-
16 நவ., 2013
இலங்கையில் சனல் 4- ன் இயக்குனர் கல்லாம் மேக்ரோ-வை கொலை செய்ய அரசின் சதி அம்பலம் வீடியோ
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதால் பல்வேறு நாட்டிலிருந்தும் தொலைக்காட்சி சேனல்கள் இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ளன. இதில் முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்-4, இலங்கையின் இனவெறி செயல்களை உலகறிய செய்த சேனல். இந்த சேனல் அலைவரிசைக்கு தடைவிதித்தால் மேலும் பெரிய பிரச்சனை எழும் என்பதால் இலங்கை அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
லண்டனில் இருந்து கொண்டே இலங்கைக்கு பெரிய
பொல்லு கொடுத்து அடி வாங்க போகும் இலங்கை ஜனாதிபதி
பொதுநலவாய மாநாடு நடத்தி தன்மீதான குற்றச் சாட்டுகளை மறைக்கலாம் அல்லது மறுக்கலாம் என கனவு கண்ட மஹிந்த பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதை ஆரம்பிகிறது .வந்திருந்த அனைத்து தலைவர்களும் ஊடகங் களும் வடக்கு நோக்கி செல்வதையே முக்கிய நோக்காக கொண்டுள்ளன . அரசோ தனது கட்டுபாட்டை இழந்து தவிக்கிறது இங்கிலாந்து பிரதமர் ஒருவர் 48 வருடங்களின் பின்னர் விஷயம் போன கமரூன் தமிழரின் நலன்புரி நிலையத்தின் சிறிய தகர கொட்டகைகளில் காண பாடும் கா ட்சிகள் அவரின் மனித காருண்யத்தை விளக்குகின்றன தான் எதற்காக போகிறேன் என்று சொன்னவர் செய்து காட் டுகிறார் சிறிய நாட்டின் ஜனாதிபதி மகிந்த பெரியபலமான நாடான இங்கிலாத்தில் இறங்க முடியாத நிலை.பெரிய நாடான இங்கிலாந்தின் பிரதமர் தகர கொட்டகையில் என்ன வித்தியாசம்
பிரி. பிரதமர் வருகையை எதிர்த்து சிங்களவர்கள் சுன்னாகத்தில் போராட்டம்!- மாவிட்டபுரம் போராட்ட மக்களை சந்திக்காமல் பிரதமர் கொழும்பு திரும்பினார்
சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
சனல்- 4 ஊடகவியலாளர்களையே கண்ணீல் மல்க வைத்தது மக்களின் அழுகுரல்! சர்வதேச விசாரணை தேவையென்கிறார் ரவிகரன்
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச்சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் சுயாதீன சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ச
பிரித்தானிய பிரதமர் கமரூன் யாழ். நலன்புரி நிலையத்திர்கு விஜயம். - ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
15 நவ., 2013
பிரத்தானிய பிரதமர் உதயனுக்கு விஜயம்
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.
தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரும் கையொப்பங்கள் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கையளிப்பு |
[ சண்தவராசா ] |
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திச் சேகரிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் வியாழன் பிற்பகல் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. |
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் மீது கழிவொயில், கல்வீச்சு தாக்குதல்: இராணுவத்தினர் அட்டகாசம்
வலி.வடக்கில் மேற்கொள்ளப்படும் நில மீட்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கென யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினர் ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு பல இடங்களில் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம் - அனைத்துலக பிரசன்னத்தின் முன் கண்ணீர் மல்க காத்திருந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம்!
கே.பியிடம் விசாரணை நடத்த இலங்கையிடம் உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்த்திருக்கும் சி.பி.ஐ!- இந்துஸ்தான் டைம்ஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடனான தொடர்புகள் பற்றி கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் முறையான விசாரணைகளை நடத்த இந்திய மத்திய விசாரணை பிரிவினர் (சி.பி.ஐ) இலங்கையின் உத்தியோகபூர்வமான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ்
எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல கவி வீச்சு ,கரு ப்பொருள், கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன்
முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!
ஆக்கம்: அ.பகீரதன்
இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?
படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?
அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?
முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?
பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா
அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ
பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே
முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை
வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை
நன்றி.
அ.பகீரதன்
முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!
ஆக்கம்: அ.பகீரதன்
இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?
படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?
அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?
முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?
பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா
அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ
பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே
முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை
வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை
நன்றி.
அ.பகீரதன்
மனித உரிமை மீறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும்: கொமன்வெல்த் நாடுகளுக்கு வலியுறுத்து
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மெக்ரேயை மங்கள சந்தித்தமையானது டி.எஸ்.சேனநாயக்கவின் கன்னத்தில் அறைந்ததுக்கு சமம்: அரசாங்கம்
இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் செய்யும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது தேசப்பற்று கொண்ட டி.எஸ்.சேனநாயக்கவின் 'கன்னத்தில் அறையும்" செயலாகும்
14 நவ., 2013
மும்பை டெஸ்ட்: ரசிகர்கள் ஆரவாரத்துடன் களமிறங்கிய சச்சின்!
மும்பையில் இன்று நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களம் இறங்கி 38 ரன்களுடன் ஆட்டம் இழக்கமால் உள்ளார்.
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறைக்க முயற்சி ; சர்வதேச மன்னிப்பு சபை
பொது சமூகத்தில் காணப்படுகின்ற அச்சுறுத்தல்களை நீக்கி அதனை முடிவுக்கு கொண்டு வர பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இன்று மாலை 4.20 அளவில் சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.
இளவரசர் சார்ள்ஸ் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோருடன் 56 அரச பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர் என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
1973 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சகல பொதுநலவாய நாடுகளின் மாநாடும் பிரித்தானிய மகா ராணி இரண்டாவது எலிச பெத் தலைமையிலேயே நடைபெற்றன. அவர் கலந்து கொள்ளாத முதல் மாநாடு கொழும்பில் நடைபெறும் மாநாடாகும்.
மூன்று நாள் அரச முறை பயணமாக இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ், பிரித்தானிய மகா ராணிக்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கண்டி, நுவரெலியா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் சில தலைவர்களை சந்திக்க உள்ள இளவரசர் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை கொழும்பில் உள்ள தேசிய அரும்பொருட் காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றும் இளவரசர் தம்பதி விஜயம் செய்ய உள்ளது.
நெடுந்தீவின் விவசாய, சூழற் பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசன் களஆய்வு
நெடுந்தீவின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் இன்று நெடுந்தீவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்துக்
காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது.
மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.
எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள்.
இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம்.
இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், சித்தார்த்தன், ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செ.கஜேந்திரன் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சி; அதிர வைக்கும் காட்சிகள் (வீடியோ இணைப்பு) |
பிரிட்டன் பிரதமர் கமருனுக்கு இலங்கை ஊடக அமைச்சர் கண்டனம்! நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம் [ பி.பி.சி ]
13 நவ., 2013
இசைப்பிரியாவின் காணொளி குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்! தீபக் ஒப்ராய் வலியுறுத்து
சனல் - 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இசைப்பிரியாவின் காணொளி தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று கனேடிய வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய்
ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம்! ரணிலின் வாகனத்தின் மீது தாக்குதல்- படையினரே தாக்குதல் நடத்தினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு உண்டான தொடர்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்
அண்மையில் கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்ட சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் அரசாங்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.
வடமாகாண உறுப்பினர் ரவிகரனுடன் கொழும்பு சென்ற மக்களை பலவந்தமாக திருப்பியனுப்பிய இராணுவம்
கொழும்பில் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் நடைபெற இருந்த மனித உரிமைகள் தொடர்பிலான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், சென்றிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் வைத்து தடுக்கப்பட்டு பலவந்தமாக
புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்!- கெலும் மக்ரே
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என தாம் கூறவில்லை, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பிலும் உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சனல் 4 தொலைக்காட்சியின்
பொலிஸ் முற்றுகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்! [ விகடன் ]
கொமன்வெல்த்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேறியது
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
அந்த தீர்மானத்ததில் உள்ள வாசகம் வருமாறு:-
இந்தக் கூட்டத்தில், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
தலைவர் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவிடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினரை கைது செய்ய நடவடிக்கை
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முன்னணி உறுப்பினர் எனக் கூறப்படும் தம்பி அண்ணா என்பவரை கைது செய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
யாழ். வலி. வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் எமது போராட்டம் தொடர்ந்தது தொடரும்: சிறீதரன் பா.உ
வலி. வடக்கு பகுதியில் பாரிய இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டதுடன் எமது நில மீட்பு தொடர்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் எமது தாயகமான வட-கிழக்கு பகுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது இது தொடரும் என தமிழ்
12 நவ., 2013
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி புதுவையில் பந்த் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இன்று காலை 11 மணிக்கு புதுவை ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.
குர்ஷித் இலங்கை பயணம்: ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்: ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட
ஆளுநர் உரையினை பகிஸ்கரித்து விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் மூவரும் விருந்தினர் அறையினுள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அங்கு கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன் தான் ஏற்கனவே கூறியவாறு சந்திரசிறி ஒரு போர்க்குற்றவாளி.
அவர் யாழ்ப்பாணத்தினில் இராணுவத்தளபதியாகவிருந்த வேளையினிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.அதற்கு பதிலளிக்க வேண்டியவர்.
அவர் யாழ்ப்பாணத்தினில் இராணுவத்தளபதியாகவிருந்த வேளையினிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.அதற்கு பதிலளிக்க வேண்டியவர்.
அது தவிர இவரை இணைப்பாளராக நியமித்த வேளையினிலேயே வவுனியா தடுப்பு முகாம்களினிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர்.நடந்து முடிந்த தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.
தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவது சட்டவிரோதமானதா?! குடிவரவுச் சட்டங்களை இலங்கை துஷ்பிரயோகம் செய்கிறது!- ஐதேக குற்றச்சாட்டு-BBC
இலங்கை அரசாங்கம் நாட்டின் குடிவரவுத்துறை சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியே தான் விரும்பாத சர்வதேச நபர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி வருவதாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)