புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2013

அவசர செய்தி ..தோழர் தியாகுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக தகவல் அதனால்தான் மருத்துவ மனையில் இருந்து அனுப்பி உள்ளதாகவும் தகவல் ..இரண்டு நாட்களில் எதுவும் சம்பவிக்கலாம் .. உறவுகளே தோழர் தியாகுவின் உயிரை காப்போம் ..போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் !!!

11 அக்., 2013

11வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த தோழர் தியாகுவை தமிழக காவல்துறை-மருத்துவதுறை கூட்டாக ராயப்பேட்டை பொது மருத்துவமனையிலிருந்து வெளியேறச் சொன்னபின் புரசைவாக்கம் மக்கள் கல்வி மாமன்றத்தில் தன் பட்டினப்போரைத் தொடர்கிறார்.

கோரிக்கையை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்வோம். இனக்கொலை இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய அரசை செல்லவிடாமல் தடுப்போம். தோழர் தியாகு உயிரைக் காப்போம்.

வடக்கில் வறுமை, பொருளாதார சுமைகளால் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிர்ப்பந்தம்: விசாகா தர்மசேன

இலங்கையில் வடக்கு பகுதியில் யுத்தத்தின் பின்னர் அதிகளவான பெண்கள் தங்களது வருவாய் மூலமே குடும்பத்தை நடத்த வேண்டிய வறுமையான சூழல் உருவாகியுள்ளது.
வடமாகாண சபை சத்திய பிரமாணம் /படங்கள் 

வருவாய் தரும் துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே!

காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன. இதன்படி மாகாணசபையின் கீழ்வரும் முக்கிய துறைகள் அனைத்தும் முதலமைச்சர் வசமே உள்ளன.

மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை, நீதி, மாகாணப்பொருளாதாரத்
முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே! 
காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன.
 ஐங்கரநேசனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை;நேற்று தமிழரசுக் கட்சிக்கு சுரேஷ் தெரிவிப்பு 
ஐங்கரநேசனுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (ஈ.பி.ஆர.எல். எவ்) இடையே எதிர்காலத்தில் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள
திமுக வேட்பாளர் வெ. மாறன்
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெ.மாறன் போட்டியிடுகிறார்.   திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த வேட்பாளர் நேர்காணலில் மாறன் தேர்வு செய்யப்பட்டார்.
சந்திரபாபுநாயுடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபுநாயுடு, உடல்நிலை மோசமாக ஆனதால் சிகிச்சைக்காக் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
இன்று காலை 9 மணிக்கு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
கடுமையான சட்டங்களுக்கு மத்தியில் இலங்கை அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்தது
அவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளுக்கு இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று சென்றுள்ளது.அபோட்டின் அரசாங்கம் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த படகு சென்றுள்ளது.
பொதுநலவாய மாநாடு: பிரித்தானிய பாராளுமன்றக் கதவைத் தட்டும் தமிழர் பேரவை
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது.
நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்று,
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் தோல்வி அறிக்கை விரைவில் வெளியாகும்
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பெற்ற மகளையே கட்டிப்போட்டு
கற்பழித்த தந்தைக்கு 14 ஆண்டு சிறை
 
ராஜபாளையம் சேத்தூர் சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து,38. இவருக்கு, ஈஸ்வரி, தங்கம் என, இரு மனைவிகள் உள்ளனர். 
தங்கத்தின் மகள் கவிதா,13,( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 
திருமாவளவன் கூட்டத்துக்கு தடை நீங்கியது

தாம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்டோபர் 10 மண்ணுரிமை நாள் மற்றும் தலித் மற்றும் சிறுபான்மையினர் விடுதலை நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

யுவராஜ் அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டி20 போட்டியில் யுவராஜ் அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 அக்., 2013

அடக்க வந்த பொலிசை படுக்கை அறைக்கு அழைத்த நடிகை (வீடியோ இணைப்பு)

மராட்டிய மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அஞ்சும் நாயர் வசித்து வருகின்றார்.

தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை - இலங்கை அகதியும் தொடர்பு-BBC
தூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் இன்று வியாழன் கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட அக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம் செய்த ஐந்து பிரபல நடிகைகள் அதிரடி கைது. மும்பையில் பெரும் பரபரப்பு.

மும்பை ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான ஒரு வீட்டில் ஐந்து பிரபல நடிகைகள் விபச்சாரம் செய்ததாக மும்பை போலீஸார் அதிரடியாக கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டு.அமிர்தகழியில் 16 முதலைக் குட்டிகள் மீட்பு
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் குழியொன்றுக்குள் இருந்து 16க்கும் மேற்பட்ட முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
அமிர்தகழி, ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள மனோகரன் என்பவரின் வீட்டின் காணியில் இருந்தே இந்த முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
வடமாகாண அமைச்சுப் பதவிகள் அறிவிப்பு- ஐங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்
போருக்குப் பின்னரான சூழலை கருத்திற் கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஐங்கரநேசனுக்கு அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்/பிரேமச்சந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரனுக்கு வாங்கி கொடுக்கவே  விருப்பம் தெரிவிப்பு 
பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றனர்.
மத்திய மாகாணசபை: எதிர்க்கட்சியினர் பிரேரித்த உறுப்பினருக்கு ஆளும் கட்சியின் ஒரு பிரிவினர் சார்பாக வாக்களித்துள்ளனர்.ஆளுங்கட்சிக்குள் பிளவு
இலங்கையின் மத்திய மாகாணசபை ஆரம்ப அமர்வின் போது மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகநூல் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
முகநூல் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முகநூல் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும்.

இலங்கையில் புடைவை வியாபாரம் செய்யும் வர்த்தகரான மொகமட் இம்தியாஸ் என்பவர் சென்னையில் இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை செவன் வோல்ஸில் அமைந்துள்ள அவரது வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டு இவர் கடத்தப்பட்டுள்ளார்.
இயக்குனர் சற்குணத்திடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுள்ளாராம் நஸ்ரியா நசீம்.
நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவுக்கு டூப் வைத்து தொப்புளைக் காட்டிய விவகாரம் லேசாக அணைய ஆரம்பித்திருக்கிறது.
இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் நஸ்ரியா.
அதற்குப் பிறகு மீடியா நண்பர்களுக்கு பாடலைத் திரையிட்டுக் காட்டுகிறேன், வேண்டுமானால் நஸ்ரியாவும் பாடலைப் பார்த்து பதில் சொல்லட்டும் என்றும் உறுத்தலாக இருந்தால் அந்தக் காட்சியை நீக்கவும் தயார் என கூறியுள்ளார் சற்குணம்.
இன்ஸ்பெக்டர் லட்சுமணனை கடவுள் காப்பாற்றியுள்ளார்: 
நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயலலிதா

பா.ஜ., பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர். அவர்களை கைது செய்ய சிறப்பு படை அமைக்கப்பட்டது. 

9 அக்., 2013

வடமாகாண முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட சீ.வி.விக்னேஸ்வரன் இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.



          ருதலைக் காதலன் சுரேஷின் ஆசிட் வீச்சால் படுகாய மடைந்தார் இன்ஜினியரிங் மாணவி காரைக்கால் வினோதினி.

         ""ஹலோ தலைவரே... ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஏரியாவே கடந்த வாரக் கடைசியில் பரபரப்பா இருந்திருக்குது.''



             ரு காலத்தில் 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட பி.ஜே.பி. இன்று பிஸியான கட்சியாகிவிட்டது. மோடியின் திருச்சி மீட்டிங்கிற்குப் பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் படுபயங்கர பிஸியான தலைவர்களாகிவிட்டனர். மாநிலம் முழுவதும் அதிவேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் கட்சி வேலைகள், கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் வேகமாக ஓடிக்கொண்டி ருக்கும் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நக்கீரன் என்றதும் ""எங்கள் தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாயை தமிழகத்தில் வலுவாக அறிமுகப்படுத்திய பத்திரிகை அல்லவா'' என்று

            "அய்யா... கன்பார்மா அது போலீஸ் பக்ருதீன்தான்... எல்லீஸ் ரோட்லதான் இருக்கறான். இன்னைக்கி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை கூட்டம் அதிகமா இருக்கு. மெயின்ரோட்ல விடச் சொல்லி "பைக்'ல வர்றவங்ககிட்ட லிப்ட் கேட்டுக்கிட்டு இருக்கிறான். என்கூட இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆப்போசிட்ல நின்னு "வாட்சிங்'ல இருக்காரு...'
யாழ். புடவைக்கடைகளில் பாரிய தீ விபத்து- கட்டுப்படுத்த முடியாமல் திணறிய யாழ்.மாநகர சபை

யாழ்.மின்சார வீதியிலுள்ள புடைவை கடைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
திரு சிவராஜா வீரகத்தி (Switzerland) அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் இருப்பிட்டி உப தபால் அலுவலகம்
 புங்குடுதீவு நலன்விரும்பி திரு சிவராஜா வீரகத்தி அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டு இன்று (05.10.2013 ) திறப்புவிழா நடைபெற்றுள்ளது.
புங்குடுதீவில் வெடித்தது பசுமைப் புரட்சி – அணிதிரளும் மாணவர் திரட்சி
கண்ணகை புரம் முதல் நாகேஸ்வரம் வரையுள்ள கடற்கரை கரையோர பிரதேசத்தில் 10,000 பனம் விதைகள் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களால் நடுகை செய்யப்பட்டன. தொடர்ச்சியாக இப்பணியை முன்னெடுப்பதன் மூலம் வினைதிறன் மிக்க பொருளாதார வளம் ஒன்றினை உருவாக்கி எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டியது எமது கடமை என்றார் பன்னிரெண்டாம் ஆண்டு பயிலும் தனுஜன்.

எனினும் சில வருடங்களில் புங்குடுதீவை சுற்றியுள்ள கரையோர பிரதேசம் முழுமையும் பனம் கூடலாக ஆக்கப்படும். அதற்காக யுத்த சூழலால் செயல் இழந்து போன சூழகம் (சூழலியல் மேம்பாட்டு அமைவனம்) அமைப்பினை பாடசாலை மட்டத்தில் மீண்டும் உயிரூட்டி இயக்கி எமது இலக்கினை அடையும் செயல்பாட்டில் இறங்கியுள்ளோம். விரைவில் அனைத்து பாடசாலை மாணவர்களையும் சூழகம் அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து பனை நடுகை மட்டும் இன்றி பயன் தரு மரங்களையும், நிழல் மரங்களையும் ஊர் முழுவதும் நடுகை செய்யவுள்ளோம் என்று சூழக செயற்பாட்டாளர்களான குகதாஸ், கவியரசன், மோகன், விஜய்ராகுலண் எனப் பலரும் தெரிவித்தனர்.

அது மட்டும் இன்றி , புங்குடுதீவு மகா வித்தியாலய பிரதேசம் பசும் சோலையாய் மாற்றம் பெற இருக்கிறது என்று மாணவர்களிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் விதைகளைக் கொண்டு மாபெரும் நாற்று மேடை ஓன்று பள்ளி வளாகத்தினுள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

ஹரி ஆனந்தசங்கரி எதிர்வரும் பாராளுமன்றத் தர்தலில் போட்டியிட முடிவு!

ஹரி ஆனந்தசங்கரி எதிர்வரும் பாராளுமன்றத் தர்தலில் போட்டியிட முடிவு!
திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத்
தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத்
தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
கடந்த புரட்டாதி மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதி

8 அக்., 2013

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடந்த சத்திரசிகிச்சை: உலகில் நடத்த முதல் அதிசயம்-குறித்த நபரே ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மீடியா நண்பர்களுடன் படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா? நஸ்ரியாவுக்கு சற்குணம் சவால்?
 

நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு டூப் நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம்
வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் தொடர்பான விபரம்

வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தோழர் தியாகுவைக் காவல்துறைக் கட்டாயப்படுத்தி 7வது நாளான இன்று ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு வள்ளுவர் கோட்டம் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றது. அவர் நலமுடன் இருக்கிறார், உணவு மருந்து மறுப்பு என்பதில் பின்வாங்காமல் பட்டினப்போரை மருத்துவமனையில் இருந்தபடியேத் தொடர்கிறார்.

நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்! இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசைப் பங்கேற்கவிடாமல் தடுக்க வேண்டும் எனும் அவரது முக்கியக் கோரிக்கையை மக்களிடன், நண்பர்களிடம், மாணவர்களிடம் எடுத்துச் சென்று அதைத் தமிழகத்தின் ஒருமித்தக் கோரிக்கை ஆக்குவது...

இந்தக் கோரிக்கையை வென்று தோழர் தியாகுவின் உயிரைக் காப்போம்...
L· 


தென்னிந்திய நடிகர் சங்கத்தில் டைரக்டர் சற்குணம் மீது நடிகை நஸ்ரியா புகார்

‘‘நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கியிருக்கிறார்’’ என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் செய்து இருக்கிறார்.
புகார்
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘நய்யாண்டி.’ இந்த படத்தில், தனுஷ் ஜோடியாக நஸ்ரியா நடித்து இருக்கிறார். சற்குணம் டைரக்டு செய்திருக்கிறார். கதிரேசன் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த நிலையில், டைரக்டர் சற்குணம் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா ஒரு புகார் கொடுத்து இருக்கிறார். அதில், ‘‘நான் நடிக்க மறுத்த காட்சியில், ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்து படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கி இருக்கிறார்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பேட்டி
இதுபற்றி ‘தினத்தந்தி’ நிருபரிடம் நடிகை நஸ்ரியா கூறியதாவது:–
‘நய்யாண்டி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், கதாநாயகன் என் வயிற்றை தடவுவது போலவும், நான் உணர்ச்சிவசப்படுவது போலவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சற்குணம் என்னிடம் கேட்டார். அந்த காட்சியில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.படப்பிடிப்பு முடிந்து நான் போன பிறகு எனக்கு தெரியாமல், ஒரு ‘டூப்’ நடிகையை அந்த காட்சியில் நடிக்க வைத்து இருக்கிறார்கள். படத்தின் ‘டிரைலரை’ பார்த்தபோதுதான் இதை கண்டுபிடித்தேன். நான் அணிந்திருந்த அதே சேலையை அந்த ‘டூப்’ நடிகை அணிந்திருக்கிறார். அவர் வயிற்றை கதாநாயகன் தடவுவது போலவும், அந்த ‘டூப்’ நடிகை கையினால் ஒரு ‘மைக்’கை பிடிப்பது போலவும் படுகவர்ச்சியாக அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
மன உளைச்சல்
இதுபற்றி டைரக்டர் சற்குணத்திடம் கேட்டபோது, ‘‘அந்த காட்சியில் நீ நடிக்க மறுத்ததால், டூப் நடிகையை நடிக்க வைத்தேன்’’ என்று கூறினார்.கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் எல்லோரும் பார்க்கிற மாதிரி நாகரீகமாகவே நடித்து வருகிறேன். என்னை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.நான் நடிக்காத ஒரு காட்சியில், என் அனுமதி இல்லாமல், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி நான் நடித்தது போல் காட்டுவது, மிகப்பெரிய மோசடி. என்னையும் ஏமாற்றி, ரசிகர்களையும் ஏமாற்றுவது போல் ஆகும். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
நீக்க வேண்டும்
டிரைலரிலேயே இந்த அளவுக்கு ஆபாசமாக இருந்தால், படத்தில் அந்த காட்சி எந்த அளவுக்கு இருக்கும்? என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.‘டூப்’ நடிகையை பயன்படுத்தி எடுத்த அந்த படுகவர்ச்சியான காட்சியை படத்தில் இருந்து நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறேன்.’’இவ்வாறு நஸ்ரியா கூறினார்.
ஆஸி. செல்லவிருந்த 46 பேர் பேருவளை பொலிஸாரால் கைது 
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாரார் நிலையில் இருந்த 46 பேரை பேருவளை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

7 அக்., 2013

அண்ணாநகரில் பட்ட பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை

¨சென்னை அண்ணாநகரில் சாலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென பைக்கில் இருந்து

யாழ்.மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொள்ளை! பல லட்சம் ரூபா பணம், நகைகள் அபகரிப்பு!- அச்சத்தில் மக்கள்
யாழ்.மாவட்டத்தில் மூன்று பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராஜினாமா செய்யும் யோசனையை கைவிட்டார் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் யோசனையை பலருடைய வேண்டுகோள்களுக்கு அமைய கைவிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அரசோடு ஒத்துழைத்தால் உதவி நிச்சயம்!- ஜனாதிபதி மகிந்த
அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்
வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நவிபிள்ளையின் யோசனைக்கு அமைய மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு மனித உரிமை கல்வித்திட்டம்
மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான கல்வித்திட்டம் ஒன்றை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வடமாகாண முதலமைசரின் விசேட அறிக்கை !!!

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். 
இணையத்தளங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை!

இணையத்தளங்கள் சில “அனந்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரன்அவர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய மாட்டேன் என கூறியதாகவும் அனந்தி 12ஆம் திகதி சமாதான நீதவான் அல்லது சத்தியபிரமாண ஆணையாளர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய இருப்பதாகவும் மாகாணசபையில் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க இருப்பதாகவும்” என விசமத்தனமான பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆகவே இந்த செய்தியில் உன்மை இல்லை என்பதனை எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்..

தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது.
அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

விக்கினேஸ்வரனின் பதவிப் பிரமாண நிகழ்வில் குர்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்

முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் நாளைய தினம் வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். இதன் போது விசேட விருந்தினராக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்துக் கொள்வார் என்று தமிழ் தேசியகூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வெள்ளிக்கிழமை நவராத்திரி விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நீலாங்கரையில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்கள் கைது

நீலாங்கரையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். படுக்கை அறையில் இருந்த தானியங்கி கதவை திறக்க முடியாததால் அவர்கள் சிக்கினர்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்

10 அணிகள் இடையிலான 5–வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 21–ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவைச் சேர்ந்த மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இந்த நிலையில்




கொரியன் பார்முலா 1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

பார்முலா1 கார் பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 14–வது சுற்றான கொரியன் கிராண்ட்பிரீ பந்தயம் அங்குள்ள யோன்காமில் உள்ள ஓடுதளத்தில் இன்று நடந்தது. 309 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த
இந்தியா முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை மத்திய அரசு வழங்க இருக்கிறது.
இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை வழங்க முடிவு செய்திருக்கிறது.மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில்,

224 பேர் பலியான குண்டு வெடிப்பில் தொடர்பு: அல்கொய்தா இயக்க தலைவர் பிடிபட்டார்

ஆப்பிரிக்க நாடுகளில் குண்டு வெடித்து 224 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய அல்கொய்தா இயக்க முக்கிய தலைவர் பிடிபட்டார். அமெரிக்க ராணுவம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: விஜயநகரத்தில் ஊரடங்கு; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் விஜயநகரம் பகுதியில் கலவரமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் நேற்று 2–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த பகுதியில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை: திஸ்ஸ விதாரண
இலங்கையில் தேசியப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இடதுசாரி அரசியல்வாதியான பீட்டர் கொனமனின் 96வது ஜனன தினத்தை முன்னிட்டு மருதானையில் உள்ள அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வவுனியாவில் டிப்பர் வாகனம் மோதி 6 வயது சிறுமி பலி: சிங்கள சாரதியை காப்பாற்ற முனைந்த பொலிஸார்
வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி தலைசிதறிபலியாகியுள்ளார்.இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணேசன் நிறோசினி என்ற ஆறு வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

6 அக்., 2013

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்ணொருவர் பலி

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பீட் வெல் மற்றும் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வீதி சந்திக்கு அருகில் இந்த விபத்து நேற்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இலங்கையில் பிறந்த 55 வயதான முத்துமனக்கா பின்ஹாமி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்து கொலையா விபத்தா என்பதை தீர்மானியுங்கள் ( படங்கள் இணைப்பு)

இரண்டு பிள்ளைகளின் தந்தை செல்வராசாசிங்கம்.கஜந்தன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மர்மமான முறையில் இறந்து கிடக்க காணப்பட்டார். போக்கறுப்பு கேவிலிருந்து நேற்றிரவு 8மணியளவில் அம்பன் பகுதியில் மணல் ஏற்றுவதற்காக தனது உழவு இயந்திரத்தில் புறப்பட்டு சென்றார் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்கிக்கும் செருப்படி கொடுக்க இருக்கும் அனந்தி

தமிழின துரோகி சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்னேஸ்வரனுக்கும் வடமாகாணசபை தேர்தலில் அதி கூடிய வாக்கு பெற்ற அனந்தி எழிலன் செருப்படி கொடுக்க உள்ளார்.  

ஜனாதிபதி முன் சத்தியப் பிரமாணம் : தமிழ் சட்டத்தரணிகள் எதிர்ப்பு


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளதுடன், கூட்டமைப்பின்

 ரெலோ சார்பில் சிவாஜிலிங்கமும் புளொட் சார்பில் சித்தார்த்தனும் ஒரு அமைச்சை இரண்டரை வருடங்களுக்கு என்ற அடிப்படையில் பகிர்வதற்கும் ஈ. பி. ஆர். எல். எவ் சார்பில் ஜங்கரநேசனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் தலா இரண்டரை வருடங்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வட மாகாண சபைக்கான அமைச்சுப் பதவி தொடர்பாக ஏற்பட்டள்ள இழுபறிநிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   தமிழரசுக் கட்சியின் சார்பில் குருகுலராஜா கல்வி அமைச்சராகவும,
யாழில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், பளை, போக்கறுப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பேச்சு தொடரும் - சம்பந்தன் 
ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு தொடரும். தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முடிவுகளை நாம் எடுப்போம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பதவியேற்பு முடிவுக்கு ஐ.தே.க., ஜே.வி.பி கட்சிகள் பாராட்டுகின்றன 
வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரத்து
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டம் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது. பேருந்து இயக்கப்படாததால் திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு செல்லும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆரம்பாக்கம் என்ற இடம்வரை மட்டும் தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டன.

வேலூர் கோர்ட்டில் போலீஸ் பக்ருதீன் ஆஜர்
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீனை, சென்னை பெரியமேட்டில் வெள்ளிக்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர். போலீஸ் பக்ருதீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் பக்ருதீன், வேலூர் 3வது குற்றவியல்
10 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை: புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பிடித்த தமிழக போலீசார்
ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை 10 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர். 
சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை, மதுரை பைப் வெடிகுண்டு வைத்த சம்பவங்களில் தொடர்புடைய பிலால் மா-க் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார் 100க்கும் மேற்பட்டோர் புத்தூரில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். 
சென்னையில் பன்னா இஸ்மாயிலுக்கு சிகிச்சை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆந்திர மாநிலம் புத்தூரில் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகளை போலீசார்  சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது
நடிகர் சங்கத்துக்கு சிவாஜி சமூகநல பேரவை கண்டனம்
சிவாஜி கணேசன் பிறந்தநாளை கொண்டாடாத நடிகர் சங்கத்துக்கு சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அதன் தலைவர்
ரணிலுக்கு எதிரான பேரணி மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு 7 பேர் வைத்தியசாலையில்! மாகாணசபை உறுப்பினரின் தந்தை கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியின் மீது மாத்தறையில் இன்று மதியம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது சிலரின் இன்றைய கவலை!- மனோ கணேசன்
இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் ரணில்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அந்த கட்சியின் ஐக்கிய பிக்கு முன்னணி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் காலஅவகாசம் கேட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து!- யாழ். பல்கலை மாணவன் அச்சுவேலியில் பலி
விபத்தில் சாவகச்சேரி, கெருடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த சோதீஸ்வரன் கஜந்தன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.
யாழ், அச்சுவேலி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எங்கள் ஊர்..!-(புங்குடுதீவு)

''சிறுத்திடல்" வளவெல்லாம் இந்நாளில்
சிறுவெள்ளம் பாயும் - வேலிப்
புற்றெங்கும் குடைபிடிக்கும் காளான்
பிடுங்குதற்கோ போட்டி சிறார்
'சோழனோடை" நிரம்பியே வழிந்து
சேரும் கடலுள் நன்றாய் - 'கேரதீவு"
தாழங்கடற்கரை ஈஞ்சுபுகுந்து வாடை
தம்பாட்டில் சில்லிட்டுச் செல்லும்..,
பிரதமருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு!- ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள்
பிரதமர் டி.எம். ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.
பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் பொதுக்கூட்டம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் பொதுக்கூட்டமொன்று  நாளை ஞாயிற்றுக்கிழமைன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ளது.

ad

ad