புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2020

கொரோனா அச்சுறுத்தல்: நம்பிக்கை தரும் முன்னேற்றத்தில் இத்தாலி, பிரான்ஸ் – உலக முழுவதும் உள்ள நிலை

கொரோனா வைரஸ் தாக்கத்தால், இத்தாலி, பிரான்ஸில் ஞாயிற்று கிழமை அன்று குறைந்த அளவு இறப்பு ஏற்பட்டுள்ளது.உலகில் ஞாயிற்று கிழமையில் மொத்தம் 5,399 கொரோனா வைரஸால் இறப்பு ஏற்பட்டுள்ளது.

24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை! மீண்டு வரும் இத்தாலி

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

கொரோனா தொடர்பில் ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மகிழ்ச்சியான செய்தி

ஜேர்மனியில் கொரோனா தொடர்பில் சமீபத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மட்டக்களப்பில் இருந்து நெல் வெளி மாவட்டத்துக்கு கொண்டு செல்ல தடை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றில் இருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட
சுவிட்சர்லாந்து இப்போதுவரை இன்றைய  புதிய தொற்றுக்கள்  80, (11.55)

யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்ட்ங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு இருக்கும்

புதுவருடத்திற்குப் பின்னர் ஊரடங்கில் இருந்து விடுதலை பெறவிருக்கும் மாவட்டங்கள் தொடர்பில் வெளியானது தகவல்

தாவடிஇன்று காலை படையினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது

சிறீலங்கா படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த தாவடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி
விலை வீழ்ச்சி காரணாத்தால் தற்காலிகமாக opec ஒபெக் எண்ணெய்  உற்பத்தியை நிறுத்திக்கொண்டது , 
இந்தியா: இந்தியாவில் இதுவரை 8500 நோய்த்தொற்றுகள் மற்றும் 289 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 25 முதல் 1.3 பில்லியன் குடிமக்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் இப்போதுவரை இன்றைய தொற்றுக்கள் எண்ணிக்கை  189 மட்டுமே  என்ற நல்ல செய்தி  வந்திருக்கிறது ,இனி இறங்குமுகமாகுமா ?
கடந்த 7 நாட் களில் இப்படி 578,676,778,640, 486,481,189
இது விஞ்ஞானஉலகம் வீட்டில் இருந்து கொண்டே வாழலாம் பொறுமை உயிர் காக்கும், அற்பசுகம் இப்போது வேண்டாம் நீகாணாத வாழ்க்கையா?கொஞ்சம்பொரூ எல்லாம் பெறுவாய் 
புலம்பெயர்  தமிழ் நெஞ்சங்களே -  சற்றே நில்லுங்கள்
கொரோனாவினால்  அழிகின்றான்  தமிழன்
கொரோனா தாக்கத்தினால்  ஐரோப்பாவிலும் கனடாவிலும்  தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக  ஒன்று சேர்ந்து  கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ்  போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு  தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான  தகவல்கள்  இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே  தெரியவருகிறது . நிறைய தமிழர்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில்  இருப்பது  அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் .  லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன  நகரங்கள்  கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும்  போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற  தழமில் உயிர்கள்  போய்கொண்டிருப்பதை  பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே  உங்களால் முடியும் . ஊடகங்கள்  தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர்  அறிவாளிகள் என  ஒருகை கோர்த்து  செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை  தாமதிக்க வேண்டாம் .  ஊடகங்கள்  தான்  இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய  தமிழர்  அரசுகளின்  எச்சரிக்கையை  அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர்  சமூகமாக  குடும்பமாக  உறவுகளோடு கூடி குலாவி  வாழ்கின்ற கலாசாரம்  உள்ளவர்கள் .    காசு வசதி  நாளையும்  தேடலாம்  உழைக்கலாம்  உறவுகளை  எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல்  எல்லாமே  உயிர்  இருந்தால்  எப்போதும்  செய்து கொள்ள முடியும்  . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர்  மனைவி  ஸ்பெயின் ராணி  பிரிட்டிஷ் பிரதமர்  ஈரான்  பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று    பதவி அந்தஸ்து  கோடீஸ்வரர்   என்றெ ல்லாம்  பார்க்காத  உயிர்கொல்லி  வைரஸ்  கொரோனா ,   வல்லரசுகளும்  முன்னேறிய நாடுகளுமே  தள்ளாடுகின்றன . பாரிய  பொருளாதார  நெருக்கடியிலும்  உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன  கொஞ்சம்  அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில்  தான் தாயக தமிழரும்  தொங்கி கொண்டிருக்கிறார்கள் .   அனைத்து தமிழரி ன்   உச்சகடட வளர்ச்சியே  பாதிக்கும் . தயவு செய்து  விழப்போடு இருங்கள் உறவுகளையும்  விழிப்புற  செய்யுங்கள் .

12 ஏப்., 2020

புலம்பெயர் நாடுகளில் எம்தமிழ் உறவுகள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்  அமைப்புக்கள், அறிவாளிகள் , பெரியோர் ,ஊடகங்கள் கூடுதல் அக்கறை  செலுத்தி செயல்படுங்கள் கழுத்துக்கு  கத்தி வரும்வரை தாமதிக்காதீர்கள் 

உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால்!… சுவிசில் வசிப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் தமிழ் உறவுகளே . உங்களை  நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் .வயதானவர்கள்  வெளியே செல்லாதீர்கள் , நாளையும் உழைக்கலாம்  உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் ,பட்டினி  கிடந்தாலும்  வீட்டிலேயே  இருங்கள் 

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
13 வயது மனநலம் குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த சிறிலங்கா பொதுசனமுன்னணி தனமுல்ல பிரதேசசபை உறுப்பினர் ரணவீர கட்சியில் இருந்து நீக்கப்படடார்  உறுப்பினர் பதவியையும் சடடபடி பறிக்கப்போவதாக அறிவித்துள்ளனர் 
இலங்கையில் மே   12 ஆம் திகதி தான் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் 
அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது    மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு  இன  அரிசிகளுக்கு  அரசு  விலை நிர்ணயிக்காததால்  அதன் விலைகளை   தா ங்கள்  அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி  விறபதாகவும்  ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல்  பொருட்களின் விலைப்பட்டியலை   மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும்  விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள் 

ad

ad