புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

ரயில்வே சாரதிகள் வேலைநிறுத்தம் முடிவு; சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பும்

வேலைநிறுத்தத்தால் நேற்றும் பயணிகள் பெரும் பாதிப்பு
ரயில்வே லொக்கர்மோட்டிவ் சாரதிகளின் வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் புலிகளால் கடத்தப்பட்டவர்களின் உறவுகளும் சாட்சியமளிப்பு

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு 14-17 வரை சாட்சியங்கள் பதிவு.காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல்

17 பிப்., 2014

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கூட்டமைப்பின் தலைவராக நியமித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்-!- கருணா
தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்தால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தான் ஒதுங்குவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சவால் விடுத்துள்ளார்.
ஹூலுகல்லவின் மனைவியின் நிலை கண்டு கவலையடைந்த ஜனாதிபதி
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்லவின் குடும்பத்தினரின் நிலை கண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலையடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இறுதிநாள் சாட்சியப்பதிவுகள் ஆரம்பம் 
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி
ஜனாதிபதி மஹிந்த பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம் செய்தார்.பாசிக்குடா கடற்கரைக்கு சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜீன்வாஸ் குணவர்தன, லொஹான் ரத்வத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோரும் பாசிக்குடா சென்றிருந்தனர்.
புலிகளுக்கு புனர்வாழ்வளித்திருக்காவிட்டால் 12 ஆயிரம் தோட்டக்களே செலவாகியிருக்கும்!- மகிந்த அமரவீர
யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து வைத்த அழகிரி
திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.  திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மு.க.அழகிரி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.  இரண்டு நாட்களும் அவர் மதுரையி

விஜயகாந்தின் கூட்டணி பேரம் :நெல்லை சமக மாநாட்டில்
சரத்குமார் கடும் தாக்கு - படங்கள்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு நெல்லை பொருட்காட்சி திடலில் நேற்று நடைபெற்றது. மாநில அவை தலைவர் வி.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பகுத்தறிவு சிந்தனையை தூண்டிய கல்லூரி வாசகம் :
 நடிகர் சத்யராஜ் பேச்சு
கோவை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறை சார்பில் சரித்திரா–2014 என்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார்.
துரைமுருகன் 5 நாள் சஸ்பெண்டு ஏன்?
சட்டசபையில் அரசு சிற்றுந்து இயக்குவது தொடர்பாக கடந்த 25–10–2013 அன்று துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரின் அனுமதி இன்றி ஒரு பிரச்சினையை எழுப்ப முயன்றனர்.
துரைமுருகன் இடைநீக்கம்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் இன்று முதல்  5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப் படுகிறார் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.  துரைமுருகனுக்கு எதிராக அமைச்சர் பன்னீர்செல்வம் உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஒலிம்பிக் பட்டியல் G S B T 

1.ஜேர்மனி 7 3 2 12
2.ஹோலந்து 5 5 7 17
3.நோர்வே 5 3 6 16
4.சுவிட்சர்லாந்து 5 1 1 7
5.ரஷ்யா 4 7 5 16
6.கனடா 4 6 4 14
7.ஐக்கிய அமேரிக்கா 4 4 8 16
8.போலந்து 4 0 0 4
9.சீனா 3 2 0 5
10..பைலோ ரஷ்யா 3 0 1 4



கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்தும் அமரர்களான விக்ரம், இராஜன்,கங்கு ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான  30 பந்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட்  ஆட்டம் ஒன்றில்  கே.சி.சி.சி. விளையாட்டுக்கழகம் 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் காமாட்சியம்பாள் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் கே.சி.சி.சி விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.
54பேர் இன்று சாட்சியமளிப்பு 
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 54 பேர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.

எம் வி சன் சீ கப்பலில் வந்து சிறைப்பிடிக்கப்பட்ட தர்மரத்தினம் அருமைத்துரை நிலைமை என்ன – உண்மைக் கதை .

பிரிட்டிஷ் கொலம்பியா மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனித கடத்தல் என்று குற்றச்சாட்டப்பட்ட  எம்.வி. சன் சீ கப்பலில் வந்தோரை கனடிய குடிவரவு அதிகாரிகள்
happy-family-day2
குடும்ப தினம் ஒரு தேசிய சட்ட விடுமுறை தினம் அல்ல. ஆனால் டொரோண்டோ பகுதிகளில் பல தொழில்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக மூடப்படும். திங்கட்கிழமை  பிப்ரவரி 17 ஆம் தேதி மூடப்படும் தகவல்கள் இதோ.
மூடப்பட்டிருப்பவை:
  •     தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள்
  •     சிட்டி ஹால் உட்பட மாநகர கட்டிடங்கள்
  •     பொது நூலகங்கள்
  •     வங்கிகள்

கனடாவிலிருந்து சொந்த ஊரைப் பார்க்க சென்ற 33 வயது இளைஞர் மரணம்

கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.
    வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 52 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 36 பேர், பார்வையாளர்கள் 16 பேர் உள்பட 52 பேர்

    "ஈழத் தமிழர் பிரச்னைக்கு கருணாநிதிதான் தீர்வு காணமுடியும்'கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

     ஈழத்தமிழர் பிரச்னைக்கு கருணாநிதியால் மட்டுமே தீர்வு காணமுடியும். சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்படும்போது அதற்குத் தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள்

ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க.வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம்.  வருவார்கள் இல.கணேசன்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று தனது 69–வது பிறந்த நாளை கொண்டாடினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தார்.

நரேந்திர மோடியும், ராகுலும் அம்பானியின் முகவர்களாக செயல் படுகின்றனர்: அரவிந்த் கேஜிரிவால்

பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கேஜிரிவால் புகார் கூறியுள்ளார்.

சிரேஷ்ட உள்ளக லீக் உதைபந்தாட்டம்; புத்தளம் லீக் வெற்றி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய சிரேஷ்ட உள்ளக லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் புத்தளம் உதைபந்தாட்ட லீக் வெற்றிபெற்றுள்ளது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது நிய+ஸிலாந்து

இந்தியாவுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அணித் தலைவர் பிரின்டன் மெக்கலமின் சதத்தினால் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக் கொண்டது.
வெல்லிங்டனில் நடைபெற்று வரும் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 246 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. இதன்படி ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணியின் கெளரவத்தை அணித் தலைவர் மெக்கலம் காத்தார்.
நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியது.

புலனாய்வு இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்பு

தனிப்பட்ட குடும்ப தகராறினால் தற்கொலை
நேற்று முன்தினம் மாலை 5.50மணியளவில் தனது உத்தியோகபூர்வ பிஸ்டலை கடமை நிமித்தம் பெற்றுக் கொள்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
* அத்துருகிரிய வயல்வெளியில் சடலம்;
* கைத்துப்பாக்கி, மனைவி எழுதிய கடிதமும் கண்டெடுப்பு

வடக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் பிரிந்து நிற்பதனால் எந்தத் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது

வடக்கில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் பிரிந்து நிற்பதனால் எதுவிதமான தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை, அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையர் உத்தரவு

அலுவலகங்கள் அமைக்க தெரிவத்தாட்சி அதிகாரி, oic யின் அனுமதி அவசியம்
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ் திணைக்களத் திற்கு நேற்று உத்தியோ கபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இலங்கையில் புற்றுநோயினால் 14,000 பேர் உயிரிழப்பு

வாய்ப்புற்றுநோய்க்கு 2,500பேர் பலி
* 25,842 பேர் சிகிச்சைக்குப் பதிவு
* வெற்றிலைக் கூறு உண்ணும்போது புற்றுநோய்க்கு துணைபுரியும் 32 வகை இரசாயனம் வாயினுள் விடுவிப்பு
* இலங்கையில் 6 வகை புற்றுநோய் பதிவு

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியின் 40ம் கட்டை பகுதியில் சனியன்று அதிகாலை வாகனமொன்று விபத்துக்குள்ளாகி கிடப்பதைப் படத்தில் காணலாம்.
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை கேட்டு நவநீதம்பிள்ளை-இவர் இலங்கை அரசுக்கு எழுதிய அறிக்கை வெளியான மர்மம்  என்ன ?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
குற்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் இன்று சடலமாக மீட்பு-தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் 
மேல் மாகாணத்தில் குற்றபுலனாய்வு பிரிவு உயர் அதிகாரியான எம்.சமரகோன் என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் மறுப்பது ஏன்?

அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும் இந்திய அமைதிப்படையின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாக இருந்தவருமான கேர்ணல் ஹரிகரன் இலங்கையில் இப்போது எல்லாமே இராணுவ மயமாகி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
கேர்ணல் ஹரிகரன் இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்ற ஒருவர். அவர் இதற்கு முன்னர் இவ்வாறு கூறியதாக கேள்விப்படவில்லை.
மாளிகாவத்தை பதூர் என்ற பாதாள உலகத் தலைவர் கைது
பொலிஸாரின துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல பாதாள உலகத் தலைவர் மாமா அஸ்மியின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான மாளிகாவத்தை பதூர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன்: ஜெனிவா சென்று திரும்பிய அனந்தி-பி.பி.சி 
இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறினார்.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றையும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்களின் நிலைமைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லத்தக்க வகையிலான உள்ளுர் விசாரணைகள் என்பன தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வடக்கில் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வகையில் ஆறு ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் பாரிய வீடுகளை வாடகைக்கு அமர்த்தி இந்தக் குழுக்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜெனீவா தீர்மானம் குறித்து அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவுள்ளது.
நள்ளிரவு அல்லது அதிகாலையில் வெளிச்சங்களை பாய்ச்சியவாறு வீடுகளுக்குள் நுழைந்தவர்கள் எங்கள் பிள்ளைகளை விசாரணைக்கென கூறி அழைத்துச் சென்றார்கள்நெஞ்சை உருக்கும் கண்ணீர் கதைகள்
யாழ்.குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் படையினர் சீருடையுடன் ஆயுதங்கள் தாங்கியவாறு எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து எங்களை தாக்கிவிட்டு பிள்ளைகளை கொண்டு சென்றனர்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே? எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளனர்.
ஆணைக்குழுவின் 2ம் அமர்வு நேற்றய தினம் சாவகச்சேரி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தபோதே மக்கள் மேற்படி சாட்சியத்தினை கண்ணீர்மல்க வழங்கியிருக்கின்றனர்.
சாட்சியத்தில் மக்கள் கூறுகையில்,

முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் தனது கணவன் உட்பட பல போராளிகள் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா! ஜெ. அரசை விளாசி தள்ளிய மு.க.ஸ்டாலின்!

திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளானஞாயிற்றுக்கிழமை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த
கூட்டணி குறித்து விரைவில் முடிவு: விஜயகாந்த்

டெல்லியில் இருந்து திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தமிழக மக்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியதாக கூறினார்.

தேமுதிக எம்எல்ஏக்கள் பிரதமரை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை: இல.கணேசன்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு இருந்து என்ன பலன்: கிருஷ்ணசாமி பேச்சு
திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,

எந்த ஒரு செயலுக்கும் காலம் முக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த மாநாட்டை ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டியிருந்தாலும் சிறப்பு இருந்திருக்காது. ஒரு மாதம் கழித்து கூட்டியிருந்தாலும் முக்கியத்துவம் இருக்காது. இதுதான் சரியான தருணம். ஏனென்றால், இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. 
கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்தில் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது. ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது!
 
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (53). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி ஆரோக்யமேரி. இவர்களுக்கு 12 வயதில் சகாய மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
மதவாதத்தை எதிர்ப்பவர்கள் தி.மு.க, கூட்டணிக்கு வருவார்கள்: கலைஞர் பேச்சு
 திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளானஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் கலைஞர் பேசுகையில்,
முக்கியமான நேரத்தில் மாநாடு நடைபெற்றுள்ளது.
டெல்லி மாநில அரசு தான் எனது நோக்கம்; அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரசை நம்ப வேண்டாம் என்று மக்கள்

வெளிநாட்டு நிதிக்கான ஆதாரத்தை கேஜ்ரிவால் வெளியிடவில்லை: ஷிண்டே பேட்டி
ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நன்கொடைகள் குறித்த தகவல்களை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவிக்கவில்லை என்று மத்திய
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெரும் ஊழல் புரிந்தது மன்மோகன் சிங் அரசுதான்: அத்வானி குற்றச்சாட்டு
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால அரசு பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார்.

16 பிப்., 2014

காதல் தோல்வி?- காதலன் தற்கொலை!- யாழில் சம்பவம்
இன்று காலை யாழ். மானிப்பாய் வீதி, ஓட்டுமடம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவனை கார் ஓட்ட விட்ட பெற்றோர்; விபத்தில் குடும்பமே பலி 
திருப்பூர் நகரிலுள்ள காந்தி நகர் ஆஷர் மில் 2வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (49). இவர் திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சிவகாமி (40). இவர்களது ஒரே மகன் செல்வவேல் (16). தாராபுரத்தில் உள்ள பள்ளியில்

1.5 வயது தங்கையுடன் 68 மைல்கள் காரை ஓட்டிச் சென்ற 10 வயது நார்வே சிறுவன்

நார்வேயில் 10 வயது சிறுவன் ஒருவன் நேற்று காலை 6 மணிக்கு தனது பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் தனது 1.5 வயது தங்கையையும்
ஐக்கிய நாடுகள் சபையின் 25 ஆவது மனித உரிமை மாநாட்டில் ஈழத் தமிழருக்கான நீதி கோரி தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் 14.02.2014 அன்று ரொறன்ரோவில் இடம்பெற்றது.
மாலை 3:00 மணியளவில் British Consulate, Toronto, Bay & College St, Toronto, ON எனும் இடத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஏராளமான மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.

பாலுமகேந்திரா என்றொரு ஆளுமை

கண் முன் திரை இருக்கிறது. ஒலி காதில் கேட்கிறது. ஆக, சினிமா பார்த்து விட்டோம் என்று நம்பிக்கை கொண்டு மேற்பேச்சுக்கு செல்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களே பெரும்பான் மையாக இருந்துகொண்டும் இருப்பார்கள். மற்றபடி மிகக் குறைந்த எண்ணிக்கையில் என்றாலும் சினிமாவின் அழகியல் புரிந்து ரசனை உணர்வு கொள்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையவர்களில் தமிழ் சினிமாவில் தவிர்த்து விட முடியாத பெயர் பாலு மகேந்திரா. 1946 ல் இலங்கையில் பிறந்த பாலு மகேந்திரா, 1969 ல் வட இந்தியா வின் புனே ஃபிலிம் இன்ஸ் டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறை யில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவராக வெளிவந்தார். முதலில் மலையாளப் பட மான ‘நெல்லு’ வில் (1971),

சம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்சி!

ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி-எழுதுகிறது அரச ஊடகம் ஒன்று 

பாராளுமன்ற கூட்டங்களின் போதும் கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக ளின் தலைவர்கள் சந்திப்பின் போதும், சம்பந்தனுக்கும், மாவைக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண் பாடுகள், மோதல்கள் வருவதுண்டு.

தெரிவுக்குழு மூலமே பிரச்சினைக்கு தீர்வு

இந்தியாவின் நிலைப்பாடு இதுவே
இலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் அமைந்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில்

மாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா? எதுவானாலும்

தெரிவுக்குழுவிலேயே இறுதித் தீர்வு இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே

அமைச்சர் பசில் திட்டவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்தால் மட்டுமே


பாலுமகேந்திரா சிறந்த சினிமாக்காரர் மட்டுமல்லாமல், சிறந்த குடும்பத்தலைவர் - மௌனிகா
மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான மௌனிகா இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் பாலு மகேந்திரா.
ஒரு புறம் குடி, மறுபுறும் சீட்டாட்டம்: களைகட்டிய திமுக மாநாடு

திருச்சியில் துவங்கிய திமுக வின் பத்தாவது மாநில மாநாட்டில், தலைவர்கள் பேசுவதை கேட்காமல், மாநாடு திடலில், மது அருந்துவது, சீட் விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஐ.நாவும் உடந்தை: டெல்லியில் ஆர்ப்பாட்டம்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலங்கை அரசாங்கம் மீது நடவடிக்கை எடுக்குமாறும் டெல்லியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா நிபந்தன
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால்  முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா நிபந்தனையுடன் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது திருத்தத்தின் பின்னராக ஆதரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
ஆதரவு தந்த வாசகர்களுக்கு நன்றி 
நேற்று முன்தினம் டில்லி முதலமைச்சர்  செய்தியை முதலில் தந்தமைக்காக ஆயிரக்கணக்கான வாசகர்கள் நன்றி  தெரிவித்தார்கள்.ஒரு சிலர் உண்மையான செய்தியா என்று ஆச்சரியமாக கேட்டார்கள்.முந்தியே செய்தி தருவதில் நாம் என்றும் முன் நிற்போம் வாசகர்களே நன்றிகள் கோடி 

சென்னையில் அரசியல் கட்சிகளுடன் பிரவீன் குமார் ஆலோசனை
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
திமுக 10-வது மாநில மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் சமுத்திரத்தின்சில துளிகள்
* திருச்சியில் திமுக 10வது மாநில மாநாடு நடைபெறும் இடம் முட்புதர்கள் அடங்கிய காடாய் கிடந்தது.  50 நாளில் அந்த இடம் டெல்லி செங்கோட்டையாகவும்,
வாழப்பாடி: ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய 5ம் வகுப்பு மாணவி 
வாரப்பாடி அருகே உள்ள காட்டுவேப்பிலைப்பட்டி அருகே உள்ள சென்ட்ராயன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்துவந்த மாணவி
முதலமைச்சரின் கணத்த சரீரம் தமிழுக்கு மட்டும் இல்லை; கலைஞருக்கும் வணக்கம் சொல்கிறது : ஆ. ராசா
திருச்சியில்  தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் 36 தலைப்புகளில் சொற் பொழிவாளர்கள் பேசினார்கள்.   

நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன்; வெற்றி திமுகவுக்குத்தான் : நடிகை குஷ்பு பேச்சு
திருச்சியில் தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் 36 தலைப்புகளில் 36 சொற்பொழிவாளர்கள் பேசினார்கள்.

15 பிப்., 2014

குற்றத்தை ஏற்றுக்கொள்வதாக கனேடிய தமிழர் அமெரிக்க நீதிபதிக்கு கடிதம் 
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள கனேடிய தமிழர் ஒருவர் தமது குற்றத்துக்காக மன்னிப்பை கோரியுள்ளார்.


மூன்றாவது திருமணமா? அதிர்ச்சியில் யுவன்!
100 படங்களுக்கு மேல் இசையமைத்து, அவற்றில் பலவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்து மாபெரும் வெற்றிகள் பெற்று யாராலும் அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அஞ்சான்,

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி : மத்திய அமைச்சரவை முடிவு

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடகாட்டில் சீமான் :  நாம் தமிழர் கட்சியில் பிளவு 
நாம் தமிழர் இயக்கம் தொடங்கிய போது சீமானுடன் உறுதுணையாக இருந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களை இயக்கத்தில் இணைத்தவர் சுபா.முத்துக்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல்
அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் 

கோயம்பேடு அசோக்நகர் இடையே சோதனை ரெயில் ஓட்டம் இன்று 2–வது நாளாக  நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ


திமுகவின் 10 மாநில மாநாடு - 56 மாவட்ட மாநாடு : ஆற்காடு வீராசாமி விளக்க உரை
 
தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவங்கியது. மாநாட்டை அக்கட்சியின் தலைவர் தலைவர் கலைஞர் கொடியேற்றி துவக்கி வைத்தார். 


ஜெயலலிதா 3வது அணிக்கு தலைமை தாங்கி பிரதமராக ஆனால்  எங்களுக்கு மகிழ்ச்சிதான்: சீமான்
  
 நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளராக இருந்த சுபா.முத்துக்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நிருபர்களிடம் பேசுகையில், 

அதிமுக அலுவலக வாசலில் வெடிகுண்டு : மதுரையில் பதட்டம்
மதுரை கீழமாசி வீதியில் அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகத்தின் வாசலில் வெடுகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.   போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து

இசையமைப்பாளர் அனிருத் கைதாவாரா?
தனுஷ் நடித்த ‘3’ படத்துக்கு இசையமைத்து பிரபலமானவர் அனிருத். இப்படத்தில் இடம் பெற்ற ஒய்திஸ் கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இதனால் அனிருத்துக்கு படங்கள் குவிந்தன.

திமுக 10வது மாநில மாநாடு : நிகழ்ச்சி நிரல்
தி.மு.க.,வின் 10வது மாநில மாநாடு, திருச்சியில் இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. தி.மு.க., தலைவர் கலைஞர் 90 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில், கட்சிக் கொடி ஏற்றி, மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
இந்திய அணி 438 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் பாலியல் பலாத்காரம் 
சனல் 4ல் விரைவில் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி வெளியீடு!- வைகோ தகவல்

தமிழினப் படுகொலைக்கு புதியதோர் ஆதாரத்தை சனல்-4 விரைவில் வெளியாகக்கூடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொமாண்டர் துமிந்த தலைமையில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை: ஆணைக்குழுவிடம் சாட்சியம்
கொமாண்டர் துமிந்த தலைமையில் 3000 இராணுவத்தினருக்கு மேல் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு பல தமிழர்களை கைது செய்துகொண்டு சென்றனர். அதில் பலர் இன்றுவரை எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை என சாவகச்சேரியில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வயோதிபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்
போருக்கு பின்னர் மீள் அமைப்புக்களை மேற்கொள்வதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவது அவசியம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்கும்: த ஹிந்து
எதிர்வரும் மார்ச்சில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க சார்பு நாடுகள் ஜெனிவாவில் கொண்டு வரவுள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையின் போது, இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்யும் முயற்சியில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெவரப்பெருமவே வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என இவர் கோரி வருவதுடன் அந்த பதவி தொடர்பில் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
அக்கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவராக சட்டத்
குளிர்கால ஒலிம்பிக்கின் பதக்க பட்டியல் 

1.ஜேர்மனி                7 3 2
2.சுவிட்சர்லாந்து        5 1 1
3.கனடா                     4 5 2
4.ஐக்கிய அமேரிக்கா  4 3 6
4.நோர்வே                   4 3 6
4.ஹோலந்து               4 3 6
7.ரஷ்யா                       3 6 5
8.சீனா                          3 2 1
9.பைலோ ரஷ்யா         3 0 1
10.ஆஸ்திரியா                 2 4 1
சாட்சிகளை அச்சுறுத்தினால் சட்ட நடவடிக்கை; ஜனாதிபதி ஆணைக்குழு உறுதியளிப்பு 
காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களுக்கு வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணக தெரிவித்தார்.

காணாமற் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகள்

யாழ் நகரில் சாட்சியங்கள் பதிவு; இன்று சாவகச்சேரி; நாளை யாழ் கச்சேரியில்


காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்தது.
ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம,

உலக வரைபடத்தில் இலங்கை எங்கு இருக்கிறது என்பது தெரியாதவர்களே அமெரிக்க காங்கிரஸில்

ஊடகங்களின் தலைமை அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் செயலாளர்

உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினர் இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார் என ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.


 கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 13ந் திகதி ஆரம்பமான போது ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி கோவிலிலிருந்து கம்பன் திருவுருவப் படம் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக வருவதையும், ஊர்வலத்தில் கலாநிதி கு. சோமசுந்தரம், சங்கீத பூஷணம் சு. கணபதிப்பிள்ளை, இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர், அ. ஆரூரன், சுவாமி ராஜேஸ்வரானந்த மகராஜ், கம்பன் கழக தலைவர் தெ. ஈஸ்வரன், திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபை தலைவர் வி. கயிலாசபிள்ளை ஆகியோரை படத்தில் காணலாம்.
 

அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும்!- வசந்த பண்டார
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும். தனது உரிமையை நாட்டுக்கு எதிராக அனந்தி பிரயோகிப்பது நிச்சயமாகும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்! ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு அழைப்பு! தேர்தல் வேளையில் அரசு கலக்கம்
இலங்கையில் ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் நேற்றும் அநேகமான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு, இதனால் பயணிகள் பல்வேறு அசெளக ரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கை
இலங்கை, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குவேனியின் சாபத்தில் இருந்து மீள ஆலயம் கட்டும் சிங்களவர்கள்

இலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த இயக்கர் குலத்தை சேர்ந்த வேடுவ பெண்ணான குவேனி சிங்கள மக்களுக்கு இட்ட சாபத்தில் இருந்து மீள அவருக்கு ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறிய கோத்தபாய
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் உதய கம்மன்பிலவின் நேற்றைய ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விசா நிராகரிப்பு - வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் யாழ். பெண்கள் அமைப்புடன் பேசிய கத்தரின் ருசெல்

அமெரிக்க அரசின் சிறப்புத் தூதுவரான கத்தரின் ருசெல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் அவர் அதிரடியாக வீடியோ மூலம் யாழில் பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடியுள்ளார்.

ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, அவரது அமைச்சரவை இன்று இரவு கூடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது

காதலர் தினம் : காதல் திருமணம் செய்த இளம்ஜோடி தற்கொலை
சிவகங்கையை சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகன் ராஜா (வயது 22). இவரது உறவினரான மதுரையைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் தீபா(வயது-18). இவர் ராஜாவுக்கு அத்தை மகள் உறவு முறை ஆகிறது.

மனைவிகளை விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் போலிஸ் எட்டு விஷம் குடித்து தற்கொலை 
கோவையை அருகிலுள்ள தொண்டாமுத்தூர் பக்கமுள்ள நரசீபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோவை பேரூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

உளுந்தூர்பேட்டை கோர்ட் அதிரடி : விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது. 



ஈழத்தில் நடந்த கொடூரம்; ஒரே இரவில் 40 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்-
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கே.அ ங்கமுத்து 

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையின் கீழ் பெரியார் பல்கலைக்கழகச் சமூகவியல் துறை சார்பில், தமிழ் இலக்கியங்களில் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த தேசிய அள விலான மூன்று நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்

ad

ad