புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2014

சங்கர் அகாடமியின் சாதனை : 15 பேர் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி
வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்வதற்காக ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)

சென்னை பம்மல் : 4 வயது மகள் அடித்துக்கொலை - தந்தை கைது
சென்னை பம்மல் அருகே 4 வயது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டார்.பல்லாவரம் சங்கர்நகர் அருகே நாகல்கேணி மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் :சென்னை கல்லூரி மாணவர்கள் 31 பேர் இடைநீக்கம்
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய புகாரில், சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் 31 பேரை, இன்று முதல் 10 நாட்கள் மட்டும் இடைநீக்கம் செய்து, கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஜே.வி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு - ஜே.வி.பிக்கு கொள்கை ரீதியான மாற்றம் தேவை
ஜே.வி.பியின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.களுத்துறை - மத்துகம பிரதேச சபையில் அங்கம் வகிக்கும்
இராணுவத்தினரை சம்பந்தன் வெளியேற சொல்கிறார்! மீள்குடியேற்ற அமைச்சர் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றார். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு
அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.மகளிர் பிரச்சினைகள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட தூதுவர் கெதரின் ரொசெல் என்ற இராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
திரையிடப்பட்ட பஸ்களுக்குள் காதல் ஜோடிகள்! சாரதி, நடத்துனர் கைது
ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல் ஜோடிகளையும் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய இலங்கை பயணி கைது
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி அச்சுறுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இந்த இலங்கையர்,

3 பிப்., 2014

வடமாகாணசபைத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா அதிபரே பொறுப்பு – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே காரணம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
சிறிலங்கா விவகாரம்:ஜெனிவாவில் இந்தியத் தூதுவருடன் பேசுகிறார் நிஷா

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில், இந்தியத் தூதுவருடன் கலந்துரையாடவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். 

பரீட்சை சான்றிதழ்களை ஒரே நாளில் பெற விசேட பொறிமுறை

பரீட்சை திணைக்களத்தில் விசேட பிரிவு; 5 இல் திறப்பு
அரசாங்கப் பரீட்சைகளின் கடந்தகால பெறுபேறுகளை ஒரு நாளுக்குள் பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான விசேட பொறிமுறையினை பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார். இதற்கான விசேட பிரிவு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் 05 ஆம் திகதி புதன்கிழமை பரீட்சைகள்

அதிரடிப்படையினருடன் ஆயுதக்குழு மோதல் தப்பியோடியோர் மீது பதில் தாக்குதல்.இருவர் பலி

ஆயுதங்களும் மீட்பு திக்வெல்லையில் சம்பவம்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின ருக்கும் பாதாள உலக ஆயுதக் குழுவொன்றுக்குமிடையில் நடந்த மோதலில் படையினரின் பதில் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் கூட்டமைப்பு பதவிப்பிரமாணத்திற்கு மாறாக செயற்படுகிறது

மார்ச் மாதத்தில் நடை பெறும் ஜெனீவா மனித உரிமைகள் உச்சிமாநாட்டை குறிபார்த்து இலங்கை யில் நடைபெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தாங்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு மாறான முறையில் செயற்பட்டிருப்பதாக வடமாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர

இலங்கையின் உள் விவகாரங்களில் எவரும் தலையிட வேண்டியதில்லை

நிசாவின் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சு ஆட்சேபம்
ஆசியாவின் தொன்மை மிக்க ஜன நாயகம் மற்றும் இறை மையுடைய நாடு என்ற வகையில் இலங்கையின் உள்ளூர் விவகாரங்களில்

எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன்

ஆக்ரோஷத்திலிருந்து என்னை விடுவித்தவர் ஜனாதிபதி 
எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன் கொண்டு செல்ல வேண் டும்.
இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
ஆக்ரோஷத்தில் இருந்து என்னை விடு வித்து, சரியான பாதையில் கொண்டு சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, மத்திய கொழும்பு ஸ்ரீ. ல. சு. கட்சி இணை அமைப்பாளர் ஹிருனிகா பிரேமச்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட ஸ்ரீல. சு. கட்சி


ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவத் தளபதி ஜெனரல் கெளராவ் ஷம்ஷெர் ஜுங் பஹதூர் ரனாவுக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் அவர் கையொப் பமிடுகிறார். அருகில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் காணப்படுகிறார்.

அதிமுக, கம்யூ,வுடன் நிதிஷ் கூட்டணி?

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸட் கட்சிகள் அதிமுகவடன் கூட்டணி அமைத்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

    தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நேடியாக வெளியாகும் "கோச்சடையான்"

இந்தியாவில் முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.

2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே நடக்க இருந்த 2 சிறுமிகள் திருமணத்தை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

    இருபது ஓவர் தொடரும் ஆஸ்திரேலியா வசம்

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி 20 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

ad

ad