புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2023

நாளை யாழ்ப்பாணத்தில் உருவாகிறது 5 கட்சிகளின் புதிய கூட்டணி!

www.pungudutivuswiss.com



முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளையாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளையாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது

தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒப்பத்துடன் முடிவிற்கு வந்தது புதுக்குடியிருப்பு உண்ணாவிரத போராட்டம் (

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், 
அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, 
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால்

யாழில் கட்டுப்பணத்தை செலுத்தியது தேசிய மக்கள் சக்தி

www.pungudutivuswiss.com

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது.

மாதவமேஜரின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த சிறிதரன் முயற்சி

www.pungudutivuswiss.com


மாதவமேஜரின் முயற்சியினை மதிக்கின்றோம் அவர் காப்பாற்றப்பட வேண்டும் அதற்காக எவ்வளவு தூரம் எங்களால் ஒத்துழைக்க முடியுமோ அந்தளவு தூரத்திற்கு அவருடன் சேர்ந்திருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

மாதவமேஜரின் முயற்சியினை மதிக்கின்றோம் அவர் காப்பாற்றப்பட வேண்டும் அதற்காக எவ்வளவு தூரம் எங்களால் ஒத்துழைக்க முடியுமோ அந்தளவு தூரத்திற்கு அவருடன் சேர்ந்திருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணி உருவாகியது!

www.pungudutivuswiss.com



நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'சுதந்திர மக்கள் கூட்டணி' உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'சுதந்திர மக்கள் கூட்டணி' உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக பிரதீபன் நியமிப்பு

www.pungudutivuswiss.com

முறிந்ததுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தல் கூட்டு 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அக்காலத்தில் ஆயுத ரீதியாக பலமான நிலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைவுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டு இரு தசாப்தங்களின் பின்னர் முறிவடைந்துள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தில் தனித்தே போட்டியிடுவதென பெரும்பான்மையோர் சிபார்சு செய்து ஆதரவினை வெளியிட்டிருந்த நிலையில் அதுதொடர்பில் தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான கூட்டமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்காளிக்கட்சியின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஆர்.ராகவன், எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் ஆரம்பமான கூட்டத்தில் முதலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கூட்டத்தில் பெரும்பான்மையோரால் சிபார்சு செய்யப்பட்ட ‘தனித்துப் போட்டி’ குறித்து சம்பந்தன், மாவை.சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக, தற்போதுள்ள 60க்கு 40என்ற கலப்பு தேர்தல் முறைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ள மூன்று அரசியல் கட்சிகளும் தனித்தியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக சபைகளில் ஆட்சி அமைக்க முடியும். அதன் மூலம் அனைத்து சபைகளும் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் கொண்டுவரமுடியும் என்ற விடயத்தினை சுமந்திரன் தொழிநுட்ப ரீதியாக விபரித்தார். அவருடைய கருத்தினை ஏற்று சம்பந்தனும் கூட்;டமைப்பில் உள்ள கட்சிகளும் தனித்தினயாக போட்டியிடுவது தான் பொருத்தமானது என்று கூறினார். இதன்போது செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ராகவன் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சி ஏற்கனவே தீர்மானத்தினை எடுத்துவிட்டது என்பதை நாம் அறிந்துள்ளோம். அதேநேரம், வேட்புமனுக்களை தயார்ப்படுத்தும் ஆரம்பகட்டச் செயற்பாடுகளையும் தொடங்கியுள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கின்றது. அவ்வாறிருக்கையில் தீர்மானமொன்றை எடுத்ததன் பின்னர் எவ்வாறு கலந்தாலாய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, மாவையும் சுமந்தினும் அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். குறிப்பாக சுமந்திரன், ஊடகங்கள் தான் தனித்தனியாக போட்டி என்று தவறான வெளிப்படுத்தல்களைச் செய்துவிட்டன என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், உங்களின்(செல்வம், ராகவன்) ஆகியோரின் யோசனைகளைக் கூறுங்கள் என்றும் கோரியுள்ளார். அச்சமயத்தில், செல்வம் அடைக்கலநாதன், எம்மைப்பொறுத்தவரையில் நாம் கடந்த காலத்தில் தேர்தலுக்கு முகங்கொடுத்ததைப் போன்றே இம்முறையும் கூட்டாக முகங்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், புளொட் பிரதிநிதியான ராகவன், கடந்த காலத்தைப் போன்று இம்முறையும் தேர்தல் ஒதுக்கீடுகளை பிரதி செய்யமுடியாது. ஏனெனில் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சி எமக்கு மூன்று சபைகளை வழங்குவதாக கூறியபோதும் அவ்வாறு இணங்கியதற்கு ஏற்ப செயற்படவில்லை. அதேபோன்று கிளிநொச்சியில் எமது உறுப்பினர்களை புறந்தள்ளி தனியாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களே உள்வாங்கப்பட்டார்கள். ஆகவே இம்முறை ஒதுக்கீடுகள் குறித்து புதிதாக பேச வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார். அதன்போது, சம்பந்தன் மீண்டும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவினுடைய பெரும்பான்மையானவர்களின் சிபார்சை சுட்டிக்காட்டி இம்முறை தனித்தனியாக முகங்கொடுத்து பின்னர் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதே பொருத்தமானது என்று குறிப்பிட்டார். அத்துடன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ராகவன் ஆகியோர் கோருவதன்படி கூட்டாக முகங்கொடுப்பதாக இருந்தால் மாவட்ட ரீதியாகச் சென்று கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களை கோரிய பின்னர் இறுதி முடிவினை எடுப்போம் என்று குறிப்பிட்டார். இந்நிலையில், செல்வம் அடைக்கலநாதன், அவ்வாறு மாவட்ட ரீதியாகச் சென்று இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு போதிய காலம் இல்லை. அதேநேரம், அவ்வாறு கருத்துக்களை கோரி இறுதி முடிவுகள் எடுக்கப்படுகின்ற தருணத்தில் நாம் தனித்துச் செல்லவேண்டி ஏற்படுமாயின் தேர்தலை முகங்கொடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இருக்காது. ஆகவே அந்த முயற்சியானது நடைமுறைச்சாத்தியமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ராகவனும் ஆதரித்துள்ளார். இதனையடுத்து தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மையினரின் தீர்மானப்படியே தனித்துபோட்டியிடம் நாம் தனித்தோ கூட்டமைப்பாகவோ களமிறங்குவோம். அதில் நீங்கள் தலையீடுகளைச் செய்யமுடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அதேகருத்தினை ராகவனும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஈற்றில், தேர்தலில் தனித்தோ கூட்டாகவோ முகங்கொடுப்பது பற்றி தீர்மானம் எடுப்பதற்கு உங்களுக்கு முழு உரித்தும் உள்ளது. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் நாம் சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கூடிப்பேசுவோம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இப்பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்துள்ளது. அதன் பின்னர் செல்வம் மற்றும் ரகவன் ஆகியோர் பேச்சுக்களை தொடராது வெளியேறியுள்ளனர். இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஆர்.ராகவன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சுமந்திரன் கூறுகையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு சிபார்சு தொடர்பில் ரெலோ , புளொட்டுடன் பேச்சுக்களை முன்னெடுத்தோம். அவர்கள் கூட்டமைப்பாகவே போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். எனினும் தனித்தனியாக போட்டியிடுவதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான நன்மைகள் பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்களின் விருப்பப்படி கூட்டமைப்பாக போட்டியிடுவதானால் மாவட்ட ரீதியாக கருத்துக்களை பெற்று தீர்மானம் எடுப்போம் என்றும் கூறினோம். ஈற்றில் அவர்கள் அதற்கும் மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் அவர்கள் தனியாகவோ அல்லது வேறு கூட்டிலோ போட்டியிடுவதற்கான தீர்மானம் எடுப்பதற்கு முழுமையான உரித்தும் உள்ளது. எனினும் அவர்கள் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்த முடியாது. தேர்தல் நிறைவின் பின்னர் அவர்களுடன் பேசத்தயாராகவே உள்ளோம் என்றார். செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில், தமிழரசுக்கட்சி மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை வலுப்படுத்தும் வகையில் தான் பேச்சக்களை நகர்த்த முற்பட்டது. நாம் கடந்த தடவைபோன்று கூட்டமைப்பாக தேர்தலை முகங்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததோடு அதனை வலியுறுத்தினோம். இருப்பினும் தமிழரசுக்கட்சி அதற்கு சம்மதித்திருக்கவில்லை. ஈற்றில் தமிழரசுக்கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாகச் செல்வது உறுதியாகியுள்ளது என்றார். ஆர்.ராகவன் கூறுகையில், எமது கட்சியின் தலைவர் சித்தார்த்தனுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தேன். அ;ந்தக் கூட்டத்தில் மிகத் தெளிவாக எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினோம். எனினும், தமிழரசுக்கட்சி மத்திய குழுவின் பெரும்பான்மை முடிவினை அமுலாக்குவதிலேயே உறுதியாக இருந்தது. அதற்கு அப்பால் எம்மால் நெகிழ்வுத்தன்மையுடன் பேச்சுக்களை நகர்த்த முடியாது போனது என்றார்.

www.pungudutivuswiss.com
முறிந்ததுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தல் கூட்டு
2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அக்காலத்தில் ஆயுத ரீதியாக
பலமான நிலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான

11 ஜன., 2023

ஒரே நேரத்தில் திடீரென தரையிறக்கப்பட்ட 760 விமானங்கள் - வெளியான காரணம்

www.pungudutivuswiss.com
கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில்
 சுமார் 760 விமானங்கள் ஒரே நேரத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 91 விமானங்கள் ரத்து 

பிரான்ஸ் கார் து நோட் தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து: 6 பேர் காயம்: தாக்குதலாளி சுட்டுக்கொலை

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கார் டு நொர்ட் தொடருந்து நிலையம் உள்ளது.
 இது பிரான்சின் மிகவும் பரபரப்பான தொடருந்து நிலையம் ஆகும். 
இந்நிலையில், இந்த தொடருந்து நிலையத்தில் இன்று காலை 6.45 மணியளவில் 

தனித்துப் போட்டியிட்டால் தோற்கடிப்போம்! - தமிழரசுக்கு எச்சரிக்கை

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

3 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தினார் சிறிதரன்!

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி காட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் முகமாக இலங்கை தமிழரசு கட்சி இன்றைய தினம் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி காட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் முகமாக இலங்கை தமிழரசு கட்சி இன்றைய தினம் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது

பங்காளிகளுடன் இணைந்து மன்னாரின் 4 சபைகளையும் கைப்பற்றுவோம்!

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்

சௌதி அரேபியாவில் முதல் போட்டியிலேயே மெஸ்ஸியுடன் மோதும் ரொனால்டோ

www.pungudutivuswiss.com
கால்பந்து ஜாம்பவன்களான லியோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ 
ரொனால்டோவும் கால்பந்து களத்தில் நேரடியாகச் சந்திக்க வாய்ப்பு
 ஏற்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் இந்தப் போட்டி நடைபெற 

மகிந்த, கோட்டாவுக்கு எதிராக தடைகளை விதித்தது கனடா!

www.pungudutivuswiss.com



கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.

கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.

அரசுடனான பேச்சு இடைநிறுத்தம்!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை நேற்று  மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

விக்கி தலைமையில் 5 கட்சிகளின் கூட்டு உருவாகும் சாத்தியம்!

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன

கூட்டமைப்பின் நிலை- விரைவில் அறிவிப்பேன் என்கிறார் சம்பந்தன்!

www.pungudutivuswiss.com


உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எனது கருத்துக்கள் ஆகியவற்றை விரைவில் உத்தியோக பூர்வமாக அறிவிப்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எனது கருத்துக்கள் ஆகியவற்றை விரைவில் உத்தியோக பூர்வமாக அறிவிப்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார்

பருத்தித்துறை நகர சபை தவிசாளராக நவரட்ணராஜா தெரிவு!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையில், ஈ.பி.டி.பி மற்றும் சமத்துவக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையில், ஈ.பி.டி.பி மற்றும் சமத்துவக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது

10 ஜன., 2023

இன்று ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்!

www.pungudutivuswiss.com


வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விரைவாக விடுவித்தல், அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்வின் பரிணாமத்தை இலக்காகக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று மாலை சந்திக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விரைவாக விடுவித்தல், அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்வின் பரிணாமத்தை இலக்காகக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று மாலை சந்திக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்

ரணில் அரசுக்கு தமிழ் கட்சிகள்7 நாள் காலக்கெடு!

www.pungudutivuswiss.com
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒருவார காலம் அவகாசம் வழங்குவதென்றும், அந்த கால அவகாசத்திற்குள் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சை தொடரப்போவதில்லை என தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒருவார காலம் அவகாசம் வழங்குவதென்றும், அந்த கால அவகாசத்திற்குள் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சை தொடரப்போவதில்லை என தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன

தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலி

www.pungudutivuswiss.com


தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுக் காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுக் காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது

www.pungudutivuswiss.com
இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5
 சதவீத ஆதரவு. புதுடெல்லி, கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த 

மான் சின்னத்தில் மணி அணி

www.pungudutivuswiss.com

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்  சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ரெலோவும் விக்கியுடன் திடீர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமாலை இடம்பெற்றது. இன்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமாலை இடம்பெற்றது. இன்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது

9 ஜன., 2023

தமிழக சட்டசபையில் பரபரப்பு...! கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

www.pungudutivuswiss.com
தமிழக சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார்.

மொட்டு- யானை கூட்டு குறித்து பேச்சு!

www.pungudutivuswiss.com


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பசில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், வஜிர அபேவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பசில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், வஜிர அபேவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டம்

www.pungudutivuswiss.com


தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை மாதவ மேயர் என்ற முன்னாள் போராளியே, புது குடியிருப்பு நகர் பகுதியில் வீதியோரத்தில் தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புகள் தனி மனிதர்கள் அனைவரும் ஒன்று பட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வேலுப்பிள்ளை மாதவ மேயர் என்ற முன்னாள் போராளியே, புது குடியிருப்பு நகர் பகுதியில் வீதியோரத்தில் தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புகள் தனி மனிதர்கள் அனைவரும் ஒன்று பட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தமிழரசு திருந்தாவிட்டால் ரெலோவும் புளொட்டும் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com

தமிழ்த் தரப்புக்கள் ஒன்றாக இல்லை. முதலில் நீங்கள் ஒன்றுபடுங்கள். அதன் பின்னர் தீர்வைக் கேட்கலாம் என்று சிங்களத் தலைவர்களின் கிண்டலுக்கே இடம்கொடுத்துள்ளது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அந்தக் கட்சி திருந்த வேண்டும். இல்லையேல் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும்தான் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்" - என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்

விக்கி - மணி திடீர் சந்திப்பு- கூட்டணி அமைத்து போட்டியிட இணக்கம்!

www.pungudutivuswiss.com
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்  சி.வி.விக்னேஸ்வரனை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று  சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பானது யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பானது யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது

டக்ளஸ் தூங்குவது போல நடிக்கிறார்!

www.pungudutivuswiss.com


கிராஞ்சியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட பண்ணை விவகாரம் 

நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் கடலட்டை பண்ணைகளிற்கு அமைச்சர் 

யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப்
 புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 

கல்வித் தகைமையை மறைத்த தமிழ் எம்.பிக்கள்

www.pungudutivuswiss.com


நாடாளுமன்ற உறுப்பினர்கள் 208 பேரினது கல்வி தகைமை தொடர்பான விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி  தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி தகைமையில் பின்தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 208 பேரினது கல்வி தகைமை தொடர்பான விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி தகைமையில் பின்தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது

2024 இல் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் பதவிகளை இழக்கும் அபாயம்

www.pungudutivuswiss.com

வடக்கு ரயில்கள் இன்று முதல் அனுராதபுரத்துடன் நிறுத்தம்!

www.pungudutivuswiss.com



கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள்  அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின-பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம்

www.pungudutivuswiss.com

 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  நேற்று மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும், கண்டியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும், பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என அவர் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு நேற்று மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும், கண்டியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும், பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என அவர் கூறியுள்ளார்.

பொற்பதியில் நாளை புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் பணி!

www.pungudutivuswiss.com



கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக  விசேட அதிரடிப்படையினருக்கு  ரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அனைத்து தமிழ் கட்சிகளையும் ஓரணியில் திரளக் கோரி நான்காவது நாளாக போராட்டம்!

www.pungudutivuswiss.com


அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்றது. இன்று  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்றது. இன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது

கூட்டமைப்பாக போட்டி - வேறுபட்ட வழிகளை கையாள தமிழரசு கட்சி முடிவு!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

8 ஜன., 2023

கடைசி போட்டியில் இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

www.pungudutivuswiss.com
3-வது டி20 போட்டியில் இலங்கையை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி
 இந்தியா அபார வெற்றிபெற்றது. ராஜ்கோட், இந்தியாவுக்கு வந்துள்ள
 இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட

அதிவேக சதம் அடித்த சூர்யகுமார், தொடரை வென்ற இந்தியா - ஆட்டம் எப்படி இருந்தது?

www.pungudutivuswiss.com
தற்போது நடைபெற்று வரும் இலங்கையுடனான போட்டியில், 
சூர்யகுமார் யாதவ் ஏழாவது ஓவரில் தனது ஆட்டத்தைத் தொடங்கி, 
45 பந்துகளில் அதிவேக சதம் அடித்துள்ளார்.

7 ஜன., 2023

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்!

www.pungudutivuswiss.com



இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று  காலை கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று காலை கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

எல்லையில் நான்கு தமிழ் இளைஞர்கள் மரணம்!

www.pungudutivuswiss.com


 முமுல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவரான தமிழரான ரத்னராசா சஜந்தன் (33) ஜரோப்பாவிற்கு இடம்பெயர முயன்றபோது பெலாரஸ் எல்லையில் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.இவரோடு இன்னும் மூன்றுபேரை காணவில்லை என தகவல் கிடைத்துள்ளது

யாழில் புதைக்கப்பட்ட சிசு! ஏன் சிசுவைப் புதைத்தேன்:தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-குற்றப் பார்வை

www.pungudutivuswiss.com

இலங்கையின் பல பகுதிகளில் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

மணி தலைமையில் சுயேட்சைக் குழு ?

www.pungudutivuswiss.com
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து விலகிய

தனித்தா- கூட்டாகவா போட்டி - 17ஆம் திகதியே தீர்மானம்!

www.pungudutivuswiss.com



உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக தைப்பொங்கலுக்குப் பின்னர் 17 ஆம் திகதியே தமது தீர்மானத்தை அறிவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.


உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக தைப்பொங்கலுக்குப் பின்னர் 17 ஆம் திகதியே தமது தீர்மானத்தை அறிவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது

வெள்ளைக்குள் மறைந்து வந்த சிவப்பு சிக்கியது!

www.pungudutivuswiss.com


சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளை சீனி என்று கூறி 1,200 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளை சீனி என்று கூறி 1,200 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது

யானை- மொட்டு கூட்டு - இன்னமும் முடிவில்லை!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

யாழ். மாநகர சபைக்கு 19ஆம் திகதி புதிய முதல்வர் தெரிவு!

www.pungudutivuswiss.com


யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு  வரும் 19 ம் திகதி இடம்பெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு வரும் 19 ம் திகதி இடம்பெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது

யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர் தெரிவு

www.pungudutivuswiss.com
யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.

6 ஜன., 2023

ஓரணியில் திரளக் கோரி இரண்டாவது நாளாக போராட்டம்!

www.pungudutivuswiss.com


வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு’ அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு’ அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தைப்பொங்கல் தினத்தன்று காணி விடுவிப்பு குறித்து அறிவிப்பு!

www.pungudutivuswiss.com



வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

www.pungudutivuswiss.com



இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பான இறுதி ஏற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பான இறுதி ஏற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை

கர்நாடகாவில் 38 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

www.pungudutivuswiss.com
கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்

நாளை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!

www.pungudutivuswiss.com


தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

5 ஜன., 2023

தனித்தா- கூட்டாகவா போட்டி? - முடிவு இன்னும் இல்லை!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

தேர்தலில் இருந்து ஒதுங்கினார் ஜனாதிபதி ரணில்

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்

சம்பந்தனைத் தேடிச் சென்ற மஹிந்த

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இல்லத்துக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரிடம் நலம் விசாரித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இல்லத்துக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரிடம் நலம் விசாரித்தார்.

சைக்கிளுக்கு வாக்களியுங்கள் - பிரசாரத்தை தொடங்கினார் கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைத் தேர்தலை சந்திக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை சந்திக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

துயிலும் இல்லத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் - உடைத்தெறியப்பட்ட பெயர் பலகை

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு - கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்குத் தயாராகுங்கள் - சாணக்கியன்

www.pungudutivuswiss.com
மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை - நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

www.pungudutivuswiss.com


உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை உறுப்பினர்களைச் சந்திக்கிறார் ஆளுநர்!

www.pungudutivuswiss.com

யாழ். மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில்  ஆராய வருமாறு, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய வருமாறு, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்

ஆளுநரின் அழைப்பு - கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிராகரிப்பு!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தமக்குப் பங்குபற்றும் எண்ணம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தமக்குப் பங்குபற்றும் எண்ணம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்

4 ஜன., 2023

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை (05.01.2023) விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

கொழும்பில் சற்றுமுன் ஆரம்பமான போராட்டம்! பெருமளவு பொலிஸார் குவிப்பு

www.pungudutivuswiss.com
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 10க்கு முன்னர் தேர்தல் ; வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்குத் தடை கோரி உயர்நீதிமன்றில் மனு!

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு உயர்  நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ  கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) தாக்கல் செய்துள்ளார்

இன்று வெளியாகிறது தேர்தல் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று  ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன

கஞ்சிபான தப்பியோட்டம் - புலனாய்வு அமைப்புகள் மீது அதிருப்தி!

www.pungudutivuswiss.com

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் ராமேஸ்வரத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன  செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் ராமேஸ்வரத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தா

வெளிநாடு ஒன்றில் 18 இலங்கை பெண்கள் தலைமறைவு

www.pungudutivuswiss.com

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் பாதுகாப்பு மையங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

இலங்கைக்கு எதிரான முதல் டி-20: இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

www.pungudutivuswiss.com
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள்

3 ஜன., 2023

வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தை - போராட்டங்களை நடத்த முடிவு!

www.pungudutivuswiss.com

வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம்  நவம்பர் 8 ம் திகதி ஒருங்கிணைந்த வடகிழக்குக்குள் மீளப் பெறமுடியா சமஸ்டியை  வலியுறுத்தி பிரகடனத்தை வெளியிட்டோம்.  இந்நிலையில் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வரவேற்கின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம் நவம்பர் 8 ம் திகதி ஒருங்கிணைந்த வடகிழக்குக்குள் மீளப் பெறமுடியா சமஸ்டியை வலியுறுத்தி பிரகடனத்தை வெளியிட்டோம். இந்நிலையில் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வரவேற்கின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்

ரெலோ, புளொட் கடிதம் - சம்பந்தன் உடனடியாக பதிலளிக்க மறுப்பு!

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எழுதிய கடிதம் நேற்று மாலை கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எழுதிய கடிதம் நேற்று மாலை கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்

மார்ச் 4ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்?

www.pungudutivuswiss.com



உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். 

தந்தை செல்வாவுக்கு அருகே நாபா, உமாவுக்கு சிலைகள்!

www.pungudutivuswiss.com


வவுனியா நகர மத்தியில், தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில், ஈ.பி.ஆர்.எல்.எப்  தலைவர் பத்மநாபா மற்றும் புளொட்  தலைவர் உமாமகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் சிலை வைப்பதற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதற்கான அனுமதி, வட மாகாண ஆளுநரிடம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வவுனியா நகர மத்தியில், தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் சிலை வைப்பதற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதற்கான அனுமதி, வட மாகாண ஆளுநரிடம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தயார்!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்

4 நாள் குழந்தையின் சடலம் நாய்கள் தின்ற நிலையில் மீட்பு!- பெண் கைது.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் தின்ற நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் தின்ற நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கடவுச்சீட்டு இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைய குரோசியாவை ஏற்றுக்கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்

www.pungudutivuswiss.com
எல்லையற்ற ஐரோப்பாக்குள் கடவுச்சீட்டு இல்லாத மண்டலத்தில் குரோஷியா 
நுழைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஐரோப்பிய 
ஒன்றியத்தில் (EU) இணைந்தபிறகு 2023 ஆண்டு புதுவருடத்தன்று 

2023இல் டொரண்டோவில் பிறந்த முதல் குழந்தை சஞ்ஜித்

www.pungudutivuswiss.com
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு டொரண்டோவில் பிறந்த சஞ்ஜித் என்ற குழந்தை, 2023 ஆம் ஆண்டில்  பிறந்த நகரின் முதல் குழந்தைகளில் ஒன்றாகும். நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தையை பெற்றெடுத்த மதியழகன் குடும்பத்தை வாழ்த்தி மற்றும் படத்தையும் வெளியிட்டுள்ளது நோர்த் யோர்க் பொது மருத்துவமனை.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு டொரண்டோவில் பிறந்த சஞ்ஜித் என்ற குழந்தை, 2023 ஆம் ஆண்டில் பிறந்த நகரின் முதல் குழந்தைகளில் ஒன்றாகும். நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தையை பெற்றெடுத்த மதியழகன் குடும்பத்தை வாழ்த்தி மற்றும் படத்தையும் வெளியிட்டுள்ளது நோர்த் யோர்க் பொது மருத்துவமனை

இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு!

www.pungudutivuswiss.com


அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர் நியமன நடவடிக்கைகளை இம்மாத இறுதிக்குள் நிறைவுப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர் நியமன நடவடிக்கைகளை இம்மாத இறுதிக்குள் நிறைவுப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அமெரிக்க குடியுரிமைக்கு கோட்டா மீண்டும் விண்ணப்பம்!

www.pungudutivuswiss.com

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் டிசம்பர் 2022 இல் இலங்கையை விட்டு வெளியேறினார், தற்போது விடுமுறையில் டுபாயில் இருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் டிசம்பர் 2022 இல் இலங்கையை விட்டு வெளியேறினார், தற்போது விடுமுறையில் டுபாயில் இருக்கிறார்.

ad

ad