புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

நியூசி.யுடன் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி

நியூசிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது.  3வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

ஊழல்வாதி பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு கட்காரி 3 நாள் கெடு

ஊழல்வாதிகள் பட்டியலில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் பெயரை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்காரி, கெஜ்ரிவால் மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்..
தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!


பஞ்சாப்பைச் சேர்ந்த தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் 31.01.2014 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேவேந்திர சிங் புல்லரின் மருத்துவ அறிக்கையை ஒரு வாரத்தில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மரண தண்டனையை குறைக்கக் கோரும் மனு பற்றி டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்தக் கட்ட விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
கோழிக்கறி வியாபாரியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (வயது 45) அதே பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்வபாத்யா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும்
கலைஞருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை அவரது சிஐடி காலணி இல்லத்தில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்! பேரவைத் தலைவர் நடவடிக்கை
 
அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் பகுகுணா!
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை விஜய் பகுகுணா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விருப்பதை ஏற்று தான் ராஜினாமா செய்தாக அவர் தெரிவித்துள்ளார். 
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை!
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபிக்கு சொந்தமான மதுரை அவனியாபுரம் பண்ணை தோட்டத்தில் மதுரை போலீசார்
 கடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை. இரா. சம்பந்தன்
வடக்கு மாகாணத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தாலும் இதுவரை அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.
அரசு போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன் கேள்வி
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகப் புற்று நோய் தினம்

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

உலக புற்று நோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவ்வருடத் திற்கான தொனிப்பொருள், மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்’ என்பதாகும். இதற்கமைவாக இலங்கை மக்களுக்கு புற்றுநோய்

இலங்கையில் வருடந்தோறும் 25,000 பேர் புற்றுநோய்சிகிச்சைகளுக்காக புதிதாக பதிவு

சுகாதார கல்விப் பணியகம் அதிர்ச்சி தகவல்
பெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை புற்றுநோய்கள் பாரிய அச்சுறுத்தல்
சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் குணப்படுத்தலாம்

பங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ; இலங்கையணி இன்னிங்ஸ், 248 ஓட்டங்களால் வெற்றி

பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஓடொங்கோ ஜேஜே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் போது உகண்டா பாதுகாப்பு அமைச்சர் விசேட ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

ஏழாவது ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் விளையாடிய, விளையாடி வரும் 46 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக் மற்றும் யுவராஜ் உள்பட 11 இந்திய வீரர்கள் ரூ.2 கோடிக்கான அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழா
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த பனிப்புயல்

தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது, இதன் காரணமாக இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
 இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.கிளிநொச்சி வரை தற்பொழுது சேவையில் ஈடுபடும் யாழ்தேவி அடுத்த மாதம்

சூரிச்சில் கிளிநொச்சிப் பெண் கள்ளத் தொடர்பு - அந்தரங்க உறுப்புக்குள் அசிற் ஊற்றிய கணவன் கைது

சுவிஸ்'லாந்தின் சூரிச் பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார். அவரது கணவர் வேலைக்குச் செல்லும் சமயத்தில் குறித்த பெண்ணிண் ஆண் நண்பர் வந்து கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.

ad

ad