புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்

ரஷ்யாவின் சோஷி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை மீது சர்வதேச விசாரணை! உறுப்பு நாடுகளில் தங்கியுள்ளது: ஐ.நா சபை
இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை குறித்து சர்வதேச விசாரணை என்பது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உண்மையான போட்டி தி.மு.க., அ.தி.மு.க.வுக்குத்தான்: திமுக அணிக்கு தேமுதிக வரவேண்டும்: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இட ஒதுக்கீட்டை எதிர்க்க யார் துணிந்தாலும்

கலைஞர் டிவி விவகாரம். ஆம் ஆத்மி வெளியிட்ட ஆடியோ ஆதாரம். அதிர்ச்சி தகவல்.

2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற கலைஞர் டிவி ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண்,

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். ஆம் ஆத்மியின் அதிரடி

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததன் முழுவிவரங்களும் தெரியும் என ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் பிரசாந்த் பூஷன் இன்று டெல்லியில் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் தலைமை பூசாரியாக பணிபுரியும் ஒருவர் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புனித தலங்களுள் ஒன்றான பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரியாக பணிபுரியும் கேசவன் நம்பூதிரி என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மெஹ்ராலி என்ற ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்கள். இருவரும் மது அருந்தி போதையில்
சக மாணவர்களுடன் சேர்ந்து முஸ்லீம் மாணவியும் நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் நீதிமன்றம் அதிரடி
ஜெர்மன் நாட்டை சேர்ந்த, முஸ்லிம் மாணவி, சக மாணவர்களுடன் சேர்ந்து, நீச்சல் வகுப்பில் பங்கேற்க வேண்டும்' என, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிமொழிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறது காங்கிரஸ். அந்த கட்சிக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. அதே நேரத்தில் திமுகவில் காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவின் தலையீடு – உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா

சிறிலங்கா உள்ளிட்ட அண்டை நாடுகளின் உட்கட்டமைப்புத் திட்டங்களில், சீனாவின் தலையீடு அதிகரித்து வருவது குறித்து இந்தியா உன்னிப்பதாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 
மற்றொரு உயர் அதிகாரியையும் சிறிலங்காவுக்கு அனுப்புகிறது அமெரிக்கா

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், மூன்றாவது தீர்மானம் கொண்டு வருவதற்குத் தயாராகி வரும் அமெரிக்கா, மற்றொரு மூத்த அதிகாரியை விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது. 
சிறிலங்காவுக்கு எதிராக பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைப்பு

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு, பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
ஜெனிவாவில் மனிதஉரிமைகள் பேரவை உறுப்புநாடுகளின் தூதுவர்களுடன் நிஷா பிஸ்வால் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால், ஜெனிவாவில் உள்ள தூதுவர்களை சந்தித்து, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்துக் கலந்துரையாடியுள்ளார். 




தாயைக்கொன்று உடலுறுப்புகளை வெட்டி உண்ட மூன்று சகோதரர்கள்: பிலிப்பைன்ஸில் கொடூரம்

மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்து ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிஷா பிஷ்வால் 
சிறிலங்காவின்  மனித உரிமை நிலைமைகள் குறித்து மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்தியத்திற்காக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை
நீதிமன்றில் சீ.ஐ.டியினரை கடிந்து கொண்டார் ரெமீடியஸ் 
news
வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமல் தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டு வருகின்ற குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் திட்டமிட்ட வகையில் பொய்யான தகவல்களையே சமர்ப்பித்து வருகின்றனர் என சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் மன்றில் தெரிவித்தார்.

மசிடோனியாவில் சிறுவர் பாலியல் குற்றவாளிக்கு ஆண்மை நீக்க தண்டனை

தொடர்ச்சியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரசாயன ஆண்மை நீக்க தண்டனை வழங்கும் சட்டமூலம் மசிடோனிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் மிக

சிறையிலிருந்து தப்பி 37 ஆண்டுகளின் பின்னர் சிக்கிய பெண்

அமெரிக்க சிறையிலிருந்து தப்பிய பெண் ஒருவர் 37 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
மிசிக்கன் சிறையிலிருந்து 1977 ஆம் ஆண்டு தப்பிய ஜுடி லைன் ஹைமன் என்ற பெண் சன்டியாகோ பொலிஸா ரினால் கடந்த திங்கட்கிழமை பிடி பட்டார். குறித்த பெண் சிறைக்கைதியாக இருந்த போது பிடிபட்ட புகைப்பட அடையாளத்தை வைத்தே

தெண்டுல்கருக்கு விஸ்டன் கௌரவம்

கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் பத்திரிகையின் 151-வது பதிப்பு ஏப்ரல் 10-ம்தேதி லண்டனில் வெளியிடப்படுகிறது. இந்த இதழின் முன்பக்கத்தில் 'பாரத ரத்னா' சச்சின் தெண்டுல்கரின் படம் இடம் பெறுகிறது. விஸ்டன் புத்தகத்தின் முன் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் புகைப்படம் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

சவாலான இலக்கை சுதாகரித்தது பங்களாதேஷ்

'ம்ஸ{ர் ரஹ்மான் மற்றும் இம்ருல் கைஸின் கன்னி சதத்தின் மூலம் இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி ஸ்திரமான நிலையை எட்டியது.
சிட்டகொங்கில் நடைபெற்றுவரும் போட்டியில் இலங்கை அணி குமார்

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் 14 முதல் 17 வரை சாட்சியங்கள் பதிவு

நாடு முழுவதிலுமிருந்து 13,700 முறைப்பாடுகள் பதிவு
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளது.

155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி

மார்ச் 29இல் தேர்தல்
24 கட்சிகள் களத்தில்;
* நடிகைகள், புதுமுகங்கள் பலர் தேர்தலில் குதிப்பு
* அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனு களுத்துறை மாவட்டத்தில் நிராகரிப்பு
* 5 சுயேச்சைகளும் நிராகரிக்கப்பட்டன
லோரன்ஸ் செல்வநாயகம், எம். எஸ். பாஹிம், ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட, மாத்தறை தினகரன் நிருபர்கள்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: வெள்ளி பொருட்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெள்ளி பொருட்கள் குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்பு
திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து தேமுதிகவிடம் மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன்: திருமாவளவன்
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக ஒரு வகுப்புவாதக் கட்சி. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்லாமல் தாழ்த்தபட்ட மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. இட ஒதுக்கீடு என்ற கொள்கைக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள். மேலும் சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டார்கள்
இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் காங்கிரஸ் பாஜக

ம.தி.மு.க. 10 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி! வைகோ பேச்சு!
மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க. 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது,
தமிழர்களின் உரிமை, வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாடு என எல்லாவற்றையும்
மக்களவைத் தேர்தல்: விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்: விஜயகாந்த் அறிவிப்பு: தனித்துப் போட்டியா?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலுக்காக தங்கள் தொகுதியில் போடடியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் பிப்ரவரி 9ஆம் தேதி

பேரறிவாளன் உட்பட மூவரை விடுவிக்க வேண்டாமென்று மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறதே? கலைஞர் பதில்!
தி.மு.க. தலைவர் கலைஞர் 06.02.2014 வியாழக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களில் முடிவு எடுக்க கால தாமதம் கூடாது என்று உச்சநீதிமன்றம்
லாரி கவிழ்ந்து விபத்து! 7 குழந்தைகள் பலி! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோரில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயம்
யாழ். பல்கலைக்கழகம் உலகத் தரம் வாய்ந்தது: உயர் கல்வியமைச்சர்
சகல பீடங்களையும், கற்கை நெறிகளையும் கொண்டமைந்ததாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் அமையப்பெற்றுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
“இந்த தமிழ் மண்ணுலதான் என்ட உயிர் போகணும்”!- முதல் முறையாக மனம் திறக்கும் முருகனின் தாயார்
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் அந்த முருகனின் தாயார் சோமணி, இருபத்து மூன்று வருடங்களாக மகனைப் பற்றி வாய் திறக்காதவர் தற்போது மனம் விட்டு பேசியிருக்கிறார்.
ராஜபக்ச போர்க்குற்றவாளி! புலம்பெயர் ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். 

6 பிப்., 2014



இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுமையான நிலையில் உள்ளது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் பறிகொடுத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட
திட்டமிட்டு ஆதாரங்கள் அழிப்பு! அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் நிராகரிப்பு
இலங்கையில் யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது ஒரு தடவையில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு இருந்த ஆதாரங்களை இலங்கை ஆயுத படையினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறும் அண்மையில் வெளிவந்த அவுஸ்திரேலிய அறிக்கையை
யாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை! மூன்று மாத காலக்கெடு விதித்தார் அமைச்சர் பொ.ஜங்கரநேசன
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கான காரணிகள், அவற்றிற்கான மாற்று வழிகள் குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் வடமாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
கலைஞர், ஸ்டாலினை சந்தித்தார்சந்திரபாபுநாயுடு
திமுக தலைவர் கலைஞரை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.

தெலங்கானா மாநிலம் மசோதவிற்கு ஆதரவளிக்க
சந்திரபாபுநாயுடு - ஜெயலலிதா சந்திப்புஆந்திரா பிரிவினை பிரச்சினையில் மத்திய அரசின் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.இது தொடர்பாக ஆதரவு திரட்ட சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்தார்.  சென்னை போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டிக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார்.

மோதரை கடலில் நீராடிய இரு இளைஞர்கள் பலி
 

வேட்புமனு ஏற்பு இன்றுடன் முடிவு; மேல் மாகாணத்தில் ஐ.ம.சு.முதாக்கல்

கம்பஹாவில் மட்டுமே ஐ.தே.க. நேற்று வேட்பு மனு

செட்டியார் தெரு கொள்ளைச் சம்பவம் முக்கிய சந்தேகநபர் கைது; துப்பாக்கி மீட்பு

ராகுல் காந்தியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு-தி மு க காங்கிரஸ் காலில் மீண்டும் விழப் போகிறதா ?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தயவு இல்லாமல் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்த திமுகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவிடும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவிடும் என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில்
டாஸ்மாக் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம்! சசிபெருமாள் உள்பட 4 பேர் கைது!
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் காந்தியவாதி சசிபெருமாள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
வெளிநாட்டு நிதி பெற்றது பற்றி விளக்கம் அளிக்குமாறு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக முழு விபரங்களை அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக
ஆந்திர முதல் அமைச்சர் டெல்லியில் தர்ணா போராட்டம்
ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில முதல் அமைச்சர் கிரண்குமார்ரெட்டி டெல்லியில் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி பேரணி 
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்குத் தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள்
இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும்: ஜெயலலிதா
கடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையினரால் 87 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கடும் ராஜதந்திர ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்-செல்வம் அடைக்கலநாதன்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பார்வை செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் இலங்கையின் உயர்ஸ்தானியர் காரியாலயத்துக்கு முன்னால் போராட்டம் 
நேற்றைய தினம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் நாடான ஸ்ரீலங்கா தனது 66வது சுதந்திர தினத்தை கொண்டாடியது ஆனால் தமிழர்களோ இதனை ஒரு கறுப்பு தினமாக அனுஷ்டித்தார்கள்.
தென் - மேல்  மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்
தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் 9 அரசியல் கட்சிகளும், 13 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, மக்கள் நல முன்னணி
கிளிநொச்சியில் ஒரு விபச்சார கிராமம்
ஒரு காலத்தில் போரியல் வரலாற்றில் நீண்ட சாதனைகளை நிகழ்த்திய பெண் போராளிகள் வாழ்ந்த பிரதேசமான சாந்தபுரத்தில் இன்று அதிகளவான விபச்சார நிலையங்கள் இரகசியமாக இயங்கி வருகின்றன.

5 பிப்., 2014

 மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அரசாங்கம்; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு 
அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.

    டெஸ்ட் அரங்கில் சங்ககரா 34-வது சதம் இலங்கை அபார தொடக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் சங்ககரா சதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 34-வது சதம் இதுவாகும். இதன் மூலம், சர்வதேச டெஸ்டில் 34 சதம் அடித்த சுனில் கவாஸ்கர்

பிரணாப்பை பிரதமர் ஆக்க மறுத்த சோனியா: மோடி

பாஜக பிரதமர்  வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. அதில் மோடி பேசியதாவது:
மருத்துவர் சிவமோகன்-இராணுவம் வாய்த்தர்க்கம்!- முல்லை. வற்றாப்பளையில் சம்பவம்
வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை நடத்த தயாராகி வருகின்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற இராணுவப்புலனாய்வாளர்களால்
போரின் பின்னர் புதைத்த மனித எச்சங்களை அழித்த இராணுவம்-புதிய வீடியோ.
போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடாவில் பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்களை  அழைக்கும் விசா திட்டத்துக்கான எண்ணிக்கை எல்லை இப்போது நிறைந்து விட்டதால் அந்த முறை தற்போதைக்கு மூடப் பட்டுள்ளது 
Chris Alexander
அண்மையில் சில வாரங்களுக்;கு முன்பாக பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ரோரைக் கனடாவிற்குள் குடியேற அழைக்கம் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டமானது 2014ம் ஆண்டிற்கான நிர்ணயத் தொகையை எட்டிவிட்டதெனவு
மதுபோதையில்  மணமகன்: அட்சதை போட வந்தவர் மணமகனாகி மணப்பெண்ணை  கைப்பற்றினார் 

சேலம் மாவட்டத்தில் குடிகார மாப்பிள்ளையை தூக்கி வீசிய மணமகளுக்கு திருமணத்திற்கு வந்திருந்த நபர் ஒருவரோடு திருமணம் நடந்துள்ளது.
ஜெயலிதாவின் சாபத்துக்கு உள்ளான  விஜயகாந்த் தனிமரமாக நிற்க போகிறாரா ?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தேமுதிக உருவெடுத்தது. அ தி மு க வை எடுத்த எடுப்பிலேயே சட்டப் பேரவையில் எதிர்க்க புறபட்டு இப்போது  ,அ தி மு க இன் சாபத்துக்கு உள்ளாகி விட்டது போல தனிமரமாக நிற்ற்கும் நிலை .
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் 2500 கோடி ரூபா
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் என 2500 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.2013ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுக்கான நிதியாண்டுகளுக்கான வருடாந்த நட்டம் 25000 கோடி ரூபாவாக இருக்கும் என சிவில் விமான சேவை அமைச்சர்
 இலங்கை முதல் இனிங்ஸில் 587 ஓட்டங்கள் : சங்ககார முச்சதம் 
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 587 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்; சாட்சியப்பதிவுகள் குறித்தும் கலந்துரையாடல் 
யாழ். மாவட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
 இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை; அவுஸ்திரேலியா அறிவிப்பு 
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அழகிரியை சந்திக்கிறார் ஸ்டாலின்
திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 9ம் தேதி மதுரை செல்கிறார்.  அன்றைய தினம் மதுரையில் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்கிறார் ஸ்டாலின்.
 துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டி?
தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பணம் கட்டி விருப்ப மனு பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம் 2 தொகுதிகளையும் தக்கவைக்க தி.மு.க. மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரி விலக்கு கேட்டுவழக்கு:  ஐகோர்ட் நோட்டீஸ்

‘ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
’’நடிகர் உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தயாரித்து உள்ளோம். இந்த
தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், அதிமுக புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. 
இதுதொடர்பாக அதிமுக தலைமை

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கனிமொழி-சரத்குமார்  திடீர் சந்திப்பு
மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழியை, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீர் வாபஸ்
கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றுவந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீரென நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அடுத்தகட்டப் போராட்டம் குறித்து இம் மாதம் 9-ஆம் தேதி முடிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள
பஞ்சாப் பொற்கோயில் மீதான தாக்குதல் - பிரித்தானியாவுக்கு தொடர்பு

1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.
இலங்கையின் மனித உரிமைமீறல்: சர்வதேச மன்னிப்பு சபைக்குச் சென்ற கமலேஸ் சர்மா
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதல்தடவையாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாலில் செட்டியை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது
படையினரின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சியில் அரசாங்கம்! தடயங்கள் அழிக்கப்படுவதாக அறிக்கை
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற  போர்க்குற்றங்களுக்கு  இலங்கை அரச படையினரே பொறுப்பு என்றும், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்த தீர்மானம் தோல்வி
அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்தத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள அமெரிக்க பிராந்திய இராணுவ முகாமின் ஒரு குழுவினை வன்னியில் நிலைநிறுத்த வட மாகாணசபை நிர்வாகம் முயற்சித்துள்ளது.
பலூனின் சுதந்திரம்-ஆக்கம்: அ.பகீரதன்

காற்றடைக்கப்பட்ட பலூன் 
ஊசிக்காக காத்துக் கிடக்கிறது….

ஊசிகள் சில இன்னும்
தூண்டில் ஊசிகளாக 

புலம்பெயர் தமிழ் இன இளைய சமுதாயமே இதோ உங்களுக்கு ஓர் நற்செய்தி எண்கள் இணையத்தில் ஒரு செய்தியை நீங்கள் அழுத்திய பின்னர் வலப்பக்கத்தில் உள்ள மொழிபெயர்ப்பு அலகின் மூலம் உங்களுக்கு பரிச்சயமான வேறு மொழிகளில் இந்த செய்தியை மொழிபெயர்த்து படிக்க கூடிய வசதியை புதிதாக செய்துள்ளோம் உதாரணத்துக்கு அரபு ஆங்கிலம் பிரஞ்சு டொச் டச் ஹிந்தி ஆகிய மொழிகளின் ஆக்கம் இங்கே உள்ளன 
தந்தி தொலைக்காட்சி நடத்திய அடுத்த  இந்திய தேர்தல் பற்றிய  கருத்துக் கணிப்பு முடிவுகள் தமிழ்நாட்டில் பாரிய  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தமிழ்நாட்டில் அ தி மு க வுக்கும் இந்திய அளவில் நரேந்திர மோடிக்கும் பாரிய செல்வாக்கு அலை வீசுவதாக தகவல்

1. அடுத்த பிரதமர் யார் ?
       நரேந்திர மோடி  77 வீதம்
       ராகுல் காந்தி 17 வீதம்
ஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும்; வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை 
news

இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை இந்­தியா ஆத­ரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவ­து­மில்லை. மாறாக நீர்த்துப் போகச் செய்யும் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் 
news

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இது குறித்து சட்டப்பேரவையில் நேற்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தி

சங்கக்கார, மஹேலவின் இணைப்பாட்டத்தால் இலங்கை அணி வலுவான நிலையில்

குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் இணைப்பாட்டத்தின் மூலம் பங்களாதே'{டனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது.
சிட்டகொங்கில் நேற்று ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியல் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்த டெஸ்டில் இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயத்திற்கு உள்ளாகியிருக்கும் ரங்கன ஹேரத் மற்றும்
முஸ்லிம்களின் கொலை: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை

புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்

வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்தமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக் குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை
லா லிகா கால்பந்து ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை
அய்ரோப்பாவின் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டியின் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது அட்லெடிகோ வீரருடன் ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ மோதிக் கொண்டார். இதனால், ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப் பட்டது. இந்த ஆட்டம் 1-1
சந் தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதி சுற்றில் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஆந்தி ராவை வீழ்த்தி முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சுதந்திரத்தை அனுபவிக்கும் வடக்கு மக்களை பலிக்கடாவாக்க சர்வதேச குழுக்கள் முயற்சி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
* வடக்கு மக்களின் மனித உரிமைகள் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட போது அதனை மீளப்பெற்றுக் கொடுக்க எவரும் முன்வரவில்லை
2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை: டிகேஎஸ் இளங்கோவன்
2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 
மேலும், வெளியிடப்பட்ட ஆதாரங்கள் 2ஜி வழக்கிற்கு

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு யாரும் தயாராக இல்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
சென்னை ஐ.சி.எப்.பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.சி.எப். அம்பேத்கர்நகரைச் சேர்ந்த சேரன் மகன் விக்னேஷ்குமார் (23). இவர் மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விக்னேஷ்குமாருக்கு மது அதிகமாக அருந்தும்
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பதில்:
இலங்கையின் 66வது சுதந்திர தினம் இன்று! பிரச்சினைகளுக்கு தீர்வு வராதா என்ற ஏக்கத்துடன் தமிழ் மக்கள்
இலங்கையின் 66 வது சுதந்திர தின விழா இன்று செவ்வாய்க்கிழமை கேகாலை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த 66வது சுதந்திர தின விழா "உலகம் முழுவதும் தாய் நாட்டை வெற்றி பெறுவதற்கு ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. 
இலங்கைக்கு எதிராக இந்தியா ஜெனீவாவில் தனிப்பிரேரணை கொண்டு வரவேண்டும்!- திமுக
இலங்கைக்கு எதிராக இந்தியா தனிப்பிரேரணை ஒன்றை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் கோரியுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற குழு
ராஜீவ் கொலை வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர்.
காங்கிரஸை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்: மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
இலங்கைக்கு சாதகமாகச் செயற்படும் காங்கிரஸ் கட்சியை  ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,
யாழ் மற்றும் வெலிக்கடை சிறையிலிருந்து 1242 கைதிகள் விடுதலை
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், யாழ். சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாததால் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணத்தை கட்ட முடியாததனால் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண் கைதி உட்பட 9 கைதிகளை
ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெற நடவடிக்கை
எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

4 பிப்., 2014

சங்கர் அகாடமியின் சாதனை : 15 பேர் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி
வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்வதற்காக ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)

சென்னை பம்மல் : 4 வயது மகள் அடித்துக்கொலை - தந்தை கைது
சென்னை பம்மல் அருகே 4 வயது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டார்.பல்லாவரம் சங்கர்நகர் அருகே நாகல்கேணி மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் :சென்னை கல்லூரி மாணவர்கள் 31 பேர் இடைநீக்கம்
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய புகாரில், சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் 31 பேரை, இன்று முதல் 10 நாட்கள் மட்டும் இடைநீக்கம் செய்து, கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஜே.வி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு - ஜே.வி.பிக்கு கொள்கை ரீதியான மாற்றம் தேவை
ஜே.வி.பியின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.களுத்துறை - மத்துகம பிரதேச சபையில் அங்கம் வகிக்கும்
இராணுவத்தினரை சம்பந்தன் வெளியேற சொல்கிறார்! மீள்குடியேற்ற அமைச்சர் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றார். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு
அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.மகளிர் பிரச்சினைகள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட தூதுவர் கெதரின் ரொசெல் என்ற இராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
திரையிடப்பட்ட பஸ்களுக்குள் காதல் ஜோடிகள்! சாரதி, நடத்துனர் கைது
ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல் ஜோடிகளையும் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய இலங்கை பயணி கைது
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி அச்சுறுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இந்த இலங்கையர்,

ad

ad