வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
செங்கலடி படுகொலை: சந்தேகநபரான மகளை பிணையில் விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல்
செங்கலடி நகரில் தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் மகளுக்கு பிணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளான நிஸாம் காரியப்பர் மற்றும் ஏ.ஏ. றூமி ஆகியோர் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.
செங்கலடியில் பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டி குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
முதலாவது அரசவை நிறைவு! ஒக்ரோபர் 26ல் தேர்தல்! செயற்பாடுகள் விரிவாக்கப்படும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை தனது ஆட்சிமைக்காலமாகிய மூன்று வருடங்களை நிறைவு செய்துகொள்கின்றமையால் அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளுக்கமைய 2013 ஒக்ரோபர் 1ம் நாளாளன்று முதலாவது அரசவை கலைக்கப்படுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதேவேளை வரும் (ஒக்ரோபர் 26) தேர்தல் மூலம் தெரிவாகும் இரண்டாம் அரசவையானது தனது பணிகளை தொடங்கும் வரை தற்போதைய அமைச்சரவை தொடந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி யின் ஆட்சி மோசடிகள் நிறைந்ததே!- பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் மேயர்
ஈ.பி.டி.பி தலைமையிலான யாழ்.மாநகர சபையின் ஆட்சியானது ஊழல் மோசடிகள் நிறைந்தது என்பதை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் ஊழல் மோசடிகளிலும் நிர்வாக மோசடிகளிலும் ஈடுபட்டவர் ஈ.பி.டி.பி உறுப்பினர் விஜயகாந்த் ஆவார்.
வெளிநாட்டுக் கணவர் பார்க்க! கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை
கிருஷ்னப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு இன்று SKYPEயில்
இந்திய சினிமாவின் நூற்றாண்டை நான்கு நாள்‘"சிறப்பாக' கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும். ஆனால், "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் மறு மலர்ச்சிக்கும் வித்திட்ட ஜாம்பவான்கள் பலரும் மறக்கடிக்கப்பட்டனர்,
கேரளத்தில் இருந்து கிளம்பிய நரேந்திர மோடியின் தனி விமானம், பிற்பகல் 3.45-க்கு திருச்சியில் தரையிறங்கியது. விமானநிலையத்தில் வந்திறங்கியவருக்கு, திருச்சிவாழ் குஜராத்தி கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, அம்பாசடர் காரில், கூடவே
யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்
நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வின்சன்ட் மாணவி முதலிடம்
5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி முரளிதரன் கவிலாஸ்னா 193 புள்ளி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்: சிறீதரன் எம்.பி
கொழும்பு உட்பட்ட மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.