகத்தில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரத்தில் மனோகணேசன்
வாக்களிப்பு என்பது எம்மக்களின் சமூகப் பொறுப்பாக, வரலாற்றுக் கடமையாக உள்ளது. எனவே எங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் உள்வாங்கப்பட என வேண்டும் என “ அறிவகத்தில்” நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மனோ கணேசன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்படவில்லை! தாயகம், தேசியம், சுயநிர்ணயம் வெல்வது உறுதி வைத்திய கலாநிதி பத்மநாதன்
இன்றைய சூழலில் தமிழருடைய பலமாகவும் அரனாகவும் இருந்த விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதான கருத்தை நான் ஏற்பதில்லை மாறாக அது பின்னடைவு என லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் வைத்திய கலாநிதி பத்மநாதன் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயார.இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது: பேராசிரியர் ரொஹான் குணரட்ன

உள்நாட்டில் விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும்,
கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கையின் இறைமையை சீர்குலைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முல்லைத்தீவில் 21 வயது இளம் பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் 21 வயதான இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக முள்ளியவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனையிறவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைச்சிப்பாய் பலி! 7 பொதுமக்கள் படுகாயம்
கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் நேற்று இரவுஇடம்பெற்ற வாகன விபத்தில் படைச்சிப்பாய் ஒருவர் பலியானதுடன், 7பொது மக்கள் படுகாயமடைந்த நிலையில் கிளி.மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
தம்புள்ளை காளியின் சிலையை உடைத்தவர்கள் விரைவில் அழிந்து விடுவார்கள்!- பிரசன்னா இந்திரகுமார்
தம்புள்ளையில் உள்ள காளியின் விக்கிரகத்தை உடைத்தெறிந்ததன் ஊடாக இலங்கைக்கு அழிவு காலம் ஏற்பட்டுவிட்டது. காளியின் கோபம் நிச்சயம் சிலையை உடைத்தவர்களை விரைவில் அழித்துவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது மேற்குலக நாடுகள் யுத்தம் தொடுப்பதற்கான நெருக்கடிச் சூழல் அதிகரித்துள்ள நிலையில் ஐ.நா சபையின் அனுமதியின்றி அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுக்கக் கூடாது என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மீறினால் சிரிய அரசுக்கு ரஷ்யா நவீன ஆயுதங்களை வழங்கும் என அதன் அதிபர் புடின் தெரிவித்துள்ளார். சிரியாவில் நடந்து வரும் மக்கள் யுத்தத்தில் சில
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதியவர் சுஷ்மிதா பானர்ஜி. இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் 'Escape From Taliban' எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது.
கண்ணீர் அஞ்சலி 


 

இரத்தினசிங்கம்செந்தில்குமார் 



புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,சுவிட்சர்லாந்து 

ad

ad