னுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிடச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் |
-
15 செப்., 2021
Welcome அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான்!
மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசிகரனிடம் மீண்டும் விசாரணை!
மட்டக்களப்பு சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை மட்டக்களப்பு பொலிஸார்நேற்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். நேற்று காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். |
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள்- இணை அனுசரணை நாடுகள் கவலை.
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன. |
14 செப்., 2021
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை - கூட்டமைப்பு வரவேற்பு!
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
ஐ.நாவின் செயற்பாடுகளில் நம்பிக்கையில்லை!
ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தெரிவித்துள்ளார் |
பச்லெட்டின் கரிசனைகளை ஏற்றுக் கொள்வதாக பிரிட்டன் தெரிவிப்பு!
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரிட்டன், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களைச் தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. |
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். |