புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2014

ஸ்டாலின் ஆதரவாளர்கள் திமுக கொடியேற்ற அழகிரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு
 மதுரை திமுகவில் தென்மண்டல திமுக அமைப்புச் செயலர் மு.க.அழகிரி தரப்பினருக்கும், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து, மாநகர் திமுக
சென்னையில் நடிகர் சல்மான்கான் கொடும்பாவி எரிப்பு
குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகர் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் நரேந்திர மோடி நல்லவர் என்றும் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி யளித்தார். 
மேல், தென் மாகாண சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் திகதி அறிவிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இந்த மாதம் 30 திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை, சிறைச்சாலையின் பெண் அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை- மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை
இலங்கைக்கும் மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நா .க.த.அ . பிரதமர் உருத்திரகுமரனின் அறிக்கை 
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பை வீச்சாக்குவதற்கு, நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் பங்களிப்புக்கும் அப்பால் சென்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கமாக நீடித்து நிலைக்கக்கூடிய

15 ஜன., 2014


பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் : கேஜ்ரிவால்

பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறலாம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். கட்சியின் கொள்கைகளில் இருந்து ஆம் ஆத்மி
காங்கிரசுடன் கூட்டணி இல்லை தனித்து போட்டி : மாயாவதி


பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான முன்னாள் முதல் மந்திரி மாயாவதி இன்று 58-வது பிறந்தநாள் விழா கூட்டம் தலைநகர் லக்னோவில் உள்ள ஒரு பூங்காவில் நடைபெற்றது. அப்போது பேசிய மாயாவதி பாராளுமன்ற தேர்தல் குறித்து கூறியதாவது: 

நாடு முழுவதும் உள்ள தலித்துகளை நாம் ஒன்றிணைக்கவேண்டும். முஸ்லிம்கள் மற்றும் மேல்சாதி மக்களுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கை சகோதரத்துவம் நிறைந்ததாக இருக்கவேண்டும். 
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளன!- சிங்கள ஊடகம்
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் பொது இலங்கைக்கு எதிராக
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி நாளை மீண்டும் தோண்டப்படவுள்ளது
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி நாளை வியாழக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் தோண்டப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 பாலச்சந்திரன் கதை ´புலிப்பார்வை´ என்ற பெயரில் திரைப்படமாகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
 
இலங்கையின் பந்துவீச்சில் சுருண்டது பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் ஆதிக்கம் மேலேhங்கியுள்ளது.
சர்வதேச விசாரணை கோரி கொழும்பு நகரில் போராட்டம்; இம்மாத இறுதியில் காணாமற்போனோரின் உறவுகள் களத்தில் குதிப்பு
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் காணாமற்போன ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப்பெண்கள் ஆகியோரை மீட்டுத்

கட்சி தலைமையை விமர்சித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் பதிலடி

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி. டெல்லி அமைச்சரவையில் தனக்கு பதவி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர், இன்று திடீரென முதல்வர் கெஜ்ரிவாலை விமர்சனம் செய்தார். 
பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. 7 தொகுதிகளில் வெற்றி பெறும்: வைகோ 


ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார். காலையில் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
கமலஹாசனுடன் இணைந்து நடிக்கும் கே.பாலசந்தர்

கே.பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் சமீபத்தில் ‘ரெட்டை சுழி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
மட்டக்களப்பின் சில பகுதிகளில் வெள்ள அபாயம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தீவிரம்
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வளிக்க கோத்தபாய திட்டம்? - என்னைக் கைது செய்தால் பின்விளைவுகளையே ஏற்படுத்தும்-அனந்தி
வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து, விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
south_sudan_ferry_003

படகில் தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலி.

சுவிஸ் தலைநகரில் செந்தமிழ் வழிபாட்டுத் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல் 


தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநிலத்தில் இன்று (14. 01. 2014) அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கப்பெருமான் எழுந்தருளி அருளாட்சிபுரியும் ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல்
ராஜ்யசபா தேர்தல் : அதிமுகவுக்கு 5 எம்.பிக்கள் வாய்ப்பு
6-வது உறுப்பினர் தேர்வில் இழுபறி
ராஜ்யசபா என்று அழைக்கப்படும் மாநிலங்கள் அவைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 238 உறுப்பினர்கள் அந்தந்த மாநில சட்டசபை உறுப்பினர்களால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை

மூத்த தமிழ்அறிஞர்களுக்கு முதல்வர் விருது வழங்குவார்: தமிழக அரசு

தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப்பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றிட தகுதியான
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். 86 வயதாகும் இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.



23 ம் திகதி ஐப்பசி மாதம் 1928 ம் ஆண்டு காக்கிநாட மாவட்டத்திலுள்ள பெட்டபுரத்தில் பிறந்த அஞ்சலி தேவி, தனது 8வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவர் 'கொல்ல பாமா'
2013-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. 2013-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்
வம்பன் காட்டில் புள்ளிமான நாய்கடித்து குதறியது(படங்கள்)


புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த ஓராண்டாக புள்ளிமான் இருந்துள்ளது. இந்த புள்ளிமானை அடிக்கடி நாய்கள் விரட்டியுள்ளது. இதை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்  ஒரு புள்ளிமானை நாய்கள் கடித்து குதறி கொன்று போட்டுவிட்டு சென்றுவிட்டது. 

14 ஜன., 2014

லண்டனில் ஜெயவாணியின் தற்கொலையும் உறவினர்கள் அயலவர்களின் வாக்குமூலமும்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கடந்த 9ம் திகதி வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டு இருந்தனர்.
இந்த மரணங்கள் குறித்து ஸ்கொட்லன்ட்யாட்
இலங்கை சிறையில் இருந்து மேலும் 20 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை! இதுவரை 183 மீனவர்கள் விடுதலை
நேற்று திங்கட்கிழமை மட்டும் 163  தமிழக மீனவர்களை இலங்கைச் சிறைகளிலிருந்து  விடுதலை செய்துள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 20 தமிழக மீனவர்களை

உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரர் விருது ரொனல்டொவுக்கு கிடைத்துள்ளது 

இன்று இரவு சுவிஸ் சூரிச் இல் நடைபெற்ற பல்லூன் கே ஒரென்ஞ்ச் விருதுக்கான தெரிவு அறிவிப்பின் போது உலகின் முன்னால் சிறந்த உதைபந்தாட்டலர் பெலே  இனால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது

.உலகின் சிறந்த வீரர்களான பிரான்சின் ரிபெரி (பயெர்ன் மியூனிச்),போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட் ),ஆர்ஜெந்தினாவின் மெச்சி (பர்செலோனா ) ஆகியோருக்கிடையில் நடைபபெற்ற போட்டியில் ரொனால்டோ 2 வது தடவையாக  வெற்றி பெற்றுள்ளார் .2008 க்கு பின்னர் இந்த விருதை அறிவித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தனது செல்ல மகனுடன்  வந்து பெற்று சென்றார் . சிறந்த பயிட்சியாலராக ஒள்ளந்தை சேர்ந்த கடந்த வருட பயெர்ன்  மியூனிச் கழக  பயிற்ச்சியாளர் கிஞ்செஸ் உம சிறந்த வீராங்கனையாக ஜெர்மனியின் நதினாவும் தெரிவாகினர் .சிறந்த கோலை இங்கிலாந்துக்கு எதிராக 2012 இல் அடித்தமைக்காக ஸ்வீடன் வீரர் இப்ரமோவிச் தெரிவானார் 

13 ஜன., 2014

தமிழக மீனவர்கள 163 பேர் இன்று ஒரே நாளில் விடுதலை! - இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த
அம்மா’’வின் வார்த்தைகள்;
``அம்மா’’வுக்கே பொருந்தும்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ?எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம். 23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே
நடிகையுடனான தொடர்பை, அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகையுடனான தொடர்பை, அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் அதிபர், பிராங்காய்ஸ் ஹோலண்ட்(வயது59), கடந்த, 2007 முதல், பத்திரிகையாளரான, வலேரி டிரியர்வேலர்,
சர்வதேச விசாரணை கொண்டுவந்தால் விளைவுகள் பாரதூரமானவையாகும்; எச்சரிக்கிறார் மூத்த ராஜதந்திரி தயான் ஜயதிலக
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டால் அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக இருக்கும் என்பதுடன் இதனால் சர்வதேசப் பொருளாதாரத்

12 ஜன., 2014


விஜயகாந்த் வியூகம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. 
பாகிஸ்தான் பிரதமரின் அறிவுரையாளர்  குண்டுவெடிப்பில்
உயிர் தப்பினார்: பாதுகாவலர் 6 பேர் பலி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அறிவுரையாளாரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத்தலைவருமாக இருப்பவர் அமிர் முகாம். இன்று, இவர் தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டமுள்ள கைபர் பகுதுன்காவா மாகாண ஷாங்லா மாவட்ட
பாஜக கூட்டணிக்கு மதிமுக செல்லக் கூடாது: திருமாவளவன் பேட்டி

வகுப்புவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் பாஜக கூட்டணிக்கு மதிமுக செல்லக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாது, 
லண்டனில் மூன்று உயிர்கள் பிரிந்த பரிதாபம்! நடந்தது என்ன?! – 2ஆம் இணைப்பு 
uk-murder1
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:-
ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது
லயன் எயார் விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளது
லயன் எயார் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களின் மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொண்டு 17 பேரை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குர்திஸ்தான் பெண்கள் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்கள் படுகொலை: பாரிஸில் இடம்பெற்ற எழுச்சி ஊர்வலம்
நீதி வேண்டும் என்றால் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் உலக மக்களையும் இணைத்து கொண்டு செல்ல வேண்டும் - மக்கள் போராட்டங்கள் விடுதலைக்கான பாதையை அகல திறந்து விடும் என்ற கருத்திற்கு இணங்க பாரிஸில் குர்திஸ்தான் மக்களின் நீதிக்கான போராட்டம் உதாரணமாக இருந்தது.
எமிரேட் விமானத்தை சேதப்படுத்திய இரு மயில்கள்
இலங்கை தெற்கு மத்தல சர்வதேச விமான நிலையத்தில் “பிளைய்டுபாய்” என்ற டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்தியுள்ளன.இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கின்றது.
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் அத்திணைக்களம்  தெரிவித்துள்ளது. 
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி, டக்ளஸ் இணைந்து கூட்டணி அமைக்க திட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்  தெரிவித்துள்ளன.
அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கோரும் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது
முல்லைத்தீவு புதுமாத்தளனில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல் தொடர்பில் விளக்கமளிக்க அமெரிக்க தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படமாட்டார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

10 ஜன., 2014

போர்க்குற்ற ஆதாரங்களை வன்னியில் திரட்டினார் ரெப்,
இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று நேரில் சென்று ஆராய்வு 
இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தக்குற்றம் தொடர்பான ஆதாரங்களுக்குரிய இடங்களை நேற்று நேரடியாகச்

தற்­கொ­லைக்கு முயன்­ற­வரை காப்­பாற்­றிய இங்­கி­லாந்து வீரர்கள்

ஆற்றில் குதித்து தற்­கொ­லைக்கு முயன்ற ஒரு­வரை இங்­கி­லாந்து கிரி க்கெட் அணியின் வீரர்­க­ளான ஸ்டூவர்ட் ப்ரொட்டும் மெட் பிரை­யரும் காப்­பாற்­றிய சம்­பவம் ஒன்று சிட்னியில் நடை­பெற்­றுள்­ளது.

சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர்ந்தோரின் ஏஜன்ட் உடன் வெளியேற்ற வேண்டும் என்கிறார் அஸ்வர்

இன்று இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டு­வ­ரு­வ­தாக குற்றம் சுமத்தும் சனல் - 4 தொலைக்­காட்சி தமிழ் ஈழ­வி­டு­தலைப் புலிகள் நடத்­திய அரா­ஜ­கங்­களின் போது எங்­கி­ருந்­தார்கள். இத்­தொ­லைக்­காட்­சியைச்

தெரிவுக்குழு விடயத்தில் சம்பந்தன் மிகச்சரியான முடிவை எடுத்துள்ளார் : ஜே.வி.பி. பாராட்டு

அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதால் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித நன்­மை­களும் கிடைக்கப் போவ­தில்லை. தெரி­வு க்­குழு விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முடிவு சரி­யா­ன­தாகும் என்று மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி)
அமெரிக்க விசேச தூதுவர் யாழ் ஆயரை சந்தித்தார் -
படம் 
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப், புதன்கிழமை (08.01.2014) மாலை யாழ். ஆயர் இல்லத்தில் யாழ். மறை மாவட்ட

விஜய் எங்கள் கட்சியில் சேரலாம்.ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு 

விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக  வந்த செய்தி பற்றி கூறுகையில் இவ்வாறு தெரிவிக்கக்கப்பட்டது இளைய தளபதி விஜய் விரும்பினால் அவர் தாராளமாக எங்கள் கட்சியில் சேரலாம் என்று ஆம் ஆத்மி கட்சி
அமெரிக்க விசேட தூதுவர் உதயனுக்கு விஷயம் 
சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிசன் ஆகியோர் 'சுடர் ஒளி'யின் சகோதரப் பத்திரிகையான 'உதயன்' அலுவலகத்திற்கு புதன்கிழமை

அஜீத் - விஜய்! பொங்கலுக்கு தூள் பறக்கும் ஃபைட்! 

               எதிரெதிர் துருவங்களாக இருந்த அஜித்தும் விஜய்யும் இணைந்தது அஜித்தின் முயற்சியால் தான். ரசிகர்கள் அதிக எமோஷனாவதால் இனி இருவரது படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அஜித் சொன்னதன்
சிங்கப்பூரில் அஜீத்தின் ‘வீரம்’ காட்சி திடீர் ரத்து: ரசிகர்கள் போராட்டத்தால் பரபரப்பு
நடிகர் அஜீத்தின் ‘வீரம்’ திரைப்படம் வெளியானதையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில், ரசிகர்கள் அஜீத்தின் கட்-அவுட்டுகள், கொடி, தோரணம் அமைத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினார்கள். 
ஆசிரியரை செருப்பால் அடித்த, பெண் தலைமை ஆசிரியரியை சஸ்பெண்ட்

தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த, எஸ்.பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கலையரசன் (52) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில், எஸ்.பட்டியை சேர்ந்த செல்வராணி (50)
காவல் நிலையங்கள் வதைக் கூடாரங்களா? திருமாவளவன் கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமீம் அன்சாரி என்னும் 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பெயரில் கடந்த 7-1-2014 அன்று பிடித்துச்
இலங்கையை குற்றவாளியாக்கவே மேற்குலக நாடுகள் முயற்சி: தயான் ஜயதிலக்க
அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார்!– இலங்கை அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில்
கே. ஜே. யேசுதாஸ்
K. J. Yesudas

யேசுதாஸ்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர்கட்டசேரி யோசப் யேசுதாஸ்
வேறு பெயர்கள்கான கந்தர்வன்
பிறப்பு10 ஜனவரி 1940(அகவை 74)
ஃபோர்ட் கொச்சி,கொச்சி இராச்சியம்,இந்தியா
பிறப்பிடம்கொச்சிகேரளா,இந்தியா
இசை வகை(கள்)கருநாடக இசை
திரையிசை
இசை இயக்குனர்[1]
இசைத்துறையில்1961–நடப்பு
வலைத்தளம்www.yesudas.com
பாடகர் ஜேசுதாசுக்கு இன்று பிறந்த நாள் 
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்தியகருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள்

9 ஜன., 2014

வடக்கை கண்காணிக்க ஐ.நா பொறிமுறை

சிறிலங்காவில் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா பொறிமுறை ஒன்றை அமைப்பது குறித்து ஜெனிவா தீர்மானம் வரையப்படும் போது கவனத்தில் கொள்ளப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத்

தினமும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார்! சனிக்கிழமை நான் கேட்பேன்! கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் தினந்தோறும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைகளை தான் கேட்டறிவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகங்கள் ஓட்டல், பார், வீடியோ கிளப் நடத்த  தடை : இந்தியா உத்தரவு
 இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் கைதுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி செய்தார்
தலையில் கல்லை போட்டு கணவர் கொலை! கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவி ஆத்திரம்!
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள முஸ்திகிரிஅள்ளியை சேர்ந்தவர் குப்பாகவுண்டர். இவரது மகன் சின்னசாமி (50). இவருக்கு திருமணமாகி லட்சுமி (42) என்ற மனைவியும், மகன்கள்
பூஸா தமிழ்க் கைதிகளையும்; போர்க் குற்ற நிபுணர் பார்வை
பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகள் மற்றும் தமி ழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை, இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்கப் போர்க்
சபைக்கு வந்தது செங்கோல்
வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் முதன்முறையாக செங்கோல் எடுத்து வரப்பட்டது.அதன்படி இன்று காலை 9மணிக்கு ஆரம்பமாகிய சபை நடவடிக்கையின் போது அவைத்தலைவர்
நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்பு; பாரிய புதைகுழியாக உருவெடுப்பு! - மன்னார் ஆயர் நேரில் சென்று பார்வை; தோண்டும் பணிகள் மீள இடைநிறுத்தம் 
மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த இடத்துக்கு நேற்று நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது

கடந்த இரண்டு வாரங்களாக கடும்பனியால் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் பனியால் உறைந்துவிட்டதாக அதிர்ச்சி புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும், -20C பனி பொழிவதால் நயாகாரா நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் முழுவதும் உறைந்து எல்லாம் ஐஸ்கட்டியாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகள் வருகை சுத்தமாக நின்றுவிட்டது.

இந்த பயங்கர பனியால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 240 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 1911ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு கடுமையான பனிப்புயல் தோன்றி நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது. அத்ன் பின்னர் சுமார் 100 வருடங்கள் கழித்து தற்போது தான் இவ்வளவு மோசமான பனி பொழிகிறது.

 


 
Niagara Falls FROZE in polar vortex
 

''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?'' டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்

''அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் சில கொள்கைகளும் கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். புதிய தமிழகத்துக்கும் அப்படித்தான். தென் தமிழகத்தில் பிரதானமாக உள்ள பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், த
ஆவா’ குழுவில் பெண் தலைவர்-அதிர்ச்சியில் மக்கள் 
தீவிரமாக தேடும் யாழ் மாவட்டத்தை கலங்க வைத்த ஆவ குழுவின் பெண் தலைவியைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்கள் மாலைதீவு அனுப்படுகின்றனர்!- பொலிஸார்
இலங்கையை சேர்ந்த யுவதிகளை பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டி ஆன்டி மற்றும் மடபாத்த சத்துராணி ஆகிய பெண்கள் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதன் முக்கியமான நபராக சுகூர் என்ற வெளிநாட்டு நபர் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அமெரிக்க விசேட தூதுவரை சந்­தித்­த­ ஊடகவியலாளர்­க­ளுக்கு படைப் புல­னாய்­வா­ளர்கள்மிரட்டல் 
வடக்­கிற்கு நேற்று விஜயம் செய்த போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப்பி­னு­டைய சந்­திப்­புக்­களை அவ­தா­னித்த புல­னாய்­வா­ளர்கள் அச்­சந்­திப்­புக்­களில் செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களின் புகைப்­படக் கரு­வி­களைத் தரு­மாறும்
கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால்  பாரிய ஆர்ப்பாட்டம்
போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ஜே ராப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக துண்டு துண்டாவெட்டப்பட்டநிலையில் கொள்கலனில் வந்த  ஒன்பது வாகனங்களை நேற்று சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் கொழும்பு பாலத்துறையிலமைந் துள்ள கொள்கலன் இறங்கு துறையில் 40 அடி நீளமான கொள் கலன் சந்தேக நபர் முன்னிலையில் திறக்கப்பட்ட போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
என் தலைவர் பிரபாகரன் போன்ற புரட்சித் தமிழர்கள் இருக்கும்போது என்னை அப்படி அழைக்காதீங்க!- சத்யராஜ்-விகடன் 
என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும் போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இவ்வாறு  நடிகர் சத்யராஜ் விகடன் மேடை நிகழ்வில் வாசகர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் இலங்கை வருகிறார்! அதற்கான ஏற்பாடுகளில் இந்திய தூதரகம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பிரதமரின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழர்களுக்கு பெருமை. வெண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண். 
இவர் ஒரு பள்ளி மாணவி. முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து

8 ஜன., 2014

ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைப்பு

தமக்கு வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு எனத் தெரியாது சபரிமலை யாத்திரைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 55 யாதிரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
பரபரப்பான சூழ்நிலையில் கலைஞர் - அழகிரி சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை திமுக தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார்.மு.க.அழகிரிக்கு வரும் 30ம் தேதி பிறந்த நாள்.   இதையொட்டி மதுரை முழுவதும் அவரது
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....
இசைப்பிரியாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது! இளையராஜா இசையமைக்கிறார்
இலங்கை இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.
பிரித்தானிய ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பொருட்களும் கொள்ளை
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரின் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. காலியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில்
சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் ஜோன் அமரதுங்க. சமல் பிரதமராகிறார்
இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையில் சபாநாயகராக இருக்கும் ஜனாதிபதியின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச பிரதமராக
சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன் அமரதுங்க! சமல் ராஜபக்ச பிரதமராகிறார்
அரசுடன் இணைந்து கொள்ள சபாநாயகர் அல்லது பிரதி அமைச்சர் பதவியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரு ஜயசூரியவிற்கு மதம் பிடித்து இரவில் பெண்களின் வீடுகளுக்குள் நுழைகின்றார்!- ரோஹித்த அபேகுணவர்தன
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தேடிப்பிடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய இரவு நேரங்களில் பெண்களின் வீடுகளுக்கு ஓடித் திரிவதாக பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுகிறது!- கீதா குமாரசிங்க
ஏதேனும் ஒரு காரியத்தை செய்து கொள்வதற்காக பெண்கள் பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க நேர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெந்தர - எல்பிட்டிய அமைப்பாளரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை இரத்துச் செய்ய தீர்மானம்
தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியினை கிராம சேவர்கள் இரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கோறளைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி சமூகமேம்பாடு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
பிரதமர் - சிங்கள ராவய அமைப்பினர் சந்திப்பு - பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்: கொழும்பில் பதற்ற நிலை
சிங்கள ராவய அமைப்பு, பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.சமகால விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் சிங்கள ராவய அமைப்பு பிரதமரை சந்திக்க உள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருப்பதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.மைனஸ் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வீசுவதால், பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது.
அதனை வார பத்திரிக்கை ஒன்று படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை.
தேவயானியின் தந்தை மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம்
மும்பையில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தேவயானியின் தந்தை தலைமையில் போராட்டம் நடந்தது.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, கடந்த மாதம் 12–ந்தேதி
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன்
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன் நடந்தது. கமல் மகள் ஸ்ருதிஹாசன். தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார். விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக
மதுரையில் கேங் ரேப் என்று பொய் புகார்: மது போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் அகற்று நிலையம் அருகில் மறைவான இடத்தில் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். அவரது காதலன் என்று கூறப்படும் பிரகாஷ் அழைத்ததன் பேரில் மேலும்
அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதான 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  ரத்து செய்தார்.
பிப்ரவரி 8-ல் சென்னை வருகிறார் நரேந்திர மோடி
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக

7 ஜன., 2014

போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களே எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்றனர்!- விக்ரமபாகு
மன்னார், திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்டு வருகின்ற மனிதப் புதைகுழி விவகாரம்  குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

மன்னார், திருக்கேதீஸ்வரம்  பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும்  மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீது கொடுந்தாக்குதல் : நெடுமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 20.12. 2013 அன்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறையினர் ஈழ ஆதரவுத் தமிழின
மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர், மு.க. அழகிரி 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி :-

தி.மு.க. வும், தே.மு.தி.க. வும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்துள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, அந்தக் கூட்டணி உருவாகி அதன் காரணமாக
சுவிசில் வாகன ஓட்டுனர்களுக்கென  புதிய சட்ட விதிகள் இரண்டு இந்த வருடம் முதல் அமுலாகியுள்ளன 
இதன்படி பின்வரும்சட்டவிதிகள் புதிதாக சேர்ந்துள்ளன  முதலாவது -வாகனங்களில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் சாதாரண  ஒளிவிளக்குகள் கட்டாயம் எரிய விட  வேண்டும் .மற்றையது - வாகனம் ஓடும்போது மது அருந்தி இருக்க கூடாது.அதாவது இதுவரை 0.8 வேதம் வரை  மதுவின் தாக்கம் உடம்பில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி இனி முற்றிலுமாக  அந்த வீதம்  இன்றி இருக்க வேண்டும் என  விதி தொடக்கி இருக்கிறது .இந்த இரண்டு சட்டங்களும் மிகவுமபத்தானவை ஆகும் .சாரதிகள்  கவனித்து நடக்க வேண்டும் 1.எப்போதும் வாகனங்களில் ஒளிவிளக்குகள் எரிய வேண்டும் 2.ஓட்டிகள் முற்றிலும் மது அருந்தாமல் இருக்க வேண்டும் 

ad

ad