புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

யாழ் மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்புகூடுதலான வாக்களிப்பு கூட்டமைப்பு கூடுதல் இடங்களை பிடிக்க வாய்ப்பு - வாக்குப் பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில்
வட மாகாண சபை தேர்தல் தற்போது முடிவடைந்த நிலையில் யாழ் மாவட்ட வாக்கு பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது இச்செயற்பாடு நடைபெறுவதை காணமுடிகிறது.
தற்போதைய செய்தி
மாகாணசபைத் தேர்தல்: மாவட்ட ரீதியாக  வாக்களிப்பு வீதம்
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
அரச ஆதரவாளர்களால் போலியாக வெளியிடப் பட்ட உதயன் பத்திரிகை
அரங்கேற்றப்படும் பொய்மைகள்!

லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! சந்தேகமான இருவர் கைது
நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட்
சிரியா புரட்சி படை வீரர்களுடன் செக்ஸ் உறவு வைக்கும் துனிசியா பெண்கள்

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
மாதுளுவாவே சோபித தேரருடன் சந்திரிக்கா இரகசிய சந்திப்பு: அரசியல் துறையில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரை கடந்த வாரம் சந்தித்து ரகசியமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!- மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 70%
வவுனியா 61%
முல்லைத்தீவு 67%
மன்னார் 70%Photos
Nadarajah Muralitharan-முன்னாள் விடுதலை புலிகளின் பொறுப்பாளர் 
நடைபெற்று முடிந்துள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசின் அத்தனை அடாவடித்தனங்களையும் மீறி மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைத் தோற்கடிப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை!
வாக்களிக்கும் மக்களை தடுக்கும் முயற்சியில் இராணுவம் கையும் மெய்யுமாக பிடித்தார் மாவை சேனாதிராஜா..
ராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!


வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்; பாணயில் நடந்துகொள்கின்ற போதிலும் மக்கள் அனைத்தையும் மீறி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் வெல்வவேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நாம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இது எமது உரிமைக்கான தேர்தல். நாங்கள் பின்வாங்க மாட்டோம். எமது வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களை வந்து சந்தித்தனர். யாருக்கும் அஞ்சவேண்டாம் என்று அவர்கள் மனத் தைரியத்தை ஊட்டியுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

ஆனந்தி எழிலன் தேர்தலில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாங்கள் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் துணிந்து சொல்கின்றோம். இன்று காலையும் அவர் எங்களைச் சந்தித்தார். அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரங்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
இராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!


வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்; பாணயில் நடந்துகொள்கின்ற போதிலும் மக்கள் அனைத்தையும் மீறி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் வெல்வவேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நாம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இது எமது உரிமைக்கான தேர்தல். நாங்கள் பின்வாங்க மாட்டோம். எமது வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களை வந்து சந்தித்தனர். யாருக்கும் அஞ்சவேண்டாம் என்று அவர்கள் மனத் தைரியத்தை ஊட்டியுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

ஆனந்தி எழிலன் தேர்தலில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாங்கள் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் துணிந்து சொல்கின்றோம். இன்று காலையும் அவர் எங்களைச் சந்தித்தார். அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரங்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் போலி உதயன் பத்திரிகை
இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் எனவும் , மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் உதயன் பத்திரிகையினைப் போன்றே மிகவும் போலியாக பதிப்பிக்கப்பட்ட பத்திரிகைகள் யாழ் . மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த பத்திரிகையில் உதயன் பத்திரிகையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தினர் அவற்றைப் பெற்றுள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு ஒருவாறாக விடயம் விளங்கிய நிலையில் , அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் , உதயன் அலுவலகத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து , உதயன் பணியாளர்கள் விரைந்து அந்த போலிப் பத்திரிகைகளை குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து முழுமையாக அகற்றியுள்ளனர்.

குறித்த பத்திரிகையில் நேற்று அதிகாலை அனந்தி வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்தும் , எழிலன் இனந்தெரியாத நபர்களினால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்தும் உடனடியாக அவர் அரசாங்க கட்சிக்கு மாறியுள்ளதாக தலைப்பு செய்தி போடப்பட்டுள்ளது. எனினும் தற்போது பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்கியிருக்கும் அனந்தி , அதனை முழுமையாக மறுத்துள்ளதுடன் , தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதாகவும் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மக்களிடம் கேட்குமாறு அவர் ஊடகங்களிடம் கேட்டுள்ளார்.
12மணியளவில் பதிவான வாக்களிப்பு வீதம்!

யாழ்ப்பணத்தில் 30 வீதம்

முல்லைத்தீவில் 40 வீதம்

கிளிநொச்சியில் 30 வீதம்

வவுனியாவில் 20 வீதம்

மன்னாரில் 25 வீதம்

மக்களை அச்சுறுத்தலுக்கு அஞ்சாது வாக்களிக்க செல்லுங்கள்..
ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக வாக்களிப்பு நிலையைத்தை நோக்கி விரைந்த வண்ணம் உள்ளனர்..

படம் - யாழ்ப்பணத்தில் தனது வாக்கை செலுத்திவிட்டு வரும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா..


வவுனியா மாவட்ட வேட்பாளர் எம்.எம். ரதன் அவர்கள் இன்று காலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் பல இடங்களுக்கு வாக்களர்களை ஏற்றி வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களுக்கு இறக்கி விடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்து சேவைகள் பலவற்றை பொலிஸார் தலையிட்டு நிறுத்த முயற்சி.

கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான த.குருகுலராசா, ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களில் வாக்கினை செலுத்தினார்கள்..
யாழ்ப்பாணம் தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களது வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். இதன் போது அங்கிருந்த நபர் வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார். இந்நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்விடத்திலிருந்து செல்ல திட்டமிட்டுள்ளார். 

இரண்டு வேன்களில் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களுடைய வேனில் திரும்பும்போது இராணுவத்தினர்கள் அவர்களுடைய வேனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வேனுக்கும் இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 15 - 20 துப்பாக்கி வேட்டுக்கள் வேனை நோக்கி சுடப்பட்டது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வேனின் கண்ணடாடிகள் உடைந்து வேன் சேதடைந்துள்ளது. வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
யாழ்ப்பணத்தில் பொய் செய்தியை பரப்பி வரும் இலங்கை அரசின் முகவர்களான டான் டிவி கலையகம் முன்பாக மாவை சேனாதிராஜா மற்றும் அனந்தி சசிதரன் தற்போது முற்றுகை

யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில் மக்கள் கொளுத்தும் வெயிலுக்கும் மத்தியில் எழுச்சியுடன் வாக்களிக்க காத்து நிற்கின்றனர்..
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 

எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண  சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் நீங்கள்   என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி
இப்போது தேர்தலில் வாக்களிக்கும் நேரம் ஆரம்பமாகி விட்டது.

ad

ad