புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2013

வீதியில் தனியாக சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரின் மார்பகத்தை தடவி விட்டு தப்பிச் சென்ற நபரொருவரை பாணந்துறை பொலிஸார் தேடிவருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 18 வயதான குறித்த யுவதி பாணந்துறை ஸ்ரீ மஹா விகாரை வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து

எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்

நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின்

 தேர்தலில் இராணுவத் தலையீடு; ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்! 
வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சியின் வேட்பாளர்களுக்காக இராணுவம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காணிகள் எவையும் அரசினால் சுவீகரிக்கப்படவில்லை ; அடித்துக் கூறுகிறார் பசில் 
அரசாங்கத்திற்கு தேவையானவற்றைத் தவிர மேலதிகமாக ஒரு அங்குல நிலமும் இதுவரை சுவீகரிக்கப்படவில்லை. எனினும்  அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடுகளை உரிமையாளர்களுக்கு வழங்கியே நாம் அவற்றை பயன்படுத்தி வருகின்றோம்
ஐ.நாவில் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரிசைகட்டிய அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் 
அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த இராஜதந்திரக்களமாக ஐ.நா மனித உரிமைச்சபை மாறி வரும் நிலையில்,  நடைபெற்று வரும் மனித உரிமைச்சபையின் 24வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான கடும் குற்றச்சாட்டுக்களை அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் பலவும் முன்வைத்துள்ளன.
அனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் - காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இராணுவ காடைக் கும்பல் கற்தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக ஜெர்மனியின் தோமஸ் பாக் (Thomas Bach )49 வாக்குகள் பெற்று தெரிவாகி உள்ளார்  .தற்போதைய பெல்ஜிய நாட்டவரனா ஜாக் ரொக்கை(Jacques Rogge ) தொடர்ந்து இவர் இந்த பதவியை வகிக்க உள்ளார் 
2014 உலக கிண்ண போட்டிக்கு ஐரோப்பிய வலயத்தில் இருந்துகுழு பீ இல்  இத்தாலியும் குழு டி  இல் ஹோலந்தும் முதலாம் இடத்தை இனி எந்த நாடும் முந்த முடியாத புள்ளிகளை பெற்று முன்கூட்டியே இன்று தகுதி பெற்றுள்ளன . 

குழு ஈ இல் இன்று இந்த நிலைய எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுவிட்சர்லாந்து  இன்னும் ஒரு புள்ளிக்காக காத்திருக்க வேண்டி  உள்ளது .
வட மாகாண ஆளுனர் ஆளும் கட்சிக்காக பிரசாரம் செய்கின்றார்!– கீர்த்தி தென்னக்கோன்
வட மாகாண ஆளுனர் ஆளும் கட்சிக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு
தடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.  இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள அதி நவீன 1800 அதிர்வலை கொண்ட தொலைபேசிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி தர்மபுரத்தில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில்  தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வெளியிடப்படது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி தர்மபுரப் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் செ.புஸ்பராசா தலைமையில் நேற்று மாலை 4மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் இரகசிய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அரசாங்க அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

10 செப்., 2013

தலைவர் மகன் எனது மாணவன்: மலையாளப்புரத்தில் சிறீதரன் MP காட்டம்.. - 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி மலையாளப்புரக் கிராமத்தில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் த.சேதுபதி தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.
இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்; வல்வெட்டித்துறையில் சரவணபவன் எம்.பி. 
கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார்.

“புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது

“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சிந்து  மயங்கி விழுந்தார் ( படங்கள் )
திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சிந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.  
நடிகர் பரத் திருமண வரவேற்பு

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத், இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார்.பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின்
சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு பிரமாண்ட விழா :
4 மாநில முதல்வர்கள் நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே, கடந்த 1913–ம் ஆண்டு மே மாதம் 3–ந் தேதி அன்று ‘ராஜா அரிச்சந்திரா’ என்ற படத்தை வெளியிட்டார்.
திண்டிவனம் : தேமுதிக –வி.சிறுத்தை கோஷ்டி மோதல்
திண்டிவனம் அருகே உள்ள முன்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். தே.மு.தி.க. தொண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசிக்கும் நேற்று முன்தினம்
ஈகப்பேரொளி செந்தில்குமரனின் இறுதி வேண்டுகோள் - (ஒலி வடிவம்)
கடந்த செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகப்பேரொளி செந்தில்குமரன் அவர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக தன்இன்னுயிரை ஈய்ந்தார்.
தீயில் ஆகுதியான வீரத் தமிழன் செந்தில்குமரனுக்கு சுவிஸில் இடம்பெற்ற வணக்க நிகழ்வுகள்
ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரனன் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் குறுகிய கால ஏற்பாட்டில், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில், சுவிசின் பல பாகங்களிலிருந்தும் கனத்த இதயங்களுடன் மக்கள்
இனப்படுகொலை நடந்த இலங்கையில் கொமன்வெல்த் மாநாடா?: திருச்சியில் இருந்து சென்னைக்கு மாணவர்கள் சைக்கிள் பேரணி
“இனப்படுகொலை இலங்கையே”, “இலட்சம் தமிழரின் பிணக்குவியல் மீது கொமன்வெல்தா” என்ற முழக்கத்துடன் கொன்று குவிக்கப்பட்ட ஈழ உறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம் சகோதரிகளிற்கும் நீதிகேட்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்த உள்ளனர்.



"அவர்களுக்கென்ன...
மகாராணிகள்!'


நடிகைகளின் வசதிகளையும், வாய்ப்பு களையும், புகழ் வெளிச் சத்தையும் பார்த்து ஈஸியாக சொல்லிவிடலாம்!



விஜய்யை வைத்து படம் தயாரித்தவர்கள் பலரும் தாணு அணியில் இருப்பதாலும், எஸ்.ஏ.சி. ஆதரிப்பதாலும் தாணு அணி "விஜய் ஆதரவு பெற்ற அணி'யாகவும், சூர்யாவின் கஸின் பிரதர் ஞானவேல்ராஜா, கேயார் அணியில்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் கேயார் அணி "சூர்யாவின் ஆதரவு பெற்ற அணி'யாகவும் வர்ணிக்கப்படுகிறது.

         "காய்'’ விட்டுக்கொள்ளும் சூரியன், மாம் பழம் தலைமைகள், ஒன்றுபோல ஆகி இருக் கின்றன; என்ன கதை இது? அம்மை ஆட்சியின் ஊழல் விவ(கா)ரங்களைத் தோண்டி, மக்கள் மன்றத்தில் வைக்க, கட்சியினரைத் தயார் செய்கிறது, மாம்பழத் தலைமை. இதேபோல,



               ""ஹலோ தலைவரே... பிரதமராகும் கனவில் இருக்கும் ஜெ., அதற்கு அணைபோடுற மாதிரி இருக்கிற இந்த சொத்துக் குவிப்பு வழக்கு எப்படியாவது சீக்கிரமா முடியணும்னும் தனக்கு சாதகமான தீர்ப்பு வரணும்னும் எதிர்பார்ப்போடு இருப்பதைப் பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்ததைப் படிச்சிருப்பீங்க..''


           புதுவை மாநில ரவுடிகளின் அட்ட காசங்களைப் பற்றி ’ஆக. 31-செப் 3’ தேதியிட்ட நக்கீரனில் "ரவுடிகளுக்கு முதல்வரா?' என்ற தலைப்பில் ஹாட் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியை பார்த்த புதுவை மாநில வியாபாரிகள் அங்கங்கே கூடினர். "இந்த அரசாங்கம் நமக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நக்கீரன் பத்திரிகை நமக்கு


           வ்வொரு எம்.பி. தேர்தல் நெருங்கும்போதும் டெல்லியின் பார்வை தமிழகத்தின் மீது அழுத்தமாகப் பதிவது வழக்கம்தான். காங்கிரஸ் கட்சி கழுகுப் பார்வையோடு தமிழ்நாட்டைப் பார்க்கிறது என்று நம்மிடம் சொன்ன அந்த கர்நாடக எம்.பி (நடிகை குத்து ரம்யா அல்ல),


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.
திரு இரத்தினசிங்கம் செந்தில்குமரன்
பிறப்பு : 13 பெப்ரவரி 1978 — இறப்பு : 5 செப்ரெம்பர் 2013

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஈகைப்பேரொளி இரத்தினசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னாரின் வீரவணக்கநிகழ்வு 11-09-2013 புதன்கிழமை அன்று மதியம் 12:00 தொடக்கம் 17:00 வரை Halle Polyvalente Rue de l’industrie 11 1964 Conthey எனும் முகவரியில் நடைபெறும்.
தகவல்
வலேதமிழ் சங்கம்
தொடர்புகளுக்கு
க.சிவலோகநாதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786629306
இலங்கைத்தீவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களது பயணத்தினை தொடர்ந்து இன்று தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 24வதுகூட்டத் தொடர் தமிழர்பரப்பில் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்திருந்தது. வீடியோ 
இன்று தொடங்கிய கூட்டத் தொடரில் தற்காலத்தில் அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகவுள்ள சிரியா மற்றும்எகிப்து ஆகிய நாடுகளின் விவகாரமே பெரும்பாலான நாடுகளின் கவனத்தினை பெற்றிருந்தாலும் , சிறிலங்கா விவகாரமும் அமெரிக்கா ஜேர்மனி ஒஸ்றியா

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சமூகத்துடன் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வெலிகந்தை, பூந்தோட்டம் ஆகிய தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெற்றவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தாயகத்துக்காக மரணித்த செந்தில் குமரனுக்கு விடுதலைபுலிகளின் மதிப்பளிப்பு 

ஜெனீவாவில் ஐ நா முன்றலில் இன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நிகழ்வில் ஈகை பேரொளி என்னும் மதிபளிக்கப்பட்டது

ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்கச்செய்வதில் ஜ.நாவின் தலையீடு அவசியம் என்பதையும் சர்வதேசம் தமிழர்களிற்கான நீதியினை பெற்றுத்தரவேண்டும் என்பதனையும் வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் வழியில் செந்தில்குமரனும் தமிழினத்தின் சார்பாக தீயில் வெந்தான் என்ற வரலாறும் தமிழின விடுதலைக்கு வலுச்சேர்க்கட்டும்.
சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினவழிப்பால் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள், அனைத்துலகம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராத நிலையில்; ஐ.நா முன்னிலையிலேயே 05.09.2013 அன்று தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் செய்துள்ளார் .
திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள் தமிழீழ மண்ணில் தமிழினம் விடுதலைபெற்று வாழவேண்டுமென்ற அரசியல் தெளிவோடு உறுதியான இலட்சியத்துடனவாழ்ந்தவர். அத்துடன் விடுதலையை விரைவில் வென்றெடுக்கவென  புலம்பெயர் தேச கவனயீர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.
குறிப்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பக உயர் ஆணையாளர் அவர்களின் சிறீலங்கா, மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கான பயணத்தையடுத்து தன்னையே தீயிட்டுள்ளமை  என்பது ஐ.நா தன் பொறுப்பை உணரவும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து சர்வதேசம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவும் வேண்டுமென்ற கருத்தையே தனது உயிர்த்தியாகத்தின் ஊடாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அத்துடன் தாயகத்தில் குரல்வளைகள் நசுக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் பெருவிருப்பான தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் மக்கள் உறுதியுடன் தொடர்ந்தும் போராடவேண்டும் என்ற செய்தியையும் எமக்கு  வலியுறுத்தியுள்ளார்.
இவரின் பிரிவால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களின் துயரில் பங்கேற்று நிற்பதுடன்,தன்னின விடுதலைக்கெனத் தன்னுயிரை ஈகம் செய்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் “ஈகைப்பேரொளி” என மதிப்பளிக்கின்றது.
முருகதாசன் விட்டுச்சென்ற கோரிக்கைக்கு ஐ.நா நீதி வழங்காத நிலையில் செந்தில்குமரனும் தனது  கோரிக்கையையும் முன்வைத்துச் சென்ற இவ்வேளையில், மேலும் இவ்வாறான இழப்புக்கள் தொடர்வதற்கான சூழமைவு ஏற்படாதவாறு எமது செயற்பாடுகளை புத்தெழுச்சியுடன் வேகம் கொண்டு  முன்னெடுப்போம் என அனைத்துத் தமிழ்மக்களும் உறுதியெடுத்து, தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தைத்தொடர்வோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இறுதி கிரியைகளும் மதிப்பளிப்பு  மற்றும் மரியாதையை செலுத்தலும் 

எதிர்வரும் 11-09-2013 அன்று மலை 12.00 முதல் 17.30 வரை 
சியோன் மாநிலத்தில் நடைபெறவுள்ளது 

இடம் Rue de Industrie 11.1964 conthey VS 

ஜேர்மனி வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் கும் வேண்டுகோள்

இலங்கைத் தீவின் தமிழீழத் தாயகத்து வட புல மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் வட மாகாண தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கைத்தீவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற

அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் விடுக்கும் வேண்டுகோள் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் திகதியுடன் தனது பணியினை நிறைவு செய்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் !

போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழலில் தமிழர்களுக்கான சுதந்திரமான அரசியல் வெளி அற்ற நிலையில் ,இலங்கைத்தீவுக்கு வெளியே தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , எதிர்வரும் ஒக்ரோபர்

சோமாலியாவில் சிக்கி உள்ள ஈழதமிழர்களின் நிலை 
தயவு செய்து பகிரவும் , அவசரம்:

சோமாலியாவில் சிக்கியுள்ள ஈழ தமிழர்கள்..,

கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் புக கப்பல் மூலம் சென்று காணமல் போன சிலர் சோமாலியாவில் தற்போது இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது அவர்களுடைய உறவினர்களுக்கு சோமாலியா நாட்டு தொலைபேசி எண்களில் இருந்து தொடர்புகள் வருவதாகவும், எதிர் முனையில் எதையும் கேட்க இயலவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

அழைப்புகள் வந்த எண்கள்
0021-2692298064
0021-2621297906
0021-2698010610
0021-2522132284

அவர்கள் குறித்த தகவல்களை பெற சோமாலிய நாட்டு தொடர்புடைய நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது.

தயவுசெய்து சோமாலியாவில் நண்பர்கள் உள்ள அல்லது வணிக தொடர்புள்ள யாரேனும் நண்பர்கள் தொடர்புகொள்ளவும்.

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக களுத்துறை மாவட்ட பாலியல் நோய்கள் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் ஹிமாலி பெரேரா தெரிவித்தார்.கடந்த வருடம் 24 ஆயிரமாக இருந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை இக்காலப்பகுதியில் 37ஆயிரமாக உயர்வடைந்துள்ளதாகவும்

நான் அரசியல்வாதி இல்லை;எந்த அரசியல் கட்சியைச்சார்ந்தவனும் இல்லை: விஜய் பேட்டி
 



தலைவா திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி இன்று(9.9.2013) மாலை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப் பானது. இப்படத்தில் நடித்த நடிகர் விஜய், நடிகை அமலாபால், படத்தின் இயக்குநர் விஜய், இசையமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ்
ரஞ்சனியை திருப்பியனுப்ப வாய்ப்பில்லை! ஏசியோவின் குற்ற அறிக்கை புறந்தள்ளப்படலாம்
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் இன்று முக்கிய வழக்கு ஒன்றின் பங்காளியாக உள்ள ரஞ்சனி என்ற பெண், விடுதலைப்புலி உறுப்பினர் என்று அடையாளம் காணப்பட்ட போதும் அவரை திருப்பியனுப்ப வாய்ப்பில்லை என்று சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் ரஞ்சனி உட்பட் 47 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு நேற்று இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான் (28வயது) என்ற முஸ்லிம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி (23வயது) என்ற பெண்ணுக்கும் நேற்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது.
விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வட மாகாணத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்: ஈழத் தமிழர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
இலங்கையில் இடம்பெறும் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்! இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தேவை: இலங்கை
மனித உரிமை பாதுகாவல்கள் மீது நடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தரவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நவி.பிள்ளை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டமை தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கவனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவரை சந்தித்து பேசிய மக்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் பலர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்துக்குள் வர விட்டது தவறு -ஊடகவியலாளர் மாநாட்டில் ஆனந்தி சசிதரன் 

9 செப்., 2013

அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுப்பு
மக்கள் விவகாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்திருந்த விசா விண்ணப்பத்தை தூதரகம் நிராகரித்துள்ளது.
தெரிவுக் குழுவில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகல்
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகியுள்ளது.
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும்!- சுதர்சன நாச்சியப்பன் அதிரடி
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திடீரென இப்படி அதிரடியாக கூறியிருப்பது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமானை வாழ்த்தவந்த வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்: தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெனீவாவில் இன்று மனித உரிமை மாநாடு : அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார்.
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த
மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியெழுப்பி வழிபட அனுமதிக்க முடியுமா?: கீதாஞ்சலிக்கு சரவணபவன் சவால்
சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கீதாஞ்சலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்! இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொலைபேசியில் அறிமுகமான பெண்ணை சந்தித்த முதல் நாளே வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது
தொலைபேசியில் உரையாடி அறிமுகமான இளம் பெண்ணை சந்தித்த முதல் நாளே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
தலைவர்-கே.வீ.தவராசா (தலைவர்.கொழும்பு கிளை.தமிழரசு கட்சி )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு 
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய தலைநகர் கொழும்பில் வசிக்கும் - வாக்காளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல் கொழும்புக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்புவெள்ளவத்தை 37வது ஒழுங்கையில் அமைந்துள்ள அக்‌ஷயா மண்டபத்தில் (செட்டிநாடு உணவக மண்டபத்தில்) நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் அவர்கள் பங்குபற்றி சிறப்புரையாற்றுவதுடன் விளக்கங்களையும் அளிக்கவுள்ளார்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களை இந் நிகழ்வில் தவறாது பங்குபற்றி ஆக்க பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
சுவிசில் சிறப்புற இடம்பெற்ற பொன்.சுந்தரலிங்கத்தின் இசைக்கோலங்கள் 
 கடந்த 06.09.2013 வெள்ளியன்று மாலை  சுவிஸ் பேர்ன் நகரில் பிரபல தமிழீழ எழுச்சி பாடகர் பொன் -சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் என்னும் நிகழ்வு பல நூற்றுக்கணக்கான  மக்கள் மத்தியில் சிறப்பாக இடம் பெற்றது கசெரிக்குபக்கவதியன்களை இலங்கை இந்திய கலைஞர்கள் வழங்கி மெருகூட்டி இருந்தார்கள் .ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட .யாழ் இளம்கலை மன்ற ஸ்தாபகரும் வானொலி தொலைக் காட்சி புகழ் கர்நாடக சங்கீத விற்பன்னருமான ,பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டகானாமிர்தம் ஒளித்தட்டு ஒன்றும் அந் நிகழ்வில் வெளியிட்டு வைக்கபட்டது. இந்த ஒலித்தட்டினை சுவிசின் வர்த்தகர்களான  இம்போர்ட் தாஸ் உரிமையாளர்,   சு.ஸ்ரீதாஸ் அவர்களும் மற்றும் சாய் ரேடர்ஸ் உரிமையாளர் இ.ரவீந்திரன் அவர்களும்  பெற்றுக்கொண்டனர்.விழாவில் நடனநிகழ்வுகள் ,சிறப்புரைகளும் இடம்பெற்றன . ஆன்மீக சொற்பொழிவாளர் தி.ஸ்ரீஸ்கந்தராசா ,கவிஞர் மதி,எஸ்.கருணாமூர்த்தி,அ .நிமலன்.செ.சுரேஷ்  ஆகியோரது வாழ்த்துரைகளும் பேச்சுக்களும் நிகழ்வுற்றன .புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புகழ்பெற்ற இந்திய மற்றும்   ஈழத்துக்கலைஞர்களோடு இணைந்து, களத்திலும் புலத்திலும் பல பாடல்களைப்   பாடியுள்ளார்.பல நூற்றுக்கணக்கான இளம்பராயத்தினருக்கு சங்கீத வகுப்புக்களை நடாத்திவருவதுடன்   புலம் பெயர் நாடுகளில் தனது சங்கீத பணிகளையும் ஆற்றிவருகின்றார்.(நன்றி, நிழல்படம்- கதிரவன் )

கண்டியை குழப்பும் சேவலை ஏன் நுவரெலியாவில் காணவில்லை ? ஆறுமுகன் பதில் கூற வேண்டும் : மனோ

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டியில் சேவல் சின்னத்திலும், நுவரெலியாவில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
 காணிகள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாகவும் உயர்பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக
நவியின் கருத்துக்கு அதிருப்தி ஐ.நா.செயலருக்கு அரசு கடிதம்; வெளிவிவகார அமைச்சின் மூலம் உத்தியோகபூர்வ நடவடிக்கை 
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் முன்வைத்த கருத்துகளுக்குக் கடும் ஆட்சேபனையை வெளியிட்டு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடித மொன்றை அனுப்புவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் 140,000க்கு மேற்பட்ட எம்மக்கள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அவர்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும். அது இலங்கை அரசால் சொல்லப்படுகின்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் நடாத்தப்படும் விசாரணயல்ல. அது ஒரு பன்னாட்டு விசாரணையாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்கின்றோம்.சி.சிறீதரன் 
பாராளுமன்ற உறுப்பினர்
“விடுதலைப் புலிகள் போராடி என்ன கண்டார்கள், முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொண்டு சென்று விட்டார்கள்” என்று சிலர் சொல்கிறார்கள்.
மோடியை பிரதமராக எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது: திருமாவளவன்

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கம்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் முழுஉருவ வெண்கலசிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு
சென்னையில் விநாயகர் ஊர்வலம் : 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். நாளை விநயாகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஒத்திவைப்பு : ஜெ., அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா கொள்ளை?
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா வாடிக்கையாளர் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.கடந்த ஆறு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட வேண்டிய தொகைகளின் சதக் கணக்குகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய தலைநகர் கொழும்பில் வசிக்கும் - வாக்காளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
1நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அளிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

8 செப்., 2013

அமெரிக்க ஓபன் டென்னிஸ்  இரட்டையர் ஆண்கள் சுற்றில் இந்திய வீரர் லாந்தர் பாயாஸ் செக் நாட்டு வீரர் ச்டேபாநேக் உடன்  சேர்ந்து வெற்றி பெற்று உள்ளார்.பாசுக்கு வயது 40  .இந்த வயதில் இவர்  கிராண்ட்ஸ்லாம் சுற்றினை வென்றது பரபரப்பாக பேசப் படுகிறது 
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டி நியூயார்க்கின் யூ.எஸ். டி.ஏ. பில்லி ஜீன் கிங் நேசனல் 
டென்னிஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில் வில்லியம்ஸ் சகோதரிகளை தோற்கடித்த உலகின் 5-ம் நிலை ஆட்டக்காரர்களான 
செக் குடியரசு நாட்டின் ஆண்டிரியா
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 

மனித உரிமைப் பேரவை பருவகால அமர்வு நாளை ஆரம்பம்! இலங்கை விஜயம் தொடர்பிலும் நவிபிள்ளை பிரஸ்தாபிக்கிறார்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வுகள் நாளை 9 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜெனீவாவில்

பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்
திரைப்பட இயக்குநரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான
சீமானின் திருமணம் சென்னையில் இன்று நடைபெறுகிறது: பல முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் இன்று சென்னையில் நடக்கிறது.
மூன்று மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை - பல்கலைக்கழக உள்வாங்கல்கள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும்
எதிர்வரும் மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளது.
நாட்டை பிளவுபடுத்துவதோ, குந்தகம் ஏற்படுத்துவதோ எமது நோக்கமல்ல! தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து சம்பந்தன்!
நாங்கள் மக்கள் மத்­தியில் ஒரு­போதும் தவ­றான கருத்­துக்­களை விதைக்­க­வில்லை. எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் நாட்­டுக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகை­யிலோ, நாட்டைப் பிளவு­ப­டுத்தும் வகை­யிலோ அமை­ய­வில்லை என தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு பெரும் வரவேற்பு வழங்கிய வர்த்தகர்கள்!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு நகர வர்த்தகர்கள் பெரும் வரவேற்பு வழங்கியுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் அனைவரும் வேட்பாளர்களுக்கு மா லை அணிவித்து கௌரவம் வழங்கியுள்ளனர்.

பிரபாகரன் மாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும் – விக்னேஸ்வரன்

பிரபாகரன் மாவீரன்தான் மஹிந்தவுக்கும் தெரியும் வல்வெட்டித்துறையில் விக்னேஸ்வரன் உரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனே.
இதை நான் மட்டும் சொல்ல வில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்­ஸ கூட பிரபாகரன் மாவீரன் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார் இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன்.
இதய அஞ்சலி..
தீயில் வெந்த வீரத் தமிழ்மகன் செந்தில்குமரனுக்கான
வணக்க ஒன்றுகூடல் 
09.09.2013 திங்கள் , 14:30 - 17:00 மணி 
UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

இன உணர்வும், மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் வீரவணக்கம் செலுத்தவேண்டிய நேரம். எனவே அனைத்து தமிழர்களையும் இவ் வணக்க ஒன்றுகூடலிற்கு தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

வடக்கில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரினால் அங்குள்ள இராணுவத்தை குறைக்க முடியாது: பஸில்

மாகாண சபைத் தேர்தல் ஒன்றுக்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற கொள்கைப் பிரடகனம் ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

 வடக்கில் அபிவிருத்தியை தொடர்வதா இல்லையா; சந்தர்ப்பம் வழங்கியுள்ளார் ஜனாதிபதி பசில் எச்சரிக்கை 
துவக்கில்லாத சூழல், குண்டுச் சத்தம் இல்லாத சமாதானம், கல்வி. சுகாதாரம் போக்குவரத்து என்பன தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமானால் ஜனாதிபதி வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த
சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூவர் கொழும்பில்! அரசாங்கம் செய்வதறியாது தவிப்ப
சா்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூன்று போ் கொழும்புக்கு சென்றுள்ளனா். சுற்றுலா வீசாவில் கொழும்புக்கு சென்ற அவா்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 செப்., 2013

 த.தே.கூ இன் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று   காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்த்து ஆரம்பமானது.  
போரின் போது புலிகளின் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை!-யாழில் சரத் பொன்சேகா
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கே.ஆர் 449 வாக்குகளுடன் வெற்றி: எஸ்.தாணு 252 வாக்குகள் பெற்று தோல்வ
 
2013 2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார்.
Anna  (12)கொழும்பு வாழ் தமிழர் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடல் கொழும்பு தமிழ் சங்க கேட்போர் கூடத்தில், செப்ரெம்பர் 5ஆம் திகதி மாலை நடைபெற்றது.
கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.



விநாயக சதுர்த்தி

எதிர்வரும் ஞாயிறு( 08.09.2013) மாலை 17.30 மணியளவில் சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக சதுர்த்தி பூசை நடைபெற உள்ளது.அடியார்கள்  அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள் 

நடிகை ரோஜா உண்ணாவிரதம்
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். 
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.
வடமாகாண தடகளப் போட்டி இன்று ஆரம்பம்
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள்
பளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை தாக்க முற்பட்ட ஈபிடிபி
பளையில் நாளை சனி கிளிநொச்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாத்தவிருந்த பரப்புரைக் கூட்டத்திற்கு முன்னாயத்தப் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களை ஈபிடிபியினர் தாக்க முற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளன.

ad

ad