புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

முதலமைச்சர் CV எமக்குக் கிடைத்த சொத்து; எங்களை எவராலும் பிரிக்க முடியாது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழு கூட்டத்தினைக் கூட்டி வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் சேர்ந்து இயங்க கூடிய வலுவான கட்டமைப்பு ஒன்றினை தற்போது உருவாக்க முன்வந்துள்ள எமது தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எனது நன்றியினையும்

தேர்தலில் நிற்பது உறுதி, வெற்றியும் உறுதி: விஷால் பரபரப்பு பேட்டி



திருச்சியில் நடிகர் விஷால் தலைமையில் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனை திருச்சி விஷால் ரசிகர்

கூட்டமைப்பை சிதைக்க சதி! எம்மவர் சிலரும் மறைமுகமாக உடந்தையோ என சீ.வி. சந்தேகம்: மாவையும் பாய்ச்சல்


வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில்

மைத்திரியின் யோசனையை நிராகரித்தார் மஹிந்த!


அரசியலை கைவிட்டால் மரியாதைக்குரிய பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வந்தமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.

வன்னியூர்க் கவிராயருக்கு சொந்த ஊரில் சிலை;வைபவ ரீதியாக திறந்து வைத்தார் சீ.வி


வவுனியா மாவட்டத்தினதும், வன்னிப் பிரதேசத்தினதும் முன்னோடி கவிஞராகிய வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம்

கஞ்சா வைத்திருந்த வழக்கு; பிணை மனு மேல் நீதிமன்றால் தள்ளுபடி


யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கின் பிணை மீளாய்வு மனுவை யாழ்.
பெண்களுடன் சேட்டை செய்பவர்களை கைது செய்ய மன்று உத்தரவு 
வதிரி சந்தியில் நின்று பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் 'மின்னல் இளைஞர் குழுவினரை'' உடனடியாக

அநுராதபுர அரசியல் கைதிகளை சந்தித்தார் விஜயகலா


அநுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மகளீர் விவகார பிரதி அமைச்சர்  விஜயகலா  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக

20 ஜூன், 2015

றகர் வீரர் தாஜூடீன் கொலை தொடர்பில் மகிந்தா மகன் யோசித்த கைதாகும் சாத்தியம்?


பிரபல றகர் விளையாட்டு வீரரான மொஹமட் தாஜூடீனின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கௌரவிப்பும், கலந்துரையாடலும்.



Sanmugalingam

























திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
(ஒய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான்) .
காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3.00 மணி
இடம்: பேர்ண் சிவன்கோவில் ஆலயம்,
Europeplatz1
3008 Bern (Fribourgstr -1)
இலங்கையில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத் தலைவரும், புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும், ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்களின் சமூக, ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி, புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்
இவ்வண்ணம்
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை
தொடர்புகளுக்கு அ. நிமலன் 0791244513
தகவல்.. திரு.அரியபுத்திரன் நிமலன்.

ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச்சூடு : 5 தமிழர்கள் கைது- 70 பேர் தப்பி ஓட்டம்




 ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு

நடிகர் சங்கத் தேர்தலை விட்டு ஓட நாங்கள் கோழையல்ல: சரத்குமார்


 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டத்தின் சார்பில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நிதி அளிக்கும்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மேல் முறையீடு



வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட  சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக

வைகோவுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளது : சீமான்



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

உள்@ராட்சி சபைகளுக்கு 4819 வட்டாரங்கள், 5081 உறுப்பினர்கள் எல்லை நிர்ணய அறிக்கையில் தெரிவிப்பு


பொதுத் தேர்தலில் ஐ.தே.க தனித்தே போட்டியிடும்


* பிரதமர் ரணில் தலைமையிலான கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு
* வேட்புமனு குழுவை நியமிக்கும் அதிகாரமும்

மலசல குழிக்குள் விழுந்து பெண் உட்பட 4 பேர் பலி

மலசலகூட குழிக்குள் விழுந்து ஒரு பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று ரம்புக்கன மீதெனிய

பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது!- கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்


கிழக்கு மாகாண சபையில் 2008 ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையான் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதைப் போன்ற நிதி வீண்விரயம்

உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா


உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து

உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா


உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து

சிறையில் 300 அரசியல் கைதிகள் உள்ளனர்: அஜித்குமார


இலங்கையில் அரசியல் கைதிகள் என்று ஒருவரும் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றபோதும் குற்றச்சாட்டுக்களின் பேரில் 300

அரசின் செலவில் மகனுடன் 40 வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட அமைச்சர்


புதிய அரசாங்கத்தின் 100 நாட்களுக்குள் அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த

சுவிட்சர்லாந்தில் நில நடுக்கம்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்



சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வாலெஸ் மண்டலத்தில் மிதமான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதில் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அதிகளவில் போலி சாட்சியமளிக்கப்படுகின்றது!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அதிகளவில் போலி சாட்சியங்கள் அளிக்கப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம்

கழிவு எண்ணெய் தாக்கம்: 5 வருடங்களின் பின்னரே சுன்னாகம் நீரை பயன்படுத்தலாம்!

கழிவுஓயில் கலந்த சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணற்று நீரை சுமார் 5 வருடங்களின் பின்னரே பயன்படுத்தலாமென்ற

உலக அகதிகள் நாள் இன்று அனுஸ்டிப்பு


உலக அகதிகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 20ம் திகதி இந்த தினம் நினைவுக்கூறப்படுகிறது.

பாடசாலைக்கு அருகாமையில் இருந்து ஐஸ்கிறீம் மற்றும் சில்லறை கடைகள் அகற்றப்பட்டுள்ளன என்கிறார் : யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி


யாழில் போதைக்கு பல இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.குறிப்பாக பாபுல், மாவா) போன்ற போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில்

வடக்கு விவசாய அமைச்சினால் 18பேருக்கு நியமனம் வழங்கி வைப்பு


வடக்கு மாகாண விவசாய மற்றும்  நீர்ப்பாசன அமைச்சுக்களின்  வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 18 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. 

எனது அரசியல் வாழ்க்கையில் ஒருசதம் கூட என் சட்டைப்பையில் போடவில்லை ; முதலமைச்சரின் கூற்றுக்கு மாவை எம்.பி பதில்


எனது 50 வருட அரசியல் வாழ்க்கையில் ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசிடமிருந்தும் ஒரு சதத்தைக் கூட நான்  வாங்கவில்லை .எனவே தெற்கில் வைத்து 26 மில்லியன்

மஹிந்த மைத்திரி இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வி?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு

பிரதமர் வேட்பாளர், தேசியப் பட்டியல், சு.க வேட்புமனு! மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது!- ஜனாதிபதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ

பிரதமரின் உத்தரவில் மஹிந்தவிற்கு உலங்கு வானூர்தி


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உலங்கு வானூர்தி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக

ரொறன்ரோ நகரத் தலைவர் திரு. யோன் ரோறி அவர்கள் தமிழ்த் தெரு விழா நிகழ்வின் அறிவிப்பை வெளியிட்டார். ஆகத்து மாதம் 29 மற்றும் 30ஆம் நாள் இடம்பெறும் நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பர்.









ஆசியாவுக்கு வெளியே முதலாவது தமிழ்த் தெரு விழா பற்றிய அறிவிப்பு நிகழ்வு உற்சாகத்தையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அரசு வேறு இராணுவம் வேறு என்ற நிலையில் தான் ஆட்சி நடக்கிறதா?


சிங்கள அரசுக்கு அடங்காமல் "நாம் அரசை உற்று நோக்கி கொண்டு இருக்கின்றோம்!" என இராணுவம் அறிக்கை விடுகின்றது

19 ஜூன், 2015

கிளிநொச்சி எஸ்.கே.மூதாளர்கள் (சுவிஸ் எஸ்.கே.நாதன்) பேணகத்திற்கு வட மாகாண முதல்வர் விஜயம்

வடக்கு மகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
அதனொரு கட்டமாக கிளிநொச்சி மலையாளபுரத்தில் கொடையாளி எஸ்.கே.நாதன் என்பவரால் சிறப்புற பேணப்பட்டு வரும் எஸ்.கே.மூதாளர்கள் பேணகத்திற்கு விஜயம் செய்து அங்கு இருக்கும் மூதாளர்களின் நலன்களை விசாரித்ததுடன் அவர்களுடன் தேனீர் விருந்திலும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது முதல்வருடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நாவை.குகராசா சமூகசேவையாளரும் ஓய்வு நிலை அதிபருமான இராஜேந்திரம், சமூகசேவையாளர் நிதர்சன்செல்லத்துரை (கண்ணன்), கிராமசேவையாளர் சந்திரபாலன், கரைச்சி பிரதேசசபையின் செயலாளர் கிருஸ்ணகுமார், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் உபதலைவருமான பொன்.காந்தன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் மூதாளர் பேணகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இராமகிருஸ்ணமிசன் மற்றும் கொடைவள்ளல் எஸ்.கே.நாதன்  ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து
இப்பாடசாலை அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட போது இராமகிருஸ்ண மிசன் நிறுவனத்தினர் இங்கு கொட்டில்களை அமைப்பதற்கான செலவையும் சுற்றுவேலி அமைப்பதற்கான செலவையும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரம் குடிநீர், கழிப்பறை வசதிகளை இங்குள்ள மாணவ, ஆசிரிய சமுதாயத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இராம கிருஸ்ணமிசன் தலைமை சுவாமியார் சர்வரூபானந்த மகராஜ் அவர்கள் வலது கை கொடுப்பதை இடது கை தெரிந்து கொள்ளப் பிரியப்படாதவர். ஆனால் பல கொடைகளைக் கையளித்து வருபவர். அத்துடன் சுவிஸ் நாட்டில் வாழும் கொடைவள்ளல் திரு.எஸ்.கே.நாதன் அவர்களின் பெருந்தன்மையால் 5 லட்சம் ரூபா செலவில் ஆசிரியர்களுக்கான விடுதி ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இன்னும் பல அபிவிருத்திப் பணிகளுக்காக 15 லட்சம் ரூபாவரை அவர் வழங்கி உதவியதாகவும் அறிகின்றேன்.
இப்பேர்ப்பட்ட கொடைவள்ளல்களால்த்தான் இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் எமது பிள்ளைகள் துணிவுடன் தலைதூக்கி நிமிர்ந்து நிற்கின்றார்கள். அதற்குக் கைமாறு செய்ய வேண்டிய கடப்பாடு மாணவ மாணவியராகிய உங்களைச் சார்ந்தது.
அன்பார்ந்த பிள்ளைகளே! கல்விதான் எமது மூலதனம். ஆகவே கடந்து போன சோகங்களை மனதில் ஒரு புறம் வைத்துவிட்டு, புதிய உத்வேகத்துடன் முறையாகக் கல்வி பயின்று எதிர் காலத்தில் தலைசிறந்த கல்விமான்களாக நீங்கள் மாற வேண்டும் என வாழ்த்தி இன்றைய இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்துக் கௌரவித்த இப்பாடசாலை சமூகத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
அன்னைசாரதா புதிய கட்டட திறப்பு விழாவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை ப.அரியரத்தினம் கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நாவை.குகராசா ஓய்வுநிலை அதிபர் இராஜேந்திரம் அயல்பாடசாலைகளான பாரதிபுரம் மகா வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம், இராமகிருஸ்ணா வித்தியாலயம், செல்வாநகர் அ.த.க.பாடசாலை கனகபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாயாலயம் ஆகியவற்றின் அதிபர்கள் பிரதிஅதிபர்கள் கிளிநொச்சி கல்வி வலயத்தில் தொழில்நுட்ப அதிகாரி வேல்குமரன் கிராம சேவகர் சந்திரபாலன் ஓய்வுநிலை கிராமசேவகர் வைரவநாதன் தமிழரசுக்கட்சியில் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன் அன்னை சாரதா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பெற்றார்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
சோகங்களை தள்ளி வைத்து விட்டு உத்வேகத்துடன் கற்க வேண்டும்! மாணவர்கள் மத்தியில் வட மாகாண முதலமைச்சர்
கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா இன்று பாடசாலையின் அதிபர் கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சிறப்பு உரையாற்றினார். அவர் தனது உரையில்
அதிபர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ மாகாணசபை உறுப்பினர்களே, ஆசிரியர்களே, மாணவச் செல்வங்களே, சகோதர சகோதரிகளே,
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று அதனைத் திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இப்பாடசாலை மாணவர்கள் கிடுகினால் வேயப்பட்ட நீண்ட ஓலைக் கொட்டில்களில்  கடந்த 3 ஆண்டுகளாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த போதிலும் அவர்களின் கல்வி முன்னெடுப்புக்கள் எதுவித குறைகளுமின்றி வளர்ச்சியுற்று இன்று 350 ற்கும் மேற்பட்ட பிள்ளைகளையும் 15 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு பாடசாலையாகத் திகழ்ந்து வருவது பெருமைக்குரியது.
1977 மற்றும் 1983ல் நடைபெற்ற இனக்கலவரங்கள் காரணமாக மலையகப்பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மிகக் கூடுதலான மக்கள் கிளிநொச்சிப் பகுதியில் அமைந்துள்ள பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், ஆகிய பகுதிகளில் குடியமர்ந்தனர். இவர்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகப் பாரதிபுரத்திலே பாரதி வித்தியாலயம் என்கின்ற பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. எனினும் 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் அதனுடைய ஆரம்பப்பிரிவு தனியானவொரு அலகாக இயங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. ஆரம்பப் பிரிவைத் தனியலகாக வேறொரு இடத்தில் ஆரம்பிக்கும்படி அதிகாரிகளின் தொடரழுத்தங்கள் இருந்து வந்தன. ஆரம்பப் பிரிவுக்கான ஒரு காணியை பெற்றுக் கொள்வதில் ஏற்படக்கூடிய இராணுவக் கெடுபிடிகள் போன்ற பல சிரமங்களுக்கு மத்தியில் அக்காலத்தில் அதிபராக இருந்த திரு.இராஜேந்தின் அவர்களின் கடுமையான முயற்சியின் காரணமாக 5 ஏக்கர் காணியை இப்பாடசாலைக்காகப் பெற்றுக் கொண்டு அக்காணியினுள் உடனடியாகவே 100 அடி நீளம் 25 அடி அகலக் கொட்டில் ஒன்றையும் அதே போன்று 50X25 அளவிலான இன்னொரு கொட்டிலையும் அமைத்து இப்பாடசாலை பாரதி ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்கனவே பாரதி வித்தியாலயம் என்கின்ற பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தமையால் இப் பெயரில் ஒரு ஆரம்பப் பாடசாலையைத் தொடங்க முடியாது எனவும் நண்பகல் 12 மணிக்குள் புதியதொரு பெயரை அனுமதிக்காகச் சமர்ப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டதாக அறிகின்றேன். எனினும் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு ஆகியன ஒன்றாகக் கூடி ஆராய்ந்து அன்னை சாரதாதேவி ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இப்பாடசாலையைப் பதிவு செய்து இன்று நல்ல முறையில் இப்பாடசாலை அன்னை சாரதாதேவி வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. இது இங்குள்ள ஆசிரியர்களினதும் அதிபரினதும் கடுமையான உழைப்பையும் ஊக்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
நான் இப்பகுதிக்குச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் குறைகேள் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தேன். அப்போது மிகவேதனைக்குரிய விடயமாக 2006 – 2009 வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் சுமார் 120 பாடசாலைப் பிள்ளைகள் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர் எனவும் 200 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்த மாணவர்களாகினர் எனவும் 30 பிள்ளைகளின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியாது என்றும் அறிந்தேன். இவ்வாறு கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் இருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணில்த்தான் இன்று 150 அடி நீளத்தையும் 25 அடி அகலத்தையும் கொண்ட 6 வகுப்பறைகள், ஒரு காரியாலய அறை, ஒரு களஞ்சிய அறை என்பனவற்றைக் கொண்ட இந்தக் கட்டடத் தொகுதி மிக அழகாக 6.2 மில்லியன் ரூபா செலவில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கின்றது. இறந்து போன அந்தச் சிறார்களை இவ்விடத்தில் மனதில் நிறுத்தி அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மனதுள் பிரார்த்திப்போமாக!
 இப்பாடசாலை ஒரு அழகிய கட்டிடத் தொகுதியைக் கொண்டுள்ள போதிலும் கழிப்பறைகள் எதுவும் இங்கு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் பாரியதொரு குறைபாடாக நான் கருதுகின்றேன். இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் சுற்று வட்டாரத்தை அசுத்தப்படுத்தாமல் அங்கு கட்டப்பட்ட கழிவறைகளைப் பாவித்த மக்களுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக எங்கோ வாசித்த ஞாபகம். சுத்தம் சுகம் தரும் என்ற ஆன்றோர் வாக்கியத்தை நாங்கள் மறக்கக் கூடாது. உரியவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி சில கழிப்பறைகளை இங்கு அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

17/06/2015 புதன் கிழமை நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கொடியேற்ற திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது


unnamed

புலம்பெயர் தமிழர்கள் அறிவு யுத்தம் செய்யும் விற்பன்னர்களாக நாடு திரும்புகின்றனர்: கல்விப் பணிப்பாளர்

யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதியிலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் வெளியேறினாலும் வெளிநாடுகளில் புலம்பெயர்து வாழ்ந்த

கொள்ளையர்களை பிடிப்பது போல் நடிக்கும் பொலிஸார்: வேலணை பிரதேச செயலர் குற்றச்சாட்டு

யாழ்.தீவகம், மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளை அதிகரித்திருக்கும் நிலையில் மணல் கொள்ளையர்களை பிடிக்கப்போகும் பொலிஸார், கொள்ளையர்களை பிடிக்காமல் பிடிப்பதுபோன்று நடிக்கிறார்கள் என வேலணை பிரதேச செயலர் குற்றஞ்சாட்டியுள்

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பிரேசில்–செர்பியா

20–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரண்டு

‘8,000 மைல் தூரம் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம்’ கிழே விழுந்தவர் உயிரிழப்பு, மற்றொருவர் உயிர் ஊசல்


பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரப்பகுதியில் ஒளிந்து பயணம் செய்தவர் கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் இருந்து பிரிட்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு பிரிட்டன் ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 747-ரக விமானம் கடந்த புதன்கிழமை மாலையில் புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 11 மணி

பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பு


பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும்   வீடியோ ஒன்று நேற்று   மாலையில் வாட்ஸ் அப்பில் வெளியாகி இருப்பது போலீசார்   மத்தியில் கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

பரபரப்பான சாலையில் 2 ஆண்   போலீசாருடன் நின்று கொண்டு   பெண்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன சோதனையில்

மும்பையில் பயங்கர கடல் சீற்றம் பாந்திரா–ஒர்லி கடல்வழி மேம்பாலம் மூடல்

பலத்த மழைக்கு இடையில்  இன்று கடல் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. மதியம் 2 மணி அளவில் 4.47 மீட்டர் உயரம் வரை கடல்

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டும் – ஜெனிவாவில் அமெரிக்கா

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில் உரையாற்றிய

இன்புளுவன்சா தாக்கம்; 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

இன்புளுவன்சா வைரஸ் தாக்கம்  காரணமாக 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட  30 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என வவுனியா வைத்தியசாலை

பிஞ்சுகளின் இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணின் மீதே இன்று மாடிக்கட்டடங்கள்; வடக்கு முதல்வர்


news
கொத்துக் குண்டுகள் மூலமும்  எறிகணைகள் மூலமும்  எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின்  உடல்களிலிருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிப் போன மண்ணில் தான் இன்று மாடிக்கட்டடங்கள்  முளைத்துள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 
என் இனிய உறவுகளுக்கு காலை வணக்கம்! 19.06.2015 புங்குடுதீவு 5 ஆம் வட்டாரம் இறுப்பிட்டி பெரியபுலம் ஸ்ரீ விரகத்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா தீர்த்த திருவிழா புகைப்படங்கள்.

மகிந்தவுக்கு தேசியப் பட்டியலோ, வேட்பு மனுவோ இல்லை!

நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு இன்னும் எதுவும் மிச்சம் இல்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

18 ஜூன், 2015

யாழ்.வலிகாமம் வடக்கில்25 வருடங்கள் பின்னர் சொந்த மண்ணை பார்க்கும் மக்கள்

யாழ்.வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான ஒருபகுதி நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு

கௌசல்ய சில்வா 80 ஓட்டங்கள் - வலுவான நிலையில் இலங்கை


இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 2 ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா? - பதவியை பறிக்க சந்திரிகா சதி: பிரசன்ன


மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

290 புதிய பேருந்துகள்-55 சிற்றுந்துகள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்




தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 290 புதிய பேருந்துகள் மற்றும் 55 சிற்றுந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா

நெய்மருக்கு சிவப்பு அட்டை: அடிதடியில் முடிந்த பிரேசில் - கொலம்பியா ஆட்டம் (வீடியோ)




கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், கொலம்பிய அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோல்வியடைந்தது.

அனிதா, ப்ரீதா, சுனீதா, சங்கீதா: புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டிய ஜெயலலிதா!




 காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள அகான்க் ஷா என்ற வெள்ளைப்

நடிகர் சங்க விவகாரங்களில் தவறு ஏதும் செய்யவில்லை: எங்கள் அணி வெற்றி பெறும்: மதுரையில் சரத்குமார் பேட்டி


நடிகர் சங்க விவகாரங்களில் தவறு ஏதும் செய்யவில்லை என்றும், எங்கள் அணி வெற்றி பெறும் என்று நடிகர் சங்கத்

பேரறிவாளனுக்கு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை



பேரறிவாளனுக்கு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று (வியாழன்) காலை அவர் புழல் சிறையில் இருந்து சென்னை ராஜீவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு

வடக்கில் காவல் நிலையங்களே மூடப்பட்டன இராணுவ முகாம்களல்ல :ஒப்புக் கொண்டது படைத்தலைமையகம்


தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் கிடையாது எனத் தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம்,யாழ்ப்பாணத்தில்

பெண்களை சில்மிசம் செய்யும் கிழடுகள்


யாழ் நகரப்பகுதிகளில் குறிப்பாக யாழ் கஸ்தூரியார் வீதிபெருமாள் கோவில் வீதி கன்னாதிட்டி வீதி ஆகிய வீதிகளில் பயணிக்கும் பெண்களுடன் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி சேட்டை செய்வதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதிகளால் பயணிக்கும் தனியார் கல்வி 

யாழில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பாடசாலை மாணவர்களை மடக்கி பிடித்தனர் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள்


யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப்

எதிர்பாராத வேளையில் நாடாளுமன்றம் கலையும் : மைத்திரி உறுதி


எவரும் எதிர்பாராத விதத்தில் விரைவில் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியிடம் உறுதியளித்துள்ளார்

முதல்வர் விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்கக் கூடாது-வலம்புரி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு நிதி கொடுக்கப்பட்டதாக வடக்கு மாகாண முதல்வர்

அடியாட்களுடன் கைதான பல்கலைக்கழக மாணவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிணை மறுப்பு


யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி பெற்றோல் குண்டுகள். தடிகம்புகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைது செய்யப்பட்ட

சுன்னாகம் பகுதியில்15 பவுண் நகைகள், இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றையும் கொள்ளை


சுன்னாகம் பகுதியில் இன்று அதிகாலை வீட்டுரிமையாளர்களை கத்தினால் குத்துவோம் என மிரட்டி கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது.

17 ஜூன், 2015

                        கௌரவிப்பும் கலந்துரையாடலும் 
                                           திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
                                (ஒய்வு பெற்ற அதிபர்,சமாதானநீதவான்) .

காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  3.00 மணி
இடம் ;பேர் ண்   சிவன்கோவில் ஆலயம் ,Europeplatz1 3008 Bern(Fribourgstr 1

தாயகத்தில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான ஒன்றியத் தலைவரும ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேசமகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே சண்முகலிங்கம்  அவர்களின் சமூக ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி , புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில்  மண்டபத்தில் நடைபெறவுள்ளது .அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்


இவ்வண்ணம் 
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை 
தொடர்புகளுக்கு அ  . நிமலன் 0791244513
www.panavidaisivan.com

2 லட்சத்திடம் 100 கோடி தோல்வி!


குவாம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்: தமிழக அரசு அறிவிப்பு


அனைத்து தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்த  அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது குறித்து குழு அமைப்பது எப்போது? என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கேள்வி எழுப்பினார்.

600 பொலிஸார் கொலை குறித்து கருணாவிடம் விசாரணை


யுத்த காலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிழக்கு

எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்: மனோ கணேசன்


எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பதுஅல்லதுகடலின் கீழால் சுரங்கப்பாதை

இலங்கை - இந்தியாவை தரைவழி மார்க்கத்தால் இணைக்க ரூ. 58 ஆயிரம் கோடியில் திட்டம் 
இலங்கையையும் இந்தியாவையும் தரை வழி மார்க்கத்தால்
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு 
கிளிநொச்சி  அம்பாள்குளம் பகுதியில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மீட்டுள்ளனர். 
ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் ஆகிய இருவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
முறைப்பாட்டினை ஏற்கமறுத்தனர் பொலிஸார் ; வித்தியாவின் சகோதரன் மன்றில் சாட்சியம் 
எமது வற்புறுத்தலின் பின்னரே ஊர்காவற்றுறை பொலிஸார் முறைப்பாட்டைப்பதிவு செய்து கொண்டனர் என வித்தியாவின்  சகோதரன் மன்றில் சாட்சியமளித்துள்ளார். 
ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு விசாரணை: 
நான்காவது முறையாக சுப்பிரமணிய சாமி ஆஜராகவில்லை


ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவரது வக்கீலாக ஆஜராக இருந்த சுப்பிரமணிய சாமி
வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்: கிழக்கு மாகாண முதலமைச்சர்
கடந்த மாதம் வன்புணர்வுகுட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்­குடுதீவு  மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலையின் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான
விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்போம்: மாவை சேனாதிராஜா பி.பி.சி 
தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, தமிழ்த்
மேல் மாகாணசபையின் ஆளும் கட்சி இரண்டாக பிளவு?
மேல் மாகாணசபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இரண்டாக பிளவடைந்து இருவேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்புக்களை இன்று  நடத்தியுள்ளனர்.

16 ஜூன், 2015

சுவிஸ் இந்து மத கோவிலில் தமிழ் பெண் பூசாரிகள்: எதிர்ப்பா? ஆதரவா? (வீடியோ இணைப்பு)


சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து மத கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருவதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. 

கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி! எதிர்கட்சி தலைவராக விமலவீர திசாநாயக்க தெரிவு


கிழக்கு மாகாண சபை இன்று காலை கூடியபோது மாகாணசபை எதிர்க்கட்சி தலைவராக விமலவீர திசாநாயகவை நியமிக்குமாறு, சபையின் எதிர்க்கட்சி

மாணவியின் இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்ததுகுற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சாட்சியம்

மாணவியின் இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்தது! மரத்தில் அவரது கால்கள் இழுத்து கட்டப்பட்டிருந்தன! குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சாட்சியம்

சம்பூர் காணி விடுவிப்பு; வழக்கு யூலை 10வரை ஒத்திவைப்பு


சம்பூர் காணி விடுவிப்பு தொடர்பிலான வழக்கு யூலை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வருகிறார் ஒபாமா


அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிரி சார்பில் சட்டத்தரணி ஆஜராவதை எவராலும் தடுக்க முடியாது; ஊர்காவற்றுறை நீதவான்


எதிரி சார்பில் ஆஜராகும் எந்தவொரு சட்டத்தரணியையும் தடுப்பதற்கு எவருக்கும் முடியாது . அவ்வாறு தடுத்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதற்கான

கடவுச்சீட்டு பறிமுதல்! பிணையில் விடுதலையானார் பசில்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியது.

வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!


யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலைவழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்

ad

ad