புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2020

Breaking News ----------------- அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டி

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது.

கூட்டமைப்பு; பேச்சாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள்!

 இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பார் என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ள

5 அக்., 2020

புங்குடுதீவு உறவுகளே .சற்றே செவிமடுங்கள் இந்த பதிவை .
----------------------------------------------------------------------------------------------
தாயகத்தில் தீவகம் மற்றும்  எமது தாயநிலம் புங்குடுதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகளினதும் சமூக ஆர்வலர்களினதும் ஒட்டுமொத்த வேண்டுகோள் ஒலிப்பதிவினை அதன் சாராம்சத்தை தொகுத்து வழங்குகிறோம் . எல்லா சமூக வலைத்தளங்களும் எல்லோருக்கும் பொதுவானவை .யாரும் பார்க்கலாம்  யாரும்  விமர்சனம் செய்யலாம் .எமது  ஊரின் ரூபன் சர்மாவின் சம்பவத்தையடுத்து வித்யாவின் கொலைக்கு பின்னர் போன்றே ஊரின்  புகழுக்கு களங்கம் விளைவிக்க  சில புலம்பெயர் தேசத்து  எங்களூரை சேர்ந்த கனவான்களே கோடரிக்காம்புகளாக வழி  சமைத்து வேடிக்கை பார்க்கின்றனர் . புங்குடுதீவு மக்கள் புலம்பெயர் காலத்துக்கு முன்பிருந்தே கல்வி வர்த்தகம் ஆன்மிகம் என்று எமது ஊரில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் புகழோடு வாழ்ந்து காட்டியவர்கள்.  இதனால் மற்ற ஊறவர்களுக்கு எமது  தாயநிலைத்தை பற்றி இயல்பாகவே பொறாமையும்  கிண்டலும் கொள்வது உண்டு .புலத்து தேசங்களிலும் இது தொடர்கிறது .இன்றைய நவீன கலாசார பிறழ்வு  கொண்ட யுகத்தில் இது போன்ற சம்பவங்கள் எல்லா ஊர்களிலும்  இடம்பெறுவது வழமை . ஆனால் எங்கள்   மண்ணில்  நடக்கும்போது இன்னொருமுறை இது போன்று நடவாதிருக்க  எம்மால் உச்சக்கடட எதிர் வினையாற்றலில் ஈடுபடுகிறோம் ஏனெனில்  எமக்கு  அதற்கான ஆளணி பொருளாதார உலக ரீதியான வலைப்பின்னல் தொடர்பாடல் சக்திகள் நிறையவே இருப்பது தான். மற்ற ஊரவர்கள் இதுவும் கடந்து போகும் என்று போய்க்கொண்டே இருப்பார்கள் .
ரூபன் சர்மாவின் சம்பவத்தையடுத்து காவல் துறை தன்  கடமையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறது .விசாரணை செய்கிறது .சந்தேகநபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் சட் டப்படி இந்த உறுதியான செய்திகளை மட்டும் வேண்டுமானால் எழுதுவதே பதிவிடுவதோ   தான் தர்மம் .இதனை  விடுத்து புலம் பெயர் தேசத்தில் வாழும் எமது ஊரை சேர்ந்த ஒரு சிலர் தங்கள் எண்ணப்படி முகநூல் விளம்பரத்துக்காகவோ இணைய பரம்பலுக்காகவோ  பழைய புராணங்கள் கற்பனை கதைகளை இங்கே  சேர்த்து தமக்கு வேண்டப்படாதவர்களையோ அல்லது அமைப்புகளையோ  இழுத்து  வைத்து எழுதி குளிர் காய்கிறார்கள் உண்மையில் தாய் மண்ணை   உயிராக  நேசிக்கும்  ஒவ்வொரு  புங்குடுதீவு  மனிதனும்  ஊரை தனது சொந்த தாயாகவே மதிக்கிறான்   ஊரில் குற்றங்கள் உருவாக அங்கே   உள்ள  மதுபானசாலை பெரிய காரணமாகும் .தீவகத்திலேயே  இங்கே தான் இந்த மதுபானசாலையை  எண்பதுகளில் திறந்துள்ளார்கள் . கூர்ந்து கவனியுங்கள் முக்கியமாக  இப்படி பிறந்த ஊரையே கேவலமான பழிக்கும் பதிவிடுவோர்  வாழ்வில் வசதியாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக  ஒரு சதமும் ஈயாத பிறவிகள் . ஊருக்கான எந்த  செயல்பாட்டிலும் ஈடுபாடு காடடாதவர்களே இவர்கள் முடிந்தால் அதனை பதிவி டச்சொல்லுங்கள் மற்றவர்கள் அமைப்புக்கள் செய்வதை கண்டு  மனம் புழுங்கி தான்  இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் பிரான்சில் இருந்து  ஒரு ஊரின் உறவுக்கு இதுவே  தொழில் .இவரின் எழுத்துக்களை  கவனித்தால் வேற்று  ஊரவன்  இவர் எதோ ஊருக்கு வெட்டிக்கிழிக்கிறார் போல அது தான் இப்படி விமர்சனம்  செய்கிறார் என்று  ஊகிப்பார்கள் .இவர் தனது பதிவுகளை சமூக வலை தளங்களில் இடு வதோடு அவற்றை இலங்கையின் மக்களுக்கு  பொதுவான கட்சி,  சமூக சேவை அமைப்புக்கள், ஊர் அமைப்புக்கள்  என்றெல்ல்லாம் தேடி தேடி அந்த  தளங்களிலும் குழு நிலை   தளங்களிலும் பதிவிட்டு  கேவலப்படுத்துகிறார் இவரின் பதிவை கண்டு அவர்களும்  நக்கலும்  கிண்டலும்   மிக்க  விமர்சனங்களை(comments ) பதிவேற்றுகிறார்கள் ஏன் எங்கள் ஊரை சேர்ந்தவர்களே மீள்பதிவிடுகிறார்கள் . அங்கே   இருக்கும் உள்விஷயங்கள்  அதனால்  ஏற்படும் பாதிப்புகளை   விளங்கிக்கொள்ளாமல் மேலெழுந்த வாரியாக பார்த்து செய்வது வேதனை அளிக்கிறது .எங்கள்  ஊரை பெண்களை வரட்சியை கேவலப்படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்கவா போகிறீர்கள் .எங்கள் சகோதரிகளின் பண்புகளுக்கு களங்கம்  விளைவிக்க துணை போகாதீர்கள் புலம்பெயர்  புங்குடுதீவு மக்களும்  ஊரின் மக்களும்  பரஸ்பரம் ஆதரவுக்கரங்களுடனும் நண்றிகரங்களுடனும்  பின்னி பிணைந்து வாழ்கிறார்கள் அண்மைய கொரோனா காலத்து நிவாரண பங்களிப்பே  நல்ல சாட்சி இலங்கையில் எந்த ஊர் மக்களுக்கும் கிடைக்காதளவு தாராளமய பொருட்களும் பணமும் கூட கிடைத்தது மறக்க முடியாதது .அன்பு உறவுகளே  நாங்கள் எங்கள் ஊரின் நல்லது கெட்டதுகளை நாங்களே உள்வாங்குவோம்  நாங்களே ஆலோசிப்போம் நாங்களே தீர்த்துக்கொள்வோம் .அந்நியனுக்கு இங்கே வேலை இல்லை .புங்குடுதீவு பல வரலாற்றுப் பெருமை கொண்ட ஊர் .இப்போதும் நாங்கள் அவ்வாறே பேணிப்பாதுகாப்போம் புலத்தாரும் ஊராரும் என்றும் போலவே கை  கோர்த்து உறாவிடி மகிழ்வோம் இது போன்ற ஈனப்பிறவிகளை இனம் கண்டு பகிஸ்கரியுங்கள் நன்றி எங்கள் ஊரவன் மட்டும் கண்ணியமாக நாகரீகமாக விமர்சனம் எழுதுங்கள் 

4 அக்., 2020

என் நினைவுகளில் இருந்து ரூபன் சர்மா ----
---------------------------------------------------------------
இரு வருடங்களின் முன் என்னால்  முன்னெடுக்கப்பட மடத்துவெளி - ஊரதீவு கேரதீவு  வீதி மின்விளக்கு பொருத்தும் பணியை  நானும் என் நண்பர்களும்  கேட்டுக் கொண்டபடி   5  நாட்களாக   கடும் வெய்யில் காலத்திலும்  கஷடம் பாராது  பிரதேச சபை ஊழியர்களோடு  நின்று  உதவி  உபசரித்து  முழுமையாக  என்  திட் டத்தை நிறைவேற்றி தந்து வைத்த  நல்ல உள்ளம்,  85 மின்விளக்குகளை  பிரதேச சபை ஊழியர்களின்  நேர ஒழுங்கின்படி   அவர்கள்  வரும்போது ஓடிச்சென்று ஒத்துழைத்த உங்கள் சேவையை இக்கணம்  என் மனதில் நிறுத்தி பா ர்க்கிறேன்  .கடந்த வருடம் ஏப்ரலில் ஊரதீவு சனசமூக நிலையத்துக்கு  நான்  கட்டிக்  கொடுத்த  சுற்றுமதில் நுழைவாயில் திறப்பு விழாவின் போதும்  கெளரவ விருந்தினராக  வந்து என்னையம் கௌரவித்து சிறப்பித்தீர்கள் . புலம்பெயர் தேசத்தில் நாம் முன்னெடுத்து  செய்து கொண்டிருக்கும்  பாணாவிடையான் ராஜகோபுர மற்றும் ஆலய திருப்பணியில்  கூட பூசகர் என்ற நிலையில் நின்று விடாது  பல்வேறு  காலக்கட்டத்திலும் எம்மை உற்சாகப்படுத்தி  உறவுகளை ஊக்குவித்து  அடிக்கடி  அவர்களின்  ஆதரவை  வேண்டி  நீங்கள்  செய்து கொண்டிருந்த பிரசாரப்பலம்  90 வீதம்  நாம் முடித்திருக்கும்  திருப்பணிப் பாதைக்கு  உரமூட்டியது என்பதையும் நாம் மறவோம் . ஊரின் பசுவதை குற்றங்களை களைய வேண்டிய நீங்கள்  எடுத்த  துணிச்சலான  செயல்பாட் டையும்  தருணத்தில் நினைவு கூறுகின்றோம் . பானாவிடையான்  அருளோடு  உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் சாந்தி சாந்தி சாந்தி 

பிரான்சில் பாரிஸ் புறநகர் பகுதியில் சற்றுமுன் குடும்ப வன்முறை. 5 இலங்கையர்கள் பலி. மேலும் ஐவர் காயம்..

குடும்ப வன்முறை!. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாவு! - மேலும் ஐவர் உயிருக்கு போராட்டம்.
உறவுகளே நீதிக்காக காத்திருங்கள் .நீங்கள் நீதிபதியாக வேண்டாம் 
------------------------------------------------------------------------------------------------------------
புங்குடுதீவில் மதகுரு கொலையை அடுத்து நின்றவன் போனவன்   எல்லாம் நீதிபதியாகி  தீர்ப்பு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .ஊடகம் இணையம் சமூகத்தளம் என்று ஆளாளுக்கு  சமூகத்தில் பெரியவனாக முகவரி கொண்டவர்கள்  எல்லாம்  தமக்கிருக்கும்  பகையை வைத்துக்கொண்டு  வேண்டப்படாதவர்களை  இழுத்து வைத்து கற்பனை செய்திகளை  பதிவி டுகிறார்கள் .அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு  நேரில் பார்த்தவர்கள் போலவே  எழுதுகிறார்கள் .. முடிந்தால்  இலங்கை நீதித்துறைக்கு  உதவி  செய்யுமுகமாக நேரில் சென்று  வாக்கு மூலம்  கொடுத்துவிட்டு வாருங்கள் .சட் டம் நீதித்துறை , காவல்துறை  இருக்கிறது அது தம் கடமையை ஒழுங்காகவே  செய்கிறது.  நீங்கள்  திசை திருப்ப வேண்டிய அவசியம் என்ன .நீதி தீர்ப்பை வழங்கும் . அங்கெ  இருக்கும் இந்த  அரச துறைகளை விட நீங்கள்  இங்கே  இருந்துகொண்டு  நீதி பேசுவதில்  நியாயம்  இருக்கிறதா . கொலை  சந்தேகத்தில்    கைதானவர்கள் கொலை செய்யபடடவர்  யாருமே  எமது ஊரை சேர்ந்தவர்கள் இல்லை .  எமது ஊரவரான நீங்கள் ஏன் எமது ஊரின் பெயரை   உலகம் அறிய  அசிங்கப்படுத்துகிறீர்கள்.  நீதி  தீர்ப்பு சொல்லும்காத்திருங்கள் இணையம் ,முகநூல் ,ஊடகத்தை பிரபலப்படுத்தவோ உங்கள் பெயரை பிரபலப்படுத்தவோ உங்கள் கற்பனை கதைகளை  கட்டி  எழுப்பாதீர்கள்  ஊரின் பெயரால் குளிர் காயாதீர்கள் 

2 அக்., 2020

தமிழரசு கட்சி பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் நியமனம்

Jaffna Editor
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்?

Jaffna Editor
அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறுவருக்கு இன்று (2) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

Jaffna Editorமட்டக்களப்பு நீதிமன்றம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறுவருக்கு இன்று (2) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.

உண்ணாவிரதமிருந்து 1987 செப்.26இல் உயிர்

21 செப்., 2020

திலீபனின் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு

Jaffna Editor

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம் திகதி

கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டார் பிள்ளையான்

Jaffna Editor

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் நிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியை

பகிரங்க விசாரணைக்கு தயார்! கஜேந்திரர்களும் விசாரிக்கப்பட வேண்டும் -மணி அதிரடி

Jaffna Editor
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்-அஷாத் சாலி

Jaffna Editor
தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

11 செப்., 2020

பதவி விலகினார் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்

Jaffna Editor




தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவித்துள்ளார்.

9 செப்., 2020

கூட்டமைப்பின் பேச்சளார் பதவி சம்பந்தனின் ஆசீர்வாதத்துடன் சாணக்கியனிற்கு வழங்கும் காய் நகர்த்தல்கள் ?

Jaffna Editor தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கூட்டமைப்பின் பேச்சளார் பதவி

8 செப்., 2020

மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பஸில்

மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவதாக சபதமெடுத்து அதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ஷ வகுப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 செப்., 2020

நாவிதன்வெளி பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு ஐ தே க கூட்டமைப்பின் காலை வாரியது

Jaffna Editor
அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2 செப்., 2020

20 ஆவது அரசமைப்பு திருத்தத்திற்கு அனுமதி அளித்தது அமைச்சரவை

Jaffna Editorஅரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையால் உருவாக்கப்பட்டு தாயால் வலுப்படுத்தப்பட்ட ஸ்ரீ.சு.கட்சியின் நிலை கண்டு கவலையடைகின்றேன்-சந்திரிகா

Jaffna Editor
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலையை பார்த்து கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ad

ad