புங்குடுதீவு ஊரதீவு குடும்பஸ்தர் கேரதீவு மயானம் அருகே தற்கொலை
புங்குடுதீவு ஊரைதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை மூன்று மணியளவில் கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு அண்மையில் ஊரதீவு நோக்கி செல்லும் வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த ஐயம்பிள்ளை விஜயகாந்தன் (காந்தி ) வயது 47 என்பவரே தற்கொலை செய்து கொண்டவர் என அறியக்கிடககிறது இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின் புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின் கணவருமாவார் .தற்போது இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை