புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

பிரபல பாடகர் நாகூர் அனீபா காலமானார்




பிரபல பாடகர் நாகூர் அனீபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

கொழும்பில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிககின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது.

12ம் திகதி தேசிய துக்க தினம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினமான எதிர்வரும் 12 ம் திகதியை

தூய நீருக்கான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது



 
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி தகவல்கள்!
லக அளவில் வனவளம் வெகுவாகக் குறைந்துவிட்ட சூழலில்,  செம்மரம் மட்டுமல்ல எந்த மரமாக இருந்தாலும் அவை வெட்டப்படுவதைத்

சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதி சென்றதால் பதற்றம்!


 ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

திருப்பதி சேஷாசலம் மலையில் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் 20 பேர் உடல்களை நேற்று திருப்பதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் 8 பேர் திருவண்ணாமலை

என்னுடன் திருமாவளவன் வாழ வேண்டும்... பெண்ணின் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு



கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் திருமாவளவன் வந்து வாழவேண்டும் என பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம்; வேல்முருகன்



சுங்கக் கட்டணம் என்ற வழிப்பறி கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் என்றும், தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

20 தமிழர்களை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்! -உறவினர்கள் அதிர்ச்சி தகவல்!



திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில்

கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளில் எவ்வாறு பெருந்தொகைப் பணம் கோத்தபாய விரைவில் கைது


ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்

பசில் டுபாயில் கைது செய்யப்படுவாரா ? பாதுகாப்பு தரப்பில் கசியும் தகவல்


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை டுபாயில் வைத்து கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 ஏப்., 2015

தூய குடிநீருக்கான போராட்ட செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த ஊடக வியலாளர்கள் மீது கொலை முயற்சி


தூயகுடிநீருக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார்:-

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார்:-


தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு! தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க,

லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், “யோகி” எனும் ஈழத் தமிழ்மகனை ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம்..!!

yogi-002
லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியில் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும் ஈழத் தமிழ்மகன்

மகிந்தவிற்காக 5000 பிக்குமார் நடை பவனி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது கட்சிகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பழிவாங்கலை உடனடியாக நிறுத்துமாறு

ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி.பியின் மோசடி அம்பலம்


யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பான உண்மைகள் சமகாலத்தில்

யெமனில் உலக நாடுகளை வியக்கவைத்த இந்திய கடற்படை: இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் சீனா போட்டி


உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில், உலக நாடுகளை இந்திய கடற்படை வியக்கவைத்துள்ளது.

யாழில் திருமணத்தில் புதுமை.

Jaffna Wading 01
மரங்களை அழித்து முற்றம் முழுவதும் சீமெந்திட்ட நிலையில் அழகிய யாழ்ப்பாணம் பங்குனி வெய்யிலால் கொளுத்துகிறது.
கமலினி செல்வராஜன் காலமானார். ஈழத்துக் கலையுலகிற்கு மற்றுமோர் பேரிழப்பு! அமரர் சில்லையூர் செல்வராஜன் அவர்களின் துணைவி. தனது கணவருடன் இணைந்து கலைத்துறையில் பயணித்தவர். அவரது கலைப்படைப்புக்கள் வரலாற்றுப்பதிவுகள். இன்று காலை கமலினி செல்வராஜன் அவர்களின் துயரச் செய்தியுடன் தான் விடிந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள். ''அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே..............'' இலங்கைவானொலியில் ஒலித்த இந்தக் குரலை இனி உயிர்ப்போடு கேட்பது எந்தக்காலம்?





க்கீரன் இல்ல மணவிழாவை, திருமந்திரங்களை ஓதி தமிழ் முறைப்படி நடத்தி வைத்திருக்கிறார்கள் பேரூர் மணிவாசகர்

திருப்பதி அருகே துப்பாக்கிச் சூடு - தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உள்பட 20 பேர் பலி





திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ள சேசாலம் மலைப்பகுதி சித்தூர், திருப்பதி, கடப்பா, கர்னூல், நெல்லூர் மாவட்டங்களில்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.நா. சபை ஒத்துழைக்கும்


இலங்கையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான தனது ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று இ

வடமாகாணசபையில் கல்வி தொடர்பான இரண்டு பிரேரணைகள் சமர்ப்பிப்பு

வட மாகணசபையின் 27 ஆவது சபை அமர்வான இன்று வடமாகாண கல்வி முன்னேற்றம் தொடர்பான இரண்டு பிரேரணைகள்

எதிர்க்கட்சித் தலைவர் யார்? இன்று பதில் கூறுவார் சமல்


எதிர்கட்சித் தலைவர் யார் என்ற நீண்ட சர்ச்சைக்கு இன்று விடை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ச­,

தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்


கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் இன்று காலை 10மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

6 ஏப்., 2015

திருமாவளவன் மீது கோவை பெண் கவிதா மீண்டும் பரபரப்பு புகார்




கோவையை சேர்ந்த கவிதா(34) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை

வடகொரியாவின் அறிவிப்பால் நடுங்கும் தென்கொரியா: தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் (வீடியோ இணைப்பு)


கிழக்கு கடற்பகுதியில் கப்பல் செல்லவேண்டாம் என வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால் தென் கொரியா பீதியில் உறைந்துள்ளது.

மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்தேவைகள் தொடர்பில் சாதகமான முடிவை பெற்றுத்தருவோம் : உறுதியளித்தார் றொபின் மூடி


அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடிக்கும் யாழ்.மாட்ட அரச அதிபர் வேதநாயகம்  இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேர்தலை நடாத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நாட்டமில்லை: விஜயகலா


ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தான் தேர்தலை நடத்த வேண்டும் என்ற

மூன்றாம் கட்ட மீள்குடியேற்ற காணிகள், நாளை பார்வையிடப்படும்


உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில், 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்ற, புதிய அரசின் அறிவித்தலுக்கமைய

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு அதிரடி தடை: காரணம் என்ன?


துருக்கி நாட்டில் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட 166 சமூக வலைதளங்களை அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.

பசில் ராஜபக்ச 24ம் திகதி பொலிஸில் வாக்குமூலம் அளிப்பார்?


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி பொலிஸில் வாக்கு மூலம் அளிப்பார் என

விளம்பரத்துக்காக வாங்கினாரா 1 ரூபாய் சம்பளம்? (ஜெ. வழக்கு விசாரணை -15)


னல் பறக்க நடைபெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து... 

313 விதியின்படி குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் வாசித்தார். 
 
குமார்: போயஸ் கார்டன் மற்றும் போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள வீடுகள் மராமத்துப் பணிகள் செய்ததற்கான செலவை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் ரூ.13,65,31,900 எனத் தவறாக மதிப்பீடு

மத்திய அமைச்சருக்கு எதிராக சாலை மறியல் - சென்னையில் காங்கிரசார் 200 பேர் கைது


சென்னை திருவொறற்றியூரில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். 

வடபகுதி நிதியே மகிந்தவின் மாளிகை : விஜயகலா சுட்டிக்காட்டு


news









மகிந்த அரசு அபிவிருத்தி என்று சொல்லி வீதிகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளார்களே தவிர  போரால் அங்கவீனமானவர்களுக்கோ விதவைகள் ஆக்கப்பட்டவர்களுக்கோ எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அத்தோடு வடபகுதிக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போய்விட்டது கே.கே.எஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு தான் செலவளிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது என மகளிர்

ஆட்சி மாற்றத்திற்கு அசுர பலமாக இருந்து வித்திட்டவர்கள் வடக்கு மக்களே :சந்திராணி


அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது .எனவே இதனை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் மகளீர் விவகார

அரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் : தூய நீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நாளை


அரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் என்ற கோரிக்கையுடன் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய

ரொனால்டோ புதிய சாதனை


லா லிகா லீக் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் ரியல் மாட்ரிட்- கிரனாடா அணிகள் மோதின.

தூக்கில் தொங்கிய நிலையில் 7பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு


ஏழாலை தெற்கு மயிலங்காட்டை சொந்த இடமாகக் கொண்ட தச்சுத் தொழிலாளி  இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில்

யேமனிலிருந்து இலங்கையர்கள் வெளியேற முடியாத நிலை


யேமனிலிருந்து 43 இலங்கையர்கள் வெளியேற முடியாது நெருக்கடியான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய போதிலும் மட்டக்களப்பு யுவதி விடுவிக்கப்படவில்லை


சிகிரியா சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்த போதிலும்,

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயம்!: முதலமைச்சர் உட்பட பலருடன் பேச்சுவார்த்தை


வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா நாட்டின் உயர் ஸ்தானிகர் ரூபின் மூடி தலைமையிலான குழுவினர்

விக்னேஸ்வரன் ஒரு நீதி அரசியல்வாதி

திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 10:28.24 AM GMT ]
உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற சி.வி. விக்னேஸ்வரனிடம் அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் அரசியல் துறையில் பிரவேசிக்க தயக்கம் இருந்து வந்தது.
எனினும் ஒரு இன அழிப்பு போரின் உச்சக்கட்டம் காரணமாக அவர் ஆழமாக அர்ப்பணிப்புடன் கூடிய அரசியலுக்குள் பிரவேசித்தார்.
விக்னேஸ்வரன் புதிய சுவாசத்துடன் மற்றவர்களில் இருந்து வேறுப்பட்ட நேர்மையான மற்றும் தைரியமான அரசியல்வாதியாக இருப்பார் என்பதால், அவரது அரசியல் வருகையை தமிழர்கள் வரவேற்றனர்.
தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள விக்னேஸ்வரனின் வீட்டில் அவரை சந்தித்த ஊடகவியலாளர் ஒருவர் அரசியல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஸ்வரன், தன்னை ஏனைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் தான் மற்றையவர்களை விட  வித்தியாசமானவர் என கூறியுள்ளார்.
முதலமைச்சராக பதவிக்கு வந்த பின்னர் அவரது வார்த்தைகளும், நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருந்ததுடன் அவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவும் வடக்கு மாகாண சபை தொடர்பில் பல வாக்குறுதிகளை விக்னேஸ்வரனுக்கு வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்ச இந்த வாக்குறுதிகளை வழங்கியதாக விக்னேஸ்வரன் நம்பினார்.
எனினும் மகிந்த ராஜபக்ச அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது தான் கீழ் மட்ட அரசியல்வாதி என்பதை காட்டினார்.
விக்னேஸ்வரன் தனது அதிகாரத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இராணுவ ஆளுநருடன் மோத வேண்டியிருந்தது. எனினும் அரசியல் அதிகாரம் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவானார். அவர் தமிழ் மக்களின் மனதையும் எண்ணங்களையும் வெல்ல சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் 60 வருடங்களாக நீடித்து இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இன்னும் முனைப்புகளை மேற்கொள்வில்லை.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தமிழ் மக்களே பின்பலமாக அமைந்தனர் என்பதால், ஜனாதிபதி என்ற வகையில், தமிழர்களின் பிரச்சினைளுக்கு தாமதமின்றி தீர்வை வழங்க வேண்டியது அவரதும் அவரது அலுவலகத்தினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
எவ்வாறாயினும் இலங்கை என்பது சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என வெளியாகும் அறிக்கைகள் மூலம் சிங்கள அரசியல்வாதிகள், கடந்தகால மகாவம்ச மனநிலை அரசியல் தலைவர்களில் இருந்து மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், நல்லாட்சி, சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கி பொறுப்புக்கூறலுக்கு விக்னேஸ்வரன் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
இந்த நேசத்துக்குரிய கொள்கைகளில் ஏதேனும் ஒரு தோல்வி கண்ட பிறகு மற்றொரு அரசியல் சந்தர்ப்பத்தை தேடுவதே ஒரு ராஜதந்திரம்.
அவ்வாறான வாய்ப்பு தவறவிட்ட நிலையில், முடிவடைந்துவிட்டது என்றாலும் விக்னேஸ்வரனின் இனப்படுகொலை தீர்மானம், தைரியமான வெளிப்படையான மற்றும் தகுதியுடைய தீர்மானமாகும்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் நேரடி மற்றும் மறைமுக இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்தர்ப்பவாத தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சக்திகளுடன் இணைந்து கடந்த அரசு தமிழர்களின் அரசியல் சக்தி மற்றும் உடல் பலத்தை இரக்கமற்றவகையில் ஒடுங்கியது. இது அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்தது.
தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் முகங்களில், மிறச்சி, இராணுவமயப்படுத்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பு சாதாரண குடிமக்கள் பாதுகாப்புப் படைகளால் ஆக்கிரமிக்கப்படுதல், குறைவான வாழ்வாதாரம், பாதுகாப்பு படைகளின் தயவில் இருக்க வேண்டிய நிலைமை என்பன தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளாகும்.
இந்த நிலையில், முன்னெடுக்கப்பட்டுவரும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்திற்கு எந்த தாக்கத்தையும் உருவாக்கியதாக தோன்றவில்லை.
பிரச்சினைகளை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ரணில் மற்றும் சம்பிக்க போன்ற மைத்திரியின் பங்காளிகளின் செயற்பாடுகள் மைத்திரி அரசாங்கத்தின் நேர்மை தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி. விக்னேஸ்வரன் நல்ல மனிதர் அவருடன் எளிதாக வடக்கு மற்றும் கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என மைத்திரி, சி.வியை பாராட்டும் படி தெரிவித்துள்ளார்.
எனினும் விக்னேஸ்வரன் பொய்யர், அவரது பேச்சு பெறுமதியானதல்ல என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளர்.
மைத்திரி, சி.வியின் நீதித்துறை நேர்மையை புரிந்து கொண்டுள்ளார் எனினும் சி.வி அரசியல் நேர்மையை புரிந்து கொள்ளவில்லை.
இனப்படுகொலை மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் மைத்திரியின் மந்திரத்தை நம்புகின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
ஐக்கியமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிப்பது என்பது சந்தேகத்திற்குரியது என்பதை மன்னர் ஆயர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அனைத்து தமிழ் குழுக்களை ஒன்றிணைத்து தமிழர் ஐக்கிய முன்னணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றுவது சிறந்ததாக அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீரமைக்கப்பட்டு உருக்குலைந்த தமிழர்களை காப்பற்றுவதற்காக ஒரு உறுதியான பாதையில் அஞ்சாத, உண்மையாக செல்லக் கூடியவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தெளிவான மற்றும் வெளிப்படையான உண்மையான தமிழ் அரசியல்வாதிகளுக்கு உலக அளவில் குறிப்பாக புலம்பெயர் நாடுளில் பரிவும் ஆதரவும் இருந்து வருகிறது.
மைத்திரி அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுக்காக வலிந்து சென்று செயற்படும் விதமாக தனது ராஜதந்திர பாதையை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தமிழர்களுக்கான சர்வதேச ஆதரவை நீக்கிவிடக் கூடிய முயற்சியாக காணப்படுகிறது.
மைத்திரியின் மென்மையான கருத்துக்கள் விக்னேஸ்வரனுக்கு முறையான நீதி காத்திருக்கிறது என்று தோன்றலாம்.
விக்னேஸ்வரனின் தமிழ் வரலாற்றில் பதிவுகள், இராணுவமயப்படுத்தல் மற்றும் இனப்படுகொலை பிரச்சினை குறித்த துணிச்சல் யதார்த்தமான தோரணைகளை உடைக்கும் நோக்கமாக இது இருக்கலாம்.
விக்னேஸ்வரன், உண்மை மற்றும் நீதி மீது நம்பிக்கையுடையவர். தமிழர்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதையுடன் வாழ ஒரு

ஸ்ரீ.சு.கவின் பிரதம வேட்பாளராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்?


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை

என்னைச் சுற்றியிருப்போரில் சிலர் இறைமறுப்பில் முழு ஈடுபாட்டோடு இல்லை என்பதை நன்றாகவே அறிவேன்: கலைஞர்



திமுக தலைவர் கலைஞர், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கிடைக்காவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ஐ.தே.க


19ம் திருத்தச் சட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால் நாடாளுமன்றை கலைப்பதனைத் தவிர வேறு மாற்று

இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: துரைராஜசிங்கம்


இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் யாருக்கும் சொந்தம் கொண்டாடவும் முடியாது யாரிடம் இருந்தும் பறிக்கவும் முடியாது.

சயீட் அஜ் மலின் இடைவெளியை நிரப்ப குறுகிய கால மாற்று வீரராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமான நிலையத்துக்கு நேற்று வருகை தந்தபோது விமான நிலைய பணிப்பெண்கள் வரவேற்றனர். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, மங்கள சமரவீர மற்றும் அதிகாரிகளும் வருகை தருவதைப் படத்தில் காணலாம்.

ஜனாதிபதி மைத்திரி நேற்று பாகிஸ்தான் விஜயம்;; நவாஸ் n'ரீபுடன் இன்று பேச்சு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான்,

பணம், சொத்து சட்டவிரோத பரிமாற்றம்: விசாரணைக்கு விசேட குழு சீசெல்ஸ் விஜயம்


ஊழல், மோசடிகளுக்கு தண்டனை உறுதி ; முக்கிய துறைகளுக்கு ஆணைக்குழுக்கள்

ஊழல், மோசடிகளுக்கு தண்டனை உறுதி ; முக்கிய துறைகளுக்கு ஆணைக்குழுக்கள்

தேர்தலின் பின் முழுப்பலத்துடன் அரசு அமையும்
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், மக்கள்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பல கோடி ரூபா மோசடி முன்னாள் தலைவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு


* விசாரணை அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
* வெலியமுன தலைமையிலான விசாரணைக்குழு 150 பக்க அறிக்கையில் பரிந்துரை
- தலைவர் அஜித் டயஸ்

தண்ணீர் கூட வழங்காமல் 3 நாட்கள் பெண் பலாத்காரம்: கொடூர கும்பல் கைது


 ஹரியானா மாநிலம் குர்கோனில், மேற்கு வங்க மாநில பெண்ணை கடத்தி சென்ற ஒரு கும்பல், உணவு கூட தராமல்

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!



 உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒரு ஆச்சரிய சர்வே














தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் யார்? என்ற கேள்வியுடன் விகடன் டாட் காம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாமக

பா.ஜ.க. மூத்த தலைவர் சதுர்வேதி காலமானார்!



 ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான லலித் கிஷோர் சதுர்வேதி ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''பா.ஜ.க.வின் மூத்த தலைவரான சதுர்வேதி (84) நீண்ட நாட்களாக உ

லண்டனில் எஸ்.பி.பி.யுடன் பாடிய 'சூப்பர்சிங்கர்' ஜெஸ்சிக்கா


விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்த ஈழத்தை சேர்ந்த மாணவி லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவை சேர்ந்த ஈழத்து மாணவி ஜெஸ்சிக்கா இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை ஈழம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் நலனுக்காக வழங்கி

அஷ்லான்ஷா ஹாக்கி: தென்கொரியாவை போராடி சமன் செய்தது இந்தியா!




















கோலாலம்பூரில் நடந்து வரும் அஷ்லான்ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய-தென்கொரிய அணிகள் மோதிய  ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

மலேசிய விமானம் வெடித்து சிதறியது: முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பலி


மலேசிய விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மலேசிய

நள்ளிரவு 12 மணிக்கு பொதுமகனின் வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்: முல்லைத்தீவில் சம்பவம்


முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் நேற்றைய தினம் பொதுமகன் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு

5 ஏப்., 2015

அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு சிறை


அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில்

நான் எந்தப் பக்கம் என்று எனக்கே தெரியவில்லை: குழப்பத்தில் பிள்ளையான்


கிழக்கு மாகாணத்தில் இன்று நான் ஆளும் கட்சியில் உள்ளேனா இல்லை, எதிர்க்கட்சியில் உள்ளேனா என்பது கூட எனக்கு விளங்காத விடையமாகவுள்ளது

ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஆபத்தான நிலையில்

17 ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஒருவர் ஆபத்தன நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது எப்படி இருக்கு? முகநூலில் ஆதங்கத்தை பதிவேற்றிய மனோ


இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை கூடிய தேசிய நிறைவேற்று சபை கூட்டம் நடந்து முடிந்த பிறகு,

எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்! மரணத்தில் சந்தேகம்: உண்மை நிலையை அறியுமாறு தாயார் பொலிஸில் முறைப்பாடு


உப முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியை சட்டபூர்வமற்ற முறையில் குவைத் நாட்டிற்கு அனுப்பிய உப முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறித்த யுவதியின் தாய் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா (வயது 22) என்ற யுவதி கடந்த 28.02.2015 அன்று குவைத் நாட்டில் உயிரிழந்தார். இவரின் சடலம் 15.03.2015 அன்று மட்டக்களப்பு கொண்டுவரப்பட்டு சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதிய அரசின் வாக்குறுதிகள் செயல் வடிவம் பெறுவதில் கால தாமதம்: தமிழர் பட்ட அவலங்களுக்கு தீர்வை பெற்றுத் தருவது ஐ.நா வின் பொறுப்புகூட்டமைப்பு.



இலங்கையில் தமிழர் எதிர்நோக்கிய அவலங்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் நிரந்தர

தமது அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக் குரல் எழுப்பும் தமிழ் கூட்டமைப்புஆனாலும் அரசுடனேயே அவர்கள் - சந்திரிகா

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கும்

பிரதமர் ரணில் - முதலமைச்சர் விக்கி முறுகல்: என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்இரா. சம்பந்தன்


ஊடகங்கள் தேவையில்லாது மூக்கை நுழைக்க தேவையில்லை

காங்கேசன் சிமெந்து ஆலையை மீள இயக்கும் முயற்சி ஆரம்பம்


காங்கேசன்துறை சிமெந்து ஆலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று

நரேந்திர மோடியை மைத்திரிபால சிறிசேனவுடன் நேரில் பேசுமாறு வலியுறுத்து


தமிழக மீனவர் பிரச்சினையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகப் பேசி,

மூன்று மாதங்களில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்கு


தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளது.

பிறந்த தினத்தை கடலில் கொண்டாடியவர் மாயம்; நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்



தொண்டமானாறு அக்கரைக் கடலில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரில் ஒருவர் நேற்று நீரில் மூழ்கிக் காணாமற் போயுள்ளார்.

ஐ.தே.கவின் அம்பாறை கூட்டத்தில் அமளிதுமளி- கூட்டத்தில் பதுங்கினார் ரணில்


அம்பாறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பீ. தயாரத்னவுக்கு எதிராக

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு


கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் விளையாட தடை


இலங்கை மீதான அதிருப்தி, தமிழக மக்களுக்கு இன்னும் குறையாததால் நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் இலங்கை கிரிக்கெட்

புதுவை இரத்துனதுரை தொடர்பாக அனுப்பிய கடிதத்திற்கு பதில் இல்லை: சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் வழங்கிய மிதிவண்டி கொடைநிகழ்வில் பொ.ஐங்கரநேசன்


கவிஞர் புதுவை இரத்துனதுரை தொடர்பான விபரங்களைத் தெரியப்படுத்துமாறு கோரி அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால

4 ஏப்., 2015

கிளிநொச்சியில் பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையம் திறப்பு


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை

புங்குடுதீவில் இலவசக் கல்வி அளிக்கும் தாயகம் நிறுவனத்தின் சொக்கலிங்கம் அக்கடமியின் சேவை

sockalingam acadamey-jan.2015-002










புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது

3 ஏப்., 2015

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராம் ,உக்ரேன் தீவரவாதிகளுக்கு விற்பனை : ராஜித

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராம் மற்றும் உக்ரேன் தீவரவாதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதோடு இது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நடுக்கடலில் இடம்பெற்ற ஆயுத விற்பனை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய கிரகத்திற்கு தமிழன் “விஸ்வநாதன் ஆனந்த்” பெயர் சூட்டப்பட்டுள்ளது

முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் பெயர்ஒரு குட்டிக் கிரகத்திற்குச் சூட்டப்பட்டுள்ளதுகிரகங்கள்

சவூதி வான் தாக்குதலுக்கு மத்தியிலும் யெமனில் 'pயா கிளர்ச்சியாளர் முன்னேற்றம்



சவ+தி அரேபியா தலைமையிலான கூட்டணி கடந்த ஒரு வாரமாக வான் தாக்குதல் நடத்திவரும் நிலையிலும் 'pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் தெற்கு யெமனின் பிரதான நகரான அதெனின் முக்கிய பகுதியை நோக்கி டாங்கிகளுடன் முன்னேறியுள்ளனர்.
சர்வதேச ஆதரவு பெற்றிருக்கும் யெமன் ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதியின் விசுவாசம் கொண்ட ஆயுததாரிகள் மற்றும்

மனைவி தற்கொலை! கணவனும் தற்கொலை செய்ய முயற்சி


இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

அரசு ஊழியரை தாக்கியதால் குற்றவாளி என தீர்ப்பு! தண்டனை அறிவிப்பால் கோவா அமைச்சர் ராஜினாமா!


கோவா அமைச்சர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ தனது பதவியை

கூட்டணி உதயமான பின்னர்தான் தாங்கள் ஒரு பிரபல்யமான சட்டத்தரணி என்ற காரணத்தினால் தந்தை செல்வா அவர்கள் உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.ஆனந்தசங்கரி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்


எதிர்வரும் காலத்தில் தேசிய அடையாள அட்டையில் சில மாற்றங்களைக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய 8 கி.சே.பிரிவுகள் புதுவருடத்தன்று விடுவிக்கப்படும்! அரச அதிபர்


வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 570 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்;ட 8 கிராம சேவையாளர் பிரிவுகள்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடைமாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா: பரபரப்பு தகவல்


மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தப்பியது சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம்,


சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம்,

கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா நேற்று (02) ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது பெருந்ஒதிரளான பக்தர்கள் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.

அதிவேக நெடுஞ்சாலையின் ஆலோசனைக் கட்டணம் கி.மீற்றருக்கு 124 மில்.ரூபா

* லுணுகம்வெஹர - கதிர்காமம் 1 கி.மீ 259 மில்லியன் செலவு
* கேகாலை - 1 கீ.மீ 722 மில்லியன் செலவு
மக்களின் பணம் வீண் விரயம்
மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையம் வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஆலோசனைக் கட்டணமாக ஒரு கிலோமீற்றருக்கு 12

மத்திய அமைச்சராகிறார் மெஹபூபா: நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 'கல்தா'!


மத்திய அமைச்சரவையை அடுத்த வாரம் விரிவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாகவும், இதில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மெஹபூபாவின் தந்தை முப்

சோனியா குறித்த சர்ச்சை கருத்து: புதுச்சேரியில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல்!




காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில்

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது : இராணுவத் தளபதி திட்டவட்ட

 வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : ஐ.நா சிறப்பு தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ



இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை.

5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால

மே 5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி

மாகாண சபை வெற்றிடத்துக்கு உறுப்பினர் நியமிப்பதில் இழுபறி


வடக்கு மாகாண சபை ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உறுப்பினர் பதவி வெற்றிடமாகி ஒரு மாதம்

திண்டுக்கல்; கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே 9 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில், அதிகாலை 1.30 மணிக்கு ஏற்ப்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் பலியானார்கள். 

ad

ad