பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி
-
23 ஜூன், 2019
இன்று நடைபெற்ற சுவிஸ் தமிழர் லீக் சுற்றுப்போட்டிகளில் அரை இறுதி ஆடடத்தில் லீஸ் யங்ஸ்டார் கழகம் யஙபேர்ட்ஸ் கழகத்தை 6 - 2 என்ற ரீதியில் பாரிய வெற்றியைப் பெற்று இறுதியாடடத்தினுள் நுழைந்துள்ளது
மற்றைய அரை இறுதியாடடத்தில் தமிழ் யுனைடெட் றோயல் அணியை எதிரத்தாடி 1-1 என்ற சமநிலையை அடைந்த போதும் பனாலடி உதை வெற்றி நிர்ணயிப்பில் 6-5 என்ற ரீதி வென்றுள்ளது எதிர்வரும் 07.07.2019 அன்று இறுதியாடடத்தில் யங்ஸ்டரை எதிர்த்து தமிழ் யுனைடெட் விளையாடும்
உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி
பிரித்வெய்ட்டின் சதம் வீண் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம்
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.
நட்டாங்கண்டல் - அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்
பனங்காமம் நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.
யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்
8000 பேரை நாடு கடத்தவுள்ள இலங்கை
வீசா காலாவதியான நிலையில், தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது.
போட்டியில் இருந்து விலகும் மைத்திரி?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேட்ற்கிந்திய தீவுகள் நியூசீலாந்தின் 292 ஓட்ட்ங்களை கடைசி நேர மீ இந்திய தீவுகள் வீரர் ப்ராத்வைத் 48 வைத்து ஓவரில் மட்டும் 25 ஓட்ட்ங்கள் எடுத்து அட்புத சாதனை ஒன்றை தனது அணிக்கு பெருமை தேடித் கொடுத்துள்ளார் 48 வைத்து ஓவரில் 2 ஓட்ட்ங்கள் அடுத்து வந்து மூன்று பபந்துகளையும் சிச்சார் ஆக்கினார் அடுத்த பந்தை பவுந்தரி அடித்தார் கடைசி பந்தில் ஒரு ஓடட்டும்
22 ஜூன், 2019
65 தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை - உயர்நீதிமன்றம் சனி ஜூன் 22, 2019
இலங்கையைச் சேர்ந்த 65 தமிழர்களினால் இந்தியக் குடியுரிமை பெறுவதற்காகச் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அவர்களை குடியுரிமை கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரியிடம் புதிய விண்ணப்பங்களைச்
அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்
உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்.
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
யாழ். நகரிலுள்ள 5 நட்சத்திர விடுதிகள் மீது வழக்கு - இரண்டு விடுதிகளை மூட உத்தரவு
யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதன்படி பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின்
சுவிசில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்- சந்தேகம் எழுப்பும் மனைவி!
சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மரணம் குறித்து அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
21 ஜூன், 2019
மாலிங்கா மற்றும் உடானே பெரேராவின் பந்து வீச்சு அபாரம் இலங்கை பந்துவீச்சு அணி இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாடட க்காரர்களை வீழ்த்தியுள்ளது ஆனாலும் இன்னும் நம்பிக்கை வரவில்லை ஏனெனில் இங்கிலாந்து மீதமுள்ள 90 பந்துகளில் 82 ஓட்ட்ங்களை எடுக்க வேண்டும் 5 விக்கெட் வீழ்ந்துள்ளது எடுக்கலாம் இலங்கை பந்து வீச்சில் இன்னும் ஏதும் சாதிக்க வேண்டி உள்ளது ஆரம்ப துடுப்பாடடகர்கள் வீழ்ந்துள்ளார்கள் பென் ஸ்டாக்ஸை வீழ்த்தினால் சாத்தியமே இலங்கை சாதிக்கலாம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை! - கூட்டமைப்பிடம் ரணில் உறுதி
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)