புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2019

சிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்படுகிறது – சிறிதரன்

சிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்காது – செல்வம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே

பிரபாவின் நிழலைக்கூட காணாதவர்கள் இப்போ அதிகம் பேசுகிறார்கள்! – மாவை

தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, என்னால் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி

2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஏஎப்சி சம்பியன்ஷிப் தொடர்களுக்கான தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டமாக 40 அணிகள் இடம்பெறவுள்ள மோதலில் எச் குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பை

இ.தொ.கா. கூட்டணியில் த.மு.கூ இ​ணையாது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது தொழிலாளர் தேசிய சங்கமோ இணையாது. அதற்கான தேவை எதுவும் எமக்கு கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

அனந்தி முன்னணியுடன் இணையவில்லை

தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்கும்  முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில்  கூட்டுக்கான  சாத்தியப்பாடுகள் மிகக்

பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்

யாழ்.பண்டத்தாிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்த முயற்சித்த ரவுடிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய நிலையில் படுகாயமடைந்த ரவுடிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
யாழ்  வந்த தொண்டைமானின் வலையில்  விக்கி   வீழ்த்தாரா மொட்டு கட்சியுடன்  சேரவா  அல்லது கூட்டு  வைக்கவா  மொட்டுகட்சியினில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை அவர் இழுத்தடித்துள்ளார் 
விக்கியார் பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் மொட்டு அலுவலகத்திற்கு வந்து சென்றதாக  தகவல் கசிகின்றது 
(VAR )சுவிஸ் சூப்பர்  லீக்  சுற்றிலும்  சந்தேகநிலைகளில் வீடியோ மூலம்  தீர்ப்பு  வழங்கும்  நடைமுறை  அறிமுகம் 
சுவிஸ்  சூப்பர் லீக் சுற்றுப்போட்டிகளில்  நேற்று  முதல்    நடைபெறும் போட்டிகளில்  நடுவர்களை சநதேகம்  உண்டாகும் வேளைகளில்  (VAR ) வீடியோ அசிஸ்டன்ஸ் ரெவெரி -Video Assistence Referee எனப்படும் காணொளியை  பார்த்து  தீர்ப்பு  வழங்கும்   முறை  அறிமுகப்படுத்தப்பட் டு உள்ளது  

ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு 8.50 மணியளவில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மோதியே இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில்

பசிலுடன் பேசினாரா விக்கி?

பசில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

19 ஜூலை, 2019

சலித்துப்போனார் அமைச்சர் மனோகணேசன்?

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடக்கு, கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின்

கருணா குழு புதைத்த சடலத்தை கண்டுபிடிக்க முயற்சி!

மட்டக்களப்பில், ஆயுதக்குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.

வாக்குறுதியை நிறைவேற்றினால் பேசலாம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக, வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

பேச்சுக்கு சம்பந்தனை அழைக்கவில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்

கீத் நொயார் வழக்கில்லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின்

மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்று ஐக்கிய தேசிய கட்சியின் பின்னாசன உறுப்பினர்களால் கொண்டுவரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தன பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருதமிழ் மாணவிகள் பலி

பாடசாலை மாணவிகளில் ஒருவா் உயிாிழந்த நிலையில் காணாமல்போன மற்றய மாணவியை தேடும் பணிகள் கொட்டும் மழைக்கும் மத்தியில் தொடா்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னணியுடன் இணைந்தார் அனந்தி ?

வடமாகாண முன்னாள் மகளீா் விவகாரங்களுக்கான அமைச்சா் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்த்தா்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும்

ad

ad