புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2020

புலம்பெயர்  தமிழர்கள்   நலமுடன்  வாழ  எல்லோரும்  இணைந்து பிரார்த்திப்போம்  உறவுகளே 
கொரோனா அவசர கால  கடடமைப்பில்  தமிழகம்   சிறந்த முறையில் ஒழுங்கு படுத்துவதாக பாராட்டுக்கள் குவிகின்றன முதல்வருக்கு அரச இயந்திரத்துக்கும் நன்றி  தெரிவிக்கும் மக்கள் 
பிரான்ஸ் வாழ்   தமிழ் உறவுகளே --விசா இல்லாத எம்  சொந்தங்கள் பலர்  அனுமதியில்லாத வகையில் செய்த தங்கள் வேலையை இழந்து தவிக்கிறார்கள் வேலையின்றி  பொருளாதாரகஸ்டத்தில் இருப்பதாக  அறிகிறோம் முடிந்தளவு  உணவுக்காக  உதவி செய்யுங்கள் 

சீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை கையாண்டிருந்த பிரதான சூத்திரதாரியை சிஐடியினர் நேற்று (28) இரவு கல்கிசையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை
ஒரு கண்ணீர் மடல் 
-------------------------------
தாயகத்தமிழருக்கும்  புலம்பெயர்  தமிழருக்கும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத  ஓர்  பிணைப்பு  எப்போதும் இருந்துவருகிறது. அந்த இயல்பான  பிருத்திக்க முடியாத உறவை   அத்திவாரமிட்டு  நீரூற்றி  வளர்த்தெடுத்த  பெருமையும் தீர்க்கதரிசனமும்  தேசியத்தலைவருக்கும் அவர் கட்டிவளர்த்த அமைப்புகளுக்கு உரியது . இந்த  தேசியப்பற்றின் அடிப்படையில் தான்  தாயகத்தின் உடைத்தலை  போராட்டத்துக்கு மட்டுமல்ல  சுனாமி,,,, வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வு  பட்டினி ச்சாவு புனர்வாழ்வு என  எல்லா பக்கமும் கைகொடுத்து  நின்றார்கள் புலம்பெயர் தமிழர் . மறுபுறம் புலம்பெயர் தமிழரின் பொருளாதார வளத்தின்   நீரூற்றால் தான் தாயகத்தின் பொருளாதாரபலமும் கடடமைப்பும்  பணப்புழக்கமும் உச்சகட்ட,,த்தில் என்றும்  இருக்கிறது .அத்தோடு  மறைமுகமாக  தொழில் கல்வி புனரமைப்பு  எனவும் தொட்டு நிற்கிறது. இந்த  உள்பரிமாணம் புரியாத சிலரும் அமைப்புகளும்  அவ்வப்போது புலம்பெயர் தமிழரை   கேவலமாக   சித்தரிப்பதும் புறம்கூறலும் அரங்கேறுவது கண்கூடு . இத்தனையையும்  தாங்கி   தலைவரினதும்  அவர்வழிவந்த போராளிகளின் தியாகத்தாலும்  மட்டுமே  தாம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்ற நன்றி மறவாத்தன்மையினால்  அன்றும் இன்றும் தாயாக தொப்புள்கொடி உறவுகளோடு பின்னிபின்னணிந்து   வாழப்பழ கி  விடடார்கள் -. இப்போது மேற்குலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா  புலத்துத்தமிழரையும்  பலவிதத்திலும் பாதிக்கப்போகிறது  உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது மட்டுமல்ல அவர்களின்     அதியுன்னத  பொருளாதாரவளத்தையும்  ஆட்டுவிக்கும் .இந்த வீழ்ச்சி தாயக உறவுகளையும் பாதிக்கும்  கவலைப்படுத்தும் என்பதில் மறுப்பில்லை  ஆதலால்  ஈழத்தமிழர்கள் நாங்கள் புலத்திலும் தாயகத்திலும் ஒருவருக்கொருவர்   புறம்கூறல்  வஞ்சித்தலை  தவிர்த்து  நேசம் கொண்டு  தேசியப்பற்றோடு  தலைவனின் வழியில்  நடைபோடுவோம் . புலத்தமிழரின்  கவலை போக்க சோகம் நீக்க  பிரார்த்திப்போம்  நலம் விசாரிப்போம்  ஒன்றுபடுவோம்  செய்வோமா உறவுகளே 




$


$$$$$$

29 மார்., 2020

சுவிசசில் தற்போதுள்ள  அவசரகால  நிலை  மே   நடுப்பகுதிவரை நீடிக்கப்படலாம் என    உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்  தெரிவிக்கின்றன 

ஸ்பெயின் இளவரசி மரியா தெரஸா   கொரோனாவினால் மரணம் 
பிரிட்டன்  பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா தொறடு இருப்பதை அறிந்த  அவரது மூத்த   ஆலோசகர்  தலை தெறிக்க வெளியே ஓடும்   காட்சி  காணொளியாக உலகில்  வலம் வருகிறது 

தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை முடக்கியது இராணுவம்

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை சிறிலங்கா படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
இத்தாலியின் பரிதாபம் .எல்லோரும்  .பிரார்த்திப்போம்
கொரோனா மரணம் 10 000 ஐ தாண்டியது சனிக்கிழமை மட்டும் 889

உடுவில் சமுர்த்தி அதிகாரிக்கு கொரோனா அறிகுறி! - கிளிநொச்சியில் இருந்தும் ஒருவர் அனுமதி

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

28 மார்., 2020

கொரொனா வைரஸ் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வழிமுறை ஒன்றை பரிந்துரைத்துள்ளார்கள் :

கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.
 சீனா  தனக்கு   போட்டியாக உள்ள நாடுகளை  வஞ்சித்துவிட்ட்தா ? பெப்ரவரி 12 வரை  மனிதனுக்கு மனிதன் பரவும் வைரஸ்  என்று அறிவிக்காமல்  பரவ  விட்ட்து பெப் 12 இல் தான் உலக சுகாதார நிறுவனத்துக்கு  தகவல் கொடுத்ததது சீனா   மக்கள் சென்று  இருக்கும் நாடுகளில் தான்  சீனர்கள்  மூலம்   பரவி உள்ளது 
மோடி நண்பகல் இந்தியாவின்  பிரபலமான  சித்த , ஆயுள்வேத, யுனானி  ,வைத்தியர்களை அழைத்து  ஆலோசனை நடத்தி உள்ளார் தமிழகத்தில் இருந்தும் பலர் கலந்து கொண்டார்கள் 

ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று

கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே
சுவிஸ்  வானொலிகளில்  தமிழ் மொழியில் கொரோனா  விழிப்புணர்வு அறிவித்தல்கள்
சுவிஸில் வாகனங்கள்  வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்   ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி  வானொலிகளில்  தேவையானபோது  இடைநிறுத்தி  வாகன நெரிசல் வீதிகளின் நிலை  போன்ற அவசர  அறிவித்தல்களை  ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு  . வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும்போது  நீங்கள்  தமிழ் பாடல்களை  ஒலிநாடா இசைத்தட்டுகளில்  கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை  நிறுத்தி  உங்கள்  வானொலியை இயங்க செய்து  அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில்  இப்போது  தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி  கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற  அறிவித்தல்களை  தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும்  கூட அறிவிக்கிறார்கள் 
உலகில் 18  உல்லாசப்பயணிகளின்  கப்பல்கள்  எந்த துறைமுகத்துக்கும்   செல்ல  அனுமதி கிடைக்காமல் நடுக்கடலில் தவித்து  வருகின்றன  சிலகப்பல்களில் கொரோனா நோயாளிகள்  இருக்கிறார்கள் 

ad

ad