புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கூட்டமைப்பின் தலைவராக நியமித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்-!- கருணா
தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்தால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தான் ஒதுங்குவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சவால் விடுத்துள்ளார்.
ஹூலுகல்லவின் மனைவியின் நிலை கண்டு கவலையடைந்த ஜனாதிபதி
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்லவின் குடும்பத்தினரின் நிலை கண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலையடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இறுதிநாள் சாட்சியப்பதிவுகள் ஆரம்பம் 
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி
ஜனாதிபதி மஹிந்த பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம் செய்தார்.பாசிக்குடா கடற்கரைக்கு சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜீன்வாஸ் குணவர்தன, லொஹான் ரத்வத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோரும் பாசிக்குடா சென்றிருந்தனர்.
புலிகளுக்கு புனர்வாழ்வளித்திருக்காவிட்டால் 12 ஆயிரம் தோட்டக்களே செலவாகியிருக்கும்!- மகிந்த அமரவீர
யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து வைத்த அழகிரி
திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.  திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மு.க.அழகிரி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.  இரண்டு நாட்களும் அவர் மதுரையி

விஜயகாந்தின் கூட்டணி பேரம் :நெல்லை சமக மாநாட்டில்
சரத்குமார் கடும் தாக்கு - படங்கள்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு நெல்லை பொருட்காட்சி திடலில் நேற்று நடைபெற்றது. மாநில அவை தலைவர் வி.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பகுத்தறிவு சிந்தனையை தூண்டிய கல்லூரி வாசகம் :
 நடிகர் சத்யராஜ் பேச்சு
கோவை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறை சார்பில் சரித்திரா–2014 என்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார்.
துரைமுருகன் 5 நாள் சஸ்பெண்டு ஏன்?
சட்டசபையில் அரசு சிற்றுந்து இயக்குவது தொடர்பாக கடந்த 25–10–2013 அன்று துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரின் அனுமதி இன்றி ஒரு பிரச்சினையை எழுப்ப முயன்றனர்.
துரைமுருகன் இடைநீக்கம்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் இன்று முதல்  5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப் படுகிறார் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.  துரைமுருகனுக்கு எதிராக அமைச்சர் பன்னீர்செல்வம் உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஒலிம்பிக் பட்டியல் G S B T 

1.ஜேர்மனி 7 3 2 12
2.ஹோலந்து 5 5 7 17
3.நோர்வே 5 3 6 16
4.சுவிட்சர்லாந்து 5 1 1 7
5.ரஷ்யா 4 7 5 16
6.கனடா 4 6 4 14
7.ஐக்கிய அமேரிக்கா 4 4 8 16
8.போலந்து 4 0 0 4
9.சீனா 3 2 0 5
10..பைலோ ரஷ்யா 3 0 1 4



கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்தும் அமரர்களான விக்ரம், இராஜன்,கங்கு ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான  30 பந்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட்  ஆட்டம் ஒன்றில்  கே.சி.சி.சி. விளையாட்டுக்கழகம் 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் காமாட்சியம்பாள் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் கே.சி.சி.சி விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.
54பேர் இன்று சாட்சியமளிப்பு 
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 54 பேர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.

எம் வி சன் சீ கப்பலில் வந்து சிறைப்பிடிக்கப்பட்ட தர்மரத்தினம் அருமைத்துரை நிலைமை என்ன – உண்மைக் கதை .

பிரிட்டிஷ் கொலம்பியா மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனித கடத்தல் என்று குற்றச்சாட்டப்பட்ட  எம்.வி. சன் சீ கப்பலில் வந்தோரை கனடிய குடிவரவு அதிகாரிகள்
happy-family-day2
குடும்ப தினம் ஒரு தேசிய சட்ட விடுமுறை தினம் அல்ல. ஆனால் டொரோண்டோ பகுதிகளில் பல தொழில்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக மூடப்படும். திங்கட்கிழமை  பிப்ரவரி 17 ஆம் தேதி மூடப்படும் தகவல்கள் இதோ.
மூடப்பட்டிருப்பவை:
  •     தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள்
  •     சிட்டி ஹால் உட்பட மாநகர கட்டிடங்கள்
  •     பொது நூலகங்கள்
  •     வங்கிகள்

கனடாவிலிருந்து சொந்த ஊரைப் பார்க்க சென்ற 33 வயது இளைஞர் மரணம்

கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.
    வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 52 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 36 பேர், பார்வையாளர்கள் 16 பேர் உள்பட 52 பேர்

    "ஈழத் தமிழர் பிரச்னைக்கு கருணாநிதிதான் தீர்வு காணமுடியும்'கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

     ஈழத்தமிழர் பிரச்னைக்கு கருணாநிதியால் மட்டுமே தீர்வு காணமுடியும். சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்படும்போது அதற்குத் தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள்

ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க.வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம்.  வருவார்கள் இல.கணேசன்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று தனது 69–வது பிறந்த நாளை கொண்டாடினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தார்.

ad

ad